ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
யட்டியாந்தொட்டை கனேபொல தோட்ட மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளது. ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கேகாலை மாவட்டம் யட்டியாந்தொட்டைகனேபொல தோட்டம் மேற்பிரிவு லயன் குடியிருப்பினுள் நுழைந்த சிலர் தோட்ட மக்கள் மீது (18) தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தின் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் குழு ஒன்று சம்பவ இடத்திற்கு நேரடி விஜயம் ஒன்னினை இன்று (21) மேற்க் கொண்டு மக்களிடம் நிலமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றினை பெற்றுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு யட்டியாந்தோட்டையில் உள்ள தமிழர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கேகாலை, யட்டியாந்தோட்டை கனேபொல தோட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழியை சேர்ந்த மலையக மக்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அவர்களின் வீடுகளில் இருந்த பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளதோடு மிகந்த வேதனையும் அடைந்துள்ளனர். மதுபோதையினால் இரு குழுக்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது குறித்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப் பகு…
-
- 17 replies
- 1.2k views
-
-
டீ.ஏ.ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் ஜனாதிபதி? டீ.ஏ.ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன. http://athavannews.com/டீ-ஏ-ராஜபக்ஷ-வழக்கிலிருந/
-
- 8 replies
- 825 views
-
-
(செ.தேன்மொழி) நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஊழல் மோசடிகள் இன்றி நாட்டை முன்னேற்றுவார் என்றும் கூறியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் இதுவரையிலும் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளை விட இவர் மிகவும் மாறுபட்ட பண்புகளை கொண்டவராக காணப்படுகின்றார். வழம…
-
- 2 replies
- 929 views
-
-
இலங்கையின் மிக அனுபவம் மிக்க, முன்னணி குற்றங்கள் தொடர்பிலான மர்மங்களை துலக்கிய குற்றப் புலனாய்வாளரான தற்போதைய சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர அந்த பதவியில் இருந்து நீக்கி, தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக சி.ஐ.டி.யின் குற்றப் புலனாய்வாளராக கடமையாற்றி வரும் ஷானி அபேசேகர, சி.ஐ.டி. பொறுப்பதிகாரியாக, உதவி பொலிஸ் அத்தியட்சராக, பொலிஸ் அத்தியட்சராக, பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தரமுர்த்தப்பட்ட பின்னர் கடந்த 2017 ஆம் அண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தமையு…
-
- 3 replies
- 872 views
-
-
ரணில் மீது குற்றஞ்சுமத்த முடியாது - ஹிருணிகா பிரேமசந்திர Published by J Anojan on 2019-11-21 16:48:32 (நா.தனுஜா) ரணில் விக்கிரமசிங்க மீது நான் குற்றஞ்சுமத்த மாட்டேன். ஏனெனில் அவர் சிறந்ததை செய்யவேண்டும் என்று கருதினாலும், அவருடன் இருப்பவர்கள் அதற்கு வாய்ப்பளிக்காமல் சுயநல நோக்கில் செயற்படுகின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். அத்துடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்கும் தீர்மானத்தை ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட போதும், அவருடன் இருந்த சிலர் அதனை விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பு வொக்ஷோல் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் …
-
- 2 replies
- 697 views
-
-
நா.தனுஜா) இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் பெருமளவிற்கு அமைதியானதாகவும், நம்பகத்தன்மை மிகுந்ததாகவும் இருந்த அதேவேளை இலங்கை சமூகத்தில் ஒன்றிணைவும், சகல தரப்பினரையும் அரவணைக்கும் போக்கும் இல்லாமை விசனத்துக்குரியதாக இருக்கின்றது என்று ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்கு வந்திருந்த பொதுநலவாய கண்காணிப்பாளர் குழுவின் தலைவர் புரொஸ்பர் பாணி தெரிவித்திருக்கிறார். கானா நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பாணி தலைமையிலான கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தி, தங்களது பூர்வாங்க அறிக்கையை வெளியிட்டனர்…
-
- 1 reply
- 438 views
-
-
(ஆர்.யசி) எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை பாராளுமன்றத்தில் சபாநாயகரால் தீர்மானிக்க முடியாது. இது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தீர்க்கப்பட வேண்டிய உட்கட்சி விவகாரம், இதனை பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பேச அவசியமில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ள கட்சியில் பாராளுமன்றக் குழுத் தலைவரே எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்படுவார் எனவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் இன்று காலை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியது. அடுத்த பாராளுமன்ற அமர்வுகளை கூட்டும் காலம், அடுத்ததாக ஆளும் மற்றும் எதிர் கட்சிகளின் ஆசன ஒதுக்கீடுகள் குறித்து…
-
- 1 reply
- 587 views
-
-
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த எரிபொருள் விலைச்சூத்திரத்தை இரத்துச்செய்ய நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் எரிபொருட்களில் விலை மாற்றம் இனிமேல் முன்னெடுக்கப்பட மாட்டாது என தெரிவிப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/எரபரள-வலசசததரம-இரதத/175-241316
-
- 0 replies
- 439 views
-
-
ரணில் பதவி விலகியதும் இடைக்கால பிரதமராக பதவியேற்கிறார் மஹிந்த? பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கம் பதவியேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கமைய இந்த அரசாங்கம் இன்று (புதன்கிழமை) மாலை அல்லது நாளை காலை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, கம்மன்பில, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, நிமால் சிறிபாலடி சில்வா உள்ளிட்டவர்கள் அமைச்சு பதவியை ஏற்கவுள்ளனரென்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக நீடித்த இழுபறியின் பின்னர், பிரதமர் பதவியை துறக்க ரணில் விக்கிரமசிங்க நேற்று முடிவு செய்தார். நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்து தன…
-
- 20 replies
- 1.3k views
-
-
அரசியல் பழிவாங்கல், கடத்தல், தொந்தரவுகள் ஏற்படும் என பீதி அடைய வேண்டாம்… November 21, 2019 நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முன்னரிலும் பார்க்க எதிர்வரும் நாட்களில் மிகவும் எச்சரிக்கையாகவும் அவதானத்துடனும் செயல்படுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்கிரமரட்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதுதொடர்பாரபாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு: அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் எந்தவொரு அரசியல் பழிவாங்கல், கடத்தல் அல்லது தொந்தரவுகள் ஏற்படக்கூடும் என மக்கள் மத்தியில் எந்தவிதமான தேவையற்ற…
-
- 3 replies
- 617 views
-
-
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் தெரிவித்தனர். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், ஜனநாயக ரீதியிலே புதிய ஜனாதிபதியாக கோத்தாபய தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நாமும் ஜனநாயக முறையிலேயே சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான தீர்வுக்காக தெருவில் இருந்து தொடர்ந்து போராட…
-
- 8 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் ஜனாதிபதி தேர்தலை இம்முறை தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தார்கள். ஆனால் யாழ் மாவட்டத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்ததைவிட 0.22 வீதம் அதிகமாக இம்முறைத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளார்கள். கடந்த(2015) தேர்தலில் யாழ் மாவட்டத்தில் 66.28 வீதமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால், தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சாரம் த.தே.மக்கள் முன்னணியினரால் பலமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இம்முறை 66.5 வீதம் மக்கள் யாழ் மாவட்டத்தில் வாக்களித்துள்ளார்கள். த.தே.ம.முன்னணியினரின் தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை யாழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்ற வழக்கிலிருந்து விடுதலை 5 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ (கோப்புப்படம்) பாரிய நிதி மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளிலிருந்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விடுவிக்க மேல் மாகாண மூவரடங்கிய விசேட நீதிமன்றம் இன்று (வியாழக்கி…
-
- 1 reply
- 453 views
- 1 follower
-
-
"எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" "எதிர்க்கட்சி தலைமையை சஜித்திற்கு வழங்காவிடின் பொதுத்தேர்தலில் படுமோசமாகத் தோல்வியடைய நேரும்" Published by R. Kalaichelvan on 2019-11-21 16:40:30 (நா.தனுஜா) ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த கட்சி என்பதுடன், பல தலைசிறந்த தலைவர்களை உருவாக்கிய கட்சியாகும். எனவே இக்கட்சியிலிருந்து விலகி, புதியதொரு கட்சியை அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எமக்கில்லை. எக்காரணத்திற்காகவும் கட்சியிலிருந்து விலகவேண்டாம் என்றே சஜித் பிரேமதாஸவும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவ்வாறு செய்வது …
-
- 0 replies
- 221 views
-
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டும் – பைஸர் முஸ்தபா 2:38 pm November 21, 2019 1 Comment 295 Views புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அவர் பெற்றுக்கொடுத்து அதனை பலப்படுத்துவார் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பைஸர் முஸ்தபா வெளியிட்டுள்ள விசேட செய்தியில் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் துறைசார்ந்த நிர்வாகத்தில் மிக நீண்ட கால பழுத்த அனுபவங்களைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ்வி…
-
- 0 replies
- 185 views
-
-
சர்வதேச செய்தி நிறுவனம் இலங்கை ஜனாதிபதியாக கோதாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவரை ' தமிழ் இன ஒழிப்புக்கு காரணமான இராணுவத் தலைவர் ' என விபரித்தமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி சுரகிமு ஸ்ரீலங்கா மற்றும் சிங்களே அபி அமைப்பு உள்ளிட்ட நான்கு அமைப்புக்கள் பிரித்தானிய பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. அத்தோடு இன்று வியாழக்கிழமை கொழும்பு 7 பௌத்தாலோக மாவத்தையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பிரித்தானியாவை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச செய்தி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிய கடிதம் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கையளிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் த…
-
- 1 reply
- 275 views
-
-
6 இலட்சம் ரூபா எரிபொருள் பற்றுச்சீட்டை அரசிடம் கையளித்து விடைபெற்று சென்றார் ராஜித Published by J Anojan on 2019-11-21 15:51:20 (ஆர்.விதுஷா) சுகாதார அமைச்சராக பதவியில் இருந்தபோது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 6 இலட்சம் ரூபா பெறுமதியான எரிபொருள் பற்றுச்சீட்டுக்களை அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டு முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பதவியிலிருந்து விடைபெற்றுச் சென்றார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற வைபவத்தின்போது ராஜித சேனாரத்ன அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடம் அந்த எரிபொருளுக்கான பற்றுச் சீட்டுக்களை ஒப்படைத்தார். இவ் வைபவத்தில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், முன்னாள் அமைச்…
-
- 0 replies
- 602 views
-
-
தமிழருக்கான தீர்வு பற்றி கோத்தாபயவிடம் மோடி வலியுறுத்துவார் – விக்கி Published by T Yuwaraj on 2019-11-21 16:03:32 ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு. இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். என தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்ப…
-
- 0 replies
- 226 views
-
-
எதிர்க்கட்சி தலைவர் பதவியை ரணிலுக்கு வழங்குங்கள் – சபாநாயகருக்கு கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு கோரி சபாநாயகருக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகர் மூலம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இவ்வாறு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது http://www.dailyceylon.com/192763/
-
- 0 replies
- 203 views
-
-
எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் ஜனநாயக வீரம் புரிகிறது. இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது. காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது. இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை. தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ…
-
- 6 replies
- 1.4k views
-
-
இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி 450 கிராம் பாண் ஒன்றின் விலையானது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 16 ஆம் திகதி ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 8 ரூபாவினால் அதிகரித்தமையின் காரணமாக தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதன் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்…
-
- 4 replies
- 691 views
-
-
புதிய ஜனாதிபதி தமிழ் மக்களது கருத்து வெளிப்பாட்டுக்கு மதிப்பளித்து செயற்படவேண்டும். அவர் அவ்வாறு செயற்படுவார் என நம்புகின்றேன். அவ்வாறு செயற்படுவதன் மூலம் நாம் அனைவரும் இலங்கை நாட்டின் சமமான குடிமக்கள் எனும் உணர்வு ஏற்படும் என்பதையும் நாடு பிளவுபடாது பாதுகாக்கப்படும் என்பதையும் புதிய ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்தோருக்கும் தமிழ் மக்கள் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் தேர்தல் மாவட்டங்களிலும் வாழும் மக்கள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள…
-
- 0 replies
- 248 views
-
-
அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் Nov 19, 2019 | 1:53by புதினப்பணிமனை in கட்டுரைகள் சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம். சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிபிசி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சிறிலங்கா வாக்காளர்கள் கோத்தாபயவிற்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மையில்லை! தேசிய கீதத்தினை சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தேசிய கீதம் இனிவரும் காலங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இசைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. எனினும் குறித்த தகவல்களில் உண்மை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்றின் ஊடாகவே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்த தகவலினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதி…
-
- 1 reply
- 562 views
-