ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
பெரும் வரட்சி… உலருணவு விநியோகிக்க வேண்டிய நிலையில் வடக்கின் சில பகுதிகள்! June 16, 2019 இலங்கையை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ள வரட்சியினால் சுமார் 500,000 பேர் குடிநீர் இல்லாமல் சிரப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. தொடரும் வரட்சியினால் விவசாய அழிவு ஏற்பட்டு வாழ்வாதார இழப்பு மற்றும் உணவு பற்றாக்குறையாலும் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்திருந்தாலும், அது எதிர்பார்த்தளவு நீரை சேமிக்க போதுமானதாக இருக்கவில்லை. குளங்கள், நீராதாரங்கள் நிரம்ப போதுமானதாக இருக்கவில்லை. இதனால் நாட்டின் பெருமளவான பகுதிகளில் பெரும் வரட்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் இல்லாமல் போய் விட்டது. அன்றாட தேவைகள், விவசாயம், கால்நடைக…
-
- 0 replies
- 462 views
-
-
June 15, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. இந்தநிலையில், பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் முஸ்லீம் காங்கிரசின் தலைவரும்…
-
- 8 replies
- 1.6k views
-
-
சிறைகளின் வெளியே காத்திருப்பு – அன்று தமிழர் – இன்று முஸ்லீம்கள்…. June 16, 2019 1 Min Read இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது, சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கைது செய்யப்பட்டு, இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கை மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு இருந்தமை தெரியவந்தது. அத்துடன், யுத்தம் நிறைவடைந்த பின்னர் ரத்து செய்யப்பட்டிருந்த அவசரகால சட்டம், இந்த பயங்கரவாதத் த…
-
- 0 replies
- 440 views
-
-
அனைத்து வேலையற்ற பட்டதாரிகளுக்கும் அரச நியமனம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரின் பட்டதாரிகள் அரச நியமனம் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திலும் அமுனுகமவிற்குமான சந்திப்பு பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ம. ஆனந்தராஜா தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. இச் சந்திப்பின் போது வன்னி மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் விடயங்கள் குறித்து நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சித்தலைவருடனான சந்திப்பு ஒன்று இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளை வவுனியாவில் மேற்கொள்ளுமாறும் வன்னி மாவட்டத்திலுள்ள வேலையற்ற பட்டத…
-
- 0 replies
- 657 views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட பெயர் பலகைகள் அகற்றல் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் அடாத்தாக பௌத்த விகாரை அமைத்து குருகந்த ரஜமகா விகாரை என பெயர் சூட்டப்பட்டு வழிபாடுகள், அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமையினால் இரு மதங்களுக்கிடையில் வழிபாடு மற்றும் இடம் தொடர்பிலான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை முல்லைத்தீவு நீதிமன்றில் நடைபெற்று வந்துள்ள நிலையில் இரண்டு தரப்பினரும் அமைதிக்கு பங்கம் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீதிமன்று கட்டளையிட்டிருந்தது. இந் நிலையில் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த பௌத்த துறவிகள் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து.கடந்த 05.06.…
-
- 2 replies
- 955 views
-
-
வரட்சியால் வற்றிப்போன குளங்கள் ; கொத்து கொத்தாக இறந்து கரையொதுங்கும் மீன்கள் வவுனியாவில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து கரையொதுங்குகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வரட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ்வரட்சி காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டமானது சடுதியாக குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றன. குறிப்பாக, புதுக்குளம், மூனாமடுக் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக அதிகளவிலான நீர் பெறப்பட்டமையாலும், வெப்பமான வரட்சிக் காலநிலையாலும் நீர்வற்றியுள்ளது. இதனால் அப்பகுதிக் குளத்தில் பெருந்தொகையான மீன்கள் இறந்து வருகின்றன. அத்துடன், கால்நடைகளும்…
-
- 0 replies
- 304 views
-
-
யாழ்ப்பாண மாநகர மேஜர் ஆர்னோல்ட், அமெரிக்க தமிழ்ச்சங்க அழைப்பினை ஏற்று பயணம் போக, விமான பயண சீட்டுக்கான தொகையினை யாழ் மாநகரசபை தரவேண்டும் என்று வைத்த கோரிக்கை, மாநகரசபை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான விதிமுறைகள் இல்லை என்று கூறியே நிராகரிக்கப் பட்டுள்ளது. தனது உணவு, தங்குமிட செலவுகளை, அழைத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும், பயண செலவை மாநகர சபை தரவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். Jaffna Mayor’s air ticket request turned down The Jaffna Municipal Council has rejected Mayor Edwin Arnold’s proposal to buy an air ticket for himself from Municipal funds to attend a Tamil Sangam meeting in the United States. He told Co…
-
- 2 replies
- 787 views
-
-
300 மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் மொறவக்கயில் 300 பௌத்த மதகுருமார்களுக்கு இலவச வைத்திய முகாம் நடத்தப்பட்டது. சாகல ரத்னாயக்க தனது அரசியல் பிரதேசத்தை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தில் ஆரம்பித்து அமைச்சராகி நேற்றுடன் (சனிக்கிழமை) 20 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. அதனை முன்னிட்டே மொறவக்க காரியாலயத்தில் இவ்வாறு இலவச முகாம் நடத்தப்பட்டது. இதன்போது கண் பரிசோதணை, இரத்த பரிசோதணை மேற்கொள்ளப்பட்டதுடன், நடக்க முடியாதவர்களுக்கு இலவசமாக சக்கர நாட்காலியும் வழங்கப்பட்டது. மேலும் பௌத்த மதகுருமாருக்கு மருந்துகள் வழங்கப்பட்டதோடு, அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/300-மதகுருமார்களுக்கு-இலவச/
-
- 1 reply
- 593 views
-
-
யாழில் மாற்றுத் திறனாளிகளின் சுயமதிப்பீட்டு மாநாடு June 15, 2019 யாழ்ப்பாணம் றோட்டரிக் கழகமும் DATA அமைப்பும் இணைந்து நடாத்திய பாதிக்கப்பட்டோர் பதின்மம் கடந்தும்..” என்னும் தொனிப்பொருளில் பாதிக்கப் பட்டோருக்கும்அவர்களோடு பயணிப்போருக்குமான சுயமதிப்பீட்டு மாநாடு நேற்று [14.06.2019 ] காலை 9.30 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரை யாழ்.டில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. . வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அமைப்புகளையும் இணைத்து DATA இயக்குனர் S. சம்பந்தன் மற்றும் றோட்டரிக் கழக தலைவர் ஆர் .பிரசாந்தன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் …
-
- 2 replies
- 859 views
-
-
அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ இம்மாத இறுதியில் சிறிலங்கா வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இம்மாத இறுதி வாரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து அறிவிக்கப்பட்டது. நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்க இராஜாங்கச் செயலர் பொம்பியோ, இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்துடன் உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்காக இம்மாத இறுதியில் அங்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா, சிறிலங்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்காக, அமெரிக்க இராஜ…
-
- 4 replies
- 969 views
-
-
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார். அப்போது சஹ்ரான், தேசிய தௌஹ…
-
- 4 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாரதி வீதியிலுள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் இன்று அப்பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்று காலை குறித்த பகுதியில் சீயோன் தேவாலய தற்கொலை தாரியின் உடல் பாகத்தினை புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். வீதிகளில் ட…
-
- 0 replies
- 391 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) சிசேரியன் மகப்பேற்று சத்திர சிகிச்சைகளின் இடைநடுவே, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பெண்களுக்கு சட்ட விரோதமாக கருத்தடை அல்லது பலோப்பியன் குழாய்களில் தடையை ஏற்படுத்தும் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதை தாம் ஒரு போதும் காணவில்லை என குருணாகல் வைத்தியசாலையின் - சத்திரசிகிச்சைக் கூட தாதியர்கள் 69 பேர் சி.ஐ.டி.க்கு வாக்கு மூலமளித்துள்ளனர். சிசேரியன் சிகிச்சைகளின்போது அங்கு இருக்கும் ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு தெரியாமல் இவ்வாறான நடவடிக்கைகளை ஒரு போதும் முன்னெடுக்க முடியாது எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர். சட்ட விரோத கருத்தடை விவகாரம் …
-
- 13 replies
- 1.2k views
-
-
தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலை படைப்பாளிகளுக்கான அரச விருது விழா.. June 15, 2019 தமிழ் கலைஞர்களை விண்ணபிக்க கோருகிறார் அமைச்சர் மனோ “தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது விழா – 2019”, என்ற தலைப்பில் இந்நாட்டு தமிழ் கலைஞர்களுக்கு விருதுகளையும்,மறுக்கப்படும் அங்கீகாரத்தையும், பணப்பரிசில்களையும் பெற்றுத்தந்து பாரம்பரிய மற்றும் நவீன தமிழ் கலைகளை ஊக்குவிக்கும் அரச விருது விழாவை நடத்துவிக்க தனது அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும், இந்த விருது விழாவில் விருதுகளை பெற நாடெங்கும் கலைப்பணியாற்றும் தமிழ் கலைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் ஜனநாயக மக்கள் முன்னணி-தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பிய…
-
- 0 replies
- 902 views
-
-
கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு நவீன கற்றல்முறை வகுப்பறை June 15, 2019 கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் கற்றல் வசதியை மேம்படுத்தும் நோக்குடன் குறிதத் நவீன கற்றல் வகுப்பறை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் பாடசாலை முதல்வர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் கல்விதிறனை மேம்படுத்தும் நோக்குடன் கல்வி அமைச்சினால் 26 லட்சம் பெறுமதியான 40 ரப்லெட்டுக்கள் மற்றும், சிமாட் போட் ஆகியன இன்று கையளிக்கப்பட்ட…
-
- 0 replies
- 535 views
-
-
நான் ”மாடுகளுக்கு” பிரதிநிதி அல்ல ! சீறும் வியாழேந்திரன் !!! நான் மக்களுக்குத்தான் பிரதிநிதி மாட்டுக்கு பிரதிநிதியல்ல என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து கல்வித்திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட மண்முனை மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் வள நிலையம் மீளமைக்கப்பட்டு இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. பட்டிப்பளையில் அமைந்துள்ள படுவான்கரை பிரதேசத்தில் சேவையாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நிலையம் இறுதி யுத்ததினை தொடர்ந்து 2007ஆம் ஆண்டு தொடக்கம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையமாக செயற்பட்டுவந்தது. இந்த நிலையில் வடகிழக்கு அபிவிருத்த…
-
- 0 replies
- 722 views
-
-
இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம் – அத்துரலிய ரத்தின தேரர் அதிரடி! இந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைப்பதை தமிழ் மக்கள் விரும்பாவிட்டால் அதற்காக நீதிமன்றமோ, பொலிஸ் நிலையமோ செல்லவேண்டியதில்லை புத்தர் சிலையை நாங்களே அகற்றுவோம். என அத்துரலிய ரத்தின தேரர் கூறியுள்ளார். இந்து பௌத்த கலாசார பேரவையில் 2ம் மொழி கல்வியை நிறைவு செய்த மாணவா்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவா்களுக்கு சிங்…
-
- 0 replies
- 232 views
-
-
அமைதியான முறையில் நினைவு கூரப்படவுள்ள தியாகிகள் தின நினைவு ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 639 views
-
-
படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உர்ஜிதப்படுத்தாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து மேலும் கருத்துரைக்கையில், நாங்கள் எத்தனையோ போராட்டங்களை பார்த்தவர்கள். எங்களுடைய போராட்டம் என்பது இனரீதியான போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று போராட்டம் என்ற ரீதியிலே மிகவும் பயங…
-
- 2 replies
- 1k views
-
-
சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்…
-
- 3 replies
- 576 views
-
-
வடக்கு கிழக்கில் நிலவும் இந்து – பௌத்தமக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கே தாம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 2 replies
- 658 views
-
-
மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார் சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அறுவைச் சிகிச்சை சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு வார ஓய்வு இதையடு…
-
- 1 reply
- 669 views
-
-
வவுனியாவில் குளத்தில் புதையுண்ட காட்டு யானையை மீட்க நடவடிக்கை வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியிலுள்ள குளத்தில் யானை ஒன்று நேற்று முதல் புதையுண்ட நிலையில் காணப்படுவதாக ஓமந்தை பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இன்று அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யானையை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை குளத்தின் நடுவே புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது. தற்போதைய வரட்சி நிலை காரணமாக குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. யானைக்கு காலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டிருக்க…
-
- 0 replies
- 325 views
-
-
பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸின் இலங்கைக்கான பயணத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் பிரகாரம் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றி ஐ.நா பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் பற்றிய விடயம் முதன்மை வகித்தது. இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன பயங்கரவாதத்திற்கு நிதிய…
-
- 1 reply
- 529 views
-
-
சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு In இலங்கை June 14, 2019 9:02 am GMT 0 Comments 1082 by : Litharsan மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இ…
-
- 1 reply
- 1.2k views
-