Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. WS தேவாலய தாக்குதல்கள் | மீறப்பட்ட எச்சரிக்கை? உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள் 290, காயமடைந்தவர்கள் 500. தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. உண்மை தெரிந்தவர்களும் சந்தர்ப்பங்களுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்களுக்கு வந்தவர்களுக்கும், ஓட்டல்களில் உணவருந்தப் பசியுடன் காத்திருந்தவர்களுக்கும், நியூசீலந்து கிறைஸ்ட் சேர்ச் மசூதியில் தலை குனிந்து வணங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், பிற்ஸ்பேர்க் Tree of Life சினகொக்கில் வழிபட்டுக்கொண்டிருந்த யூதர்களுக்கும் இருந்த ஒரே ஒற்றுமை இனி வரப்போகும் நாளைகளின் மீது கட்டியெழுப்பட்ட கனவுகளாகத்தான் இருந்திருக்கும், நிச்சயமாக சுவர்க்கத்தைச் சென்று சேர்ந்துவிடவேண்டுமென்ற அவசரமாக …

    • 0 replies
    • 622 views
  2. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்த தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர் அவ்விடத்துக்கு வருகை தந்ததாக கருதப்படும் சிறிய ரக வேனில் இருந்தே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார். இந் நிலையில் அந்த வெடிபொருட்கள், பிரதேச மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் விஷேட அ…

  3. (எம்.எப்.எம்.பஸீர்) நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த 26 பேரில் சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து இன்று காலை க…

  4. பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் - ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்திய பிரதமர், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான எந்தவொரு உதவியையும் இலங்கைக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாக குறிப்பிட்டார். இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் இந்திய அரசாங்கமும் மக்களும் இலங்கையின் சகோதர மக்களுடனும் அரசாங்கத்துடனும் கைகோர்த்திருப்பதாக குறிப்பிட்ட இந்திய பிரதமர், இரு நாட…

    • 6 replies
    • 1.3k views
  5. கொட்டாஞ்சேனை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் கொட்டாஞ்சேனையிலுள்ள கொச்சிக்கடை கத்தோலிக்க ஆலயத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சற்று முன்னர் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலதிக தகவல்களை எதிர்பாருங்கள் http://www.dailyceylon.com/181139

  6. இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு குறித்து இந்திய ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக இலங்கையை சேர்ந்த பலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெஹிவலாவிலும், கொழும்புவின் தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்ப…

  7. இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணியளவில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது இதன்போது மாணவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி மலரஞ்சலி செலுத்தியுள்ளனர். இலங்கையில் நேற்று நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/குண்டு-வெடிப்பில்-உயிரி-2/

  8. நேற்று இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்கள் பயங்கரவாதத் தாக்குதல் என்று வட மாகாண முன்நாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றைய தாக்குதல்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் முதலமைச்சரின் அறிக்கைபுனித உயிர்த்த ஞாயிறு தினமான நேற்று பல்வேறு இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அதேவேளை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் காயம் அடைந்து சிகிற்சை பெறுபவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கு கொள்கின்றோம். மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு நேற்று சென்று காயம் அடைந்து சிகிற்சை பெற்றுவ…

  9. இன்று நள்ளிரவு முதல் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசர கால சட்டம் என்றால் என்ன? அவசர கால தடைச் சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும், இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை! இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட…

  10. கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலருகில் இன்றும் ஒரு குண்டு வெடித்திருக்கிறது. வாகனத் தரிப்பிடத்தருகில் வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிஎஉந்த சிறிய வெண்ணிற வான் ஒன்று வெடித்துச் சிதறும் ஒளிநாடா வெளிவந்திருக்கிறது. தற்கொலைத் தாக்குதலாகவோ அல்லது இராணுவத்தால் வெடிக்கவைக்கப்பட்ட வானாகவோபிருக்கலாம்.

  11. புறக்கோட்டையில் வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன April 22, 2019 கொழும்பு புறக்கோட்டையிலுள்ள பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவின் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார் குப்பைகள் இடப்படும் பையொன்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்துள்ளாh http://globaltamilnews.net/2019/118969/

  12. தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் – நீதிமன்றில் பொலிஸார் பரபரப்பு தகவல் ஷாங்கரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டு தாக்குதலை நடத்தியவர் இன்ஸான் சீலவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தொழிற்சாலை உரிமையாளர் எனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரியப்படுத்தியுள்ளனர். மேலும் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. http://athavannews.com/தற்கொலைக்-குண்டு-தாக்குத/

  13. கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத…

    • 10 replies
    • 2.1k views
  14. ஒரே பார்வையில் குண்டு வெடிப்புகள் – 27 வெளிநாட்டவர் பலி – சங்கரில்லா விடுதியில் தாக்குதல்தாரிகள்.. April 21, 2019 கொழும்பு சங்கரில்ல நட்சத்திர விடுதியில் தாக்குதல்தாரிகள் தங்கியிருந்தனர்… நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு, சியோன் தேவாலயம், கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல், கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல், கொழும்பு, சினமன் கிராண்ட…

  15. பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும் : April 22, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு( என் ஐபி) இலங்கையின் காவல்துறைமா அதிபருக்கு இத் தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது. குறித்த அறிக்கையினை காவல்துறைமா அதிபர் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார். ஆனால் ஜனாதிபதியோ குறித்த அறிக்கை தொடர்பில் எவ்வித முன்னாய்த்த நடவடிக்கையினையோ, பாதுகாப்பு ஏற்பாடுகளையோ மேற்கொள்ளவில்லை என்றும் இதன் காரணமாகவே மிக கொடூரமான பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்றும் எனவே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி தனது பதிவியை இ…

  16. தௌஹீத் ஜமாத் என்ற ஒரு குழுவினால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது – அமைச்சர் பரபரப்பு தகவல் உள்நாட்டில் உள்ள தௌஹீத் ஜமாத் என அடையாளபடுத்தப்பட்ட ஒரு குழுவினால் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தற்கொலை தாரிகள் அனைவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்துள்ளார். http://athavannews.com/தௌஹீத்-ஜமாத்-என்ற-ஒரு-குழ/

  17. 36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாமல் 25 சடல…

  18. ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் நடைபெறுகின்றது April 22, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பாதுகாப்பு சபை கூட்டம் ஒன்று இன்று (22) இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி நேற்றிரவு நாடு திரும்பி இருந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் இந்தக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2019/118893/

  19. குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் 1000 இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 24 கைது நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பு…

  20. நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சகல பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. http://athavannews.com/நாடளாவிய-ரீதியில்-ஊரடங்க/

  21. தாக்குதலுக்காக குண்டுகளை ஏற்றி சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட 8 குண்டு வெடிப்பு சம்பவங்களில் 207 பேர் கொள்ளப்பட்ட நிலையில் 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்புக்கு குண்டுகளை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வேன் வெள்ளவத்தை பகுதியில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/54366

    • 3 replies
    • 1.6k views
  22. முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட கொட்டந்தீவு பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் கொட்டந்தீவு பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே நேற்றிரவு இடம்பெற்றள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. இரவு 10 மணியளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனினும் இந்த சம்பவத்தில் சேத விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதேவேளை இன்று காலை ஆறு மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துச் சேவைகளும் இடம்பெற்றபோதும் பதற்ற நிலை தொடர்கின்றமை குறிபிடத்தக்கதாகும். https://www.ibctamil.com/srilanka/80/118253?ref=imp-news

  23. எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக, இளைஞரணி உருவாக்கப்பட்டுள்ளது – மாவை எமது விடுதலைப் போரில் பங்கேற்பதற்காக இளைஞர் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எங்களது விடுதலைப்போரில் இளைஞர்களும் பங்கேற்க கூடியவர்களாக ஜனநாயக நடைமுறைகளில் இந்த இளைஞர்களை பங்குபற்றக்கூடியவர்களாக இளைஞர் கட்டமைப்பை உருவாக்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழரசுக் கட்சியின் இளைஞரணிக்கான நிர்வாகத்தெரிவு இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “இன்றுவரை, இலங்கை அரசியலில் ஏற…

    • 9 replies
    • 1.6k views
  24. தீவிரவாத முயற்சிகளை முறியடிக்க தேசிய, சர்வதேச உதவிகள் பெறப்படும் இந்த நிமிடம் நாட்டுக்குள் எவ்வித தீவிரவாத நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, நாட்டை சீர்குலைக்க சில குழுக்கள் முயற்சிப்பார்களாயின், தேசிய, சர்வதேச உதவிகளைப் பெற்று குறித்த தீவிரவாத செயற்பாட்டை முறியடிக்க வலுவாக உறுதிப்பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே புலனாய்வுப் பிரிவுக்கு தகவல்கள் கிடைத்திருந்தாலும், அது தொடர்பில் தனக்கும் அமைச்சர்களுக்கும் அறிவிக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் போதிய அவதானம் செலுத்தப்படாமைக் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தான் உள்ளிட்ட …

    • 2 replies
    • 572 views
  25. தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்! கொழும்பு – தெமட்டகொட பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கட்டமொன்றில் இவர்கள் பதுங்கியிருப்பதாகவும் பொலிஸார் சுற்றிவளைத்து தற்போது துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. துப்பாக்கிதாரிகளை துரத்திச் சென்றபோது குண்டு வெடிக்கவைக்கப்பட்டதில் மூன்று பொலிஸார் தற்போது உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பகுதியில் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்துள்ள நிலையில், சந்தேகநபரை துரத்திச் சென்றபோது பொலிஸார் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரி…

    • 1 reply
    • 914 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.