Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய- இலங்கை உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தும் தார்மீக கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது: தமிழ் தேசிய கூட்டமைப்பு 1987 ஆம் ஆண்டு செய்யப்பட்ட இன்னமும் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் இருக்கும் சர்வதேச ரீதியான இந்திய- இலங்கை உடன்படிக்கையை அமுல்படுத்தும் தார்மீக கடமை இந்தியாவுக்கு இருக்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த வேண்டுகோளை விடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன், இந்திய -இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு இந்தியா தனக்கு இருக்கும் பங்களிப்பை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். பல்லாயிரக்கணக்கான இலங்கை த…

    • 2 replies
    • 392 views
  2. இலங்கையில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வரும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழகத்தை தளமாகக் கொண்டு இயங்கும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற நிலையில், அவரது சகோதரர்களும் முக்கிய பதவிகளில் நியமிக்கப்பட்டது தமிழர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ கைச்சாத்திட்ட வர்த்தமானி என்ன? …

  3. பிரபாகரன் பிறந்தநாள்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்குள் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSTR யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் இன்று (26 .11 .2019) மற்றும் நாளை (27.11.2019) ஆகிய இரு தினங்களும் எந்த ஒரு நிகழ்வையும் நடத்த வேண்டாம் என யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகார…

  4. வெளிவிவகார அமைச்சரை போட்டி போட்டு சந்தித்த இந்திய, சீன தூதுவர்கள் Nov 26, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் இடைக்கால அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக தினேஸ் குணவர்த்தன பொறுப்பேற்றதை அடுத்து, வெளிநாட்டுத் தூதுவர்கள்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதையடுத்து, இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும், சீன தூதுவர் செங் ஷியுவானும், சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன், இந்திய, சீன …

  5. வடக்கு- கிழக்குப் பகுதிகள் முழுவதும் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை இரவு பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூபி மற்றும் நினைவு கற்கள் அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடையம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நாளை புதன் கிழமை (27) தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் தினத்திற்கு என மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு பொது சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மன்னார் மடு பண்டிவிருச்சான் மாவீரர் துயி…

  6. வவுனியா நகரசபையின் உள்ளக மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் நினைவேந்தல் நிகழ்வில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு, பிரஜைகள் குழுவின் வவுனியா மாவட்டத் தலைவர் கோ.ராஜ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா மாவட்டக் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலில், இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் நிகழ்வு, வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை (27) நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்போது, மாவீரத் தெய்வங்களுக்காகப் பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் கோவில் மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்படுமெனத…

    • 0 replies
    • 340 views
  7. எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடமாட்டோம் – விமல் வீரவன்ச Nov 26, 2019 | 2:07by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவுடன் எம்சிசி உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று, அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசின் புதிய அமைச்சராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். “அமெரிக்காவுடன் எம்.சி.சி உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு எமது அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை, இந்த பிரச்சினையில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/11/26/news/41368

  8. ஜெனிவா தீர்மானத்துக்கான ஆதரவு மீள்பரிசீலனை – சிறிலங்கா அறிவிப்பு Nov 26, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்து நிறைவேற்றிய, சிறிலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் அதை சீரான மற்ற…

  9. தமி­ழின விடு­தலைப் போராட்டக் காலத்­திலும் போரின் எல்­லை­யிலும் உயிர்­களை அர்ப்­ப­ணித்­த­வர்­க­ளினை நினை­வு­கூரும் நிகழ்­வுகள் நடை­பெற அர­சி­னதோ, பாது­காப்புத் தரப்­பி­னதோ தலை­யீடோ, தடை­களோ இடம்­பெ­றா­ம­லி­ருக்­க­வேண்டும். இந் நிகழ்­வு­களில் அர­சியல் நலன்­க­ளுக்கு இட­மில்லை என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராசா தெரித்­துள்ளார். தமி­ழின விடு­த­லைக்­காக ஆயுதப் போர் வழி­களில் தம்மை அர்ப்­ப­ணித்­த­வர்­க­ளினை நினை­வுகூரும் நிகழ்­வான மாவீரர் வாரம் தொடர்பில் வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவ் அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இலங்­கையில் தமிழ் மக்கள் கடந்த 70ஆண்­டு­களில் தமி­ழின விடு­…

    • 0 replies
    • 452 views
  10. ஊடகப்பிரிவு- சிறுபான்மை மக்களின் ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபடுவோமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மன்னாரில் பலகிராமங்களுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் அங்கு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஆட்சியை தொடங்கிய குறுகிய காலத்தில் அராஜகம் தொடங்கியுள்ளது.புத்தளம் கனமூலைக்கு மக்களை சந்திக்க சென்றபோது எமது வாகனத்தொடரணிமீது நடத்திய தாக்குதல் இதனைப் புலப்படுத்துகின்றது. டயர்போட்டு…

    • 0 replies
    • 354 views
  11. கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்படவிருந்த பேராசிரியர் திஸ்ஸ விதாரண ,வடமத்திய மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்படவுள்ளதாக சற்றுமுன்னர் அறியமுடிந்தது. முன்னதாக அவர் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருந்தார். இருந்தபோதும் இறுதிநேரத்தில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராக பிரபல தொழிலதிபரும், அரசியல் ஆர்வலருமான அனுராதா யஹம்பத் நியமிக்கப்படவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. ”நாட்டுப்பற்று வல்லுநர்களின் கருத்துக்களம்” என்ற அமைப்பின் ஊடாக கடந்த காலங்களில் அனுராதா ,அரசியல் மற்றும் சமூக…

    • 0 replies
    • 396 views
  12. ஐ.நா. தீர்மானம் மீள் பரிசீலனை செய்யப்படும் – அரசாங்கம் அறிவிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இணை அனுசரணையுடன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய, இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான, 30/1 தீர்மானத்துக்கு அளிக்கப்பட்ட ஆதரவை முழுமையாக மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் இடைக்கால அரசின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தினேஸ் குணவர்த்தன நேற்று (திங்கட்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இந்த தீர்மானத்தை தேசிய நோக்கில் சீரான மற்றும் பாகுபாடற்றதாக மாற்றுவதில் இலங்கை கவனம் செலுத்தும். …

  13. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவர்கள் பணிபுரிய விரும்பும் இரண்டு பிரிவுகளுக்கு அவர்களை பெயரிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டியலில் இரு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களும், நான்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களும், ஐந்து பொலிஸ் அத்தியட்சகர்களும், ஏழு பிரதம பொலிஸ் பரிசோதகர்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69723

    • 0 replies
    • 346 views
  14. (ஆர்.யசி) கோத்­தபா­ய ராஜபக்ஷ தலை­மை­யி­லான எமது அர­சாங்­கத்தில் நாம் கொடுத்த வாக்­கு­று­தி­களை ஒரு­போதும் மீற­மாட்டோம். மக்கள் எம்­மீது வைத்­துள்ள நம்­பிக்­கை­யையும் எதிர்­பார்ப்­பையும் காப்­பாற்­றுவோம் என்று பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். நாட்டில் பொரு­ளா­தார சவால் கள் நிறைந்­துள்ள நிலையில் நிதி அமைச்­சினை என்­னிடம் கொடுத்­துள்­ளனர். துரி­த­க­தியில் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்ப அனை­வரும் ஒத்­து­ழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். நிதி அமைச்சின் கட­மை­களை பொறுப்­பேற்ற பிர­தமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரை­யாற்­று­கை­யி­லேயே இதனைக் கூறினார். அவர் மேலும் கூறு­கையில், இந்த நாட்டில் நிதி அமைச்­ச­ர…

    • 0 replies
    • 718 views
  15. ஜனாதிபதியின் உத்தரவு – யாழை சுத்தப்படுத்தும் பொலிஸார் யாழ்ப்பாணம் மாநகரை சுத்தப்படும் சிறப்பு செயற்திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் முன்றலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணி முதல் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தும் பணியில் பொலிஸ் திணைக்களம் ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை யாழ்ப்பாணம் மாநகரில் முன்னெடுத்தனர். அதில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட் உள்ளிட்ட உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். அதேவேளை குறித்த செ…

  16. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற 6 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்- ஜி.எல். அரசாங்கத்தின் கொள்கைகளை சரியாக நிறைவேற்றுவதற்கு இன்னும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபக உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் 225 பேரில் தற்பொழுது 104 பேருடைய ஆதரவே தமக்கு உள்ளதாகவும், இந்த ஆதரவை வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையென்பதை சாட்டாகக் கொண்டு, கால இழுத்தடிப்பைச் செய்யவும் தாம் விரும்புவதில்லையெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.dailyceylon.com/192945/

  17. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களில் கருத்துக்களுக்கு எப்போதும் செவிகொடுக்கும் தலைவர் என்ற ரீதியில் கட்சியின் தலைமை பதவியை கைவிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். 2010 மற்றும் 2015 ஆம் வருடங்களில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பெரும்பான்மையானவர்களின்…

  18. நாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொள்ளுங்கள்- எல்லே குணவங்ச தேரர் நாட்டின் இறைமையில் கைவைக்காத நாடுகளுடன் நட்புறவு கொண்டு, நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். உண்மையான நட்புடைய சர்வதேச நாடுகள் இன்னுமொரு நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்பட மாட்டார்கள். நாட்டின் பாதுகாப்புக்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சர்வதேச நாடுகளுடன் நட்புறவை முன்னெடுத்துச் செல்லுங்கள். அமைச்சின் நிதி மற்றும் அரசாங்க சொத்…

  19. ஜனாதிபதி கோட்டா இந்திய பிரதமர் மோடி சந்திப்பில் தமிழர் பிரச்சினைகுறித்து மோடி கலந்துரையாடுவார் என புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இச் சந்திப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் குறித்து கலந்துரையாடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வரும் வெள்ளிக்கிழமை புதுடில்லிக்குப் பயணமாகிறார். ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, தமிழர் பிரச்சினை குறித்து, இந்தியப் பிரதமர் மோடி கலந்துரையாடு வார் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாக புதுடில்லி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், இலங்கையில் தற்போது நடைபெற்று வரும் இந்திய வீட்டுத் திட்டம் மற்றும் பிற திட்டங்களைத் தொடருவது குறித்தும் கலந்துரையாடப்ப…

    • 7 replies
    • 729 views
  20. இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் நாட்டின் இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் தற்போதைய அரசாங்கத்துக்குக் கிடையாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். மிகிந்தலை ரஜமகா விகாரையில், நேற்று வழிபாடு செய்த பின்னர், கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார். ”நாட்டின் தற்போதைய நிர்வாகம், ஜனநாயகத்தை மதித்து, காப்பாற்றும். இராணுவ ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கம் எதுவும் புதிய அரசாங்கத்துக்குக் கிடையாது. கடைசிக் கட்டமாகவே, இராணுவத்தை நிறுத்துவது பற்றிய முடிவு எடுக்கப்படும். எந்த நிலைமைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான உத்தரவுகள் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள…

  21. அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டேன் – கோத்தா அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களுக்கு தான் ஒருபோதும் அடிபணியமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரையில் நேற்று பௌத்த பிக்குகள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு மக்கள் ஆணை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஆணையின் படியே நான் செயற்படுவேன். ஒரு நோக்கத்துக்காகவே என்னை மக்கள் தெரிவு செய்தனர். அவர்கள் விரும்பியதை நிறைவேற்றி வைக்க வேண்டும். சில அரச சார்பற்ற நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கமைய, குற்ற வி்சாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் விசாரணைகளை நடத்தினர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார் http://www.puthinapp…

  22. நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர் தங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட குற்ற விசாரணைத் திணைக்களத்தின் தலைமை ஆய்வாளர் நிசாந்த சில்வா ஜெனிவாவுக்கு சென்றிருக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச அங்கு, விகாராதிபதி மற்றும் பௌத்த பிக்குகளுடன் உரையாடும் போது இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார். “எங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்ட நிசாந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறியதாக இன்று நான் கேள்விப்படுகிறேன். அவர் ஜெனிவாவுக்குச் சென்றிருக்க வேண்டும்“ என சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார். http://www.pu…

  23. இராஜாங்க அமைச்சர் நியமனம் இன்று நடைபெறாது? புதிய இராஜாங்க அமைச்சர்களுக்கான நியமனம் மற்றும் அவர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெற வாய்ப்புகள் இல்லை என்று அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 20 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும், இவர்கள் பிரதி அமைச்சருக்கு மேலான அதிகாரங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்பட்டது. எனினும், இந்த பதவியேற்பு நிகழ்வு இன்று இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்றும் நாளை அல்லது மறுநாளே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அமைச்ச…

  24. சிறிலங்கா அதிபர் செயலக பிரதானியாக மேஜர் ஜெனரல் எகொடவெல சிறிலங்கா அதிபர் செயலக தலைமை அதிகாரியாக,சிறிலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலக பேச்சாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். 1971ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் வீழ்ச்சி கண்ட போது அதன் கட்டளை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெலவே பணியாற்றியிருந்தார். இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், 2007ஆம் ஆண்டில் இருந்து, 2015 வரை, அவர் ரக்ன லங்கா …

  25. நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஆறு மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அந்த பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார். இந்த திட்டம் கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கப்படும். அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்…

    • 2 replies
    • 784 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.