Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னர் ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் இன்று வழிபாடு கடந்த உயிர்த்த ஞாயிறன்று, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலரது உயிர்கள் பரிதாபமாக காவு கொள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆறு நாட்களின் பின்னர், ஓய்ந்திருந்த ஆலய மணி ஒலிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்றலில் அந்தோனியார் திருச்சொரூபத்தின் ஆசீர்வாதத்துடன் வழிபாடுகள் இடம்பெற்றன. மேலும், அருட்தந்தை ஜுட் ராஜ் அவர்களின் தலைமையில் இன்றைய வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் பலநூறு பக்தர்கள் கலந்துகொண்டு கண்ணீர் மல்க, பக்திபரவசத்தோடு வழிபாட்டில் ஈடுபட்டனர். இதேவேளை, இன்று காலை கொழும்பு பேராயர் இல்லத்தில், உயிர்த்தெழு…

  2. கடந்த கார்த்திகை மாதம் வவுணதீவில் இடம்பெற்ற பொலிஸாரின் படுகொலை தொடர்பிலான விசாரணை சரியான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் முற்றுமுழுதாக முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டமையே சரியான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமைக்கான காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையோர், வவுணதீவு பொலிஸாரின் படுகொலையுடனும் தொடர்புப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி த…

  3. இனவாதத்தை, மதவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்… April 28, 2019 இனவாதத்தைத் தூண்டும், மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், ஊடக கலந்துரையாடல்கள், நிழற்படங்களை வளியிடும் நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் தொடர்பில் தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்…

    • 1 reply
    • 459 views
  4. யாழில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் கைது யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்துக்குள் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் வாளை குளத்துக்குள் வீச முற்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதனைக் கண்டுள்ளார். இதனையடுத்து சந்தேகநபர் அதனை கீழே போட முற்றபட்டவேளையே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://athavannews.com/யாழில்-வாள்-ஒன்றை-கு…

  5. பதவி விலக மறுக்கிறார் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, பதவியில் இருந்து விலக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தர மறுப்புத் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தின் இரண்டு வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, சிறிலங்கா பாதுகாப்புச் செயலரையும், காவல்துறை மா அதிபரையும் பதவி விலகுமாறு சிறிலங்கா அதிபர் கடந்த 24 ஆம் நாள் கோரியிருந்தார். அடுத்த 24 மணிநேரத்துக்குள் விலகல் கடிதங்களை சமர்ப்பி…

  6. சாய்ந்தமருது தாக்குதலுக்கு ஐ.எஸ் உரிமைகோரியுள்ளது April 28, 2019 சாய்ந்தமருது தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு இதன்போது 17 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்புக்குகிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்முனை- சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது இலங்கையின் பல பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட குழுவினருக்கும் அங்கிருந்த குழுவொன்றுக்கும் தொடர்பு இருப்பது கண்டுடிபிக்கப்பட்டது. அத்துடன் சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை குண்டுதயாரிக்கப் பயன்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐ.எஸ்.அமைப்பினரின் பதாதைகள் …

  7. இயக்கச்சியில் இராணுவ சீருடை வைத்திருந்த தையல் கடை உரிமையாளர் கைது April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அனுமதி இன்றி இராணுவத்தின் சீருடை தைத்திருந்தார் என்று இஸ்லாமிய தையல் கடை உரிமையாளர் ஒருவர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் நேற்று காலை இராணுவத்தினரும் காவல்துறையினரும் இணைந்து நடாத்திய சுற்றி வளைப்பில் இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள தையலகத்தில் அனுமதி இன்றி இராணுவத்தின் ஆடை தைத்ததாக தெரிவித்து இஸ்லாமியர் ஒருவர் ; கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் பளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #iyakachchi #armyuniform, tailor #…

  8. மன்னார் பேசாலை வான் பரப்பில் ஆள் இல்லாத விமானம் ? April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காட்டாஸ்பத்திரி-பேசாலை வான் பரப்பில் நேற்று இரவு 10.30 மணியளவில் குறித்த ஆள் இல்லாத விமானம் சத்தம் இன்றி பறந்துள்ளது. இதுதொடர்பில் படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள இராணுவத்தினர் வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டுள்ளனர். அப்பகுதியில் சுமார் 30 ந…

  9. யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளைச் சம்பவங்கள் April 28, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காலப்பகுதியில் யாழில்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள போதிலும் வாள் முனையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. யாழ். நகரை அண்டிய பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் இக் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்கள். அது குறித்து மேலும் தெரியவருவதாவது , யாழ்.இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வாள் முனையில் வர்த்தகரை அச்சுறுத்தி வியாபர பணம் 8 ஆயிரம் ரூபாவினை கொள்…

  10. யாழில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பு யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரால் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணி முதல் நடத்தப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாவாந்துறை, ஐந்துசந்தி பகுதிகளிலேயே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தா…

  11. தனது அமெரிக்கா குடியுரிமைய இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டமையே உறுதி செய்யும் கடிதம், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியோக செவ்வியில் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் தற்போது, அவரின் அமெரிக்கா குடியுரிமை இரத்து செய்யப்பட்டது உறுதி ஆகி உள்ளது. http…

    • 0 replies
    • 416 views
  12. கோயில்க‌ளுக்குள்ளும் துப்பாக்கிக‌ள் க‌ண்டு பிடிக்க‌ப்ப‌ட்ட‌ன‌ யுத்த‌ கால‌த்தில். ம‌கேஸ்வ‌ர‌ன் எம் பி கோயிலுக்குள் வைத்து சுட‌ப்ப‌ட்டார். இத‌ற்கெல்லாம் கோயிலோ இந்துக்க‌ளோ கார‌ண‌ம‌ல்ல‌. ப‌ள்ளிக்குள் அதுவும் இமாமின் அறை க‌ட்டிலுக்க‌டியில் வாள் இருக்கிற‌தா இல்லையா என்ப‌தை ப‌ள்ளிக்கு தொழ‌ப்போப‌வ‌னால் க‌ண்டு பிடிக்க‌ முடியாது. யாழ்ப்பாண‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் ம‌த்தியில் வாள் குழு இப்போதும் உள்ள‌தை த‌மிழ் பொது ம‌க்க‌ளால் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடிந்த‌தா? சில‌ முட்டாள்க‌ளின் செய‌லுக்காக‌ பொதும‌க்க‌ளை குற்ற‌ம் சாட்டுவ‌து ம‌ஹா முட்டாள்த்த‌ன‌ம். யுத்த‌ கால‌த்தில் புலிக‌ளின் ப‌ல‌ ஆயுத‌ங்க‌ள் கோயில்க‌ளில் பிடிப‌ட்ட‌தாக‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌டித்துள்ளேன். மகேஸ…

    • 8 replies
    • 1.5k views
  13. நீர்கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களை ஐ.எஸ் அமைப்பு குறி வைப்பதால், அவர்களை வவுனியாவில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று அறிய முடிகிறது. நீர்கொழும்பில் பல வீடுகளும் வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த பாகிஸ்தானியர்கள், அங்கு இடம்பெற்ற குண்டு வெடிப்பினையடுத்து வெளியேற்றப்பட்டனர். அவர்களைப் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியுள்ள நிலையிலி, அங்கிருந்து அவர்களை வவுனியாவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகிறது. https://newuthayan.com/story/16/நீர்கொழும்பில்-தங்கியிர.html

    • 5 replies
    • 1.6k views
  14. ``முன்னெச்சரிக்கை அளித்தும் இலங்கை அரசு தடுக்காதது ஏன்?'' - இலங்கையிலிருந்து கவிஞர் தீபச்செல்வன் கடந்த ஞாயிறன்று உலகம் எங்கும் வாழும் கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடியிருக்க, இலங்கையில் பெரும் துயரம் நடந்தது. கொழும்பு நகரின் தேவாலயம் ஒன்றில் குண்டுகள் வெடித்து மக்கள் துடிதுடித்து இறந்தனர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் இறந்தோர் எண்ணிக்கை 350-ஐக் கடந்துவிட்டது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சின்னஞ்சிறு குழந்தைகளின் உடல்களைப் பார்த்து உலகமே கண்ணீர் வடித்தது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து இலங்கையில் வசிக்கும் கவிஞர் தீபச்செல்வனிடம் கேட்டோம். "இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெ…

    • 0 replies
    • 442 views
  15. யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இன்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது. முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சேத விபரங்கள் உடனடியாக தெரியவராதபோதிலும் வேனொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. http://www.virakesari.lk/article/54839

  16. முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டு கிராமங்கள் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகர் பகுதி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று (27) அதிகாலை தொடக்கம் முல்லைத்தீவில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களான முள்ளிவளை ஹிஜ்சிராபுரம் மற்றும் முல்லைத்தீவு உண்ணாப்புலவு வரையான பகுதிகளில் படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. …

  17. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய அட்டூழியங்களை தடுப்பதற்கு பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல் நடைமுறைகளில் மாற்றங்களை அமுல்படுத்தவும், எதிர்காலமொன்றையும் இலங்கை எதிர்பார்க்கும் நிலையில், எமது சொந்த கடந்த கால பெருந்துயரங்களில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களைக் கொண்டும் உள் நாட்டு அதிகாரிகளுடனான எமது தற்போதைய ஒத்துழைப்பினூடாகவும் அதற்கு உதவ அமெரிக்கா தயாராகவிருப்பதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஐக்கிய அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களை அடுத்து அமெரிக்க‍ அரசாங்கம் இலங்கை அதிகாரி…

  18. இலங்கை தாக்குதல் ஒரு திட்டமிட்ட சதி" - பாரிசாலன் | Paari Salan | பாரியின் பார்வையில்

    • 0 replies
    • 743 views
  19. சர்வதேச அழுத்தங்களை திசைதிருப்பும் முயற்சியா? – தாக்குதல் குறித்து சுரேஸ் கேள்வி போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஜெனிவா உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக இலங்கை மீதான பயங்கரவாதத் தாக்குதலை அரசாங்கம் கண்டுக்கொள்ளாமல் இருந்ததா எனும் கேள்வி எழுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பினார். யாழில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தாம் இவ்வாறு பெரும் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். …

  20. சுத்தம் செய்யப்பட்டது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் குறித்த தேவாலயம் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டது. கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் உட்பட 8 இடங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த தாக்குதல் இடம்பெற்று 6 நாட்கள் கடந்த நிலையில் இன்று குறித்த கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயம் கடற்படையினரின் உதவியுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ] http://athavannews.com/சுத்தம்-செய்யப்பட்டது-கொ/

  21. இலங்கையில் குண்டுவெடிப்புக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் ரமேஷ் என்பவர் தன்னுயிரை தியாகம் செய்து பலரின் உயிரை காப்பாற்றியுள்ளார். தோள் பையை திறக்க முற்பட்ட ஒரு நபரை தடுத்த ரமேஷ், அவரை தேவாலயத்திற்கு வெளியே அழைத்து சென்றார். வெளியே அழைத்து சென்ற பின் குண்டு வெடித்து ரமேஷ் உயிரிழந்துள்ளார். இலங்கையில் தன்னுயிர் தியாகம் செய்து ரமேஷ் பலரை காத்தது எப்படி என்று அவரது மனைவி தெரிவிக்கிறார் https://www.bbc.com/tamil/sri-lanka-48040186

  22. புலனாய்வு அதிகாரிகள் மீதான நடவடிக்கையே தாக்குதலுக்கு காரணம் – சிறிலங்கா அதிபர் போர் முடிவுக்கு வந்த பின்னர், இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டமை, தேசிய பாதுகாப்பைப் பலவீனப்படுத்தி விட்டது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறினார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தீவிரவாதத்துக்கும் போதைப்பொருள் மாபியாவுக்கும் இடையில் தொடர்புகள் உள்ளன. போதைப்பொருளுக்கு எதிரான எனது நடவடிக்கைகளால் ஆத்திரம் கொண்டு சிறிலங்காவில் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம். 130- தொடக்கம் 140 வரையான ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் சிறிலங்காவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களில் 70…

  23. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி என்ற வகையில் 2019 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க அவசர கால (சட்ட ஏற்பாடுகள் மற்றும் அதிகாரங்கள்) கட்டளையின் கீழ் உள்ள அதிகாரங்களுக்கமைவாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தேசிய தவ்ஹீத் ஜமாத் இயக்கம் - National Thawheed Jammath (NTJ) மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் - Jamathei Millathu Ibraheem zeilani (JMI) ஆகியவற்றை இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களாக பிரகடனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமைய அவ்வியக்கங்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் நடவடிக்கைகளையும் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேவேளை நாட்…

  24. படத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI மட்டக்களப்பு சியோன் கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 21ஆம் தேதி தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர். காத்தான்குடியைச் சேர்ந்த 34 வயதுடைய முகம்மது நஸார் முகம்மது ஆஸாத் என்பவரே, இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்றும் காத்தான்குடி போலீசார் கூறினர். மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலைக் குண்டுதாரியின் தலையை, அவரின் தாயார் லத்தீபா பீவி, சகோதரர் நிப்றாஸ் மற்றும் மாமா இக்பால் ஆக…

  25. இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இரண்டு அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அரசியல்வாதிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதன்படி, கொழும்பு - கொம்பனிவீதி பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 46 வாள்கள் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டிருந்தன. பாதுகாப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டதாக ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.