ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143193 topics in this forum
-
அமைதியான முறையில் நினைவு கூரப்படவுள்ள தியாகிகள் தின நினைவு ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 640 views
-
-
படையினர் பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உறுதிப்படுத்தாது ; செல்வம் எம்பி பாதுகாப்பை நாங்கள் தான் உறுதிப்படுத்த வேண்டும். பொலிஸோ, இராணுவமோ பாடசாலை வாசலில் நிற்பது பாதுகாப்பை உர்ஜிதப்படுத்தாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியா சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறப்பு விழா நிகழ்வில் இன்று கலந்து கொண்டதன் பின்னர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து மேலும் கருத்துரைக்கையில், நாங்கள் எத்தனையோ போராட்டங்களை பார்த்தவர்கள். எங்களுடைய போராட்டம் என்பது இனரீதியான போராட்டமாகத்தான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று போராட்டம் என்ற ரீதியிலே மிகவும் பயங…
-
- 2 replies
- 1k views
-
-
சஹாரானின் தளபதியோடு குழுவினரை மடக்கியது டுபாய்: பறந்து சென்ற சி.ஐ.டி. கொழும்புக்கு கொண்டு வந்தது! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றிரவு(வியாழக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மொஹமட் மில்ஹான் உள்ளிட்ட ஐவரே இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்…
-
- 3 replies
- 577 views
-
-
வடக்கு கிழக்கில் நிலவும் இந்து – பௌத்தமக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கே தாம் விஜயம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வவுனியாவில் இந்து மத குருமார்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பௌத்த, இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் பிரச்சினைகளை ஒரு புறம் வைத்து முதலில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். …
-
- 2 replies
- 658 views
-
-
மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் கோத்தா – பலப்பரீட்சைக்குத் தயார் சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோத்தாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அறுவைச் சிகிச்சை சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நான்கு வார ஓய்வு இதையடு…
-
- 1 reply
- 669 views
-
-
வவுனியாவில் குளத்தில் புதையுண்ட காட்டு யானையை மீட்க நடவடிக்கை வவுனியா ஓமந்தை பாலமோட்டை பகுதியிலுள்ள குளத்தில் யானை ஒன்று நேற்று முதல் புதையுண்ட நிலையில் காணப்படுவதாக ஓமந்தை பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு இன்று அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து யானையை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த யானை குளத்தின் நடுவே புதையுண்ட நிலையில் காணப்படுகின்றது. தற்போதைய வரட்சி நிலை காரணமாக குளத்தின் தண்ணீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது. யானைக்கு காலில் காயங்கள் ஏதும் ஏற்பட்டிருக்க…
-
- 0 replies
- 325 views
-
-
பயங்கரவாதம் மற்றும் மிலேசத்தனமான தீவிரவாதம் ஆகியவற்றை முறியடிக்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு இலங்கை செயல்வடிவம் வழங்கவுள்ளது. இதுதொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.நா உதவிச் செயலாளர் நாயகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிறைவேற்று துறையின் நிறைவேற்று பணிப்பாளருமான மிச்சேல் கொனிங்ஸின் இலங்கைக்கான பயணத்தின் போது 2019 யூன் 7-8 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலந்துரையாடல்களில் சர்வதேச விழுமியங்கள் மற்றும் நடைமுறைகள் பிரகாரம் உறுதியான நடவடிக்கைகளை பின்பற்றி ஐ.நா பொறிமுறைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குதல் பற்றிய விடயம் முதன்மை வகித்தது. இந்தக் கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்ட விடயங்களாவன பயங்கரவாதத்திற்கு நிதிய…
-
- 1 reply
- 529 views
-
-
சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு – நிகழ்வை புறக்கணித்தது தமிழ் கூட்டமைப்பு In இலங்கை June 14, 2019 9:02 am GMT 0 Comments 1082 by : Litharsan மட்டக்களப்பில் நடைபெற்ற சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். சமுர்த்தி கொடுப்பனவில் இனப்பாகுபாடு உள்ளதாக தெரிவித்து இந்நிகழ்வு புறக்கணிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தாமரைக்கேணியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இ…
-
- 1 reply
- 1.2k views
-
-
என்ன நடக்கிறது இலங்கையில்? | முன்னாள் இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சிறப்பு நேர்காணல் பிரபாகரன் குறித்து @6:30
-
- 3 replies
- 931 views
-
-
கிளிநொச்சியில் ஆவண வரி அறவிடும் நடவடிக்கை ஆரம்பம்! In இலங்கை June 14, 2019 7:56 am GMT 0 Comments 1178 by : Litharsan கரைச்சி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்து ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை கரைச்சி பிரதேச சபையினால் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த ஆவண வரியை பெற்றுக்கொள்வதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, ஆவண வரியை அறவிடுவதற்கான ஆரம்ப நிகழ்வு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, வை.தவநாதன் …
-
- 0 replies
- 420 views
-
-
மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடல் – தொல்லியல் திணைக்களமும் உள்ளீர்ப்பு In இலங்கை June 14, 2019 8:24 am GMT 0 Comments 1139 by : Litharsan மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் தொல்லியல் திணைக்களத்தையும் உள்ளீர்ப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மன்னார், மனிதப் புதைகுழி தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் இது குறித்து இடம்பெற்ற விவாதத்தின்போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதான…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழர்களின் பூர்வீக நிலத்துக்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்துவைத்தது மாபெரும் துரோகம்! In இலங்கை June 14, 2019 8:40 am GMT 0 Comments 1110 by : Litharsan தமிழர்களின் பூர்வீக நிலமான முல்லைத்தீவின் ஆமையன் குளத்திற்கு சிங்கள பெயரிட்டு திறந்து வைத்தமையானது தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி செய்த பெரும் துரோகம் என முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த 8ஆம் திகதி தமிழர்களின் தொன்மையான நிலப்பகுதியில் உள்ள குளத்தை ஜனாதிபதி, ‘கிரி இப்பன் வெவ’ என்ற பெயரோடு திறந்து வைத்த…
-
- 0 replies
- 631 views
-
-
இலவச ரயில் சேவை ஆரம்பம்! இலவச ரயில் சேவையை வழங்குவதற்குப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. மிஹிந்தலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலனினைக் கருத்தில் கொண்டு குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலைக்கும், மிஹிந்தலையிலிருந்து அநுராதபுரத்துக்குமான ரயில் சேவை எந்த கட்டணங்களுமின்றி இலவசமாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/இலவச-ரயில்-சேவை-ஆரம்பம்/
-
- 1 reply
- 747 views
-
-
மாவனெல்ல புத்தர் சிலைகள் தகர்ப்பு – சஹ்ரானின் உத்தரவின் கீழ் இடம்பெற்றது.. June 14, 2019 மாவனல்ல நகரை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் உத்தரவுக்கு அமைய இடம்பெற்றவை என சி.ஐ.டி. மாவனல்ல நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு நேற்று முற்பகல் மாவனல்ல நீதிவான் உப்புல் ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவற்துறைப் பரிசோதகர் மாரசிங்க இதனை நீதிவானுக்கு அறிவித்தார். இதன்போது இந்த சிலை உடைப்பு விவகாரத்தை…
-
- 0 replies
- 337 views
-
-
இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 பேர் கைது மட்டக்களப்பு வாகரை கதிரவெளி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தியதுடன் உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 4 சந்தேக நபர்களை வாகரை பொலிசார் கைது செய்து இன்று வியாழக்கிழமை வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்கள். சந்தேக நபர்களுக்கெதிராக மேற்படி தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் ஊழியர்கள் செய்த முறைப்பாட்டினையடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர்களுக்கெதிரான சாட்சியங்களை கேட்டறிந்து கொண்ட வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பஷில் சந்தேக நபர்களை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணைய…
-
- 0 replies
- 429 views
-
-
June 13, 2019 கொக்குவில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி (ஸ்ரேசன் மாஸ்டர்) மீது கும்பல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொக்குவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டித் திருத்தகத்தில் பொறுப்பதிகாரி நின்ற வேளை . அங்கு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், அவரைத் தாக்கியுள்ளது. தலையில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். ஆவா குழுவைச் ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் ஓரமாக தொடர்ச்சியாக தேக்கு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட வன வள திணைக்களத்தின் உடைய அனுமதியுடன் குறித்த செயற்பாடு அரசமரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் இவ்வாறு தேக்கு மரச் சோலைகள் அழிக்கப்பட்டு இருப்பினும் இதுவரை அந்த இடங்கள் வெட்டை வெளியாக காணப்படுகின்றது. அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் ஜனாதிபதி அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 65 வீதமான வனப்பகுதி இருப்பதாகவும் இதனை பாதுகாக்குமாறும் மக்கள் மத…
-
- 1 reply
- 781 views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இருந்து கடற்படைக் கப்பக் குழுவினரால் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டுள்ள 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் விவகாரம், ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை மற்றும் மூதூர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் 17 பேரின் படுகொலைகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அதனை நிறைவு செய்து உடன் தமக்கு விசாரணை அறிக்கையை கையளிக்குமாறு சட்ட மா அதிபர் ஜனதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார். பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா…
-
- 0 replies
- 434 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறைகளை மாத்திரம் விமர்சித்துக்கொண்டிருக்காமல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிக்காகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். இனங்களுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு இருந்தால்தான் நாட்டின் பொருளாதாரதத்தை கட்டியெழுப்பலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முஸ்லிம்கள் தொடர்பாக கடைப்பிடித்துவரும் நடவடிக்கைதொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையி…
-
- 0 replies
- 433 views
-
-
மன்னாருக்கு முதற்தடவையாக இருதய வைத்திய நிபுணர் மன்னார் மாவட்டத்திற்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் முதன்முறையாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் MBBS பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் MD இனை முடித்து வெளிநாட்டில் மேலதிக பயிற்சியை முடித்து இரண்டு வாரங்களின்முன் நாடு திரும்பி இருந்தார். இந்த நிலையிலேயே இவர் மன்னார் மாவட்டத்திற்க…
-
- 0 replies
- 450 views
-
-
தீவிரவாத முறியடிப்புக்கு ஜப்பானும் உதவுவதாக வாக்குறுதி சிறிலங்காவுக்கு தீவிரவாத முறியடிப்புக்கான கருவிகள் மற்றும் பயிற்சி உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜப்பானின், வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ரொஷிகோ அபே, நேற்று அலரி மாளிகையில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார். இதன்போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே, ஜப்பான் இந்த உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது, இரண்டு நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கிடையிலான ஒத்துழைப்புக் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2019/06/13/news/38528
-
- 0 replies
- 407 views
-
-
அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார். நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குச் சென்றையடுத்து இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் இடம்பெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர். 3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மாநாட…
-
- 0 replies
- 466 views
-
-
(ஆர்.யசி) அடிப்படைவாதம், இறுக்கமான கொள்கைகளை போதித்துவந்த சஹரான் ஹாசிம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று மூன்று மாதகாலம் தங்கியிருந்து மீண்டும் இலங்கைக்கு வந்த பின்னர் அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் காணப்பட்டது பல பொய்களைக் கூறி வந்தார். எவ்வாறு இருப்பினும் சிறிய அளவில் அடிப்படைவாத குழுவாகும் நிதி நிலைமைகளில் மிகவும் மோசமாகவும் இருந்த சஹ்ரான் ஹாசிம் மற்றும் அவரது குழு குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஆயுததாரியாகவும் செல்வந்தர்களாகவும் மாறியது எவ்வாறு என்ற கேள்வி எம்முள் உள்ளது என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் க…
-
- 1 reply
- 630 views
-
-
கடந்த 5 மாதத்தில் 170 பேர் HIV தொற்றினால் பாதிப்பு கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றினால் நாட்டில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விஷேட வைத்தியர் திருமதி.சந்திரிகா ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தற்பொழுது நாட்டில் உள்ள எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3200க்கும் அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார். அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களுள் எச்.ஐ.வி தொற்று பாலியல் செயற்பாட்டுக் காரணமாக ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த நோயை அடையாளம் காண்பதற்கு இரத…
-
- 0 replies
- 814 views
-
-
இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் பேச்சு – பயிற்சி வாய்ப்புகளுக்கு சிறிலங்கா கோரிக்கை இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் நேற்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளன. இந்தப் பேச்சுக்களில் பங்கேற்பதற்காக, இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் 5 பேரைக் கொண்ட குழுவொன்று கொழும்பு வந்துள்ளது. இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள மேஜர் ஜெனரல் சுசீந்திர குமார், கேணல் நிஷிட் ரஞ்சன், லெப்.கேணல் சிறீநாத் சடிப்பா ரெட்டி ஆகியோரும், கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் மற்றும் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் ரவி மிஸ்ரா ஆகியோரும், நேற்று பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து பேச்சு நடத்தினர். …
-
- 0 replies
- 238 views
-