Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டம் – அமைச்சரவை அங்கீகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக ஊக்குவிப்புக்கான துரித அபிவிருத்தித் திட்டத்தை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 2000 மில்லியன் ரூபாயை செலவிடவுள்ளது இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது இதுதொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்தில் ‘மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அபிவிருத்தி கைவிடப்பட்டிருந்ததினால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அடிப்படை வசதி மற்றும் சமூக அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாதார நிவாரணத்தை வழங்கி அந்த பிரதே…

  2. இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இரு அகதிகள் கைது தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயற்சித்த இருவரை இந்திய கடலோர காவற்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த இருவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு படகில் செல்ல முற்பட்டபோதே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடலோர காவற்படையினர் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் றோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை, சந்தேகத்திற்கிடமான வகையில் கண்ணாடிப்படகில் இருவர் பயணிப்பதை அவதானித்த காவற்படையினர், குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர். இதன்போது, சகோதரர்களான சிவராஜா மற்றும் அன்புகுமரன் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் கா…

  3. துறைமுக நகருக்கான நிலப்பரப்பை உருவாக்கும் பணி நிறைவு கொழும்பு துறைமுக நகருக்கான நிலத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்திருப்பதாக, சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கடலில் இருந்து நிலப்பரப்பை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக இங்கு கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். முன்னதாக துறைமுக நகர் எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம் தற்போது கொழும்பு நிதி நகரத் திட்டம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கடலில் இருந்து, 269 ஹெக்ரெயர் நிலப்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு. வதிவிட மற்றும் வணிக மையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது, …

    • 0 replies
    • 365 views
  4. மகிந்த அரசு வாங்கிய 1 பில்லியன் டொலர் கடனை அடைத்தது சிறிலங்கா மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பதவியில் இருந்த போது, 2014ஆம் ஆண்டு பெறப்பட்ட 1 பில்லியன் டொலர் கடன் நேற்று சிறிலங்கா அரசாங்கத்தினால் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அனைத்துலக பிணைப் பத்திரங்களின் மூலம் பெறப்பட்ட இந்தக் கடன் நேற்று திருப்பிச் செலுத்தப்பட்ட தகவலை பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்டுள்ளார். இதுபோன்ற பல கடன்களைத் தருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தக் கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா நிதியமைச்…

    • 0 replies
    • 404 views
  5. தமிழக மீன்பிடிப் படகு மோதி சிறிலங்கா கடற்படைப் படகு சேதம்? நெடுந்தீவுக் கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களைத் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் போது, சிறிலங்கா கடற்படையின் அதிவேக பீரங்கிப் படகு மீது தமிழக மீன்பிடிப் படகு ஒன்று மோதி சேதத்தை ஏற்படுத்தியதாக சிறிலங்கா கடற்படை தகவல் வெளியிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பகுதியில், கடந்த சனிக்கிழமை இரவு 500 தமிழக மீன்பிடிப் படகுகள் ஊடுருவி மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது சிறிலங்கா கடற்படையின் ஷங்காய் வகையைச் சேர்ந்த ரணஜய என்ற அதிவேக பீரங்கிப் படகு, தமிழக மீன்பிடிப் படகுகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்று, தமது…

    • 0 replies
    • 511 views
  6. கோத்தாவுக்குப் போட்டியாக அண்ணன் சமல் – அதிபர் வேட்பாளராக தானும் தயார் என்கிறார் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தானும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச. ராஜபக்ச சகோதரர்களில், மூத்தவரான முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, ஊடகவியலாளர்களிடம் நேற்று பேசிய போதே, இவ்வாறு கூறியிருக்கிறார். “மக்கள் தயார் என்றால், அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். அதிபர் பதவிக்கு நான் பொருத்தமானவர் எனின், நானும் போட்டியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறேன்” என்று சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்…

    • 0 replies
    • 465 views
  7. பிலிப்பைன்சுடன் 6 உடன்பாடுகளில் இன்று கையெழுத்திடுகிறது சிறிலங்கா சிறிலங்காவுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையில் இன்று ஆறு புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்படவுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஐந்து நாட்கள் பயணமாக சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானத்தில், நேற்று பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். நினோய் அக்கினோ அனைத்துலக விமான நிலையத்தில் சிறிலங்கா அதிபருக்கு பிலிப்பைன்ஸ் ஆயுதப்படையினரின் அணிவகுப்புடன் கூடிய செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்றிக்கோ ருரேரேயுடன் சிறிலங்கா அதிபர் இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார். இதன்ப…

    • 0 replies
    • 663 views
  8. புதிய அரசமைப்பினூடாக, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் நிறைவேற்றப்படும். தனி நாடு என்று காலத்துக்குக் காலம் கதைகள் வரும். ஒருமித்த நாட்டில் தமிழ் மக்களுக்கான தீர்வு வேண்டுமென்று தான் நாம் கேட்கிறோம். அதை விட்டு, தமிழீழக் கனவோடு இருக்கக் கூடாது. நான் சொல்வது, வெளியே போகும் போது, கல்லெறி விழுந்தாலும் விழும். ஆனால், நான் உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லியாக வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றிகொள்ளும் புதிய அரசமைப்பு நிறைவேறலாம். அதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றனவெனவும் அவர் கூறி…

  9. தைத்திருநாளான இன்று யாழில் சற்று முன்னர் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இவ் வாள்வெட்டு சம்பவத்தில் 2 இளைஞர்கள் படு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அதில் ஒரு இளைஞருடைய வலது கை கட்டைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களாலேயே இவ் வாள் வெட்டு சம்…

  10. January 15, 2019 இரட்டைப்பெரியகுளம் குளத்தில் நீராட சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று (15.01.19) பகல் 6 மாணவர்கள் குறித்த குளத்தில் நீராட சென்ற நிலையில், குளித்தில் இருந்த கல் ஒன்றின் மீது ஏறிய போது வழுக்கி விழுந்ததிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த 18 இற்கும் 20 வயதிற்கும் உட்பட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒரு இளைஞனுடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் பிரதேசவாசிகள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். …

    • 2 replies
    • 639 views
  11. January 15, 2019 வவனியாவில் சுழற்சி முறை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தைப்பொங்கலை முன்னிட்டு, இன்று (15.01.19) கவனயீர்ப்பு நடையை முன்னெடுத்ததுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். வவனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கிருந்து கடை வீதி வழியாக நடையை ஆரம்பித்து, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தளத்தை சென்றடைந்தனர். பின்னர், அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். http://globaltamilnews.net/2019/11005…

  12. தைப்பொங்கல் நாளில் ஆரம்பமானது வீட்டுத் திட்டம் வடக்கு மற்றும் கிழக்கு வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. வலி.வடக்கு பிரதேச செயலகத்தின் தென்மயிலை கிராம அலுவலர் பிரிவில் முதலாவது வீட்டுக்கான அடிக்கல்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா நட்டார். இந்த நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்றைய தினம் 4 வீடு…

  13. (ஆர்.யசி) ஜனாதிபதியும் -பிரதமரும் உடனடியாக புதிய அரசியலமைப்பு வேலைத்திட்டங்களை கைவிட மகாநாயக தேரர்கள் வலியுறுத்த வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களிடம் தேசிய இணக்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பும் -முஸ்லிம் காங்கிரசும் ரணிலுடன் செய்துகொண்ட ஒப்பந்தமே இன்று அரசியல் அமைப்பாக வெளிவருகின்றது எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர். மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை இன்று சந்தித்த தேசிய இணக்க சம்மேளனம் இந்த கருத்துக்களை அவர்களிடம் முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் செய்துகொ…

  14. பருத்தித்துறை பகுதியில் இளைஞர் படுகொலை யாழ்ப்பாணம்-பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது, இளைஞர் ஒருவரை கோடாரியால் வெட்டிக்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வாசுதேவன் அமல்கரன் (வயது 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இந்நிலையில், குழு மோதல் மற்றும் இளைஞரின் கொலை தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். http://athavannews.c…

  15. சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:- தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித…

    • 13 replies
    • 1.4k views
  16. சிறிலங்கா படையினரை எந்த நீதிமன்றிலும் நிறுத்தமாட்டோம் –நீதியமைச்சர் நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று சிறிலங்காவின் நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், “நாங்கள் எப்போதும் பௌத்தத்தை மதிக்கிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்ததவொரு நல்ல பௌத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை. நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்.இவைய…

  17. இந்தியா, அமெரிக்கா, புதிய அரசியலமைப்புக்கு எதிராக பௌத்த பிக்கு உண்ணாவிரதம் புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சூழ்ச்சி செய்யப்படுவதாக குற்றம்சாட்டி, பௌத்த பிக்கு ஒருவர் அதற்கு எதிராக சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். கொழும்பு- புறக்கோட்டை அரச மரத்தடியில், அமத்த தம்ம தேரர் என்ற பௌத்த பிக்குவே இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அத்துடன், இவர் உண்ணாவிரதம் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டுள்ள பதாதைகளில், சிறிலங்காவில் கடற்படைத் தளம் அமைக்கும் முயற்சிகளை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும், கோரப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஒளிப்படத்துடன் கட்டப்பட்டுள்ள பதைதைகளில் இந்தியாவின் தலை…

  18. வொசிங்டன் பனிப்புயலினால் சிறிலங்காவுக்கு வந்த சோதனை அனைத்துலக நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்ரின் லகாடேயுடன் சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் நேற்று நடத்தவிருந்த பேச்சுக்கள் பிற்போடப்பட்டுள்ளன. வொசிங்டனில் வீசிய கடுமையான பனிப்புயலினால், இந்தப் பேச்சுக்கள் பிற்போடப்பட்டதாக, நிதியமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா குழுவில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறிலங்கா குழு அமெரிக்கா சென்றிருந்தது. நேற்று இந்தக் குழுவினர் அனைத்துலக நாணய நி…

  19. இருதரப்பு பாதுகாப்பு உடன்பாடு – அமெரிக்காவின் கோரிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு சிறிலங்காவுடன் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்வதற்கு, அமெரிக்கா முன்வைத்திருந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் இந்த உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு அமெரிக்கா விருப்பம் வெளியிட்டிருந்தது. இதற்காக சமர்ப்பித்திருந்த வரைவில், இருதரப்பு பாதுகாப்பு வசதிகளை உருவாக்குதல், பயிற்சிகள், விநியோகங்கள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த புரிந்துணர்வு உடன்பாட்டு வரைவு ஆவணத்தை சிறிலங்கா பாதுகாப்புச் …

    • 0 replies
    • 358 views
  20. ‘புதிய அரசமைப்பில் நாட்டைப் பிளவுபடுத்தும் அதிகாரங்கள் இருக்கின்றன’ - மகிந்த Editorial / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:23 Comments - 0 தற்போதைய சூழலில், புதிய அரசமைப்பொன்று தேவையில்லையெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அதனை நிறைவேற்ற, தாங்கள் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் நாட்டுக்கு இப்போது அது அவசியமில்லை என்றும், அதில் காணப்படும் அதிகாரங்கள், நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் தான் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். “புதிய அரசமைப்பில், வடக்கு - கிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்துக்கான முன்னுரிமை தொடர்ந்து பேணப்படும், ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்ற போதிலும், தமிழ்த் …

  21. ‘தமிழ் மக்களை ஒருபோதும் கைவிடேன்’ - ரணில் விக்கிரமசிங்க Editorial / 2019 ஜனவரி 15 செவ்வாய்க்கிழமை, மு.ப. 06:25 Comments - 0 இந்நாட்டில், மூவின மக்களும் சமவுரிமையுடன் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டுமெனில், தேசிய இனப்பிரச்சினைக்கு, அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் இதை, புதிய அரசமைப்பின் ஊடாகப் பெற்றுக்கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதுவே தனது பிரதான கடமையென்றும் கூறியுள்ளார். அத்துடன், தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும் தான் நன்றியுடையவனாகவே இருப்பதாகவும், தன்னை நம்பும் அவர்களை, தான் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். நாட்டின் சமகால அரசியல் நிலமைகள் தொடர்பில், சர்வதேச …

  22. வட மாகாணத்தின் மொழிப்பிரச்சனை தொடர்பில் ஆராய, ஆளுநரால் குழுவொன்று நியமனம்…. January 15, 2019 வடக்கு மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரொருவரின் தலைமையில் ஐவரடங்கிய விசேட குழுவொன்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் ஆலோசனையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் வடக்கு மாகாணத்தின் சகல அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்களில் மும்மொழிக் மொழிக்கொள்கையினை சரியான முறையில் அமுல்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக அந்த நடவடிக்கைகள் க…

  23. யாழ்.மாநகர மேயருக்கு, சி.ஐ.டி அழைப்பு! யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் விசாரணைகளுக்காக குற்றத்தடுப்பு பிரிவிற்கு நாளை காலை 11 மணிக்கு சமூகமளிக்குமாறு பொலிஸாரால் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கேபிள் கம்பங்களை அகற்றும் நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டிருந்தோம். சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சபையின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்ளாமல் அநாமதேயமான முறையில் சட்டவிரோத கேபிள் கம்பங்கள் நாட்டப்பட்டிருந்தன. …

  24. மன்னார் நகர மத்திய பகுதியில் அதிகம் மக்கள் நடமாடும் பகுதிகளில் இனம் தெரியாதசிலரால் மத நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் சிவசேனை என்று எழுதப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மும்மதத்தை சேர்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழும் நகரங்களில் மன்னார் மாவட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ் ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் நேற்று நள்ளிரவு மன்னார் நகரின் மத்திய பகுதிகளில் மன்னார் பொது விளையாட்டரங்கு என சில பகுதிகளில் "சிவ பூமி மதம் மாற்றிகள் நுழையாதீர்கள்" என மத ரீதியான அடையாளப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்த சுவரொட்டிகள் தொடர்பாகவோ ஒட்டியவர்கள் தொடர்பாகவோ இதுவரை எந்த தகவல்கலும் கிடைக்கவில்லை. ஆனாலும் மன்னார் மாவட்டம் அ…

  25. ஜெனீவா தீர்மானம் குறித்து சிறிசேன அதிரடி நடவடிக்கை? ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இலங்கை வழங்கிய இணை அணுசரணையை விலக்கிக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன மார்ச் மாதம் ஐநா அமர்வு இடம்பெறவுள்ள நிலையிலேயே சிறிசேன இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தனது இணை அனுசரனையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்ற நிலைப்பாட்டினை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கவேண்டாம் என அவ்வேளை ஐநாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.