Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டு உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் பதிவு செய்துள்ளார். இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்…

  2. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று மாலை அடியார்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் விசேட வழிபாடுகளும் இடம்பெற்றது. நாளை புனித அந்தோனியாரின் வருடாந்த திருவிழாவுக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள திருப்பலி பூஜை நாளை வியாழக்கிழமை கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெறவுள்ளது. http://www.virakesari.lk/article/58123

  3. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச் சாட்டுக்களை முன் வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலீசில் முறைப்பாடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் ச. வியாழேந்திரன் அவர்கள் பதிவு செய்துள்ளார். இன்று(12) பிற்பகல் 3,30 மணியளவில் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் குறித்த முறைப்படினை பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கூறுகையில் இன்று நான் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளேன். …

    • 2 replies
    • 545 views
  4. தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக தெரிவித்து சந்தேகத்தின் அடிப்படை யில் கைது செய்யப்பட்ட கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப் படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த நாகராசா பிரசாந்தன் என்ற பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா குழு உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சிலரால் கடத்திச் சென்று கொல்லப்பட்டு சடலம் முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் இருந்து தெரி…

    • 0 replies
    • 442 views
  5. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர். அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று தஜிகிஸ்தான் செல்கின்றார். தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு விஜயம் செய்வதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்நாட்டின் உயர் மட்ட அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜமயொன்றை மேற்கொண்டு நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். ஸ்…

    • 0 replies
    • 357 views
  6. நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள் முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்து சமய அலுவல்கள் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்…

    • 6 replies
    • 1.2k views
  7. காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும் வெளிப்படுத்தினார் அசாத் சாலி (ஆர்.யசி ) சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன என பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார். இதேவேளை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தவ்ஹித் ஜமா…

    • 5 replies
    • 952 views
  8. இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மீதான அழுத்தம் - ஜயூ இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் மீதான இன ரீதியான அழுத்தங்கள் அண்மையில் அதிகரித்துள்ளமை குறித்து, ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளதாக ஜரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஆதாரமில்லாத, வதந்திகளை, பத்திரிக்கைகள், சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, அதன்மூலம் இந்த அழுத்தங்கள் அதிகரிப்படுவதாகவும், அரசோ, ஜனாதிபதியோ இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்காதிருப்பது குறித்தும் அவர்களது, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். http://www.dailymirror.lk/top_story/EU-expresses-concern-about--pressure-on-SL-Muslims-/155-169187

    • 1 reply
    • 541 views
  9. முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி ஒடுக்கி வைக்க முடியும் என்று யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று -07- பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். தொடர்ந்தும் பேசிய அவர், முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் மட்டும் தான் சிறுபான்மை. நாம் மிகத் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் உலகத்தில் நாம் பெரும்பான்மையினர். அதை மிகத் தெளிவாகக் சொல்லிக் கொள்கிறோம். இலகுவாக எம்மை அடக்கி…

    • 22 replies
    • 2.1k views
  10. கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறவில்லை, அவரது கொள்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எமது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த பலமான தலைவரை அதேபோன்று இந்நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தலைவரையே. இந்த பலம் கோட்டாபய ராஜபக்சவிடம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனம் இருக்கிறது. அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும், அந்த விமர்சனம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் இருக்கும் எனவும் கருதவும் முடியாது. எதிர்காலத்தில் நாம் கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒ…

    • 2 replies
    • 1.1k views
  11. தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க சிறிலங்கா தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் 1ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவருக்கான நியமனக் கடிதம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவினால் கையளிக்கப்பட்டது, இதையடுத்து, அவர், நேற்று முன்தினம் கடமைகளைப் பொறுப்பேற்றார். தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவராக, இருந்த சிசிர மென்டிஸ், பதவி விலகியதை அடுத்தே, இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தில் 1984ஆம் ஆ…

    • 1 reply
    • 429 views
  12. கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு ஆலையடிச்சோலை இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோது தகவல் அறிந்த பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று செவ்வாய்க்கிழமை (11) கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மயான வாசலில் நடத்தினர். தமிழரது புனித மயானத்தில் ஐஎஸ்.ஐஎஸ், தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்திய…

    • 3 replies
    • 902 views
  13. 30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் - மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க உங்­க­ளோடு 30 வரு­ட­மாக யுத்தம் செய்­தி­ருக்­கிறோம். உங்­களைப் புனர்­வாழ்­வ­ளிப்­ப­தற்­காகப் பொறுப்­பேற்­றதன் பின்னர் உங்­க­ளிடம் நீங்கள் எங்கு இருந்­தீர்கள், எப்­பி­ர­தே­சத்தில் நீங்கள் என்ன செய்­தீர்கள் என்று நாங்கள் கேட்­ட­தில்லை. நீங்கள் யார் என்­ப­த­னை­யெல்லாம் மறந்­து­விட்டு நண்­பர்­க­ளாக, சகோ­த­ரர்­க­ளா­கவே பழ­கினோம் என்று மேஜர் ஜெனரல் ஜானக ரத்­நா­யக்க தெரி­வித்தார். திரு­கோ­ண­மலை மாவட்ட அர­சாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்­ப­கு­மார தலை­மையில் மாவட்ட செய­லக கேட்போர் கூடத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட முன்னாள் போரா­ளி­களின் குடும்…

    • 1 reply
    • 1.2k views
  14. தமிழரை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே அரசாங்கம் நடத்துகின்றது – சி.வி. In இலங்கை June 12, 2019 10:20 am GMT 0 Comments 1017 by : Litharsan வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் நடத்துவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்டபின்னர் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “முப்பது வரு…

    • 1 reply
    • 602 views
  15. ஹிஸ்புல்லாவிற்கு எதிராக, தவராசா முறைப்பாடு – ஆதாரத்தையும் வெளியிட்டார்! கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அசாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் குறித்து முறைப்பாடுகளை செய்வதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தப் பிரிவிலேயே ஹிஸ்புல்லாவிற்கு எதிரான முறைப்பாட்டை தவராசா பதிவு செய்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக தெரிவித்த வடக்கு மாகாண முன்னாள் எதிர்…

    • 1 reply
    • 527 views
  16. கோத்தாவை எதிர்பார்க்கும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும்! - பசில் [Wednesday 2019-06-12 07:00] மாகாணசபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கான எந்த ஏற்பாடுகளிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் சார்பிலேயே ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகமில்லை. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ போட்டியிட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றா…

    • 1 reply
    • 867 views
  17. தெரிவுக்குழு உறுப்பினர்கள் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்க மறுப்பு! [Wednesday 2019-06-12 07:00] 2019 ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். விசேட தெரிவுக்குழுவின் நேற்றைய அமர்வு, நாடாளுமன்ற குழு அறையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்காக, விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினரூடாக முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில், மூடிய அறைக்குள் விரிவாக ஆராயப்பட்டது. அதன்போதே, கடுமையான எதிர்ப்பு தெரிவி…

    • 1 reply
    • 742 views
  18. June 12, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஆயுத குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை(11) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன…

  19. பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாத காரணத்தினால் மாணவனின் கல்வியை பாடசாலை நிர்வாகத்தினர் இடைநிறுத்தியிருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாள்ஸ் மகா வித்தியாலயத்தில் தரம் 6இல் கல்வி பயிலும் மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு கண்ணாடி பை கொண்டு செல்லாது வழமையாக பயன்படுத்தும் சாதாரண பையை கொண்டு சென்றுள்ளார். பாடசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதனால் மாணவனின் பாடசாலை பை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாணவனிடம், எத்தனை தடவை சொல்வது கண்ணாடி பாக் கொண்டு வர தெரியாதா என பாடசாலை சமூகம் வினவியுள்ளதுடன், மாணவனின் புத்தகங்களை வெளியில் எடுத்துவிட்டு, பையை கழற்றி வீசியுள்ளனர். மாணவனின் தந்தை நடக்க முடியாதவர் என்பதினால், …

  20. தெரிவுக்குழு குறித்து ஜனாதிபதி சபாநாயகருடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் – ரவூப் ஹக்கீம் In இலங்கை June 12, 2019 8:18 am GMT 0 Comments 1443 by : Dhackshala தெரிவுக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதியும் சபாநாயகரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியலமைப்புக்கு இணங்க சுமூகமான தீர்வொன்றுக்கு வரவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தெரிவுக்குழு விசாரணைகள் தொடர வேண்டும் என்பதே தனது எதிர்ப்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கண்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித…

  21. நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அதிகாரம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும் – வாசுதேவ In இலங்கை June 12, 2019 9:12 am GMT 0 Comments 1228 by : vithushan ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அதிகாரம் தொடர்பாக தெளிவுபடுத்துமாறு வாசுதேவ நாணயக்கார சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்தவகையில் இது குறித்து ஒரு வாரத்திற்கு முன்னதாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு கடிதத்தை அனுப்பியதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த விடயம் தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை என்பதனால் மீண்டும் ஒரு கடிதத்தினை கரு ஜயசூரியவுக்கு அனுப்பியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கூறியுள்ளார். …

  22. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதியும் வெளிநாட்டுக்கு பயணம்! In இலங்கை June 12, 2019 9:24 am GMT 0 Comments 1350 by : Dhackshala ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தான் நாட்டுக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள ஆசியாவின் நம்பகத் தன்மை மற்றும் ஒருங்கிணைவை கட்டியெழுப்புவதற்கான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர். 3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. …

  23. பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் சேதமடைந்த கொழும்பு சங்கரில்லா ஹோட்டல் மீண்டு இவ்வாரம் திறக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதல்களில் சங்கரில்லா ஹோட்டலிலும் பாரிய பாதிப்புகள், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் சீர்திருத்தம் செய்யப்பட்டு இவ்வாரம் 12 ஆம்த திகதி 6 மணியளவில் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/57944

  24. சிறப்பு தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறார் ஜப்பானிய பிரதமர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, சிறப்பு தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பவுள்ளார். ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கலாநிதி ஹிரோரோ இசுமியே, சிறப்பு தூதுவராக சிறிலங்கா வரவுள்ளார். அவர், வரும் 20ஆம் நாளுக்கும் 22ஆம் நாளுக்கும் இடையில் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளார். இதன்போது, சிறிலங்கா தொடர்பாக ஜப்பானிய அரசாங்கம் விடுத்துள்ள பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்வது குறித…

    • 0 replies
    • 299 views
  25. சரியா பல்கலைக்கழத்துக்குள் நுழைய முயற்சி ;மட்டக்களப்பில் பதற்றம் Editorial / 2019 ஜூன் 12 புதன்கிழமை, மு.ப. 06:15 Comments - 0 வசந்த சந்தரபால, மனம்பிட்டிய நிமல் ஜயரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் உள்ளிட்ட தேரர் குழுவினர், மட்டக்களப்பில் அமைந்துள்ள சரியா பல்கலைக்கழகத்துக்கு, நேற்று (11) பிற்பகல் 2.30 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். எனினும் குறித்த குழுவினர் பல்கலைக்கழகத்துக்குள் உள்நுழையும் சந்தர்ப்பத்தில், வாயில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தாரால், ரத்ன தேரர் உள்ளிட்ட குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், உள்நுழைவதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. பொலிஸார் தமக்கு அனுமதி வழங்கினால் மாத்திரமே உள்ந…

    • 2 replies
    • 635 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.