Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TNAயின் உருவாக்கத்திற்கு சிவராம், ஜெயானந்தமூர்த்தியும் ஆதரவு வழங்கினார்கள் – கருணா… December 21, 2019 தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சிவராம் ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20.12.19) மாலை இடம் பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், “புலம் பெயர் தேசங்களில் இருந்து பல இளைஞர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை கட்டி எழுப்புங்கள் நாங்கள் அவற்றுக்கான அனைத்து உதவிகளையும் செய்கின்றோம்…

  2. எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், நாட்டுக்கு அவசியமற்ற ஒப்பந்தங்களை கைசாத்திட வேண்டாம் என்பதை கூறியே 69 இலட்சம் பேர் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினர் சகலரும், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டியது அவசியமென தெரிவித்த அவர் அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என்ற புதியதொரு பதவி அந்தஸ…

    • 6 replies
    • 1.2k views
  3. சுவிஸ் தூதரக பணியாளரின் மனநல அறிக்கை இன்று நீதிமன்றில் Dec 20, 2019 | 5:06by கார்வண்ணன் in செய்திகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்த அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தேசிய மனநல நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார். ”கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸின் மனநிலை குறித்து நேற்று இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்டது. குற்ற விசாரணைத் திணைக்களத்தின் வேண்டுகோளின் பேரில், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க உளவியலாளர்களின் மதிப்பாய்வுக்காக அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். நான்கு சிறப்பு மனநல மருத்துவர்களைக் கொண்ட குழுவொன்…

  4. (ஆர்.யசி) பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனம் தொடர்பில் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு தயாரித்திருந்த அறிக்கையை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கும், மீண்டும் ஒருமுறை அமைச்சரவைக்கும் அனுப்பிவைக்க துறைசார் மேற்பார்வைக்குழு தீர்மானித்துள்ளது. கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு இன்று பாராளுமன்ற குழு அறையில் கூடி இந்த விடயம் குறித்து ஆராய்ந்துள்ளது. அதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பட்டிக்கலோ கம்பஸ் (பிரைவட்) லிமிடட் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழு 2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் பாராளுமன்றத்தில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை அப்போதைய அரசாங்க…

    • 11 replies
    • 1.6k views
  5. பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார். இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார். இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார். A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today. Five Tamil ac…

    • 11 replies
    • 1.9k views
  6. உறுதியளிக்கப்பட்ட நிதி கொடுப்பனவு உரிய முறையில் மக்களை சென்றடையாத காரணத்தால் அவர்கள் பெறும் நிதி பற்றாக்குறையினை எதிர் நோக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில் வீடமைப்பு அமைச்சினால் உறுதி அளிக்கப்பட்டதற்கு அமைய வடக்கு கிழக்கு உட்பட நாடாளவிய ரிதியில் தமது வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.இருப்பினும் உறுதி அளிக்கப்பட்டமைக்கு அமைய நிதி வழங்கப்படாமை காரணமாக இந்த திட்டத்தினை முன்னெடுக்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் இந்த திட்டத்திற்கான நிதியை பெறுவதற்காக அடகு மற்றும் …

    • 0 replies
    • 350 views
  7. ஏப்ரல் 21 தாக்குதலை விட்டுவிட்டு ஏன் சம்பிக்கவுக்கு முன்னுரிமை- கம்மம்பில பதில் அர்ஜுன் மஹேந்திரனைக் கைது செய்யும் வரையில் மத்திய வங்கி பிணை முறி தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அடுத்த கட்ட விசாரணைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில எம்.பி. தெரிவித்துள்ளார். பிவிதுரு ஹெல உறுமய செயலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். மத்திய வங்கி ஊழலின் போது அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பாலமாக அமைந்தவர்தான் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரன். இதனால், அவரைக் கைது செய்யாமல் அவருடன் இருந்…

  8. யாழ் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் அகற்றம் December 21, 2019 யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய சிலை பொதுமக்களின் எதிர்ப்பால் இன்று சனிக்கிழமை அகற்றப்பட்டது. பொதுமக்களால் புத்தர் சிலை எனவும் சிறைச்சாலை அதிகாரிகளால் சங்கமித்தையின் சிலை எனவும் கூறப்பட்டும் அந்தச் சிலை பொதுமக்களின் கடும் எதிர்பால் சிறைச்சாலைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சிறைச்சாலை கட்டடத் தொகுதி உள்ளது. அங்கு உதவி சிறைச்சாலை அத்தியட்சகராகக் கடமையாற்றுபவரின் வழிகாட்டலிலேயே இந்தச் சிலை சிறைச்சாலைக்கு முன்பாக வீதியில் அமைக்கப்பட்டது. இந்தச் சிலை கைதி ஒருவரால…

  9. என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா-டக்ளஸ் கேள்வி யாழ்ப்பாணத்தில் உள்ள ஈ.பி.டி.பி கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் என்னை அமைச்சுப் பதவியிலிருந்து விலகு மாறு சுமந்திரனுக்கு கேட்க தகுதி இருக்கின்றதா என்பதற்கு அப்பால் இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயற்பாடு என்றே நான் நினைக்கின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். சுமந்திரனின் கோரிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்ட கோரிக்கையாகும். அந்த கோரிக்கையில் நியாயங்கள் இருக்கின்றதா என்பதற்கு அப்பால் அது அரசியல் உள்ளோக்கம் கொண்ட கோரிக்கைதான். அந்த வகையில்தான் அவர் இவ்வாறான கருத்தை சொல்லியுள்ளார். தற்போதைய ஆட்சியாளர்களை நான் கொண்…

    • 2 replies
    • 436 views
  10. உளம் மகிழ \'வலம்புரியின்\" இருபது அகவை நிறைவுச் செய்தி வந்து சேர்ந்தது. யாழ்ப்பாணப் பத்திரிகை உலகில் \'வலம்புரியின்\" சாதனை மிகப்பெரிது. ஊடக அதிகாரத்தைப் பயன்படுத்தி மற்றவர்களை மிரட்டி, தமது வசதிகள் வளர்க்கவும், பதவிகள் தேடவும் சிலர் முயன்று நின்ற நிலையில், அதிகாரமிக்க அவர்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் தொடங்கப்பட்ட \'வலம்புரி\", மண்ணின் உணர்வுகளைப் பதிவு செய்து, சமூகம், மொழி, சமயம், பண்பாடு என,பலதிறத்தாலும் நம் தமிழ்ச் சமூகத்தை வளர்க்க, முடிந்தவரை பாடுபட்டதால், இன்று தமிழ்மக்களின் நம்பிக்கைக்குரிய பத்திரிகையாய் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பேச்சுத்திறன், எழுத்தாற்றல், சமூக அக்கறை, அரசியல் ஈடுபாடு என, பலதகுதிகளையும் கொண்டு செயற்பட்டு வரும், \'வலம்புரியின்\" ஆசிரிய…

    • 3 replies
    • 693 views
  11. தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள் விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ ஆ­கியோர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறமாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை என, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி..வி. விக்கி­னேஸ்­வரன் கேச­ரிக்கு அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவ­ரு­ட­னான நேர்­கா­ணலின் முழு …

    • 4 replies
    • 741 views
  12. ஒருமைப்பாட்டையும் பெரிதும் மதிப்பதாக சீனா அறிவிப்பு இலங்கையின் ஏனைய துறைமுகங்களில் நடைமுறையில் இருப்பதைப் போன்று அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பிற்கும் இலங்கைக் கடற்படையே பொறுப்பாக இருக்கும் என்பதை சீனா இன்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 'இலங்கையின் சுயாதிபத்தியத்தையும், ஆட்புல ஒருமைப்பாட்டையும் சீனா பெரிதும் மதிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறோம். இலங்கை அரசாங்கத்தினதும், அதன் கடற்படையினதும் கைகளிலேயே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் பாதுகாப்பு முற்றுமுழுதாக இருக்கும். இந்தத் துறைமுகத்தின் கட்டுப்பாடு இலங்கையின் ஏனைய துறைமுகங்களின் பாதுகாப்பிலிருந்து எந்தவகையிலும் வேறுபட்டதாக இருக்காது' என்று கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் இன்று வெளியிட்டிருக்க…

    • 6 replies
    • 738 views
  13. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது நல்லது' - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 19 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைவிடுதலைப் புலிகள் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது ஒரு நல்ல விடயமாக இருக்கலாம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…

  14. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை.…

    • 8 replies
    • 1k views
  15. அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர் Dec 20, 2019 | 5:55by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் வெளிநாட்டுச் செய்தியாளர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த 99 ஆண்டு குத்தகை உடன்பாட்டை மாற்ற விரும்புகிறீர்களா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அதிபர், “அதை மாற்ற முயற்சிக்கவில்லை, ஏனெனில் இது முன்னைய அரசாங்கம்…

    • 3 replies
    • 540 views
  16. இந்தியாவுக்கு வழங்கப்படாது மத்தல விமான நிலையம் Dec 20, 2019 | 5:51by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று சிறிலங்கா அதிபர் சந்தித்த போது, மத்தல விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ”மத்தல விமான நிலையம், நாட்டின் மாற்று அனைத்துலக விமான நிலையமாக சிறிலங்கா விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி செய்யப்படும். இந்த திட்டம் குறித்து இந்தியாவுடன் எந்த கலந்துரையாடலும் நடத்தப்…

  17. தனது இடமாற்றத்தை சவாலுக்கு உட்படுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார். தனது இடமாற்றம் முறையற்ற வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தனது சட்டத்தரணி மூலமாக குறித்த மனுவை இன்று (21) தாக்கல் செய்துள்ளார். குறித்த மனுவில்தன்னை மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்குமாறு ஷானி அபேசேகர கோரியுள்ளார். http://www.thinakaran.lk/2019/12/20/உள்நாடு/45715/இடமாற்றத்தை-சவாலுக்குட்படுத்தி-ஷானி-அபேசேகர-உரிமை-மீறல்-மனு

    • 0 replies
    • 374 views
  18. கொழும்பு மேல் நீதிமன்றில் முடிவு வெளி விவகார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜயம்பதி ஹீன்கெந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்தும் விசாரிக்க முடியாது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) முடிவு செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர் தாக்கல் செய்த மீள் முறையீட்டு விண்ணப்பம் தொடர்பான தீர்ப்பை, மேல் நீதிமன்ற நீதிபதி சஷி மகேந்திரன் இதனைத் அறிவித்தார். இலஞ்ச ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களின் கையொப்பம் இன்றி வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக, கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிரதிவாதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இம்மீள்திருத்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. வெகுச…

    • 0 replies
    • 324 views
  19. அரசியல் பழிவாங்கல் அடிப்படையிலான அரசின் செயற்பாடுகள் கடும் கண்டனத்துக்குரியது : ரணில் Published by R. Kalaichelvan on 2019-12-20 16:52:03 (நா.தனுஜா) சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்து ஆட்சிபீடமேறியவர்களால் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளைப் பார்க்கும் போது, அரசியல் நோக்கங்களை முதன்மைப்படுத்தி சட்டம், நேர்மை மற்றும் சம்பிரதாயங்கள் ஆகியவை புறக்கணிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. இத்தகைய செயற்பாடுகள் கடும் கண்டனத்திற்கும், விசனத்திற்கும் உரியவை என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறி…

  20. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றில் முன்னிலை முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (20) முற்பகல் முன்னிலையானார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில், முன் பிணை கோரி மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார். குறித்த பிணை மனு மீதான வழக்கு விசாரணைக்காகவே அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதாக தனது மனுவில் ராஜித குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி…

  21. பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம் : வாசுதேவ Published by R. Kalaichelvan on 2019-12-20 16:45:49 (எம்.ஆர்.எம்.வஸீம்) பொதுத்தேர்தலில் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுப்பது சந்தேகம். அத்துடன் கூட்டணி அமைத்துக்கொண்டே தேர்தலுக்கு செல்லவேண்டும்.கூட்டணி இல்லாவிட்டால் அரசாங்கம் அமைக்க முடியாது என நீர்வழங்கல் மற்றும் வசதிகள் ராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொத…

  22. வெடுக்குநாறி ஆலய விவகாரத்திற்கு என்னால் உடனடியாக தீர்வு காண முடியாது-கையை விரித்தார் டக்ளஸ் வவுனியாவிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வெடுக்குநாறி ஆலய நிர்வாகத்தினர் சந்தித்து தமது ஆலய விவகாரத்திற்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரிய போது வெடுக்குநாரி ஆலய விவகாரத்திற்கு தற்போது என்னால் உடனடியாக தீர்வு காண முடியாது என கடற்றொழில், நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் எம்மை பலப்படுத்த வில்லை. இந்த நிலையில் நான் இந்த அரசாங்கத்துடன் பேச முடியாது. இன்னும் ஒரு சில மாதங்களில் பாராளு மன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.எமது கட்சிப் பிரதிநிதிகள் போட்டியிடுவார்கள். அந்த தேர்தலை சரியாக பயன்படுத் துங்கள். நான் …

  23. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71439

  24. என்னை கைது செய்ய வேண்டும் என்று தென்னிலங்கையில் கூறுவது அவர்களுடைய உள்ளெண்ணங்களை படம்பிடித்துக் காட்டுகிறது-விக்கி பதிலடி ஒருவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவது ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு விடயம் நான் வன்முறையைச் சார்ந்து கருத்துக்களை வெளிப்படுத்தவில்லை. ஆனால் உண்மையை தொடர்ந்து நான் கூறிக்கொண்டு தான் வருவேன்.தங்களுடைய படங்கள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தின் நிமிர்த்தமாக அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்களோ என்று என்னை எண்ண வைக்கின்றது. ஆகவே இவ்வாறான கைதுகளும் என்னை விமர்சிப்பதும் தேவையற்றது என்று தான் நான் பார்க்கின்றேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் என்னை கைது செய்ய வேண்டும் என்று தென்னிலங்கையில் கூறு…

  25. ஐ.நா. தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி திட்டவட்டம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் நாட்டிற்கு ஆபத்தாக அமையும் என்பதனால் தமது அரசால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பெரும் பிழை எனவும் நாட்டின் எதிர்கால பயணத்திற்கு அது பெருந்தடையாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி, ஒரு அரசால் கைச்சாத்திடப்பட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.