ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143686 topics in this forum
-
Wednesday, November 6, 2019 - 11:17am ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த சகல காலக்கட்டங்களிலும் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். மீண்டும் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தால் திகன, அளுத்கம, குளியாப்பிட்டிய போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்கள் போன்று நடக்கலாம் என்ற யூகத்தை வைத்தே 'அம்பானட லெபே' என்ற கதை திரிவு படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார். கண்டி, மடவளை பஸார் சிரிமல்வத்தை பகுதியில் இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதவு தெரிவித்து (02) இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட முஸ்லிம் பிரிவு இதனை ஒழுங்கு செய்…
-
- 1 reply
- 642 views
-
-
எம்சிசிக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் பௌத்த பிக்கு Nov 06, 2019by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் அமெரிக்காவுடன் எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த பிக்கு, நேற்றிரவு தமது போராட்டத்தைக் கைவிட்டார். எம்சிசி கொடை உடன்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடக் கூடாது எனக் கோரி, வண. உடுதும்பர காஷ்யப்ப தேரர் என்ற பௌத்த பிக்கு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்றுக்காலை தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். எம்சிசி உடன்பாடு நாட்டின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று, உடுதும்பர காஷ்யப்ப…
-
- 2 replies
- 443 views
-
-
தமிழரசுக் கட்சி கோத்தாவையே ஆதரித்திருக்க வேண்டும் – யாழில் நாமல் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கான எமது செயற்பாடுகள் மிகவும் சுமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள், யாழ் மக்களுக்காகவோ வடக்கு- கிழக்கு வாழ் மக்களுக்காகவோ, இதுவரை எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்கள் தங்களின் சுயலாபத்திற்காகவே இதுவரை செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை வடக்கு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பங்காளிக் கட்சியாகும். கடந்த காலங்களில் இருந்த கட்சியல்ல அது.அந்தக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரி…
-
- 11 replies
- 950 views
-
-
சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்! யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும். இதவேளை யாழ்…
-
- 17 replies
- 2.2k views
-
-
ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார் யாழ்ப்பாணச் செய்தியாளர்Nov 06, 2019 by in செய்திகள் ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார். இரத்தினபுரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னக்கண்ணு பெருமாள், ஊடகத்துறை மீது இருந்து ஆர்வத்தினால் இளவயதிலேயே, வீரகேசரி நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார். பின்னர், 1961ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழில், உதவி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், பின்னர் அதன் செய்தி ஆசிரியராகவும், வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார். அதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி…
-
- 3 replies
- 529 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” நீதி மன்றில் சரண் யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.வாள்வெட்டு வன்முறை, ஆள்களுக்கு காயம் விளைவித்தமை, கொள்ளை, கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்திருந்தமை, வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று காவற்துறையினர் தெரிவித்த…
-
- 0 replies
- 459 views
-
-
தமிழுக்கு முதலிடம் வழங்குவதை பொறுக்காதவர்கள் எப்படி தமிழர்களுக்கு தீர்வை தருவார்கள் – ஹக்கீம் யாழ்ப்பாண விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழுக்கு முதலிடம் கொடுத்ததை ஜீரணித்துக்கொள்ள முடியாதவர்கள் எவ்வாறு தமிழ் பேசும் மக்களுக்கு தீர்வினை பெற்றுத்தருவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (04) முல்லைத்தீவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; தமிழ் மக்கள் செறிந்துவாழும் யாழ்ப்பாணத்தில் தமிழுக்கு முதலிடம்…
-
- 7 replies
- 825 views
-
-
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட் சம் மக்கள் கொல்லப்பட காரணமான வேட்பாளரை மாற்றுக் கட்சி களமிறக்கியுள்ளது. எனவே வடக்கு–கிழக்கில் மக் கள் புரிந்து வாக்களிக்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று இடம்பெற்ற மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த மாநாட்டில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேம தாசவின் பாரியார் ஜலனி, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க, வடமாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்பாளருமான றிப்கான் பதியுதீன், மகளிர…
-
- 0 replies
- 249 views
-
-
புத்தளம் பகுதியில் இடம் பெயர்ந்து வாழும் மன்னார் மாவட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வருவதற்கு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளே ஒழுங்கு செய்யப்படும் என மன்னார் உதவி தேர்தல் ஆணையாளர் ஜெ. ஜெனிற்றன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்பட்டு புத்தளம் பகுதியில் வசித்து வருபவர்கள் கடந்த காலங்களைப் போன்று இம்முறை தனியார் பேருந்துகளில் வாக்களிக்க வருவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. ஏனெனில் கடந்த காலங்களில் வாக்களிப்பு வேளைகளில் புத்தளத்திலிருந்து தனியார் பேருந்துகளை அரசியல் தலைவர்கள் வாடகைக்கு அமர்த்தி வாக்காளர்களை மன்னாரில் வாக்களிப்பதற்கு அழைத்து வருவதாகும். இவ்வாறு அழைத்து வரும்பொழுது வாக்க…
-
- 0 replies
- 291 views
-
-
Headlines News : மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்? மொட்டு கட்சியின் தமிழ் விஞ்ஞாபனமாம்? கோட்டாவின் மொட்டு கட்சியைச் சேர்ந்த ரிஷி செந்தில் ராஜ் whatsapp மூலம் கோட்டாவின் தமிழ் மொழியிலான விஞ்ஞாபனத்தைப் பகிர்கிறாராம். ஏன் பொது இணைப்பொன்றை ஏற்படுத்தி பொதுவில் பகிர முடியாதா? சிங்களத்தில் வெளியிடும் போது அப்படித் தானே செய்தீர்கள்? அனைவரதும் தொலைபேசி இலக்கங்களை சேகரிப்பதன் உள்நோக்கம் என்ன? ஏன். மின்னஞ்சல்…
-
- 1 reply
- 501 views
-
-
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றைய தினம் மகளிர் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டார். இந்த நிகழ்வுகளில் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில் வடமாகாணத்தில் நேற்றும் இன்றும் மகளிர் அணி மாநாடுகள் இடம்பெற்று வருகின்றன. வவுனியாவில் மகளீர் ஒன்று கூடல் நிகழ்வு நேற்றைய தினம் தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது. இதேபோன்றே மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாநாடுகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டங்களில் பெண்கள் அமைப்பின் தலைவிகள், கிராம மடட்ட அமைப்புக்களின…
-
- 0 replies
- 404 views
-
-
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என…
-
- 14 replies
- 1.9k views
-
-
யாழ். பல்கலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவன் தூக்கிட்டு இரண்டு நாட்கள் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். http://athavannews.com/யாழ்-பல்கலை-மாணவன்-தூக்க/
-
- 5 replies
- 1.3k views
-
-
திருக்கேதீச்சர வளைவு விவகாரம் – மன்னார் மறைமாவட்டம் எச்சரிக்கை! மன்னார் திருக்கேதீச்சர வளைவு தொடர்பான வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தரப்பினர் சார்பாக ஆஜராகியுள்ளமையானது பக்கச்சார்பானது என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமயோசிதமற்ற முடிவுகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துவதால் பிற வழிகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம் என மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மன்னார் மறைமாவட்ட பொது நிலையினர் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்பணி ச.எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில், “மன்னார் மறை மாவட்…
-
- 3 replies
- 813 views
-
-
(ஆர்.யசி) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் ஆரோக்கியமானதும் திருப்திகரமான, தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய விதத்திலான தேர்தல் விஞ்ஞாபனத்தை புதிய ஜனநாயக முன்னணி முன்வைத்துளதென கருதுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தாம் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த கோரிக்கைகள் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நிலைபாட்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாவும் கூறுகின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை கொண்டு தம…
-
- 6 replies
- 888 views
-
-
சந்திரிகாவின் மாநாடு இன்று – பதற்றத்தில் சுதந்திரக் கட்சி தலைமை Nov 05, 2019 | 2:09by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் ‘ அபி சிறிலங்கா’ என்ற பெயரில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்கவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார வெல்கமவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாடு, இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, கட்சி அமைப்பாளர்களுக்கு குமார வெல்கம அழைப்பு விடுத்திருந்தார். இதில் பெருமளவிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் மட்ட பிரதிநிதிகள், ஆதரவாளர்க…
-
- 1 reply
- 358 views
-
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் முடிவானது மக்களை முன்வைத்துப் பார்க்காது கட்சியை முன்வைத்துப் பார்க்கும் செயலாகவே உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைசர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்தமை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் இருந்தார்கள் தமிழரசுக் கட்சி புளட் ரெலோ இதில் புளட் அண்மைக்காலங்களில் தமிழரசுக் கட்சி என்ன தீர்மானம் எடுக்கின்றதே அதை நாங்களும் ஏற்கின்றோம் என்ற நிலையில் தான் இருந்து வருகின்றார்கள்.சித்தார்த்தனைப் பெறுத்தவரையில் அவரின் தகப்பனார் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்…
-
- 2 replies
- 463 views
-
-
தமது எதிர்காலம் தமது பாதுகாப்பு, தமது சுயமரியாதை, தமது இருப்பு இவற்றை முன்னிறுத்தி தமிழ் மக்கள் வைத்த கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ, அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது என ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்). அந்த கட்சியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இன்று (5) விடுத்த அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பிரித்தானிய காலனியாதிக்கத்தின் இறுதிப்பகுதியிலிருந்தே சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனை மேலோங்கியதன் காரணமாக இந்நாட்டின் சமபங்காளிகளான தமிழ்த் தேசிய இனத்தின்மீதா…
-
- 0 replies
- 354 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர வளைவு உடைப்பு – மேல் நீதிமன்றில் சுமந்திரன்.... November 5, 2019 1 Min Read மன்னார் திருக்கேதீச்சர ஆலய வளைவு உடைக்கப்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று திங்கட்கிழமை (4) மன்னார் மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.அப்துல்லா முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார். இதன் போது சட்டத்தரணி சுமந்திரன் தீருக்கேதீச்சர ஆலய திருப்பணிச்சபையின் செயலாளர் எஸ் எஸ் இராம கிருஸ்ணனின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆட்சேபித்து வாதாடினார். -குறித்த வழக்கு விசாரனை தொடர்பாக திருக்கேதீச்சரம் ஆலய ந…
-
- 3 replies
- 794 views
-
-
தமிழரசுக் கட்சி என்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை? – சிவாஜி கேள்வி சிங்கள பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவை தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சி தன்னுடன் ஏன் கலந்துரையாடவில்லை என ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். மன்னார் தனியார் விடுதி ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக்கட்சி அறிவித்துள்ளது. தேர்தல் விஞ்ஞாபனங்களை நன்கு ஆராய்ந்ததன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், நான் இதுவரையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவில்லை. அவ்வாறெனில் என்னுடன்…
-
- 6 replies
- 425 views
-
-
Published by J Anojan on 2019-11-05 21:12:22 (இராஜதுரை ஹஷான்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள சமூகத்திடம் ஒரு கருத்தினை குறிப்பிட்டு ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டியாட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கலகெதர நகரில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரண்டு பிரதான அரசியல் கட்சிகளிள் தேர்தல் கொள்கை பிரகடனம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவின் தேர்தல் கொள்கை அனைத்து இன மக்களுக்கம், பொதுவானதாகவும், பொருளாதாரத்தினை முன்…
-
- 0 replies
- 233 views
-
-
அதிபர் தேர்தலில் 13 டம்மி வேட்பாளர்கள் – கண்டுபிடித்தது தேர்தல்கள் ஆணைக்குழு Nov 05, 2019 | 1:35by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில், இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், குறைந்தபட்சம் 13 போலி (டம்மி) வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அடையாளம் கண்டுள்ளது என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். “இந்த போலி வேட்பாளர்களில் ஏழு பேர் முக்கியமான ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவும், ஏனைய ஆறு பேர் மற்றொரு முக்கிய வேட்பாளருக்கு ஆதரவாகவும் போட்டியில் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளது. இவர்களின் அங்கீகரிக்க…
-
- 2 replies
- 384 views
- 1 follower
-
-
கோத்தாபய திருட்டுத்தனமாக கைச்சாத்திட்ட எக்ஸா ஒப்பந்தத்தைப் போன்றதல்ல எம்.சி.சி ஒப்பந்தம் - சம்பிக்க Published by T. Saranya on 2019-11-04 15:21:13 (நா.தனுஜா) மிலேனியம் சலென்ஞ் உடன்படிக்கை என்பது கோத்தாபய ராஜபக்ஷ யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட எக்ஸா ஒப்பந்தத்தைப் போன்றதல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தம் நாட்டிற்கு நிதியுதவியைப் பெற்றுக்கொள்ளத்தக்க வகையில் வெளிப்படைத்தன்மையுடனேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பாரிய நகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார். மிலேனியம் சலென்ஞ் கோப்பரேஷன் உடன்படிக்கையின் பிரதி நிதியமைச்சரால் இணையத்தளத்தில் பதிவேற்ற…
-
- 1 reply
- 274 views
-
-
ரணிலைச் சந்தித்த ரெலோ, புளொட் – 48 மணி நேரத்துக்குள் முடிவு Nov 05, 2019 | 1:55by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்கா அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான, ரெலோவும், புளொட்டும் அடுத்த 48 மணிநேரத்துக்குள் முடிவை அறிவிக்கவுள்ளன. கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது. எனினும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை கூட்டமைப்பின் தலைமை இரா.சம்பந்தனிடம் ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு …
-
- 0 replies
- 271 views
-
-
வடக்கு, கிழக்குக்கு வெளிநாட்டு உதவியை பெற கொடை நாடுகளின் மாநாடு – சஜித் வாக்குறுதி Nov 05, 2019 | 2:19by Vanni in செய்திகள் வடக்கையும், கிழக்கையும் அபிவிருத்தி செய்வதற்கான வெளிநாட்டு உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக, கொடை நாடுகளின் இரண்டு மாநாடுகளை கூட்டப் போவதாக, புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று தேர்தல் பரப்புரைப் பேரணியில் உரையாற்றிய போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தாம் அதிபராகப் பொறுப்பேற்றதும், கூடிய விரைவில் இந்த மாநாடு கூட்டப்படும் என்றும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அதிபர் அபிவிருத்தி செயலணிகளில் இரண்டு புதிய சிறப்பு பி…
-
- 0 replies
- 236 views
-