ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
வட.மாகாண ஆளுநருடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு! வட.மாகாண ஆளுநரை இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நோர்வே தூதுவர் தோர்ப்ஜோர்ன் கவுஸ்டட்சேத் (Thorbjørn Gaustadsæther) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுத்தமான வலு மற்றும் சுகாதாரம் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பணம் சென்றிருந்த நோர்வே தூதுவர் வடக்கு மகாண ஆளுநர் சுரேன் ராகவன், யாழ்ப்பாண பாதுகாப்பு படை அணிகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி மற்றும் வட மாகாணத்துக்கான பிரதம செயலாளர் ஏ. பதி…
-
- 0 replies
- 344 views
-
-
February 9, 2019எங்கள் பிள்ளைகளை விடுங்கள் – எங்களின் ஆட்சியில் விடுங்கள் – தமிழீழ காலத்தில அந்த மாதிரித்தான் நாங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தனாங்கள். இப்பதான் இப்படி துன்பப்படுறம். இப்ப வந்தவையல் குப்பைகள் குப்பை ஆட்சி செய்யுதுகள்…..” என்றெல்லாம் தமது துயரை கொட்டி தீர்த்துள்ளார்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள். வடக்கின் ஆளுநர் அலுவலகம் முன்பாக இந்தத் தாய்மார்கள், மற்றும் உறவினர்கள், கண்ணீரால் தமது துயரை இன்று பதிவு செய்துள்ளார்கள். http://globaltamilnews.net/2019/112648/
-
- 19 replies
- 1.6k views
-
-
February 11, 2019 குறைந்த வருமானமுடைய தமிழ் மற்றும் சிங்கள குடும்பங்கள் இரண்டுக்கு இராணுவத்தினரால் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடு பிரசேத்தினை சேர்ந்த தியாகராசா மூர்த்தி என்பவரின் குடும்பத்திற்கும் வெலியோயா பிரசேத்தை சேர்ந்த சிங்களக் குடும்பம் ஒன்றுக்குமே இவ்வாதறு வீடுகள் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேராவின் வழிகாட்டலில் உள்ளூர் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் நிதிப்பங்களிப்போடு இவ்வீ…
-
- 1 reply
- 316 views
-
-
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித்த அநேகமான விடயங்களை மறந்து விட்டார். அவரால் வாக்குறுதியளிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத விடயங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள கடிதத்தை நான் அவரிடம் சமர்ப்பிப்பேன் எனவும் குறிப்பிட்டார். மட்டக்ககளப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மனோகணேசன், பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் அவரது அமைச்சின் 70 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் பாடசாலை வகுப்பறை கட்டடத்தை பார்வையிட்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், …
-
- 0 replies
- 407 views
-
-
இந்த நாடாளுமன்ற காலத்தில் இல்லாவிட்டால், அடுத்த நாடாளுமன்றத்திலாவது தீர்வு வரலாம்: எம்.ஏ.சுமந்திரன்! February 8, 2019 “புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன” இப்படி தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். வசந்தம் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு ஒளிப்பரபான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். ‘நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை, கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு என்பவற்றை வைத்துப்ப…
-
- 34 replies
- 2k views
-
-
February 11, 2019 வரணியில் இளைஞரை தாக்குவதற்கு தலமை தாங்கிய இளைஞர் கைது.. வரணி பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு உதவினார் என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டு இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார். வரணி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்திற்கு தகவல் வழங்கினார் என இளைஞர் ஒருவரை, ஊர் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வீடு புகுந்து குற்றம் சாட்டப்பட்ட இளைஞனை தாக்கி மீசாலையில் இருந்து வரண…
-
- 0 replies
- 599 views
-
-
இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சுய நலன்களுக்…
-
- 15 replies
- 2k views
-
-
படத்தின் காப்புரிமை ISHARA S.KODIKARA/AFP/GETTY IMAGES Image caption கோப்புப்படம் வட மாகாணத்தில் பௌத்த மாநாடொன்றை முதற்தடவையாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வவுனியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி இந்த பௌத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
"தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பி.யால் முடியும்" தமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலையான வழிமுறைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் அதை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரத்தை தமிழ் மக்கள் எமது கரங்களுக்கு இதுவரை வழங்காதிருப்பதே எமது மக்கள் இன்று எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கும் அவலங்களுக்கும் காரணமாக அமைகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தி இளங்கதிர் சனசமூக நிலைய வருடாந்த ஆண்டு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் உரையாற்றுகையில், …
-
- 1 reply
- 785 views
-
-
‘கூட்டமைப்பு ஆதரவளிக்காது ‘ Editorial / 2019 பெப்ரவரி 11 திங்கட்கிழமை, மு.ப. 10:35 தேசிய அரசாங்கம் என்பது, அரசாங்கத்தின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காதெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அதற்கு ஒருபோது, கூட்டமைப்பு ஆதரவளிக்காது எனவும் தெரிவித்தார். “தமிழ் மக்களின் விடுதலையென்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன” எனத் தெரிவித்த அவர், “அதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசாங்கத்தால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுக…
-
- 0 replies
- 320 views
-
-
படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டது – சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம்… February 11, 2019 படைப்புழுவின் தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே விவசாயிகள் வழமை போல் சோளப் பயிர்ச்செய்கையில் ஈடுபடலாம் எனவும் விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுமார் 82,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த சோளத்தில் 5 சதவீதமே படைப்புழுவின் தாக்கத்தால் அழிவடைந்துள்ளதெனவும் தற்போது படைப்புழுவின்; தாக்கம் கட்டுபடுத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ள விவசாயத் திணைக்களம் சோள உற்பத்திக்காக புதிய முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சோளச் செய்கைகளுக்கிடையில் 4 அடி இடைவெளி இருக்க வேண்டுமென்பதுடன், சோளக் கன்றுகளுக்கிடையில…
-
- 0 replies
- 377 views
-
-
அமைச்சின் அனுமதி இன்றி தொழிலாளர்களுக்கு இனி வழக்குகள் போட முடியாது : February 11, 2019 பெருந்தோட்டத் துறையை பூர்வீகமாக கொண்டுள்ள மலையக பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த தொழிலாளர் மற்றும் பெருந்தோட்ட சேவையாளர்களுக்கு காணி மற்றும் வீட்டுப் பிரச்சினைகள் தொடர்பில் வழக்குகள் அல்லது விசாரணைகள் இருப்பின் தனிதனியாகவோ அல்லது குழுவாகவோ இணைந்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்படுமேயானால் அதற்கான தீர்வினை பெற்றுதர தான் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தனது அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விசேடமாக கலந்து பேசப்பட்டு கடந்த இரு தினங்களாக தனக்கு கிடைத்த முறைப்பாடுகளுக்கு நூற்றுக்கு நூறுவீத…
-
- 0 replies
- 253 views
-
-
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் பகுப்பாய்வு அறிக்கை 14ம் திகதிக்கு பின்னரே வெளிவரும் : February 11, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை எதிர் வரும் 14 ஆம் திகதிக்கு பின்னரே வெளி வரும் என சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார். எலும்புக்கூட்டு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை தொடர்பாக இன்று (11) அவரிடம் வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு 6 பொதிகள் செய்யப்பட்டு …
-
- 0 replies
- 228 views
-
-
செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலார்களை புகைப்படம் எடுத்த இராணுவம் எச்சரிக்கை February 10, 2019 முள்ளியவளை கணுக்கேணிப்பகுதியில் பொது குழாய் கிணறு ஒன்றில் இருந்து படையினர் தொடர்ச்சியாக நாள்தோறும் இருபதுக்கு மேற்பட்ட தண்ணீர் பௌசர்களில் நீரினை எடுத்து செல்வதால் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்ப்பட்டு வந்த நிலையில் இன்று (10.02.19 ) காலை குறித்த பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் ஆகியோர் சென்று படையினரை நீர் எடுக்கவேண்டாம் என்று சொன்னபோது படையினருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் படையினர் ஒளிப்படம் எடுத்துள்ளதுடன் ஊ…
-
- 0 replies
- 153 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா. மாநாட்டில் இலங்கை விவகாரம்! பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவின் மாநாட்டில், இலங்கை குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. பணிக்குழுவின் 117 ஆவது அமர்வு பொஸ்னியா – ஹெர்சகோவினாவில், இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகி, வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் 37 நாடுகளின், 760 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்த 37 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து சுதந்திர மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட குழு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ப…
-
- 0 replies
- 179 views
-
-
இன அழிப்புக்களுக்கு மத்திய தேசிய கொடியின் கீழ் நிற்கக்கூடிய மனநிலையில் தமிழர்கள் இல்லை! தேசிய நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் பெரும்பான்மையினரின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கின்றது, பெரும்பான்மையினர் மாற மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் சம்பந்தன் ஐயா இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். வார இறுதி தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் தலைமை தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் வடக்கு கிழக்கில் கரிநாளாக பிரகடனப்படு…
-
- 1 reply
- 340 views
-
-
தமிழர் பகுதிகளில் இனரீதியான பாகுபாட்டை ஏற்படுத்துவதற்குச் சிங்கள அரசுகள் பல்வேறுவகையான யுக்திகளைப் பயன்படுத்தி வந்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் பரவாலன பகுதிகள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வடக்கை நோக்கி அதன் பார்வை அகன்றுள்ளதை நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. போருக்குப் பின்னரான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலப்பகுதியில் அதன் தன்மையின் வேகம் அதிகரித்துக் காணப்பட்டதுடன் அதற்குப் பின்னரான நல்லாட்சியிலும் அது தொடர்ந்து வருகின்றமை தமிழர்களைப் பொறுத்தவரை ஏமாற்றமே. இரையாகும் வவுனியா வடக்கைப் பொறுத்தவரை, குறிப்பாக வவுனியா மாவட்டம் …
-
- 4 replies
- 1.1k views
-
-
வடமாகாண ஆளுனராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் மன்னார் மாவட்டத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை முதல்தடவையாக சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட நிலையில் ஊடகவியலாளர்கள் குறித்த கலந்துரையாடலின் போது செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்டபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகள் ,மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் ; மேற்கொள்ளப்பட்டது. உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மன்னார் ,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேசச் செயலாளர்கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. …
-
- 1 reply
- 325 views
-
-
ஐ.நா வழங்கும் கால அவகாசத்தால் அரச நன்மையே தவிர தமிழ் மக்களுக்கு அல்ல நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு கால அவகாசம் வழங்கப்படும் பட்சத்தில், தமிழர்களின் பிரச்சினைகளை சர்வதேசம் மறந்து விடும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட ‘இனப்படுகொலை’ தீர்மானம் தொடர்பில் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு, பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டவர்களும் தான் அதனைச் செய்ய முன்வர வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வட …
-
- 1 reply
- 447 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை சாவகச்சேரி காவல்துறையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். நாவற்குழியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி காவல் நிலைய உப காவல்துறைப் பரிசோதகர் இ.சேந்தன் மேற்கொண்ட நடவடிக்கையிலேயே கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதோடு வளர்க்கப்பட்ட கஞ்சா செடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இக்கைதினைத் தொடர்ந்து நாவற்குழிப்பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க…
-
- 4 replies
- 764 views
- 1 follower
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரி மொழிக்கொள்கையை மீறி செயற்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார் என்பது நோக்கத்தக்கது. http://globaltamilnews.net/2019/112812/
-
- 0 replies
- 296 views
-
-
மாலியில் பணியாற்ற மறுக்கும் சிறிலங்கா படையினர் – சமாதானப்படுத்த விரைந்த உயர் அதிகாரிகள் மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா படையினர், தாக்குதலுக்கு இலக்காகிய பின்னர், குழப்பமடைந்துள்ளனர் என்றும், இதனால் இராணுவத் தொடரணிக்குப் பாதுகாப்பு வழங்கும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக முடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 25ஆம் நாள் மாலியின் மத்திய பகுதியில், ஐ.நா வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு அளித்துக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தின் துருப்புக்காவி கவசவாகனம் ஒன்று கிளைமோர் தாக்குதலுக்கு இலக்காகியது. இந்த தாக்குதலில், துருப்புக்காவி பலத்த சேதமடைந்ததுடன், அதில் இருந்த ஒரு மேஜரும், ஒரு சார்ஜன்ட்டும் என இரண்டு …
-
- 0 replies
- 239 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த ஐ.நா மாநாட்டில் சிறிலங்கா விவகாரம் குறித்தும் ஆய்வு பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் மாநாட்டில், சிறிலங்கா குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலவந்தமாக அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழுவின் 117 ஆவது மெர்வு பொஸ்னியா -ஹெர்சகோவினாவில், நாளை ஆரம்பமாகி, வரும் 15ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் 37 நாடுகளின், 760 காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன. இந்த 37 நாடுகளில் சிறிலங்காவும் உள்ளடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்து சுதந்திர மனித உரிமை நிபுணர்களைக் கொண்ட குழு, காணாமல…
-
- 0 replies
- 230 views
-
-
திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் February 9, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நல்லூர் பிரதேசசபையின் அடாவடியை கண்டித்து இன்று திருநெல்வேலி சந்தையில் வியாபாரிகள் வியாபார புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை தொடக்கம் போராட்டம் நடாத்தி வருகின்றனர். திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் குறித்த வியாபாரி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அநியாயமானது என்பதுடன், நல்லூர் பிரதேசசபை அடாவடியாக நடந்து கொள்வதாகவும் குற்றஞ்சாட்டி திருநெல்வேலி சந்தையில் …
-
- 2 replies
- 396 views
-
-
தமிழர் பிரச்சினைகளை சர்வதேசத்திடம் எடுத்துச்சொல்ல ஐ.தே.க இருக்கின்றது: விஜயகலா தமிழர்களுடைய பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துச்செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் வடக்கு- கிழக்கில் ஒற்றுமையாக வாழவேண்டும். மேலும் இம்மண்ணிற்காக போராடியவர்கள் பலர், தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திற்கு பூரண ஆதரவினை வழங்கி வருகின்ற…
-
- 1 reply
- 332 views
-