ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமது போராட்டத்தின் மூலம் மருத்துவம், நீதிமன்றம், கல்வி, பொருண்மியம், சீரான இராணுவக் கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கிய ஒரு நிழல் அரசை நிறுவி இருந்தது என்பது தமது ஆய்வில் தெரிய வந்துள்ளமையால் இவ் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாது. இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு https://www.facebook.com/tamilnaduhungerstrike
-
- 32 replies
- 2.4k views
-
-
அலரி மாளிகைக்கு... முன்பாக, அமைக்கப்பட்டுள்ள... ‘மைனா கோ கம’ – 2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்! கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்னாள் ‘மைனா கோ கம’ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 2ஆவது நாளாகவும் தொடர்கிறது. கொள்ளுப்பிட்டி – அலரி மாளிகைக்கு முன்னால் ‘ மைனா கோ கம ‘ எனும் பெயரில் நேற்று இரவிரவாக போராட்டம் இடம்பெற்றது. இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்கள் நடைபாதையில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்று அதிகாலையில் குறித்த பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈ…
-
- 0 replies
- 170 views
-
-
ஜே.வி.பியினருக்கு கிடைத்த போது ஏன் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்கவில்லை நாட்டில் வன்முறையில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட மக்கள் வஜடுதலை முன்னணியினர் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டது போன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதசெய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் ஏன் விடுதலை வழங்கப்படக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளது வழக்குகளில் அரசியல் அழுத்தங்களும் காணப்படுவதால், அவை முழுமையாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில இருப்பாக கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச்ச…
-
- 1 reply
- 284 views
-
-
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளுக்கு சில நிபந்தனையுடன் தமிழத்தில் சிகிச்சை அளிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். இந்நிலையில் மலேசியாவில் வரும் 15ஆம் தேதிக்குள் விசா காலம் முடிவடைவதால், பார்வதி அம்மாள் இலங்கை செல்ல முடிவு செய்தார். இதனையடுத்து சிவாஜிலிங்கம் உதவியோடு திங்கள்கிழமை மாலை இலங்கை கொழும்பு விமான நிலையத்துக்கு வந்த பார்வதி அம்மாள், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளார். தமிழகத்தில் பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கிடைத்திருப்பது பற்றி தமிழக அரசு மூலமோ, இந்திய அரசு மூலமோ இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள சிவாஜிலிங்கம்,…
-
- 12 replies
- 1.5k views
-
-
மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை! - நக்கீரன் இதழ்(19-05-10) இல் வெளியான செய்தி சர்ச்சையில் இருப்பதால் எந்த ஒரு ஊடகமும் இச் செய்தியை பிரசுரிக்க வேண்டாம் என தமிழ் ஊடகவியலாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்... ...காரணம்.. தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள். அவர்கள் அப்படி செல்வது தமிழகத்தில் உள்ள எந்த உணர்வாளர்களுக்கோ, அமைப்புக்கோ, தலைவர்களுக்கோ தெரியாது. அவர்களின் திடீர் பயணம் ஏன் எதற்காக என்ற கேள்வி?? இந்த இருவரையும் அங்கே யார் அழைத்தது, எதற்காக அழைத்தார்கள் என்ற பெரும் சந்தே…
-
- 7 replies
- 2.4k views
-
-
அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியாவுக்கு மாற்ற காரணம் சாட்சியாளர்களே அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு வவுனியாவில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டமைக்கான காரணம் அந்த வழக்கின் சாட்சியாளர்களே என்றும், இதில் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் கூறியுள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வழக்கின் பிரதான சாட்சியாளர்களாக இருப்பவர்கள், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களான தமிழர்கள். தாங்கள் சாட்சியம் வழங்கும் போது தமிழ் பிரதேசங்களுக்கு செ…
-
- 2 replies
- 341 views
-
-
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும்... நாடாளுமன்ற உறுப்பினர்களை, சந்திக்கிறார் ஜனாதிபதி கோட்டா! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளை முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெறவுள்ள முதலாவது சந்திப்பு இ…
-
- 0 replies
- 205 views
-
-
இறுதி யுத்தத்தின் போது இந்தியா ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது: மகிந்த திகதி: 30.05.2010 // தமிழீழம் இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போரின் போது இந்தியா, எவ்வாறு ஆதரவளித்தது எனக்கேட்ட கேள்விக்கே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். ஆம், யுத்தத்தின் போது தார்மீக ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது என்ற பதிலின் மூலம் ஜனாதிபதி இதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ( எனினும் இந்தியா, இலங்கைக்கு ஆயுதங்களை விநியோகிக்கவில்லை என்றே தொடர்ந்தும் கூறிவர…
-
- 0 replies
- 1.2k views
-
-
35 நாட்களாக தொடரும் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் நேரில் வந்து பார்வையிடாதது கவலையளிக்கிறது -ஜெ.ராஜன் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல்கைதிகள் மேற்கொண்டுவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 35 நாட்களாகத் தொடர்கிறது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதமை கவலையளிக்கின்றது என அரசியல்கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் வணபிதா மா.சத்திவேல் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்க…
-
- 0 replies
- 365 views
-
-
நாடாளுமன்றம் 10 மணிக்கு கூடவுள்ளது – அண்மைய நிகழ்வுகள் குறித்து விவாதம்! நாடாளுமன்றம் சபாநாயகரின் தலைமையில் இன்று (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது. நாட்டில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொடர் ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதம் இன்றும் நடைபெறவுள்ளது. இதேவேளை, பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1282398
-
- 0 replies
- 143 views
-
-
தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதிக்கு ஆளுநர் விஜயம் தொண்டமனாறு அக்கரை உல்லாசவிடுதி அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் கலாச்சாரசீரழிவினை தடுக்கக்கோரி நடைபெற்றுவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது குறித்த பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிடுவதாக ஆளுநர் உறுதிமொழி வழங்கியதன் அடிப்படையில் நேற்று மாலை அங்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார். உல்லாசக்கடற்கரை என்ற பெயரினை மாற்றித்தர வேண்டும், கலாச்சார சீரழிவினை தடுக்கும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டு…
-
- 1 reply
- 791 views
-
-
பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்-ரணில் விக்கிரமசிங்கவுக்கு மனோ கணேசன் கடிதம் பொருளாதார நெருக்கடியால் கொழும்பில் ஆயிரக்கணக்கான குடுமபங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது நிலைமையை எடுத்துக்கூறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொழும்பு பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடிதம் ஒன்றை உழுதியுள்ளார். உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான். மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள். குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடி…
-
- 0 replies
- 138 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு‐ ‐ அமெரிக்கா 22 June 10 01:47 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாமாதான மற்றும் சட்ட ரீதியான அடிப்படையில் கூட குறித்த அமைப்புக்களுக்கு உதவிகளை வழங்கக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான ஒர் கருவியாக இந்தத் தடைகளை ஒபாமா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தடை செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அம…
-
- 0 replies
- 853 views
-
-
சிறிலங்காப் படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்கள் தொடர்பாக, அனைத்துலக விசாரணைகளை நடத்துவதற்குப் பதிலாக, விரிவான, சுதந்திரமான, நம்பகமான தேசிய விசாரணை (உள்நாட்டு) ஒன்றை சிறிலங்கா நடத்துவதற்கு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை ஊக்கமளிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இந்தியத் தூதுவர் யஸ்வந்த் குமார் சின்கா, அளித்துள்ள செவ்வியிலேயே இந்தியாவினது இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு நாடும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து தேசியப் பொறிமுறை மூலம் பதிலளிக்க வேண்டும் என்று இந்தியா நம்புவதால் தான், அனைத்துலக விசாரணை கோரும் ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளிக்கவில்லை. மனிதஉரிமைகளைப் பாதுகாக்கும் அடிப்படை பொறுப்பு தேசி…
-
- 4 replies
- 585 views
-
-
இலங்கை அணியை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்தமைக்கு நன்றி ; பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி இலங்கை கடற்படை அதிகாரிகள் பாகிஸ்தானில் கற்கைநெறிகளை மேற்கொள்வது பாகிஸ்தானிற்கு பெருமையளிக்கக்கூடிய விடயமாகும். இலங்கை கிரிக்கெட் அணியினை பாகிஸ்தானிற்கு அனுப்பிவைத்தமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பாகிஸ்தானிய கடற்படை கப்பலின் தளபதி ஷேஹ்சாத் இக்பால் தெரிவித்தார். பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் நான்கு நாட்கள் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் கடற்படையின் போர்க் கப்பலான பி.என்.எஸ். சாய்ப் கப்பலுக்கான வரவேற்று நிக…
-
- 0 replies
- 337 views
-
-
குற்றம் புரிந்தவர்கள், தீர்ப்பு வழங்கும் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்கிற உண்மை அரசுகளுக்கு பொருந்தாது என்பது போலிருக்கிறது. இன்றைய புவிசார் அரசியலின் போக்கு ""யாரோ விதிக்கும் நிபந்தனைக்கோடுகளின் எல்லைக்குள் நின்றபடி அங்கும் இங்கும் அங்கலாய்த்து ஓடுகிறார்கள்'' என்கிற சாம் பிரதீபனின் நிஜக் கவிவரிகள், சமகால யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது. அரசால் அமைக்கப்பட்டுள்ள பட்டறிவிலிருந்து கற்ற நிபுணர் குழுவினை வரவேற்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டினையே இங்கு குறிப்பிடுகின்றேன். போர்க்குற்ற விவகாரங்கள் தொடர்பான அமெரிக்காவின் முதன்மைத் தூதுவர் ஸ்டீபன் ரப் (குகூஉகஏஉN கீஅகக) அவர்கள் அரசின் நிபுணர் குழு குறித்த தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி அமெரிக்காவின் இரட்டைப் போக்கினை அ…
-
- 4 replies
- 1.1k views
-
-
(ஆதவன்) நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச்சம்பவத்தையடுத்து பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு வருகைதந்திருந்தனர். தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதில் பொலிஸாரினால் திருடர்கள் கொண்டு வந்த தாக மதுபான டின் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும் 1…
-
- 4 replies
- 619 views
-
-
"இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்…
-
- 0 replies
- 290 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் ஆக்கபூர்வமாக அமைந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கருமங்கள் மற்றும் யுத்த காலத்திற்கு பின்னர் வடகிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவக் கெடுபிடிகள், இனவிகிதாசாரத்தை மாற்றும் செயற்பாடுகள் நல்லிணக்கம் தொடர்பிலான அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களை உயர் மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்புக்களின் போது நாம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அத்துடன் தென்னாபிரிக்க அரசில் இலங்கை விவகாரங்களை கையாளும் விசேட பிரதிநிதி சிறில் ராமபோஷா உள்ளடங்கிய உயர்மட்ட குழுவினர் வெகுவிரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தமி…
-
- 3 replies
- 464 views
-
-
வடக்கு- கிழக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் மாற்றங்கள் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கில் 50ஆயிரம் செங்கல் மற்றும் சிமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு மேலும் நீடித்துள்ளது. இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 13 ஆம் திகதியுடன் கேள்விகோரல் விண்ணப்பங்கள் திறக்கப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நவம்பர் 27ஆம…
-
- 0 replies
- 378 views
-
-
ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பணிகளை நிறைவேற்றி வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பத்றகு இரண்டு குழுக்கள் நாட்டில் செயற்படுகின்றன. ஒன்று ஊடகங்கள் மற்றையது ஆளும் கட்சியின் ஒரு சில குழுக்கள். புத்தி கூர்மையுடன் அரசாங்கதை வழிநடத்தும் எதிர்க்கட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன. எதிர்க்கட்சிகளின் சார்பில் குழப்பங்களை செய்யும் தரப்பாக ஆளும் கட்சியின் ஓர் தரப்பினர் செயற்படுகின்றனர். இதன் ஓர் கட்டமே அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்தையின் தலையில் உள்ள நுளம்பை பெரிய பந்து ஒன்றினால் தாக்கிய மகன் பற்றி கிராமத்து கதைகளில…
-
- 0 replies
- 339 views
-
-
அஷ்ரப் பலியான விவகாரம் : காணாமல்போன அறிக்கையை தேடுமாறு உத்தரவு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.ஏ. அஷ்ரப் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, காணாமல் போயுள்ள, முக்கிய ஆவணத்தைத் தேடுமாறு, தகவல் அறியும் உரிமை ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் அதன் ஆரம்பத் தலைவருமான எம்.எச்.எம். அஷ்ரப், விமான விபத்தொன்றில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில், கண்டறியவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மாயமாகியுள்ளதாகத் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்தே, அந்த ஆணைக்குழு மேற்கண்டவாறு உத்தர…
-
- 0 replies
- 111 views
-
-
இந்தியாவால் வழங்கப்படவுள்ள... யூரியா உரம், 6ஆம் திகதி நாட்டுக்கு... கொண்டுவரப்படும் – விவசாய அமைச்சர். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 06ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் உர விநியோகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, விவசாயிகளுக்கு நெற்செய்கைக்கு 50,000 மெற்றிக் தொன் உரமும் சோளச் செய்கைக்கு 10,000 மெற்றிக் தொன் உரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்…
-
- 0 replies
- 136 views
-
-
பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வியமைச்சு புதிய அறிவிப்பு கொழும்பு வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் குறித்த பாடசாலைகள் இம்மாதம் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை மூடப்படவுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏனைய கிராமப்புற பாடசாலைகள் வழமைப்போன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.newswire.lk/wp-content/uploads/2022/06/Screenshot…
-
- 20 replies
- 1.1k views
- 1 follower
-
-
திருமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் விடுதலைப் புலிகளால் ஒருவருக்கு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி திகோணமலையில் கொள்ளைகள் மற்றும் நிதி வசூலிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டவருக்கே விடுதலைப் புலிகளால் சாவு ஒறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாவு ஒறுப்பு வழங்கப்பட்டவர் விவேகானந்தன் சந்திரகாசன் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி: சங்கதி
-
- 0 replies
- 1.3k views
-