ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
இலங்கையில் அண்மை காலமாக புதிய வாகனப் பதிவு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. எனினும் ,இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் 2837 வாகனங்களே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,கடந்த வருடத்தில் இதன் எண்ணிக்கை 4138 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் புதிய வாகனங்களின் பதிவு மிகவும் மந்த கதியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட புதிய வரவு செலவு திட்டத்திற்கு அமைய வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு ,தவணைக் கட்டண முறை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் புதிய வாகனங்கள…
-
- 0 replies
- 320 views
-
-
08 JUL, 2025 | 03:19 PM சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் 109 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை யாசகம் மற்றும் கடினமான தொழில்களில் ஈடுபடுத்துதல், துன்புறுத்துதல், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்து. சிறுவர்களை பாதுகாப்பது சமூகத்தின் பாரிய பொறுப்பாகும். எனவே, சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. https://www.vi…
-
- 0 replies
- 175 views
- 1 follower
-
-
ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ காலமானார் வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ் மொழில் இருந்து தான் ஜப்பான் மொழி உருப்பெற்றது என தனது ஆராச்சி மூலம் கருத்து தெரிவித்த ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ கடந்த திங்கட்கிழமை தனது 89 வது வயதில் காலமானார். இவர் கடந்த 30 வருடகாலமாக தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகள் தொடர்பில் ஆராய்து நூல் ஒன்றை வெளியிட்டுள்ளர். இவ் நூலில் சுமார் இருமில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர் 1919 ஆம் ஒகஸ்ட் மாதம் 23 ம் திகதி பிறந்தவர் என்பதுவும் தமிழ்புலமையாளர்களுடன் நெருங்கியதொடர்பு உடையவர் என்பது மட்டுமல்லாமல் தனது மாணவர்களை தமிழ்கற்பதற்கு ஊக்கிவிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்த…
-
- 0 replies
- 649 views
-
-
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம், புனானை மற்றும் வாகனேரி பிரதேசத்தில் விவசாயத்தில ஈடுபட்டுள்ள விவசாயிகள், உணவு மற்றும் எரிபொருட்களை வயல்களுக்கு எடுத்துச் செல்வது தொடர்பாக இராணுவத்தினரால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களையடுத்தே இந் நடவடிக்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்டப்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படும் உணவுப் பொருட்களுடன் சில தினங்களுக்கு முன்னர் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்திற்கு உணவு மற்றும் எரிபொருட்களை ஒரே தடவையில் நேரடியாக எ…
-
- 0 replies
- 567 views
-
-
மத்திய பிரதேசத்தில் நடக்கும் விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாகக் கூறிய பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். ராஜபக்சேவை இந்தியாவுக்கு அழைத்து வருவேன் என்பதா? சுஷ்மாவுக்கு வைகோ எச்சரிக்கை நெல்லை மாவட்டத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது, மதிமுக இனி வரும் காலங்களில் கவனமாக அடி எடுத்து வைப்பதுடன் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமைந்திடும் வகையில் செயல்படும். பாஜவை சேர்ந்த சுஷ்மா ஸ்வராஜ் மத்திய பிரதேசத்தில் சாஞ்சியில் நடைபெற உள்ள புத்தர் 2060வது விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சவை அழைத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் செய்த தவறை பாஜகவும் செய்தால் அக்கட்சியின் மீதும…
-
- 2 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 2 27 JUL, 2025 | 11:30 AM (லியோ நிரோஷ தர்ஷன்) அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த 4 முதல் 18 ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்கு பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உள்கட்டமைப்பு மீளாய்வு பணிக்குழு, 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் கட்ட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளை செயல்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. இந்த பணிக்குழு…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
வீரகேசரி நாளேடு - ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியை விடுவிக்க மத்திய அரசாங்கம் முன்வந்தால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து நளினியை விடுதலை செய்யக்கோரும் கையெழுத்து இயக்க அமைப்பாளரும் திரைப்பட பாடல் ஆசிரியருமான தாமரை சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக நளினி சிறையில் இருந்து வருகிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை நடத்தினோம். இந்த கையெழுத்து இயக்கத்தில் எழுத்தாளர்கள் சுஜாதா, தி.க.ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் 2015 இல் குற்றச்செயல்களுக்கான தண்டப்பணம் 1 கோடியே 87 இலட்சம்: 13 ஏப்ரல் 2016 கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய பிரிவுக்குட்ப்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களில் நீதி மன்றில் குற்றவாளியாக இனம் காணப்பட்டு விதிக்கப்பட்ட தண்டப்பணம் ஒரு கோடியே 87 இலட்சத்து 2000 ரூபா என கிளிநொச்சி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்எல்ஜேடி சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பிரஜைகள் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தினால் …
-
- 0 replies
- 377 views
-
-
தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு கூட்டத்தில் பல தீர்மானங்கள் கொரோனா வைரஸ் தொடர்பில் தேசிய செயற்பாட்டு பாதுகாப்பு குழு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (03) முற்பகல் சுகாதார அமைச்சில் கூடியது. பின்னர் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட ஊடக சந்திப்பொன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார். " சீன அரசாங்கம் இந்த வைரஸை தடுப்பதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும் தற்போது சுமார் 262 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை போன்று சர்வதேச சுகாதார அமைப்பு ஆகியன இதனை…
-
- 0 replies
- 376 views
-
-
பிரதமர், சோனியா மீது எப்ஐஆர் பதிவு : விஜயராஜா உறவினர்கள் கோரிக்கை சேலம், செப்., 18 : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மீது விஜயராஜாவின் தற்கொலைக்கு காரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால்தான், விஜயராஜாவின் உடலை வாங்கிக் கொள்வோம் என்று, அவரது உறவினர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு எதிரே சுமார் 10க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி வருகின்றனர்.இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்த சேலம் தாசில்தார் சுரேஷையும், பேசவிடாமல் திருப்பி அனுப்பி விட்டார்கள். தீக்குளித்து உயிரிழந்த விஜயரா…
-
- 1 reply
- 396 views
-
-
யாழ்.மாவட்டத்தில் ரௌடித்தனத்திலும் தெருச் சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்கள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். ரெளடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை உருவாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரௌடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்டத்தில் தொண்ணூறு வீதமான குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்த போதிலும், சில வாள் வெட்டுச் சம்பவங்களுடன் கூடிய, தெரு ரௌடித் தனமும் சில கொள்ளை…
-
- 0 replies
- 276 views
-
-
Published By: Digital Desk 3 02 Sep, 2025 | 03:07 PM இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்களை பொதுமக்கள் எளிதாக முறைப்பாடு அளிக்கும் வகையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு 077 777 1954 எனும் புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. முறைப்பாடு செயல்முறையை விரைவாகவும் வசதியாகவும் மாற்றுவதே இந்தப் புதிய முறையின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/224025
-
- 0 replies
- 109 views
- 1 follower
-
-
மன்னார் மாவட்டத்தின் முழங்காவில் பகுதியினை சிறீலங்கா இராணுவத்தினர் இன்று மதியம் கைப்பற்றியுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.முழங்காவில் பகுதி விடுதலைப் புலிகளின் முக்கிய இடம் எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தச் செய்தி தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து எந்தச் செய்திகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/mannar...2008-08-13.html நிருபர்:அன்பு ------------------------------------------------------------------------------------------- என்னங்க நடக்குது? விடுதலைப் புலிகல் என்ன செய்யுறாங்க? எல்லா இடங்களையும் விடுறாங்க?
-
- 4 replies
- 4k views
-
-
[size=4]சிங்கள அரசும், ராஜபக்சவும் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்து விடாமல் இனியாவது விழித்துக் கொண்டு ஈழ தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:[/size] [size=4]தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சியைத் தவிர ஏனைய அனைத்துக் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்ச இந்தியாவிற்கு வருவது, அவருக்கு வரவேற்பு கொடுப்பது, மத்தியப் பிரதேசத்திற்கு அவர் சென்று அங்கே புத்தமதச் சம்மந்தமான மையத்தைத் திறந்து வைப்பது ஆகியவற்றை எதிர்த்து உள்ளன. ஆனால், மத்திய அரசோ, தமிழக அரசோ அதைப் பற்றி கவலைப்படாதது மாத்திரமல்ல, மத்திய அரசே ஒரு அமைச்சரை அனுப்பி வரவேற் ப…
-
- 0 replies
- 411 views
-
-
கிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு -சண்முகம் தவசீலன், எஸ்.என்.நிபோஜன் கிளிநொச்சி – பரந்தன் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணியிலிருந்தே இந்த வெடிபொருட்களை இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கமைய எல்.எம்.ஜே ரவைகள், மகசின் தோட்டாக்கள், துப்பாக்கியின் பாகங்கள், பழைய ஷெல் ஆகியவற்றை இராணுவம் மீட்டுள்ளது. குறித்த காணியின் உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது அறியமுடிகிறது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு அற…
-
- 0 replies
- 353 views
-
-
இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க September 12, 2025 10:13 am இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொழும்பில் தான் குடியிருக்க தற்போது புதுப்பிக்கப்பட்டு வரும் ஒரு வீட்டை அடையாளம் கண்டுக்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விதிமுறைகளின்படி, அரசாங்க வீட்டில் வசிக்கும் எவரும் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன் மூன்று மாத அறிவிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், அரசாங்க வ…
-
-
- 5 replies
- 401 views
-
-
கொழும்பு, அம்பாறை பகுதிகளில் ஏற்பட்டுள்ள படை வெற்றிடத்தை நிரப்ப காவல்துறை கொமாண்டோ அணி [வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2008, 10:32 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] வடபோர்முனைக்கு பெருமளவான சிறிலங்காப் படையினர் நகர்த்தப்பட்டிருப்பதால் சிறிலங்காவின் தென்பகுதியில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலையும் அம்பாறையில் ஏற்பட்டுள்ள புலிகளின் அதிரடி தாக்குதல்களையும் முறியடிப்பதற்கு சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு செயலணிப்படையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கொமாண்டோக்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரியவருகிறது. இது பற்றி தெரியவருவதாவது: சிறிலங்கா இராணுவத்தின் களுத்துறை பயிற்சி பள்ளியில் தமது பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறியுள்ள இந்த சிறப்பு செயலணிப்படை கொமாண்ட…
-
- 0 replies
- 708 views
-
-
[size=2][size=4] ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு தின நிகழ்வு இன்று புதன்கிழமை ஹொரகொல்லயிலுள்ள அன்னாரின் சமாதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அவரின் சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்காவின் புதல்வர் விமுக்தி குமாரதுங்க உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமரான எஸ்.டபிள்யூஇஆர்.டி. பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: கயான் அமரசேகர) [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...6-13-58-00.html[/size][/size]
-
- 0 replies
- 478 views
-
-
பெரும் ஆப்பாக வருகின்றது ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை 28.08.2008 இலங்கை நிலைமை குறித்து நேரில் ஆராய்வதற்காக அண்மையில் இங்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவின் நகல் அறிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஆராயவிருக்கின்றது. அதன் பின்னர் இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியப் பரிசீலனைக்காக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகின்றது. அண்மையில் இலங்கை வந்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, இங்கிருந்து புறப்பட முன்னர் தனது அவதானிப்புகள் குறித்துப் பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் மேலோட்டமாகத் தகவல் வெளியிட்டிருந்தது. அப்போது அப்பிரதிநிதிகள் வெளியிட்ட தகவல்கள் அவற்றுக்குரிய இராஜதந்திர மொழியில் அளவீ…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மரண தண்டனை நீக்கப்பட வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு Human-Rights-Commission-of-Sri-Lanka-60-60 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அனைத்துலக ஆவர்தன பரிசீலனையின் போது ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில், ‘இலங்கையில் மரண தண்டனையை நீக்க வேண்டும்’ என சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சில மாற்றங்களுடன் தகவல் பெறும் உரிமை சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வெண்டுமெனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி ஆராயப்படவுள்ள இலங்கை மனித உரிமைகளின் நிலைமை பற்றி வெளிவிவகார அமைச்சும் தனியாக ஓர் அறிக்கையை தயாரித்துள்ளது. இவற்றைவிட, மாற்றுக…
-
- 2 replies
- 702 views
-
-
மஹிந்த விரைவில் கைதாவார் : வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளார் : அரசாங்கம் (ப.பன்னீர்செல்வம்) மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே அவர் தன்னை கறைபடியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்து இன்று வரை அவை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுபோன்றே இலங்கையின் சட்டங்களில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் மிகவும் சூட்சுமமாக மஹிந்த ராஜபக்ஷ நாட்டிலிருந்து பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ளார் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவும் அவரது மோசடிக்கார கும்பலும் சட்டத்திலிருந்து தப்பிக்க இடமளிக்கமாட்டோம். விரைவில் இவர்கள் க…
-
- 0 replies
- 394 views
-
-
யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அகற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிடப்பட்ட போது குறித்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் சமையலறையில் பாவனைக்கு உதவாத முறையிலிருந்து பழைய ரொட்டி, பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி, பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களும் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர்களால் இன்று (சனிக்கிழமை) அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கு…
-
- 1 reply
- 434 views
-
-
யுத்தம்தின்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் போரின் அவலங்கள் சுமந்து நிற்கும் களத்துக்காட்சிகள். அங்கு வாசிக்கும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வெடிபொருட்களுடன் வாழுகின்றார்கள். http://thaaitamil.com/?p=34414
-
- 1 reply
- 619 views
-
-
13 Oct, 2025 | 02:40 PM செம்மணி மனிதப் புதைகுழிகளை அகழ்வதற்குத் தேவையான நிதி மூலத்தைக் கண்டறிவதோ, போதிய நிதியை ஒதுக்குவதோ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு இயலாத ஒன்றல்ல நிதியை ஒரேயடியாக விடுவிப்பதும் இயலாத ஒன்றல்ல. ஆனால், அரசாங்கம் நிதியை கால இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, கட்டம் கட்டமாகவே விடுவித்து வருகிறது. செம்மணிப் புதைகுழிகளில் இருந்து மிகப்பெரும் எண்ணிக்கையில் எலும்புக்கூடுகள் ஒரேயடியாக வெளிப்படுவதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை, அவ்வாறு வெளிப்படுவது, படைத்தரப்பை ஒருபோதும் தண்டிக்க விரும்பாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உள்ளூரிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். இதனாலேயே, நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே…
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
கொட்டாவைக்கும் ருக்மலைக்குமிடையில் பிரதான வீதியிலி எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்திலிருந்து 300 மீற்றர் தூரத்தில் இரத்தக்கறை படிந்த செருப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட சடலத்துக்குரியவருக்கு முப்பது வயதிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. வேறெங்கோ வைத்துக் கொலை செய்து விட்டு சடலத்தை இப்பகுதியல் கொண்டு வந்து போட்டிருக்கலாம் எனப் பொலிஸாரால் நம்பப்படுகிறது. மோப்ப நாயின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilskynews.com/index.php?opti...s&Itemid=50
-
- 0 replies
- 942 views
-