Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்­க­ளன்று இலங்கை வரு­கிறார் ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஐக்­கி­ய­நா­டு­களின் மனித உரிமை மற்றும் பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்கை தொடர்­பான விசேட நிபுணர் பென் எமர்சன் எதிர்­வரும் 10 ஆம்­தி­கதி இலங்கை வரு­கிறார். எதிர்­வரும் 14 ஆம்­தி­கதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருக்கும் ஐ.நா. நிபுணர் பயங்­க­ர­வாத்­திற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் மற்றும் அவை எவ்­வாறு மனித உரி­மையை ஊக்­கு­விப்­ப­திலும் பாது­காப்­ப­திலும் தாக்கம் செலுத்­து­கின்­றன என்­பதை ஆராய்ந்து பார்க்­க­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது வெளி­வி­வ­கார அமைச்சர் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், ந…

  2. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், கொழும்பு, ட்ரயல் அட்பார் விஷேட நீதிமன்றில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தை வாபஸ் பெற சட்ட மா அதிபர் எடுத்துள்ள தீர்மானத்தை அறிய முன்வைக்கப்பட்டுள்ள தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட, தனது ஒரே மகனை இழந்துள்ள கொழும்பு - கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த சரோஜா நாகநதன் எனும் தாய் முன்வைத்த தகவல் அறியும் விண்ணப்பமே இவ்வாறு நிராகரிக்கப்படுவதாக சட்ட மா அதிபர் சார்பில்…

  3. புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள். அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படக…

  4. பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க காணாமற்போயுள்ளார் அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, பதவிக்காலத்தின் பின்னர் காணாமற்போயுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். வொஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க, ஏப்ரல் மாதத்துடன் பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவிருந்தார். பதவிக்காலம் நிறைவு பெற்றதன் பின்னர், பிரிகேடியர் ஜயந்த ரத்நாயக்க ஒரு மாத வெளிநாட்டு விடுமுறை பெற்றிருந்ததுடன், அவர் மீண்டும் மே …

  5. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனை சந்திக்க உள்ளார். எதிர்வரும் 15ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பொதுநூலக கேட்போர் கூடத்தில் பிரித்தானிய பிரதமருக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறவுள்ளது. வடக்கின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் கைதிகள், மனிதாபிமான நிலைமைகள், இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பிரதமர் கமரூனைச் சந்தித்த பேச்சுவார்த்தi நடத்த உள்ளனர். விக்னேஸ்வரன் முதல…

  6. ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகள் அனுமதிக்க முடியாதவை – சிலோன் மீடியா போரம் ஊடக அடக்குமுறைகளும், ஊடகவியலாளர்களை தாக்கும் செயற்பாடுகளும் அனுமதிக்க முடியாதவை என சிலோன் மீடியா போரம் தெரிவித்துள்ளது. அண்மையில் நாட்டை உலுக்கிய கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால விபத்தையடுத்து இடம்பெற்ற போராட்டங்களின் போது செய்தி சேகரிக்க சென்ற திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் மூவர் தாக்கப்பட்டதோடு அவர்களது ஊடகக் கருவிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சிலோன் மீடியா போரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் அசௌகரியங்களை தாங்கிக்கொண்டு தமது ஊடகப் பணியினை மேற்கொண்டு மக்களின…

  7. எனது இராணுவ ஆட்சியில் தான் 1 கிருஷாந்தியை கற்பழித்து கொலை செய்ய ஆதரவாய் இருந்தேன் 2 செம்மணியில் பல மனிதப் புதைகுழிகளை அமைத்தேன் 3. பல தமிழ் மாணவர்களை கொன்றொழித்தேன் 4.படித்த தமிழர்களை அழித்தேன் 5. பல தமிழர் பாரம்பரிய ஆதாரங்களை அழித்தேன் 6 வடக்கு கிழக்கு இல் உள்ள ஒன்பது மாவட்டங்களையும் குண்டு வீசி ஈழப்பூமியை ஈயப்பூமியாக்கியவன் நாந்தான் 7.வடகிழக்கில் உள்ள பல ஈழத்தமிழர்களை ஈனத்த தமிழர்களாக்கியதும் நாந்தான்( டக்ளஸ், கருணா,,,,,,,,,,) 8. வட கிழக்கில் பெண்களின் கற்பை மலிவு விலையில் விற்றது நான்தான் 9. உலகின் அதி உன்னதமானதும், இலங்கையில் மட்டும் காணப்படும் கொலைகார புத்த மதத்தை பின்பற்றும் மார்க்க வாதிகளில் நானும் ஒருவன். 10. கடந்த ஆறு மாதகாலமழவில் கிளி நொச்ச…

  8. யாழ் பொதுசன நூலகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக அங்கிருந்து தொடர்பை ஏற்படுத்திய மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகள் மற்றும் www.gtbc.fm வானொலிக்கு தெரிவித்திருக்கிறார்கள். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது குறிப்பாக பெண்கள் மீது கடுமையான தாக்குதல்களை இலக்கத் தகடுகள் அற்ற பொலிஸார் மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் தாக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்களின் போது தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் தள்ளி விழுத்தப்பட்டு உள்ளனர். முன்னர் வந்த செய்திகள்: …

    • 12 replies
    • 1.8k views
  9. மண் அகழ்வில் பெறப்பட்ட நிதி எங்கே? – சுமந்திரன் எம்.பி. கேள்வி வடமராட்சி கிழக்கில் அகழப்பட்ட மண் மூலம் பெறப்பட்ட நிதி எங்கே? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வடமராட்சி, மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். மகேஸ்வரி நிதியத்துக்கு எதிரான வழக்கில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் மண் அகழ அனுமதி பெறப்பட்டுள்ளது என்று வழக்கில் நீதிமன்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் மகேஸ்வரி நிதியம் சட்டத்துக்குப் புறம்பான வகையில் பெற்றுக்கொண்ட நிதியை மீள ஒப்படைக்குமாறு நீதிமன்று குறிப்பிடவில்லை. புத…

  10. பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல் தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க நேற்று (திங்கட்கிழமை) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தனது மகனுடன் இந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருந்து பணத்தை மாற்றுவதற்காக பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் திருக்குமார் நடேசன் சந்திப…

  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து இன்று செவ்வாய்க்கிழமை உரையாற்றினார். பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார். இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாய…

  12. பிரிட்டன் நாடாளுமன்றக் குழு யாழ்ப்பாணத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற குழு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளது. தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கம் அலுவலகத்தின் ஏற்பாட்டில் வந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையிலான யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர்கள் மற்றும் யாழ் மாவட்ட செயலகத்தின் அரச அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினர். இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவது தொடர்பாக தமது அனுபவ பகிர்வை வெளிப்படுத்தியதோடு மேலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராய்ந்தனர். http://newuthayan.com/story/16949.html

  13. கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் கனடாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக ஈழத்தமிழரான செல்வி ராதிகா சிற்சபேசன் தெரிவாகியுள்ளார். கனடாவின் முக்கிய கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) புதிய வேட்பாளர் நியமனக்கூட்டத்திலேயே இவரது பெயர் முன்மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ராதிகா சிற்சபேசன் Scarborough-Rouge River என்னும் பெருமளவில் தமிழர்கள் வாழும் நாடாளுமன்றத் தொகுதியிலேயே வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்த நிகழ்வில் கனடா மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina) மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) கலந்து சிறப்பித்ததுடன் ராதிகாவுக…

  14. எதிர்வரும் 12ம் 13ம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறப்போகும் சிறிலங்கா அதிபரை தெரிவு செய்வதற்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 401118 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. 57036பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தெரிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு இந்த மாதம் 12ம் மற்றும் 13ம் திகதிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அதற்காக அவர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தேவையான வாக்களர் அட்டை தற்போது விநியோகிக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கிறது. – மீனகம் செய்தியாளர் http://meenakam.com/?p=2251

  15. சரத் ஆதரவாளர்கள் மீது தூப்பாக்கிப் பிரயோகம்; ஒரு பெண் பலி : தங்கல்லையில் சம்பவம் வீரகேசரி இணையம் 1/12/2010 3:50:45 PM - தங்கல்லை, உபுன்கம தலுன்ன பகுதியில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் பயணம் செய்த பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. திஸ்ஸமஹராமவில் நடைபெறவிருந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தீவிரமாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டதாக ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடகப் பிரிவினர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் நால…

  16. இலங்கை உச்ச நீதிமன்றின் மிக முக்கிய தீர்ப்பு. இலங்கையின் அரசியலில் ஆகஸ்ட் மாதம் பல விடயங்கள் நடந்து முடிந்துள்ளன. முக்கியமாக ரவியின் பதவி விலகல். இந்த அமளிகளிடையே இலங்கை உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு அரசியல் தீர்ப்பொன்றை வழங்கி உள்ளது. இதனை கொழும்பு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு விட்டன. பெடரலிசம் என்பது பிரிவினை ஆகாது என தீர்ப்பு வழங்கி அறிவித்து உள்ளது. இது முக்கியமான தீர்ப்பாக கருதப் படுகின்றது. http://www.dailymirror.lk/article/Federalism-is-not-Separatism-Rules-Supreme-Court-135005.html

    • 6 replies
    • 947 views
  17. சவேந்திர டி சில்வா தொடர்பான சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிடவிருந்த பத்திரிகைக்கு சிறிலங்கா அரசு தடை! சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை படுகொலை செய்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது படையணி தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா தொடர்பான முக்கியமான சர்ச்சைக்குரிய கட்டுரையொன்றுடன் வெளியாகவிருந்த ‘கொழும்பு’ என்ற பத்திரிகை வெளியீட்டை சிறிலங்கா அரசினால் முடக்கி குறிப்பிட்ட கட்டுரையை வெளியிடக்கூடாது என்று மிரட்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் திகதி வெளியிடுவதற்காக அச்சிடப்பட்டிருந்த ‘கொழும்பு’ பத்திரிகை விநியோகப் பணிகள், அரசியல் அச்சுறுத்தல் காரணமாக அதன் உரிமையாளரினால் நிறுத்தப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 819 views
  18. யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணின் சுமார் 3 இலஞ்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் வைத்தியசாலை ஊழியர் போல நடித்த ஒருவரால் ஏமாற்றி திருடிச் செல்லப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறைப் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமை காலை யாழ். போதனா வைத்திய சாலைக்கு இரத்தப் பரிசோதனை செய்யவந்த பெண்ணிடமே தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன. இரத்தப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லமுற்பட்ட இந்தப் பெண்ணிடம் அங்கிருந்த ஒருவர் தான் வைத்தியசாலையில் பணியாற்றுபவர்போல் பாசாங்கு செய்து கதைகொடுத்துள்ளார். அவருடைய செயற்பாடுகள், கதைகளை நம்பிய அந்தப் பெண் பரிசோதனைக்காக உட்செல்லும் போது தன்னிடமிருந்த 6 பவுண் தங்கச் சங்கிலியை சுழற்றி அவரிடம் கொடுத்துள்ளார். சிகிச்சை முடிந்து வெளியில் வந…

  19. அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்கம் தாய் நாடு பற்றி அன்பாக பேசினாலும் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற காலத்தின் பின்னர், 16 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்திடம் இருந்து உயிர் தப்பிய சுமார் 80 ஊடகவியலாளர்கள் நாட்டை கைவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 150 வருடங்கள் பழமையான வெள்ளையர்களின் குற்றவியல் சட்டத்தை 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நீக்காமல் போயிருந்தால், நாட்டில் உள்ள ஊடவியலாளர்களில் 50 வீதமானோர் சிறைகளில் இருந்திருப்பர். இந்தளவுக்கு இன்றைய அரசாங்கம் ஊடகவியலாளர்களை அடக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  20. ஏ - 9 வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி, மூவர் படுகாயம் வவுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ஓடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் கல்குண்ணாமடுவ பகுதியில் எவ்வித சமிக்ஞைகளுமின்றி தரித்து நின்றது. அதே பாதையில் வவுனியா நோக்கி பயணித்த வீட்டின் மேல் கூரை அலங்கரிப்பு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனம் தரித்து நின்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் த…

  21. தனியார் பஸ்களில் தொந்தரவுகளுக்கு முகம் கொடுக்கும் பயணிகள் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கத்தையும் 'ஸ்கைப்' விலாசத்தையும் தனியார் போக்குவரத்து அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்பிரகாரம் தொந்தரவுகளுக்கு முகம்கொடுக்கும் பயணிகள் privatetrasportservices என்ற ஸ்கைப் விலாசத்துக்கு இன்றேல் 0716550000 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம். இதற்கென தனியார் போக்குவரத்து அமைச்சில் விசேட நடவடிக்கை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சு அறிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/95384-2014-01-02-09-11-31.html

  22. கொழும்பின் சில பகுதிகளில்... திடீர், என அமுலானது 36 மணித்தியால நீர்வெட்டு! கொழும்பின் சில பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 36 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பிரதான குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக கொழும்பு 1, 7, 9, 10, 12 ஆகிய இடங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கொழும்பு 8 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1267642 ############# ############### …

  23. இலங்கைத் தீவில் தேசிய இனங்கள், தேசிய இனப்பிரச்சனை என எதுவும் இல்லையென நிறுவுவதையே தங்கள் உடனடி அரசியல் திட்டமாக ராஜபக்ச சகோதரர்கள் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகின்றார் கொழும்பில் இருக்கும் தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர். "கோவணமும் களவு போய்விட்டதை உணராமல், பட்டாடை பற்றிய கனவில் மிதக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்" என அவர் புதினப்பலகை-யிடம் தெரிவித்தார். கடந்த குடியரசு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் - தமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அதன் தலைவர் சம்பந்தனும் தான் என்றே ராஜபக்ச சகோதரர்கள் கருதுகின்றனர் என்று சொல்லப்படுகி்ன்றது. ஆதலால் - தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலவீனப்படுத்திச் …

  24. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்! விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பின்வரிசை இருக்கைக்கு பதிலாக ஆளும் கட்சியின் இரண்டாவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, போக்குவரத்து அமைச்சர…

    • 0 replies
    • 197 views
  25. வடபகுதியில் போட்டியிடும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சுவரொட்டிகள் யாழ் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் யாழ்.செயலகத்தில் வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன.அதனைத்தொடர்ந்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் பிள்ளையான் அங்கிருந்து சென்றவுடன் பொலீஸார் வந்து சுவரொட்டிகளை கிழித்தார்கள் என எமக்குக்கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. www.tamil.dailymirror.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.