Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பலாலி விமான நிலைய அபிவிருத்தி – மகிந்த அணி கொந்தளிப்பு மத்தல அனைத்துலக விமான நிலையத் திட்டத்தை பயனற்றது என்று விமர்சிக்கும் அரசாங்கம் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது ஏன் என்று சிறிலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, 20 பில்லியன் ரூபா செலவில் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்தும் திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளார். ”இது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. மத்தல விமான நிலையம் அமைக்கப்பட்ட போது நாட்டுக்கு இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் தேவையற்றது என்று கூறியவர்கள், திடீரென யாழ…

  2. செம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு February 18, 2019 குளோபல் தமிழச் செய்தியாளர் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று மாமுனனை கடற்கரையை அண்மித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்து அங்கு அகழ்வுகள் நடத்தப்படுகின்றது. அடையாளம் காணப்பட்ட பகுதி தற்போது பளை காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தற்போது அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் நிலை கொண்டுள்ள குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு உள்ளதாக பளை காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறித்த தகவலின்…

    • 7 replies
    • 1.7k views
  3. இன்று கிடைக்கிறது காபன் அறிக்கை – ஏமாற்றம் அளிக்கலாம் என்கிறார் சட்டமருத்துவ அதிகாரி மன்னார் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி மாதிரி எலும்புகள் தொடர்பான றேடியோ காபன் ஆய்வு அறிக்கை இன்று கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புளோரிடாவில் உள்ள பீட்டா றேடியோ காபன் ஆய்வகத்தில் இந்த மாதிரி எலும்புகளைச் சோதனையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வு அறிக்கை இன்று மன்னார் நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த றேடியோ காபன் ஆய்வு அறிக்கை, குற்றம் நடந்ததாக சந்தே…

  4. மாலை 6 மணிக்குப் பின் தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்த தடை சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் இரவு 9 மணி வரை வகுப்புக்களை நடத்துவதாகவும் இதனால் தூர இடங்களிலிருந்து வரும் பெண் பிள்ளைகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலை கலாசாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனியார் கல்வி நிலையப் பொறுப்பானவர்களுக்கு அறிவிக்கப்படவுள்ளது. http://www.virakesari.lk/article/50159

    • 34 replies
    • 3.3k views
  5. மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம் இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இதனைக் கூறுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும் எந்த அருகதையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (திங்கட்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அண்மையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர் ரணி…

  6. கோத்தாவே வேட்பாளர் – தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடிவு கோத்தாபய ராஜபக்ச தான், அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவர் என்ற இறுதியான முடிவுக்கு தேசியவாதிகளும், இடதுசாரிகளும் வந்து விட்டனர் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னதாக, அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவை களமிறக்குவது தொடர்பாக இந்த இரண்டு முகாம்களும் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தன. எனினும், தற்போது கோதத்தாபய ராஜபக்ச தான் மிகப் பொருத்தமான வேட்பாளர் என்று இரண்டு தரப்புகளும் புரிந்து கொண்டுள்ளன. இருந்தாலும், இறுதியான முடிவுது எதிர்க்கட்சித் தலை…

  7. ஆட்சியமைத்ததும் ஜெனிவா தீர்மானத்தை வலுவிழக்கச் செய்வோம் – ஜி.எல். பீரிஸ் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆட்சியமைத்த பின்னர், 2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை முறியடிக்கும் வகையில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ”2015இல் சிறிலங்கா அனுசரணை வழங்கிய தீர்மானத்தை துரோக ஆவணமாக நாங்கள் பார்க்கிறோம். சிறிலங்காவின் சட்ட நடைமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புக்கு அது பரிந்துரைக்கிறது. வெளிநபர்களின் தலையீடு இல்லாமல் இந்தப் பிரச்சினை சிறிலங்காவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 30/1 தீர்மானத்தின்…

  8. வவுனியாவிலிருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம், மஹாவெவ பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மின்மாற்றி ஒன்றில் பேருந்து மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் காயமடைந்த 22 பேரும் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். http://athavannews.com/வவுனியாவிலிருந்து-பயணித/

  9. February 18, 2019 யாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு விசமிகள் தீ வைத்துள்ளனா். குறித்த விளையாட்டறையானது நேற்றிரவு அடையாளந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

    • 1 reply
    • 190 views
  10. பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர் …

  11. மாந்தை மேற்கில் சீருடையுடன் தூங்கில் தொங்கிய நிலையில் மாணவன் சடலமாக மீட்பு : February 16, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பு மாணவரான ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற மாணவன் இரவாகியும் வீடு திர…

  12. புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வன்னியிலே வாழ்ந்த மலையக வம்சாவளி தமிழ் மக்கள் சமத்துவமாக தமிழினத்துக்குள்ளே உள்வாங்கப்பட்டார்கள். பாரபட்சம் இருக்கவில்லை இன்று புலிகளின் பெயரை சொல்லி வாக்கு வாங்கி அரசியல் செய்யும் சில அரசியலர்கள் கூட வடக்கில் வாழும் மலையக வம்சாவளி தமிழர்களின் அரசியல், கல்வி, காணி, சமூக உரிமைகளை மறுப்பதை நானறிவேன். இவர்களை திருத்த விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டுமா? இந்த இலட்சணத்தில் தமிழின ஒற்றுமை எங்கே அய்யா உருவாகப்போகிறது??

  13. (எம்.ஆர்.எம்.வஸீம்) நாட்டில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும் இராணுவ வீரர்களால் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதனை எமது நாட்டு சட்டத்தின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளலாம் என்றார். ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டம் இடம்பெறும்போது தமிழ் அரசியல்வாதிகள் எமது இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பார்கள். பேரவை முடிந்தவுடன் அது தொடர்பில் வாய்திறக்கமாட்டார்கள். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவை இவர்களுக்கு இல்லை. வெற…

  14. சிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது – அடைக்கலநாதன்! ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் அதன் ஊடாக பயணிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான டெலோ கட்சியின், மன்னார் மாவட்ட இளைஞர் அணி மாநாடு மற்றும் நிர்வாக தெரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவ…

  15. படத்தின் காப்புரிமை BUDDHIKA WEERASINGHE Image caption மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக கூறி சர்வதேச சமூகத்திடம் ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் முன்னணியின் 22 ஆவது பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர்க் காலகட்டத்தில…

  16. இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் தமிழர்களுள் 85 சதவீதமானோர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியே பிரித்தானியாவுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானியாவின் மனித உரிமைகள் செயல்பாட்டாளரான அம்பிகை சீவரத்னம் ( sky news) என்ற வெளிநாட்டு ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டரீதியாக பிரித்தானியாவுக்குள் வருவதற்காக காணப்படும் கெடுபிடிகள் மற்றும் இலங்கையில் வாழ்வதற்கு ஏற்பட்டுள்ள பயமான சூழலே இவ்வாறு அதிகமானவர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் நுழைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் http://www.tamilmirror.lk/செய்திகள்/85-சத…

  17. பெண்ணின்... சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸார், அதிர்ச்சியில் உயிரிழப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்த இளம் பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள திகிலிவெட்டை எனும் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரண…

  18. வல்வெட்டித்துறை திருவில் சதுக்கத்தில் போரில் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட மாவீரர்களுக்கு நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான பிரேரணை மீண்டும் சபையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. நினைவுத் தூபிகளை அமைக்கத் தனித்தனியாக இரண்டு வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நிதி சேகரிப்பது தொடர்பான பிரேரணை இன்றைய சபை அமர்வில் முன்வைக்கப்பட்டது. இதற்கு சுயேட்சை உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். பிரேரணை வாக்கெடுப்புக்கு விடமாட்டோம் எனக் குழப்பம் விளைவித்தனர். இதனால் சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. https://newuthayan.com/stor…

  19. (எம்.மனோசித்ரா) உள்நாட்டு யுத்தம் இடம்பெற்றபோது வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இலங்கையில் போர் காலகட்டத்தின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கண்டறிய சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் 8 எட்டு மாவட்டங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகத்தில் 17 நாட்டு தூதுவராலயங்களின் பிரிநிதிகளை சந்தித்து மகஜரினையும் கையளித்துள்ளனர். பிரித்தானியா, கனடா, ஜேர்மன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பிரதி…

  20. February 18, 2019 இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். போர் நிறைவடைந்த பின்னர் ஒரு தரப்பு மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். …

  21. தென் இலங்கையில் ஒரு திருமண விழாவில் பரிமாறப்பட்ட கோழிக் கறியில் புழுக்கள் நெளிவத்தைக் கண்ட அங்கே இருந்த வைத்தியர் செய்த முறைப்பாட்டினை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் அந்த உணவை விநியோகித்த திருமண மண்டப முகாமையாளரை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தினர். 1 இலட்சம் ரூபா பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், விசாரணைகளை வேறு திகதிக்கு ஒத்தி வைத்தார். கோழியினை முன்னதாகவே பொரித்து, குளிரூட்டியில் வைத்திருந்ததாகவும், கறியினை தனியே செய்து, அதனுள் பொரித்த கோழித்துண்டுகளை சேர்த்ததாகவும் தெரியவருகிறது. பார்க்காமலே சேர்த்தார்கள்.... கொதிக்க வைக்கவில்லையா என்ற கேள்வியும் எழுகின்றது. (கொதித்திருந்தால்.... புழுக்கள், கறியுடன் கலந்து பார்வைக்கு தெரிந்திருக்காதே). இடையில் பிர…

  22. தலைவர் கையில் வளர்ந்த பிள்ளைகளின் அவல நிலை! By ஈழவன் Last updated Feb 18, 2019 Share வடக்கில் பெற்றோரை இழந்த சிறவர்களின் பராமரிப்பிற்காகவும் அவர்களின் வளர்ப்பிற்காகவும் தேசியத்தலைவர் அவர்களினால் செஞ்சோலை சிறுவர் இல்லமும்,காந்தறூபன் அறிவுச்சோலையும் நிறுவப்பட்டு தமிழர்தாயத்தில் யாரும் அனாதைகள் என்று இருக்கக்கூடாது என்பதற்காக இரண்டு இல்லங்களையும் நிறுவி அதன் ஊடாக பல் துறைசார்ந்த பல மாணவர்களை உருவாக்கி பல சமூக செயற்பாட்டாளர்களையும் உருவாக்கியுள்ளார். பல திறமைகளை கொண்ட மாணவர்கள் தலைவர் அவர்களின் நேரடிக்கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார்கள். இவ்வாறு வளர்க்கப்பட்ட செஞ்சோலை பிள்ளைகள் பேரின் பின்னர் யாரும் அற்ற ந…

  23. ஓமானில் வசிக்கும் தமிழ் குடும்பம் ஒன்று இலங்கையின் போரின் போது வலுவிழந்த படைவீரர் ஒருவருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பு செய்துள்ளது. வாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில் இடம்பெற்ற போரின் போது அங்கவீனமானா இந்த நிலையில் ஓமானில் வசிக்கும் கொழும்பு – ஹெவ்லொக் டவுனை சேர்ந்த மோஹனசங்கரும், அவரின் மனைவியுமே இந்த வீட்டை அன்பளிப்பு செய்துள்ளனர். இதனை அண்மையில் யாழ்ப்பாண படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன் ஹெட்டியாராச்சி பயனாளிக்கு வழங்கியுள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியினர் வடக்கு மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள 7 ப…

    • 0 replies
    • 401 views
  24. பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தல் February 17, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில் இன்று மதியம் விளையாடிக் கொண்டிருந்த சதீஸ்வரன் வினோத் (13), சதீஸ்வரன் பூஜா (8) ஆகியோரே காரில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. வீட்டிற்கு அருகிலுள்ள வெட்டை பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அங்கு வெள்ளை நிற காரில் ஆணும், பெண்ணுமாக வந்த இருவர், சிறார்களை அருகில் அழைத்து பலவந்தமாக காரில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் குறிப்பிடப்பட்டு…

  25. மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டம்! டுபாயில் கைதாக பிரபல பாதாள உலககுழு தலைவன் மாகந்துர மதுஷ், ஜனாதிபதி கொலை சதி முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான மேலதிக தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். கடந்த வருடம் நடுப்பகுதியில் ஜனாதிபதி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டபோது, அங்கு வைத்து ஜனாதிபதியை கொல்லும் முயற்சியை திட்டமிட்டுள்ளனர். புலம்பெயர் தமிழ் சினிமா இயக்குனருடன் தொடர்புடையதாக கூறப்படும் துஷார பீரிஸ் என்பவர் மூலம் அறிமுகமான மதுசான் என்பவரின் மூலம் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடையவராக கூறப்படும் மதுசான், மதுஷ் குழுவுடன் இணைந்து மோதரை, மட்டக்குளியில் பல கொலைகளில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.