Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகம் சென்ற இலங்கை அகதிகளில் தாயார்களும் சிறுவர்களும் மண்டபத்துக்கு! தமிழகம் – தனுஸ்கோடி பகுதியில் கைதான இலங்கை அகதிச் சிறுவர்கள் அவர்களின் தாயார்களுடன் மண்டம் அகதி முகாமில் தடுத்து வைக்கப்படவுள்ளனர். த ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இருந்து அகதிகளாக சென்ற 10 பேர் கடந்த திங்கட் கிழமை தனுஷ்கோடியில் வைத்து கைதாகினர். அவர்களில் இரண்டு தாய்மார் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும் அவர்களுக்கு ராமேஸ்வரம் நீதிமன்றம் பிணை வழங்கிய நிலையில், அவர்கள் இன்று மண்டபம் முகாமிற்கு அழைத்து வரப்பட்டு, அவர்களின் பிள்ளைகளுடன் தங்க வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. http://tamilleader.com/?p=…

    • 0 replies
    • 607 views
  2. மன்னார் பிரதான பாலத்தில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரிப்பு மன்னார் பிரதான பாலத்தில் தொடர்ச்சியாக கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதினால் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது விவசாய செய்கை இடம்பெற்று வருகின்ற நிலையில், நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் உள்ள கல் நடைகளை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலியாறு மற்றும் அதனை அண்டிய இடங்களில் உள்ள மேச்சல் தரைகளுக்கு கால்நடை வளர்ப்பாளர்களினால் அனுப்பப்பட்ட நிலையில், விவசாயிகளின் விவசாயச் செய்கைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் …

  3. க.பொ .உயர்தரப்பாரிட்சை எழுதாது மேவின் முனைவர் ஆனார் முனைவர் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மேவின் சில்வா, கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பாரிட்சையில் சித்தியெய்தவில்லை என பௌத்த பிக்குவான தேவாலகம தம்மசேன தொரிவித்துள்ளார் மேவின் சில்வாவை மீண்டும் பிரதியமைச்சராக்க வேண்டுமென கோரி, நேற்று பௌத்த பிக்குகளின் சம்மேளனம் ஒன்று நடத்தப்பட்டது அதில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தொரிவித்துள்ளார் மேவின் சில்வா, முனைவர் ஆயினும் அவர் துட்டகைமுனுவைப் போன்றவர் என தேரர் தொரிவித்துள்ளார் மேவின் சில்வா எஸ்.எஸ்.சி. பரீட்சை எழுதிக்கொண்டிருந்தபோது அதனை விட்டுவிட்டு விண்வெளிக்கு சென்ற முதல் ரஷ்யர் யூரிககாரின் வந்த ஹெலிகொப்டரை பார்க்க சென்றுவிட்டதாகவும் அ…

  4. தமிழ்தேசியக் கூட்டமைப்பை இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ் சந்திக்கவுள்ளார் சிறீலங்காவுக்கு நாளையதினம் இந்திய வெளி விவகார செயலாளர் நிருபமா ராவ வருகை தரவுள்ளார். நாளை மறுதினம் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்வு முகாம்களுக்கு அவர் செல்லவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் தரப்ப்புகள் தெரிவித்துள்ளன. இதன்போது அவர் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையையும் இந்திய உதவிகள் வன்னியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய்வார் என உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து புதன் கிழமையன்று நிருபமா ராவ் திருகோணமலைக்கு செல்லவுள்ளார். எதிர்வரும் வியாழக்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்திக்கும் அவர்…

  5. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் கேபிள் இணைப்புக்களை அறுத்தெறிந்தனர்… குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நேற்றிரவு கும்பலொன்றால் தனியார் நிறுவனத்தின் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் கேபிள் சேவைகள் தடைப்பட்டுள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாம்ம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CAX 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் சென்ற வர்களாலேயே இந்த நாசகார வேலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேபி…

  6. பொதுக்கிணற்றில் குடிதண்ணீர் எடுப்பதற்குப் படையினர் தடை விதித்ததைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணியளவில் இயக்கச்சிப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இயக்கச்சிச் சந்தியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு ஆகிய உப்பளங்களின் பணியாளர்களின் பயன்பாட்டுக்கென உப்பளங்கள் அமைக்கப்பட்ட காலத்தில் மூன்று கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டது. அந்தக் காலம் தொடக்கம் இயக்கச்சிப் பகுதி மக்கள் மூன்று கிணறுகளிலும் குடிதண்ணீர் எடுத்துவந்தனர். ஆனையிறவு படைமுகாமுக்கும் இந்தக் கிணற்றிலிருந்துதான் குடிதண்ணீர் பெறப்பட்டு வருகிறது இயக்கச்சிப் பகுதியில் மக்கள் மீளக்குடியமர்ந்த பின்னர் இயக்கச்சிச் சந்தையில் வ…

  7. ஞாயிற்றுகிழமை, செப்டம்பர் 12, 2010 படையினரால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் சில உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மீண்டும் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் பத்துக்கு மேற்பட்டோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் விடுவிக்கபட்டவர்களுக்கு கடிதம் வழங்கும் போது அது 06 மாதம் தான் செல்லும் எனவும் வழங்கப்படுகின்றது. ஆனால் 06 மாதம் சென்ற பின்னர் இவர்க|ள் ஏதாவது ஆவணங்கள் தேவைப்படின் பொலிஸ் கடிதம் தேவை என கூறுகின்ரனர். பொலிசிடம் போனால் அவர்கள் விடுவிக்கப்பட்ட கடிதம் செல்லுபடியாகாது மீண்டும் கடிதம் தேவை என கூறுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின்போது கைது செய்யப்பட்ட மற்று…

  8. போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். இவ்வாறு மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி நல்லிணக்க ஆணைக்குழுவிடம் விவரித்தார். அவர் வழங்கிய சாட்சியம்:போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும்…

  9. வவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்!!! வவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.போ.ச ஊழியர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை புதிய பஸ் நிலையத்தில் செய்தி சேகரித்துகொண்டிருந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் மீதும் குறித்த பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நேற்று பிற்பகல் 4 மணியளவில் வவுனியா புதிய பஸ் நிலையத்திற்குள் இ.போ.சபையினரின் வெளிமாவட்ட பஸ்கள் உள் நுழைக்கப்பட்டதையடுத்…

  10. செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 28, 2010 முல்லைத்தீவு மாவட்டத்தின் சின்னமுறிகண்டி கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட 300 குடும்பங்கள் வவுனியா முட்கம்பி முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் இக்குடும்பங்களின் மீள்குடியமர்வுக்கு இராணுவத் தரப்பே தடையாக உள்ளது என்று செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியமர்வு இராணுவத் தரப்பினரால் தொடர்ந்து தடுக்கப்பட்டு வருகின்றது இவ்வாறு தொடர்ந்தும் நடந்தால், அதை ஆட்சேபித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாத்வீக போராட்டத்தில் குதிக்கும் என்று வன்னி மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று தெரிவித்தார். முறுகண்டி மக்கள் சொந்தக் கிராமத்திலேயே மீள்குடியமர விரும்புகின…

  11. ஐ.நா விசாரணைக் குழு குறித்து நாடாளுமன்றத்தில் வரும் 17ம் திகதி விவாதம்! [Friday, 2014-06-13 07:47:38] ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதற்கு எதிரான தீர்மானம் குறித்து வரும் 17,18ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்த அரசாங்கம் விரும்புவதாக அமைச்சர் ஒருவர் நேற்று கூறினார். கடந்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழிவந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகம் இந்த குழுவை நியமித்தது.யுத்த காலத்து மனித உரிமை மீறல்கள், பொறுப்பு கூறுதல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவுடன் இலங்கை அரசாங்கம் ஒத்…

  12. யாழில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் வெளி­யீடு எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த லில் அரசியல் கட்­சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களின் விப­ரங்கள் வெளி­யி­டப்பட்­டுள்­ளன. குறித்த விப­ரங்களை யாழ்.மாவட்ட உள்­ளூ­ராட்சி அதி­கார சபையின் தெரி­வத்­தாட்சி அலு­வலர் த.அகி­ல­ன் யாழ்.மாந­கர சபை ஆணை­யாளர் மற்றும் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச சபையின் செய­லா­ளர்­க­ளுக்கு அனுப்பி வைத்துள்ளார். யாழ். மாந­கர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிர­தேச சபைகள் உள்­ளிட்ட 17 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் போட்­டி­யி­டு­ப­வர்­களின் பெயர் மற்றும் அது குறித்த நிய­ம­னங்­களின் விப­ரங்­களே இவ்­வாறு அனுப்பி…

  13. (நமது நிருபர்) பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். பலாலிக்கு விஜயம் செய்திருந்த அவர் விமான நிலையத்தின் சூழலை களஆய்வு செய்திருந்தார். அதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலான செயற்றிட்டங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பலாலியில் உள்ள சர்வதேச விமானநிலையத்தின் சூழலை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அப்பகுதியில் வடிகால்கள், வாகனத் தரிப்பிடங்கள், ஓய்வுப்பகுதிகள், நடைபாதைகள், மருத்துவமனை வசதிகள், சூரியசக்தி மின்சார ஒளிவிளக்குள் உள…

    • 6 replies
    • 600 views
  14. இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் ‐ விமல்‐ 05 October 10 08:42 am (BST) இலங்கைக்கான அமெரிக்க தூதுவரை உடனடியாக அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் இருந்து வெளிநாட்டு இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் அண்மையில் தெரிவித்திருந்தாகவும் இதன் காரணமாகவே அமெரிக்க தூதுவரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வீரவன்ஸ கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா படையினர், ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் முகாமிட்டுள்ளதை…

  15. பாடசாலை மாணவர்களும்.... பகுதி நேரமாக, வேலை செய்யலாம் : புதிய சட்டத்தை கொண்டு வருகின்றது அரசாங்கம். பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு தயாராகி வருகிறது. அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், சிறுவர்கள் வேலை செய்யும் சூழலுக்குப் பழக்கப்படுத்தப்படாததால் தொழிற்துறையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மாதத்திற்கு இருபது மணிநேரம் பகுதி நேர வேலைகளைச் செய்யலாம் என்றும் அந்தச் சேவைக் காலத்திற்கு தனியார் நிறுவனங்களும் ஊதியம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. …

  16. இலங்கை அரசியலில் அமெரிக்கா, பிரித்தானியாவின் செல்வாக்கு அதிகரிப்பு! - ஆட்சிமாற்றத்துக்கு திட்டம்? [Friday, 2014-06-27 09:48:42] இலங்கை அரசியலில் மேற்கு நாடுகளின் செல்வாக்கு, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னரே இந்த செல்வாக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா தூதுவர் மிச்செய்ல் சிசன், இதில் மிக முக்கிய பாத்திரத்தை கொண்டிருக்கிறார். அளுத்கம சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவரும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரங்கீனும் ஒன்றாக சேர்ந்து ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர். அமைச்சர் ரவூப் ஹக்கீமையும் அமெரிக்க தூதுவர் சந்தித்தார். அதேவேளை அளுத்…

    • 2 replies
    • 788 views
  17. ‘கொச்சிக்கடை தமிழர்களை போல நான் திமிரானவன்’ “நாட்டின் தலைநகரம் கொழும்பு என்பதை, ஸ்ரீ ஜயவர்தனபுரவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டோம். அரசியல், கலாசாரம், பொருளாதாரம் ஆகியவை தொடர்பில் முடிவெடுக்கும் மத்திய நிலையமாகவே கொழும்பு திகழ்கிறது. அதற்கு அடுத்தபடியாக, தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசம், கொச்சிக்கடையாகும். அங்கு வாழும் தமிழர்களிடம் ஒரு திமிர் இருக்கிறது. தமிழ் திமிர் இருக்கிறது. அவர்களை போலவே நானும் திமிரானவன்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். “வாக்காளர் பட்டியலில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெட்டிவிட்டு, பெரும்பான்மை இனத்தவர்களின் பெயர்களை புகுத்துவதில், ஐக்கிய…

  18. செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19, 2010 வவுனியா நகர மில் வீதியில் தனியார் சொகுசு ஜீப் வாகனம் ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு 7.45 மணியளவில் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இருவர் காயமடைந்தனர் என்றும் தனியார் சொகுசு ஜீப் வாகனமும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வாகனத்தின் பொனட் பகுதிக்குள்ளேயே குண்டு வெடித்ததாகவும் இதனால் அந்த வாகனம் படுமோசமாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவ்விடத்திற்கு விரைந்த பொலிசாரும், இராணுவத்தினரும் மில் வீதியைச் சுற்றி வளைத்து தேடுதல், விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அண்மைய நாட்களாக வவுனியா நகர வர்த்தகர்கள் மத்…

  19. வாகன விபத்தில் இராணுவ வீரர் படுகாயம் : மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு - திருகோணமலை நெடுஞ்சாலை, கிண்ணியா பகுதியில் இன்று பகல் இடம் பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவ வீரர் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்படுகையில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் கீழே வீசி எறியப்பட்ட இராணுவ வீரர் படுகாயங்களுக்குள்ளாகி மயங்கிய நிலையிலேயே கிண்ணியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/29979

  20. சமாதானம் மீதான பற்றை உறுதிப்படுத்தும்படி பிரபா, மஹிந்தவுக்கு சொல்ஹெய்ம் கடிதம் பிந்திய செய்தி... சமாதானத்தின் மீதான பற்றுறுதியை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபா கரனும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவும் எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டுமெனக் கோரும் கடிதத்தை அவர் கள் இருவருக்கும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அனுப்பி வைத்துள்ளார். விடுதலைப் புலிகளின் குழுவினருடன் பேசிய பின்னர் எரிக் சொல்ஹெய்ம் இதனைத் தெரிவித்தார். நோர்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம், நோர்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர், சமாதான முயற்சிகளுக்கான விசேட தூதர் ஜோன் ஹன்ஸ் போவர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடார் ஹெல்கிசன், போர்நிறுத் தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்ஷன் ஆகிய…

  21. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், தனி அமைச்சகம் ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும் என்று திராவிடக் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய வீரமணி, ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், "திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில், உலக நாத்திகர்கள் மாநாடு திருச்சியில் 2011 ஜனவரி 7ஆம் திகதி ஆரம்பமாகி, மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. உலகின் பல நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். பகுத்தறிவு, அறிவியல் கண்காட்சி, கருத்தரங்குகள், மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி…

  22. தஞ்சக் கோரிக்கையாளர்கள் முறையாக நடத்தபபடுவதாக அப்பாட் வலியுறுத்துகிறார். ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கிறிஸ்துமஸ் தீவுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் சிலர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வந்துள்ள நிலையில், "இப்படியெல்லாம் மிரட்டி" ஆஸ்திரேலிய தஞ்சக் கோரிக்கை கொள்கைகளை மாற்றிவிட முடியாது என ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட் கூறியுள்ளார். கிறிஸ்துமஸ் தீவில் தாய்மார்கள் சுமார் ஒரு டஜன் பேர், தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டிருந்தன. கிறிஸ்துமஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்களில் தாய்மார்கள் சிலர், தாம் இறந்தால் தமது பிள்ளைக்காவது அகதித் தஞ்சம் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் தற்கொலைக்கு முயன்றதாக ஆஸ…

    • 7 replies
    • 567 views
  23. இந்திய விமானபடை தளபதி சிறீலங்காவிற்கு பயணம்! ஜூலை 15, 2014 இந்திய விமானப்படை தளபதி அருப் ரஹா இன்று உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு சிறீலங்கா செல்லவுள்ளார். இரு நாட்டு விமானப்படையினர் மத்தியிலான உறவுகளை மேம்படுத்தவே இந்த பயணத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது பயணத்தின் போது முப்டைதளபதிகளையும், பாதுகாப்பு துறை அதிகாரிகளையும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவையும் சந்திப்பதுடன் அரசியல் தலைவர்கள் சிலரையம் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை குறிப்பிட்ட இந்த பயணத்திற்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பு உருவாகலாம் என்றும் கொழும்பு அரசியல் தரப்புகள் எதிர்வு கூறியுள்ளன. விமானத் படைத்தளபதி ராஹா, சிறீலங்கா அரசியல் மற்றும் படை உயர் அதிகார…

  24. அரசியல் குழப்பங்களால் வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் – சிறிலங்கா ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தின் இறுதி வே…

  25. பசிலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி By T. SARANYA 02 SEP, 2022 | 01:50 PM முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/134901

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.