ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142986 topics in this forum
-
புதிய அரசியலமைப்பை வழங்குவதாக கூறி மக்கள் ஆணையை பெற்ற இந்த அரசும் தமிழர்களை ஏமாற்றி தோல்வியடைந்த அரசாக ஆகிவிடக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைத்து பாராளுமன்றத்தில் பேசும்போதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு பேசிய அவர் மேலும் கூறியதாவது; போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இன்னும் தமிழருக்கு ஒரு அரசியல் தீர்வு இல்லை.தமிழர்கள் இரண்டாந்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்.சர்வதேச சமூகம் ஒரு பார்வையாளராக மட்டும் இருந்துவிட முடியாது. சர்வதேச சமூகம் அரசியல் , இராஜதந்திர , பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தத்தை வழங்க வேண்டும்.புலிகளை தோற்கடிக்க உதவியது சர்வதேச சமூகம். இத…
-
- 10 replies
- 1.3k views
-
-
சிறிசேனவிற்கு அமெரிக்க தூதுவர் அவசர கடிதம் இலங்கையுடனான உத்தேச மில்லேனியம் சலஞ் ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கைக்கான அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்காக உடனடியாக தலையிடுமாறு அவர் இலங்கை ஜனாதிபதியை கோரியுள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்பபடும் சில விடயங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி உடன்படிக்கையை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே தூதுவர் இந்த அவசர கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். குறிப்பிட்ட உடன்படிக்கையில் காணப்படும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் கு…
-
- 1 reply
- 534 views
-
-
ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பினார் பிரதமர்! ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திருப்பியுள்ளார். அவர் நேற்று (சனிக்கிழமை) இரவு நாடு திரும்பியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தனர். நேற்று முன்தினம் காலை பெங்களூர் சென்றடைந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் மங்களூர் செல்ல திட்டமிட்டிருந்தார். எனினும் சீரற்ற வானிலையால் அவர் தரைவழியாகவே மங்களூர் சென்று, உடுப்பியில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். அத்தோடு, அவரின் ஏற்பாட்டில் அங்கு சிறப்பு யாக…
-
- 3 replies
- 722 views
-
-
புதிய அரசியலமைப்பை நோக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நியாயமான முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தயாராகவே இருப்பதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அனைத்துத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை உடன் கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். புதிய அரசியலமைப்புக்கான கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்துக்களை தான் ஏற்றுக்கொள்கிறேன். அரசாங்கத்தின் பிரதான பங…
-
- 1 reply
- 441 views
-
-
கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதி- வெளியாகியது புதிய தகவல் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்படுவது உறுதியாகிவிட்டது என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 11 ம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப்பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வார் எனவும் அதன் பின்னர் அவர் அனேகமாக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பார் எனவும் சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே டைம்ஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது. இந்த சந்திப்பிற்கு முதல்நாள் பொதுஜனபெரமுனவின் கட்சி தலைவர்களிற்கு மகிந்த ராஜபக்ச தனது முடிவை தெரிவிப்பார். முன்னாள் பாதுகாப்பு செயலாள…
-
- 0 replies
- 531 views
-
-
கோட்டா வரமாட்டார், சமல் ராஜபக்ஸவே வருவார்- அமைச்சர் பி. ஹரிசன் ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ களமிறக்கப்பட மாட்டார் எனவும், மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்துக்குள் அவரை களமிறக்குவதற்கு எதிர்ப்புக் காணப்படுவதாகவும் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். கெகிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார். பாராளும ஸ்ன்றத்தில் பிரதிநிதி இல்லாத 10 கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வில் சமல் ராஜபக்ஸவே மும்மு…
-
- 1 reply
- 601 views
-
-
யாழ். பருத்தித்துறை, தம்பசிட்டிப் பகுதியிலுள்ள தோட்டமொன்றின் கிணறிலிருந்து இன்று (27) முற்பகல் கைகள் பின் பக்கமாக கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பதில் நீதிவான் மற்றும் சட்ட மருத்துவ நிபுணரின் முன்னிலையில் சடலம் இன்று மீட்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த சட்ட மருத்துவ நிபுணர் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு பின்னரே இது கொலையா? தற்கொலையா? எனத் தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். உயிரிழந்த பெண் தம்பசிட்டி, கதிவேற்பிள்ளை வாசிகசாலை வீதி, ஜெகநாத குருக்கள் கிருபாலினி (வயது -35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்போது ´´கைகள் பின் பக்கமாக கயிற்றால் கட்டப்பட்டிருந்ததோடு கால்களும் கட்டப…
-
- 1 reply
- 712 views
-
-
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடகூடும் என பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசிய முன்னணி எந்த சந்தர்ப்பத்திலும் கூடட்ணி அமைக்காது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/221149/ஜனாதிபதி-வேட்பாளராக-சமல்-ராஜபக்ஷ-போட்டியிடகூடும் …
-
- 2 replies
- 918 views
-
-
பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை அரசாங்கம் வழங்க வேண்டும் – வடக்கு பட்டதாரிகள் கோரிக்கை! In இலங்கை July 26, 2019 1:47 pm GMT 0 Comments 1238 by : Litharsan அரசாங்கம், பாரபட்சம் காட்டாமல் வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளில் அரச நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகள் இன்று பதிவுகளை மேற்கொண்டனர். வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தொகுதியினருக்கு அரச நியமனம் வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நியமனத்தில் உள்வாங்…
-
- 6 replies
- 786 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் தமிழ் தரகு அரசியல் கட்சிகளின் தகிடு தத்தி தாளங்கள் எவையும் இங்கு நடந்திருக்காது என நாடாளுமன்ற டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்துடன், பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் இன்று அது நடந்திருக்காது இது நடந்திருக்காது என்று இந்த சபையில் கூச்சலிடுகிறார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “அரசியல் பிழைப்பு இங்கு நடந்திருக்காது. அண்ணை எப்போது சாவான். திண்ணை எப்போது காலி என காத்திருந்த நீங்கள் புலிகளில் தலைமை இல்லாமல் போன போது நீங்கள் உள்ளுர மகிழ்ந்தீர்களா இல்லையா? இதே நாடாளுமன்ற சபையில் புலிகளை வெற்றி கொண்ட மகிந்…
-
- 11 replies
- 1.9k views
-
-
தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம் கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டமை குறித்து சிவலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரண் மாவத்திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு காபட் இடும் வேலைத் திட்டம் புதன்கிழமை நே…
-
- 10 replies
- 1.7k views
-
-
திருமலையில் வீரம் செறிந்த ஒரு தமிழ் அன்னை யானை தாக்கிப் பலி! AdminJuly 25, 2019 வெலிக்கடைப் படுகொலையில் அன்பழகன் என்ற தன் மகனை இழந்து,1985ல் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுடப்பட்டு கணவன் நல்லையாவை இழந்து,விடுதலைப் போராட்டக் களத்தில் லெப்.பாண்டியன் என்ற மகனைக் கொடையாக்கி,நாட்டுப் பற்றாளனாய் செயலாற்றிவந்த தன் சகோதரன் செந்தில் அவர்களை மின்னல்த் தாக்குதலுக்கு (இயற்கை) பறிகொடுத்து… தனது 78 வயதுவரை உறுதி தளராது, தன்னம்பிக்கை குலையாது வாழ்ந்த ஒரு உன்னதமான,மற்றோர் மனம் புண்படாது நடந்த தமிழ் அன்னை நல்லையா வள்ளிப்பிள்ளை திருகோணமலை,திரியாயில் நேற்று 24.07.2019 புதன்கிழமை யானை தாக்கியதில் சாவடைந்தார் என்ற செய்தி வேதனை தருகின்றது. தாயே உங்கள் பாதங்களில் பணிந்து வணங்கி விடைதரு…
-
- 1 reply
- 618 views
-
-
மஹிந்த ராஜபக்ஸ 180 பாகை திரும்பி விட்டார்- TNA குற்றச்சாட்டு நாட்டின் அரசியலமைப்பு ஒரு சட்டமோ, அரசியல் கருத்திட்டமோ அல்லவெனவும், அது ஒரு சமூக ஒப்பந்தமே என்பதை நாட்டு மக்கள் சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று(26) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் எம். பி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு திருத்த நடவடிக்கைகளை வெற்றியாக்குவதற்காக நாம் எம்மை அர்ப்பணித் துள்ளோம். அதற்கான வழி நடத்தல் குழு அனைத்திலும் நாங்கள் பங்கே…
-
- 1 reply
- 1.1k views
-
-
தையிட்டி தனியார் காணியில் மகாபோதி – நீதிமன்றம் செல்லும் வலி,வடக்கு பிரதேசசபை…. July 27, 2019 யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி,வடக்கு பிரதேசசபை தவிசாளா் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வலி,வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னா் பேக்கரிகள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தா்கள் வழிபாடுகளை நடாத்துவதற்காக சுமார் 20 பரப்பு காணியில் 1946ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்த இடத்தில், பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் தமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை. ஆனால…
-
- 0 replies
- 361 views
-
-
ஸ்மார்ட் கம்பங்களுக்கு அனுமதி இல்லை ஸ்மார்ட் லாம் போஸ்ட்க்கு உரிய அனுமதிகள் பெறப்படாமலே யாழ்.மாநகர எல்லைக்குள் நிறுவப்பட்டு வருவதாக யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்தீபன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் விப்பறிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையீல், கடந்த சபை அமர்வுக்கு முன்னர் முதல்வர் தாங்கள் R.D.A இன் அனுமதியையும் அத்துடன் மிக முக்கியமாக T.R.C யின் அனுமதியுடன் தான் இக் கம்பங்கள் நிறுவப்படுகின்ற என்று தெரிவித்திருந்தார். அத்துடன் அவர் சார்ந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர் வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி தந்திருக்கின்றது. இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக்குழு அனுமதி தந்திருக்கின்றது என்று ஏதோ ஆவணங்க…
-
- 0 replies
- 810 views
-
-
200 ரயில் குறுக்கு பாதையில் மின் ஓசை, வர்ண சமிஞ்ஞை பொருத்த நடவடிக்கை 200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் முழுமையாக உள்வாங்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில் குறுக்க பாதை மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 336 views
-
-
10 கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்லலாம்- நளின் பண்டார ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் நேற்று புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகள் 10 உம் எந்தவித வாக்குப் பலமும் அற்றவை என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தக் கட்சிகளில் அங்கத்துவம் பெற்றுள்ள சகல உறுப்பினர்களையும் ஒரே பஸ்ஸில் அழைத்துச் செல்ல முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில…
-
- 0 replies
- 265 views
-
-
அழுத்தத்தின் மத்தியில் இலங்கை மக்கள்: பிரிவினைப் போக்கும் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட பிரதிநிதி In இலங்கை July 26, 2019 2:44 pm GMT 0 Comments 1117 by : Litharsan இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமையும் தற்போது மக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்ட…
-
- 2 replies
- 439 views
-
-
200 ரயில் குறுக்கு பாதையில் மின் ஓசை, வர்ண சமிஞ்ஞை பொருத்த நடவடிக்கை 200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் முழுமையாக உள்வாங்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில் குறுக்க பாதை மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர…
-
- 0 replies
- 570 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாணக்கியம், நல்லிணக்கம், இராஜதந்திரம் அனைத்தும் இனப்படுகொலையே என் பதாதைகளை ஏந்தியவாறு காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கபட்டிருந்தது. இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து விசேடவழிபாடுகளை மேற்கொண்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள், கந்தசாமி கோவில் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுரச்சந்தியை அடைந்து அங்கிருந்து கண்டி வீதி வழியாக தொடர் போராட்டம் மேற்கொள்ளு…
-
- 1 reply
- 530 views
- 1 follower
-
-
புதிய அரசாங்கத்தில் சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசமைப்பு – மஹிந்த அறிவிப்பு In இலங்கை July 26, 2019 1:34 pm GMT 0 Comments 1159 by : Litharsan தமது தலைமையில் கீழ், அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் சர்வஜன வாக்கெடுப்புடன், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசமைப்பைக் கொண்டுவரவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டார். மேலும், இப்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழர்களை ஏமாற்றிவிட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக்கொள்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று 10 அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டன. இந்த நிகழ்வு கொழும…
-
- 2 replies
- 734 views
-
-
யாழில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிவு! In இலங்கை July 26, 2019 3:49 pm GMT 0 Comments 1037 by : Litharsan யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார். விகாரை அமைப்பு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் வெதுப்பகங்கள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தா்கள் வழிபாடுகளை நடத்துவதற்காக சுமாா் 20 பரப்பு காணியி…
-
- 0 replies
- 534 views
-
-
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைப்பதற்கான வெட்டுப்புள்ளி வெளியானது In இலங்கை July 26, 2019 12:10 pm GMT 0 Comments 1256 by : Litharsan பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டுள்ளது. 2018 – 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வெட்டுப்புள்ளியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. www.selection.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாக தாம் தெரிவாகியுள்ள பாடநெறி மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இம்முறை 30,830 பேர் பல்கலைக்கழக கற்கைநெறிக்காக தெரிவு செய்யப்…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் கன்னியாவில் இந்து மத குருமார் மீது இவ்வாறு சுடுதண்ணீர் ஊற்றியிருக்க முடியுமா? அவ்வாறு ஊற்ற அவர்களுக்கு தைரியம் வந்திருக்குமா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த வாரம் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை செய்திருந்தார்கள். அந்த போராட்டத்தில் தென்கயிலை ஆதீனம் மீது சூடான தேயிலை சாயம் ஊற்றப்பட்டது. அன்று அந்த சம்பவம் நடந்தபோது தெ…
-
- 2 replies
- 986 views
-
-
வவுனியா புதிய பஸ் நிலையத்தில் அடாவடியில் ஈடுபட்ட பொலிஸார் வவுனியா புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள சோதனை நிலையத்திலிருந்த பொலிஸார் இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து புதிய பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் இரு கதவுகளையும் மூடி பொலிஸார் பயணிகள் மீது அடாவடியில் ஈடுபட்டிருந்தனர். புதிய பஸ் நிலையத்தில் கடந்த மூன்று மாதங்களாக சோதனைச்சாவடி நிலையத்தினை அமைத்துள்ள பொலிஸார் பஸ் நிலையத்திற்குச் செல்லும் பயணிகள் மீது சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வாரிக்குட்டியூர் பகுதியிலிருந்து பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பஸ் ஒன்றினை பஸ் நிலையத்திற்குள் சென்ற பஸ் சோதனைச்சாவடியில் பொலிஸார் இல்லாத நிலையில…
-
- 2 replies
- 823 views
-