Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன் சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலயத்தின் இருமாடி வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு கிழக்கில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இந்து ஆலயங்கள் அகற்றப்பட்டு அங்கே பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பௌத்தர்கள் இல்லாத வடக்கு கிழக்கில் புதிதாக விகாரைகள் அமைக்கப்படுகின்றன. பெளத்த மதம் திணிக்…

  2. July 15, 2019 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார். வலி.மேற்குப் பிரதேச ச…

  3. பிரித்தானியா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்து, சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கழிவுப்பொருட்களை இலங்கைக்கு கொணர்ந்து அகற்றும் பாரிய வர்த்தகம் ஒன்று குறித்த விபரங்களை இலங்கை சுங்க அதிகாரிகள் திரட்டியுள்ளனர். நாட்டின் சுற்றுச்சூழல் சட்டங்களில் தளர்வு ஏற்பட்டுள்ளதால், சில நாடுகள் இலங்கை போன்ற வளரும் நாடுகளை கழிவுகளை அகற்ற தேர்வு செய்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தில் உள்ள சர்வதேச கொள்கலன் முனையத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுக்கூளங்களை கொண்ட 102 கொள்கலன்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 8 ஆம் திகதி ஊடகங்களுக்கு முன்பாக இந்த கொள்கலன்களை திறக்க சுங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அது நடைபெறவில்லை. கொழ…

    • 0 replies
    • 439 views
  4. அதிகாரப் பகிர்வை வழங்க தாமும், தமது கட்சியினரும் அர்ப்பணிப்புடன் உள்ளனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அதிகாரப் பகிர்வை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாட வேண்டும். குறிப்பாக, சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய தரப்பினரால் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறு எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், மாகாண மட்டத்தில் மட்டுமல்லாது, உள்ளுராட்சி மன்றங்கள் ரீதியாக அதிகாரத்தை எவ்வாறு பகிர்ந்தளிப்பது எ…

    • 4 replies
    • 858 views
  5. ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் கூட, யாழ். வலி வடக்கில் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், யாழ் வலி வடக்கில் பல ஆலயங்கள் திறக்கப்படாமலும் ஒளியேற்றப்படாமலும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம் பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது, போராடியே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை கொண்டு வந்தோம். ஜனாதிபதிக்காக மக்களிடம் வாக்கு கேட்டு நாங்களே அவரை தெரிவு செய்தோம். ஆனால் அவரை ஆட்சிக்க…

    • 0 replies
    • 517 views
  6. பாலியல் வதை முகாம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருக்கும் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக களமறங்கவிருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு முறைப்பாட்டின் தமிழாக்கம் இது. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் பணிப்புரையால் மேற்கொள்ளப்பட்டதும், அவரின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டதுமான மோசகரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த முறைப்பாட்டின் தமிழாக்கம் 107 பக்கங்களைக் கொண்டது. இந்த வழக்கைத் தொ…

  7. வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் 50 மில்லியன் ரூபா வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனாலே இறுதியாக இடம்பெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென வினவிய போதே இவ்வாறு பதிலளித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், உண்மையிலே இரண்டு மாதங்களுக்கு முன்பாக அமைச்சர் கபீர் காசிம் எனக்கு நேரடியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதாவது வவுனியா மாவட்டத்திலே வீதி புனரமைப்பு செய்ய வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் வீதி திருத்தம் சம்பந்தமாக விபரங்களைத் தருமாறு கோரி இருந்தார். ஆகவே இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கபீர் காசிம் அமைச்சர் எனக்கு மட்டுமல்ல கூட்டமைப்பில் இருக்கக் கூடிய ஏனை…

    • 0 replies
    • 341 views
  8. திருகோணமலையின் தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புராதன பிள்ளையார் ஆலயம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புத்தர் சிலை அமைப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருமலை தென் கயிலை ஆதீனம் மற்றும் வடக்கு கிழக்கு பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகள் இணைந்து தென்கயிலை ஆதீனம் தலமையில் நாளை காலை 11:00 மணிக்கு கன்னியா வெந்நீரூற்று பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் அனைத்து தமிழ் உறுவுகளும் இணைந்து தமது எதிர்பை வெளியிடுவதுடன் எமது பூர்வீக அடையாளங்களை பாதுகாக்க ஒன்றுதிரளுமாறு தென்கயிலை ஆதீனம் கோரிக்கை விடு…

    • 1 reply
    • 864 views
  9. ரணில் விக்கிரமசிங்க வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பந்தலுக்கு முன்பாக இன்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமர் யாழ் நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடிகளை ஏந்தி எதிர்ப்பு பதாதைகளுடன் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட உறவுகள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது எங்களுக்கு வடகிழக்கு இணைக்கப்பட்ட முழுமையான கூட்டாட்சியே தேவை, உங்கள் ஏக்கிய ராஜ்யாவை குப்பையில் போடுங்கள், ரணிலே எங்கள் தமிழர் இராஜ்ஜியத்தை…

    • 1 reply
    • 590 views
  10. இரண்டு நாட்களுக்கு ஒரு பனிஸ் மாத்திரமே உண்டு, தினமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் குவைத்துக்கு வீட்டு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர் நாடு திரும்பியுள்ளார். அணிந்திருந்த ஆடையுடன் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ள இவரை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளது. குறித்த பெண் எஹெலியகொட பிரசேத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தயான 49 வயதுடைய மாரிமுத்து சுலோசனா என்பவராவார். இவர் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் அவர்களின் திருமண செலவிற்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக குவைத்திற்கு வீட்ட…

    • 1 reply
    • 411 views
  11. இலங்கையில் ஒருவித மூளைக்காய்ச்சல் பரவி வருவதால், இந்த வருடத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகில் பழங்கள் விற்பனை செய்த 31 வயதான இளைஞன் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். ஏனைய பழ விற்பனையாளர்களுக்கு இந்த நோய் பரவாமல் இருப்பதற்கு உடனடியாக மருந்து பெற்றுக்கொள்ளுமாறு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் பரவக்கூடியதல்ல எனினும் கிருமி பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மூளைக்காய்ச்சல் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த அனைவரையும் அன்றைய…

  12. ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் செப்டம்பர் மாத பிற்பகுதியில் வெளியிடுவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதால், ஜனாதிபதி தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதிக்குமிடையிலான ஒரு சனிக்கிழமை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவைக் கோரும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடும். பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையிலேயே வர்த்தமானி அறிவித்தலை ஆணைக்குழுத்…

    • 1 reply
    • 660 views
  13. 2012ம் ஆண்டு நுவரெலியா வைத்தியசாலையின் புதிய கட்டிட தொகுதியை கட்டுவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அம்பாந்தோட்டை வைத்தியசாலையையும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நான்கு வருட இழுத்தடிப்பின் பின்னர் இந்த வைத்தியசாலையை கட்டி முடிக்க முடிந்துள்ளது என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (15.07.2019 ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற…

  14. July 15, 2019 செல்போன்களில் படம் பிடிக்கும் கமெராக்கள் மேலதிக வசதியாக இணைக்கப்பட்டுள்ளன. இதனைக் கமெராக்களில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லமுடியாது. செல்போன்களில் வானொலி கேட்கமுடியும் என்பதற்காக அதனை வானொலியில் செல்போன் வசதி செய்யப்பட்டிருப்பதாகக் கூற முடியாது. அதே போன்றுதான் தொலைத்தொடர்புக் கம்பங்களில் மின்விளக்குகளைப் பொருத்திவிட்டு மின்விளக்குக் கம்பங்களில் மேலதிகமாகத் தொலைத்தொடர்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லமுடியாது. ஆனால், அதி உயர்வேகத் தொலைத் தொடர்புக் கம்பங்களைச் சாதாரண மின் விளக்குக் கம்பங்களாகக் காட்டி யாழ்ப்பாணம் மாநகரசபை மக்களை முட்டாள்களாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசி…

  15. தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டு…

  16. கிழக்கில் சமகால தமிழர் அரசியலின் செல்நெறிப்போக்கு மற்றும் அரசியல் கலாசாரத்தை தீர்க்கமாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இணைந்து பணியாற்றக் கூடிய தமிழர் பரப்பின் அரசியற் கட்சிகளை இணைத்து கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களின் சமூகப் பொருளாதார, பண்பாட்டியல் இலக்குகளை அடைவதற்கான ஓர் பாரிய அரசியற் கூட்டமைப்பை உருவாக்கி காத்திரமாகப் பயணிப்பதற்கான ஓர் பூர்வாங்க கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. கிழக்கின் ஈழத்தமிழரின் அரசியற் போக்கை நெறிப்படுத்த தேசப்பற்றுள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் அபிலாஷையை முன்னிறுத்தி ஈழத் தமிழர் பேரவை குறிப்பிட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பை விடுத்திருந்தது. ஈழத்தமிழர் பரப்…

    • 0 replies
    • 249 views
  17. கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே இழுபறி… July 15, 2019 கல்முனை வைத்தியசாலையில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட இழுபறியினால் பதற்ற நிலை ஏற்பட்டது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை ஞாயிற்றுக்கிழமை (14.07.190) மாலை பார்வையிட வந்த மக்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இப்பதற்றம் ஏற்பட்டது. கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் பின்வாசல் நுழைவாயில் ஊடாக அண்மைக்காலங்களில் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த அனுமதி விடயத்தில் நடைமுறைக்கு பொருத்தமான …

  18. வவுனியாவில், சிறைக்கைதி தப்பியோட்டம்! வவுனியாவில் சிறைக்கைதி ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து சிறைச்சாலைக்கு வெளியே சென்ற நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை 2 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலையை சுற்றி சுத்தப்படுத்தி கொண்டிருந்த போதே ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பை சேர்ந்த வீரசிங்கம் முதியன்சலாகே பியந்தஅப்புகாமி என்ற கைதி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். வேலைசெய்த இடத்திலிருந்து கைதி பலமணிநேரமாக திரும்பாததால் சிறைக்காவலர் சென்று பார்த்தபோது கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்…

  19. கல்முனை வடக்கு உப பிரதேச செயலக விவகாரம் – கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இருந்தே செயற்படுவார்! கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு என நியமிக்கப்பட்டுள்ள கணக்காய்வாளர் அம்பாறை கச்சேரியில் இருந்தே செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது. கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்திற்கு கணக்காய்வாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பைஸல் காசிம் இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையின் பிரகாரமே இறுதித் தீர்மானம். அதுவரை கணக்காளர் அம்பாறை கச்சேரியில் இ…

  20. எதிர்காலத்தில் எழக்கூடிய காணிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள தெனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாவலப்பிட்டியில் தெரிவித்தார். வழங்கப்படும் காணியில் வாழ்வதற்கு, தொழில் செய்வதற்கு உரிமை இருக்கிறது என்பது அரசாங்கம் வழங்கும் உறுதி பத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார். நாவலப்பிட்டி பகுதியில் வசிக்கும் பல ஆண்டுகள் காணி உறுதி பத்திரமில்லாமல் இருந்த சுமார் 1,200பேருக்கு ‘ரன் பிம’ எனும் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு (13) நாவலப்பிட்டி பவ்வாகம பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வின் போது காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கய…

    • 0 replies
    • 605 views
  21. 30 வருடங்களாக மகனை தேடிய வியாழம்மா, காணாமலே உயிர் நீத்தார்! July 14, 2019 முப்பது வருடங்களாக தனது மகனை தேடியலைந்த தாய் ஒருவர் தனது மகனை காணாத நிலையில் உயிர் நீத்த சம்பவம் கேப்பாபுலவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 1989ஆம் ஆண்டு எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட வேலுப்பிள்ளை தியாகராஜா (ரஞ்சன்) என்ற இளைஞரின் தாயாரான வேலுப்பிள்ளை வியாழம்மா என்பவரே இவ்வாறு முதுமை காரணமாக உயிரிழந்தார். இவர் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி கடந்த 30 வருடங்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்தார். மனித உரிமை ஆணைக்குழுக்களில் தனது மகனைத் தேடி வாக்குமூலங்கள் வழங்கியிருந்தார். எனினும், தனது மகனைக் காணாமலேயே அவர் உயிரிழந்துள்ளார். கேப்பாப்…

    • 1 reply
    • 679 views
  22. பலாலியில் இருந்து திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவை – இந்தியா ஆர்வம் பலாலி விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை அல்லது திருச்சி நகரங்களுக்கு அல்லது கேரளாவின் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகளை நடத்த இந்தியா விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு சிறிலங்கா அரசாங்கம் 1950 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது. இந்தியா 300 மில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது. தற்போது முதற்கட்டமாக ஓடுபாதையை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும், குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் நெருக்கமான ஆசனங்களை…

    • 1 reply
    • 495 views
  23. திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழர் வரலாற்றுச் சின்னங்கள்..? : வாவெட்டி மலைக்கு சென்ற பக்தர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! (கே .குமணன் ) ஈழத் தமிழர் வர­லாற்­றுடன் தொடர்­பு­டை­யதும், ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டை­ய­து­மான வாவெட்டி மலை ஆபத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் கவலை தெரி­வித்­துள்­ளனர் . தொல்­பொருள் வல­ய­மாக காணப்­படும் இந்த மலையில் பாரிய அளவில் கல் அகழ்வு இடம்­பெற்றுச் செல்­கின்­ற­மையே இதற்கு கார­ண­மாகும். வர­லாற்றுச் சிறப்பு மிக்க முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் தான்­தோன்­றீஸ்­வரர் ஆல­யத்­துடன் தொடர்­பு­டைய வாவெட்டி மலையில் அமைந்­துள்ள வாவெட்டி ஈஸ்­வரர் ஆல­யத்தில் நேற்று மக்கள் வழி­பா­டு­களை மேற்­கொண்­டனர். …

  24. மக்களின் பூர்வீக விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ள வனஜீவராசிகள் திணைக்களம் ; மக்கள் விசனம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலயப் பிரிவுக்குட்பட்ட, தமிழ் மக்களின் பல பூர்வீக விவசாய நிலங்களை உள்ளடக்கி, வனஜீவராசிகள் திணைக்களம் சரணாலயத்திற்காக அபகரித்து வைத்துள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அபகரிப்புச் செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குரித்தான பூர்வீக அறுதி உறுதி விவசாய நிலங்களுக்குள், தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதென வனஜீவராசிகள் திணைக்களம் தடை விதிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதனால் தமது வாழ்வாதாரம் பெரிதும் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் கர…

  25. யாழில் தனியார் காணியில் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் இராணுவத்தினர் வலி.வடக்கு தையிட்டி பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியில் இராணுவத்தினர் விகாரையை ஒத்த கட்டடமொன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 28 வருடங்களுக்கு மேலாக இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள குறித்த பகுதிகளில் சில இடங்கள் அண்மைக்காலமாக இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து , விடுவிக்கப்பட்டு வருகின்றன. அந்நிலையில் இன்னமும் விடுவிக்கப்படாது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதிதாக விகாரையை ஒத்த கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியினை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளனர். நாவற்குழி பகுதியில் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கட்டப்பட்ட விகாரை நேற்றைய தினம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.