Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நுண் நிதி நிறுவனங்கள் தொடர்பாண விழிப்புணர்வு வீதி நாடகம்… September 21, 2019 மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர். இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர்…

  2. ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று முதல் செலுத்த முடியும் என அறிவிப்பு! ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை இன்று(வியாழக்கிழமை) முதல் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 6 ஆம் திகதி நண்பகல் வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், எதிர்வரும் 7ஆம் திகதி வேட்பு மனுக்கள் கோரப்படவுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மன…

  3. கேப்பாபுலவு காணிகள் விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல் கேப்பாபுலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபுலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட மாற்றுக்காணிகளையும் வாழ்வாதரமும் வழங்க முன்வருவதாக ஆளுநர் குறிப்பிட்டார். இதன்போது அப்பகுதி …

  4. முள்ளிவாய்க்காலில் இலங்கைக்கு அமைதி வேண்டி விஷேட பிரார்த்தனை முள்ளி வாய்க்கால் பகுதியில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை இலங்கைக்கு அமைதி வேண்டி விசேட பிரார்த்தனை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்தத்தில் பெருமளவு மக்களைக் காவு கொண்ட முள்ளி வாய்க்கால் மேற்கு கனிஷ்ட வித்தியாலயத்தின் மைதானத்தில் நேற்று மாலை 6.30மணி முதல் இன்று அதிகாலை 5மணிவரையும் இவ்விசேட பிரார்த்தனை எழுப்புதலின் துதி ஆராதனைப் பெருவிழா நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஆரம்ப நிகழ்வில் இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலயத்தின் பிரதான பிஷப் பி. எம். இராஜசிங்கம் விசேட பிரதிநிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். எஸ். சி…

  5. இந்தியாவுக்கு அகதிகளாக சென்றவர்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன், பேச்சுவார்த்தைகள் நடத்தி விரைவில் உரிய தரவுகளை திரட்டி பாராளுமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்தது. 2009 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை அகதிகளாக இந்தியாவுக்கு சென்றவர்களில் 7,753 பேர் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். மேலும் 11,356 இலங்கைக்கு திரும்ப விண்ணப்பித்திருந்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அத்துடன் 1949 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 5,10,000 பேர் எனவும் அமைச்சு தெரிவித்தது பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, இந்தியாவ…

    • 0 replies
    • 279 views
  6. Friday, September 20, 2019 - 11:15am 100வருடங்களுக்கு மேற்பட்ட பழைய விகாரைகளை புண்ணிய பூமிகளாக பிரகடனப்படுத்தி, அவ்விகாரைகளுக்கு தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தவுள்ளது. அத்துடன் புத்த சாசனத்தை பாதுகாத்துக் கொண்டு ஏனைய சமயங்களையும் பாதுகாப்பதே எமது அரசின் நோக்கமாகும் என புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார். வெலிகம நகர மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், …

    • 0 replies
    • 325 views
  7. நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கின்றது – சுமந்திரன் அதிருப்தி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையினை ஒழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்தமளிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விசேட அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது என்ற யோசனைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த அவர் “நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை தொடர்பாக நல்லாட்சியை நடத்தியவர்களின் செயற்பாடு வருத்த…

  8. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம். இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, அவசர கால சட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ஆடைகள் மற்றும் முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலைகவசங்களை அணிவற்கும் பாதுகாப்பு பிரிவினர் தடை விதித்திருந்தனர். …

    • 0 replies
    • 487 views
  9. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாதாந்த கொடுப்பணவாக 6000 ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. https://www.virakesari.lk/article/65222

  10. கிளிநொச்சி, சிவபுரம் பகுதியில் கடற்படையினரால் அகழ்வு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விடுதலை புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வு பணிகள் முன்னடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த அகழ்வு பணியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த.சரவணராஜா பார்வையிட…

    • 0 replies
    • 413 views
  11. யாழ் பல்கலை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்… September 20, 2019 பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பினால் அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலிலும் 10.09.2019இலிருந்து தொடர் தொழிற்சங்கப் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு பகுதியாக விரைந்து தீர்வைப் பெறுவதற்கு பல்கலைக்கழகங்களின் அண்மைய நகரங்களில் சுவரொட்டிகள், பதாதைகளினை முன்நிறுத்தி வெள்ளிக்கிழமை 20.09.2019 இன்று பாரியளவிலான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்படும். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் யாழ் பல்கலை முன்றலில் இருந்து பரமேஸ்வரா சந்திவரை ஓர் கவனயீர்ப்பு பேரணி இன்று காலை 10 மணியளவில் நடத்தப்படும். பல்கலைக்கழக ஊழ…

  12. சஜித்துடன் பேச்சுவார்ததையில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை: சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக அமைச்சர் சஜித் பிரேமதாஸவுடன் பேசவேண்டிய தேவை எமக்கு கிடையாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், மக்கள் விடுதலை முன்னணி, ஏனைய கட்சிகள், சிவில் அமைப்புகள் ,தொழில் சார் நிபுணர்கள் போன்றோருடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஆனால் ஒருபோதும சஜித் பிரேமதாஸவுடன் பேச்சுவ…

  13. வவுனியாவில் இராணுவப்பயிற்சி என்ற போர்வையில் சோதனை!- மக்கள் விசனம் வவுனியா- மெனிக்காம் பகுதியில் இராணுவ பயிற்சி என்ற பெயரில் தங்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் தங்களது இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) காலை வவுனியா- செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெனிக்பாம் பகுதியில் இராணுவ சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போர்காலத்தை நினைவூட்டுவதுபோல, பெருமளவான துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். …

  14. பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில் அறைந்ததுடன், அவர் மீது உமிழ் நீர் துப்பி தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கல்வியங்காடு பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்கு, வழிபாட்டுக்குச் சென்ற பெண் ஒருவரின் சுமார் 98 ஆயிரம் பெறுமதியுடைய தங்க ந…

  15. ஸ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சிங்கள கட்சிகளின் வேட்பாளர்களில் எவருக்காவது ஆதரவு வழங்குவது என்றால் முதலில் அவர்களிடம் இருந்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் தமிழர் தரப்பு உத்தரவாதங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதனைவிடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மீண்டும் ஆதரவு வழங்குமாறு தமிழ் மக்களை கோருவார்களானால் அதுவே மீண்டும் தமிழ் மக்களின் தலைகளில் மண்ணை அள்ளிபோட்டுக்கொள்ளும் முடிவாக அமைந்துவிடும் என்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் எச்சரித்திருக்கின்றார். …

  16. இலங்கையின் மனித உரிமை பணியாளர்கள் ஆர்வலர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாவது குறித்து ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்டரஸ் கவலை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்படுகின்றனர் எனஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகலம் தெரிவித்துள்ளதாக ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் கலந்து விட்டு இலங்கை திரும்பியவர்கள் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர் அச்…

    • 2 replies
    • 294 views
  17. -க. அகரன் வவுனியா - பன்றிக்கெய்தகுளம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் நாட்டப்பட்ட பயன் தரும் பல தேக்கம் மரங்கள் வன இலகா திணைக்களத்தினரால் கனரக வாகனங்கள் எடுத்துவரப்பட்டு தறிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நேற்று பன்றிக்கெய்தகுளம், ஆறுமுகத்தான்புதுக்குளம் கிராம அலுவலகர் பிரிவிலுள்ள மரையடித்தகுளம் இந்தியன் வீட்டுத்திட்டம் பகுதியிலுள்ள இரண்டு ஏக்கர் பாரிய தேக்கம் காட்டுக்குள் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகத்தர்கள் பாரிய தேக்கம் மரங்களைத் தறித்து வருகின்றனர். பன்றிக்கெய்தகுளம் பகுதியில் 20 முதல் 30 வருடங்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டப்பட்டு பொருண்மிய …

    • 0 replies
    • 655 views
  18. (நா.தனுஜா) நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான நகர்விற்கு நல்லாட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அத்துடன் இது அவர்களது உச்சளவிலான சுயநலத்தையும், சந்தர்ப்பவாத தன்மையையுமே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/65167 நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் யோசனையை எதிர்க்கும் நல்லாட்சி மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார முறைமை ஒழிப்ப…

    • 0 replies
    • 413 views
  19. முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனுக்கு விசாரணையொன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்றது. குறித்த அழைப்பு கடிதத்தில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்று தொடர்பில் தங்களின் வாக்குமூலம் ஒன்று அவசியம் தேவைப்படுவதால் செப்ரெம்பர் 25 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு 2 ஆம் மாடி புதிய செயலக கட்டடம் கொழும்பு 01 என்ற முகவரிக்கு சமூகமளிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு , பனிக்கன்குளம், மாங்குளம் என்ற முகவரியில் அமைந்துள்ள ஊடகவியலாளரின் வீட்டிற்கு நேரடியாக சென்ற பொலிஸார் விசாரணைக்க…

    • 0 replies
    • 360 views
  20. ( ஆர்,யசி,எம்.ஆர்.எம்.வஸீம்) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு ஆட்சேர்ப்பு விடயத்தில் இன, பிரதேச பாகுபாடுகள் பார்க்கப்படுவதில்லை. வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற கொள்கைக்கு நானும் உடன் படுகின்றேன். அதனடிப்படையிலே இந்த பெயர் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது என நீர்வழங்கல் நகர திட்டமிடல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நிலையியற்கட்டளை 27/2இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/65143

  21. ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி விவாதிப்பது இழிவான செயல் என்று ஐக்கிய தேசிய கட்சியில் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமரால் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனை இன்று விசேட அமைச்சரவையில் சஜித் பிரதேமதாச உள்ளிட்ட குழுவினரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது. இது தொடர்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது பொதுமக்களின் ஜனநாயக உரிமைக்கு அடியாக அமையக்கூடிய செயல் என்றும் அவர் காட்டமான முறையில் தெரிவித்தார். …

  22. September 19, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் அறக்கட்டளை நிதியம், தேங்காய் சிரட்டை மூலம் கைவினை, அழகுசாதனப் பொருட்களை உருவாக்கும் கற்கை நெறியின் புதிய பிரிவுக்கான வகுப்புகளை செப்ரெம்பர் 27 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. …

  23. யாழில் எந்த பாடசாலை அதிபரும் கைது செய்யப்படவில்லை என வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை சேர்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றசாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் புதன்கிழமை மாலை இணையத்தளங்கள் உட்பட சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியிருந்தன. அது குறித்து வடமாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவரை கேட்ட போது , யாழில். உள்ள பிரபல பாடசாலை , அச்சுவேலி பகுதியில்…

  24. தாமரைக் கோபுர மோசடி: ஜனாதிபதி சீனாவை இழிவுபடுத்தியுள்ளார்- மஹிந்த குற்றச்சாட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை அமைக்க 2 பில்லியன் ரூபா முற்பண நிதி, சீனா நெசனல் இலக்ரோனிக்ஸ் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டதாகவும், சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான பாரிய நிறுவனமொன்று 2 பில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொண்டு தலைமறைவாகியுள்ளதென குற்றச்சாட்டுகளை முன்வைப்பது சீன அரசாங்கத்தை இழிவுப்படுத்துவதாகும் என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த பாரிய வேலைத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு சீன நிறுவனங்களும் சீனாவின் பாரிய நிறுவனங்களாகும். ALIT நிறுவனத்திற்கோ அல்லது வேறு எந்த நிறுவனமொன்றுக்கோ எவ்வித நிதியும் வழங்கப்படவில்லையெனவும் அவ…

  25. ஜே.வி.பி. யுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணி? ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் மேற்கொள்வதற்கு பல்வேறு மாற்று வழிகள் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அறிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனியாக வேட்பாளரை நியமிப்பதற்கு விண்ணப்பம் கையளித்துள்ளது. பல்வேறு கூட்டணிகள் காணப்படுகின்றன. மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டணி அமைக்கவும் எம்மால் முடியும் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். சுதந்திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.