Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிப்பதாக தெரிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியருந்தமைக் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த தடையை தற்போது நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/61…

    • 3 replies
    • 633 views
  2. கல்குடா தேர்தல் தொகுதியை பிரிக்கும் செயற்பாட்டை தடுப்பதற்கு கூட்டமைப்பு முன்வர வேண்டும் – மக்கள் கோரிக்கை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியை இரண்டாக பிரித்து புணானை என்ற முஸ்லிம் தேர்தல் தொகுதியை உருவாக்கும் நடவடிக்கையை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த தொகுதியை இரண்டாக பிரித்து புணாணையை தனித் தொகுதியாக மாற்றும் திட்டத்தை எதிர்த்து வாகரை புணாணை பிரதேச மக்களால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புணாணை புகையிரத நிலைய முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தின்போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் ‘ஏமாற்றாதே ஏமாற்றாதே இனி…

  3. அவசரகால சட்டம் நீடிக்குமா? – தீர்மானம் இன்று! அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. நாடாளுன்றம் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10.30 மணிக்கு கூடவுள்ளது. இன்றைய அமர்விலேயே அவசரகால சட்டம் தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக அவசரகால சட்டம் தொடர்பான யோசனை இன்றைய தினம் சபையில் முன்வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற தற…

  4. ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் அமெரிக்கா விசாரணை? ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை, அமெரிக்க அதிகாரிகள் சந்தித்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தகவல் வெளியிட்டுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “அடிப்படைவாதிகளின் தாக்குதல்களின் பின்னர், நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது, ஜனாதிபதி நாட்டில் இருக்கவில்லை. பிரதமர் கொழும்பில் இருக்கவில்லை. தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்திருந்தும் எந்த பாதுகாப்பு …

  5. அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்களுக்குத் தடை வரும் அதிபர் தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் எனக் கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், மகிந்த தேசப்பிரிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் எச்சரித்துள்ளார். “ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக, மற்றொரு கட்சி அல்லது வேட்பாளரால், யாரேனும் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவரது பெயர் வாக்காளர்களின் முன்பாக அம்பலப்படுத்தப்படும். போலி வேட்பாளர்…

    • 2 replies
    • 746 views
  6. பொன்னாலையில் ஆக்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனையிலும் ஜெபத்திலும் ஈடுபட்டிருந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று இன்று (28) பிரதேச மக்களால் துரத்தியடிக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றிவளைத்த பிரதேச மக்கள், கடும் எச்சரிக்கை விடுத்து அவர்களை துரத்தியுள்ளனர். கடந்த வாரம் பொன்னாலைக்குள் புகுந்த கிறிஸ்தவ மதமாற்றக் கூட்டம் ஒன்று துரத்தியடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆட்கள் அற்ற வீடொன்றில் ஞாயிறு வகுப்பு என்ற பெயரில் போதனை இடம்பெற்றமை தெரியவந்தது. ஊரவர்கள் அங்கு சென்றபோது, வெளி இடத்தில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுக்கு போதகர் ஜெபித்துக் கொண்டிருந்தார். யாரைக் கேட்டு வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டபோது, வெளியிடத்தில் வசிக…

  7. ங்கா கோதபாயவின் மோசடி அம்பலம்? | அமெரிக்க குடியுரிமைத் துறப்புப் பத்திரம் பொய்யானது ? கோதபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாக அவரது சகாக்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட பத்திரம் பொய்யானது எனச் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அவரது குடியுரிமை துறப்புப் பத்திரம் விக்கிபீடியாவில் காணப்படும் வேறொரு பத்திரத்தை ஒத்தது என சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது. அதில் உள்ள முக்கியமான திகதிகளும், கடவுச் சீட்டு இலக்கமும் பிழையானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதை ஒத்துக்கொண்ட கோதபாய ‘உண்மையான’ பத்திரம் தன்னிடம் இருப்பதாகக் கூறிவருகிறார். ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் குடியுரிமை இழப்ப…

    • 0 replies
    • 400 views
  8. 4 முஸ்லிம் அமைச்சர்கள் பதவியேற்றனர் – மூவர் நிலை இழுபறி சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகிய நான்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சர் பதவிகளை நேற்று மாலை ஏற்றுக் கொண்டனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து எழுந்த சர்ச்சைகளை அடுத்து. கடந்த மாதம் 9 முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை விட்டு விலகினர். அவர்களில் கபீர் ஹாசிம் மற்றும் ஹலீம் ஆகியோர் மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொண்டனர். ஏனைய 7 அமைச்சர்களில் நான்கு பேர் நேற்றிரவு மீண்டும் தமது பழைய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாக பதவியேற்றனர். அமீர் அலி இராஜாங்…

  9. யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பல தசாப்தங்களாக இன விடுதலையை வென்றெடுப்பதற்காக சதா போராட்டமே வாழ்வாகிப் போன எமது மக்களின் உரிமைக் குரல்கள் அதிகாரத்தில் உள்ள ஆதிக்க சக்திகளினால் த…

  10. July 29, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள் , இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஓகஸ்ட் 27ஆம் தி…

  11. வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி. வி விக்னேஷ்வனுடனான தனிப்பட்ட பிரச்சினைகளின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாண சபை தேர்தல் தொடர்பில் எவ்வித அழுத்தத்தையும் அரசாங்கத்திற்கு கொடுக்கவில்லை. போலியான வாக்குறுதிகளினால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் இன்று கூட்டமைப்பினர் ஏமாற்றியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பொதுஜன பெரமுன பயணிக்கும் . பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில் ஸ்ரீ…

  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு வாகனங்கள் வேண்டும், வீடு வேண்டும், சம்பளம் வேண்டும் என்றால் அப்பவே அரசாங்கத்துடன் பேசுவார்கள் ஆனால் அவர்களிற்கு இளைஞர்களின் பிரச்சினை குறித்து பேச நேரமில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை வல்வெட்டித்துறை மண்ணில் வைத்து கடுமையாக சாடினார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மக்கள் மன்ற நிகழ்வு வல்வெட்டி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;, நான் தமிழர் பிரச்சினைக்கு என்ன தீர்வு என கதைக்க ம…

  13. மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் துர்நடத்தைச் சம்பத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்தை அண்மித்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயின்ற மாணவி ஒருவருக்கு அந்தப் பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரால் பாலியல் துர்நடத்தை மேற்கொள்ளப்பட்டது என்று குற்றஞ்சாட்டப்பட்டது. பாலியல் துர்நடத்தையின் பின்னர் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியின் வீட்டுக்குச் சென்று சம்பவத்தை வெளியில் கூற…

  14. கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயரை சமூக வலைதளத்தின் ஊடாக பயங்கரவாதி என அறிந்ததினால்" ஞானசார" என்ற சொல்லை பேஸ்புக் தடை செய்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தனது பெயரை மாற்றிக்கொள்ள நேரிட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் ஞானசார தேரரின் பெயரை தடை செய்துள்ளதே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கலகொட அத்தே ஞானசார என்ற பெயரை பேஸ்புக்கில் பதிவிடும் போது அது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது பெயரை மாற்ற தீர்மானித்துள்ளோம். இதனால், இனிவரும் காலங்களில் ஞானசார தேரர், “எமது பிக்கு” என்ற புனைப் பெயரில் அழைக்கப்படுவார் எனவும் டிலந்த விதான…

  15. யாழ்.கரவெட்டி பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் தொல்லையினால் 14 இளம் குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ளதுடன், பெற்றோா் தலைமறைவான நிலையில் பிள்ளைகள் அனாதரவாக விடப்பட்டுள்ளனா். என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கரவெட்டி பிரதேச செயலா் எஸ்.தவரூபன் கூட்டிக்காட்டியுள்ளாா். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்ததாவது,கரவெட்ட…

  16. 21, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணைகளை பாராளுமன்றத்தில் விஜயதாச ராஜபக்ஷ இன்று சமர்ப்பித்துள்ளார். பொதுத் தேர்தலில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு ஒரு அரசியல் கட்சியோ அல்லது குழுவோ பெற்றுக்கொள்ள கூடிய குறைந்தபட்ச வாக்கு வீதத்தை தற்போதைய 5 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரிப்பதற்கு வகை செய்யக் கூடியதாக அரசியலமைப்புக்கான 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளது. அத்துடன் உயர்பதவி நியமனங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுக்கொடுக்க வகைசெய்யக் கூடியதாக 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பான பிரேரணை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/61568

    • 0 replies
    • 250 views
  17. வல்லரசுகள் தமிழ்மக்களை தேசமாக அங்கீகரிப்பதன் மூலமே தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் July 30, 2019 வல்லரசு நாடுகள் தமிழ்மக்களின் அடையாளத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்த்தேசத்தை அங்கீகரிக்கின்ற, தமிழ்த்தேசத்தின் தனித்துவமான இறைமையை அங்கீகரிக்கின்ற தமிழ்மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு வல்லரசு நாடுகள் முதற்கட்டமாக இணங்க வேண்டும். அவ்வாறு இணங்குவது மட்டுமல்லாமல் இந்தத் தீர்வுத் திட்டத்தை இலங்கை அரசாங்கத்தை அமுல்படுத்துமாறு கூற முன்னர் அந்த வல்லரசுகள் தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்க வேண்டும். அப்படியானால் தான் தமிழ்மக்களுக்கு வல்லரசு நாடுகள் மீது நம்பிக்கையே வருமெனத் தெரிவித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரு…

  18. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புற்றுநோயாளர்களின் உடல் கழிவுகள் யாழிற்கு எடுத்து வரப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் இன்று வெளியாகியுள்ளது. பல பாகங்களில் இருந்தும் எடுத்து வரப்பட்டுள்ள மனித உடல் பாகங்கள் தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த யாழ் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் இந்த விவகாரம் வெளியானது. “தென்னிலங்கையின் பல பாகங்களிலுமிருந்து தெல்லிப்பழை புற்றுநோயாளர் வைத்தியசாலைக்கு மனித உடல் பாகங்கள் கொண்டு வரப்படுகின்றன. புற்றுநோயாளர்களில் இருந்து அகற்றப்பட்ட பாகங்களை எரித்து அழிக்கவே அவை கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால் தெல்லிப்பழை வைத்தியசாலையிலுள்ள இயந்திரத்தில் அவற்றை எரிக்க முடியாது. 1200 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலேயே அவற்றை …

  19. உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது July 29, 2019 நிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அது குறித்து மேலும் தெரியவருவதாவது, உரும்பிராயை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக மனைவி , பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். குறித்த நபரின் மனைவி வன்னி பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் இரண்டு பிள்ளைகள் சிறுவர் இல்லம் ஒன்றில் வளர்ந்து வருகின்றனர். அந்நிலையில் மனைவி , பிள்ளைகளை தன்னால் பார்க்க முடியாது விரக்தியில் வாழ்ந்து வந்ததனால் தனது உயிரை மாய்க்கவே …

  20. ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அத்தோடு, எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் என கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக, …

  21. ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்தயில் கைது! தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முஹம்மட் அப்துல் காதர் அசீம் எனப்படும் குறித்த சந்தேகநபர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதுடன் நுவரெலியால் கைப்பற்றப்ட்ட பயங்கரவாதிளின் முகாமில் சஹாரனுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கா…

  22. றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரவுள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், றிசாத் பதியுதீனுக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நிலையில், சரியான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கூறினார். எனவே மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுள்ள றிசாத் பதியுதீனுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில் ச…

    • 1 reply
    • 546 views
  23. பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் அதிக வரட்சியுடனான வானிலை காரணமாக, பராக்கிரம சமுத்திரம் நீரின்றி வற்றியுள்ளது. இந்நிலையில், குறித்த சமுத்திரத்தை அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 20 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டு விளங்கும் பராக்கிரம சமுத்திரம், தற்போது நீரின்றி வற்றிக் காணப்படுகிறது. பல வருடங்களுக்குப் பின்னர் பராக்கிரம சமுத்திரம் இவ்வாறு வரட்சியால் வற்றிக் காணப்படுவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பராக்கிரம சமுத்திரத்தை நம்பி விவசாயச் செய்கையில் ஈடுபடும் நூற்றுக்கணக்கான விவசாயிகள், விவசாயச் செய்கையை மேற்கொள்ள பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளர். http://www.tamilmirror.lk/செ…

    • 6 replies
    • 1.3k views
  24. றிசாட் பதவியேற்றதை வெடி கொழுத்தி கொண்டாடிய மக்கள் றிசாட் பதியுத்தீன் மீண்டும் இன்று இரவு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்ததையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் உள்ள தினச்சந்தைக்கு முன்னால் வெடி கொழுத்தி கொண்டாடினர். உதித்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலையடுத்து அமைச்சர் றிசாட் பதியுத்தீன் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கல் வேண்டும் என அத்துரலிய ரத்னதேரர் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவி விலகியிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நிரூபிக்கப்படவில்லை. இந் நிலையில் அவர் இன்று ஜனாத…

    • 0 replies
    • 625 views
  25. இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார் இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர், அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இ…

    • 1 reply
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.