ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143281 topics in this forum
-
வவுனியா கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்க முயற்சி! December 18, 2018 கல்லுமலை ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் பௌத்த விகாரை அமைக்கும் முயற்சி மேற்கொண்டமை காரணமாக அப்பிரதேசத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வவுனியா சமளங்குளம் கல்லுமலை விநாயகர் கோவிலில் பிரதேச மக்களுக்கும் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்குமிடையில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம் அப் பகுதி மக்களால் காலம் காலமாக வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலைளில் குறித்த ஆலயம் அமைந்துள்ள மலையில் தொல்பொருள் சின்னங்களான பண்டைய கற் தூண்கள், பாழடைந்த செங்கல் படிவங்கள், கட்டடங்கள் என்பன கொண்டுவரப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 856 views
-
-
சமஷ்டி யாப்பை நிறைவேற்ற பெரும்பான்மையில்லை : December 18, 2018 அரசியலமைப்பு முயற்சியை சமஷ்டி யாப்பு என்று சித்தரித்துள்ள பிவித்துரு ஹெல உறுமயகட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில அதனை நிறைவேற்றிக் கொள்ளும் பெரும்பான்மை அரசுக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். ரணில் தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர் முன்பு, நல்லாட்சிக்கு பெரும்பான்மை இருந்ததாகவும் அன்று தம்பக்கம் 54 பேர் மாத்திரம் இருந்ததாகவும் தற்போது 100 பேர் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போதைய அரசினால் சமஷ்டி அரசியல் யாப்பைக் கொண்டுவர முடியாது எனவும் தற்போது கூட்டமைப்புடன் தொடர்பு இல்லை என்பதை காண…
-
- 0 replies
- 357 views
-
-
அமைச்சரவையை இறுதிப்படுத்த தொடர்ந்தும் இழுபறி! – நாளை பதவியேற்கும் சாத்தியம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை தொடர்பாக கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர கட்சியின் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்பட்டது. குறிப்பாக முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் …
-
- 0 replies
- 247 views
-
-
மானிப்பாயில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 பேர் கைது மானிப்பாய் பிரதேசத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த 11 சந்தேகநபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து வான் உட்பட வாள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையிலான பொலிஸ் குழுவினரே இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணியளவில் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 11 சந்தேகநபர்களில் இரண்டு பேர் ஆவா குழுவின் முக்கியஸ்தர்களான போல் விக்டர் மற்றும் அஞ்சித் ஆகியோருடன் தொடர்புடையவர்கள் என்றும், ஏனைய 9 இளைஞர்களும் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த 11 பேரும்…
-
- 0 replies
- 378 views
-
-
அடேய் முட்டாளே! நீ நினைப்பதை செய்ய முடியாது: மகிந்தவை தரக்குறைவாக திட்டிய சரத் பொன்சேகா Report us Kamel 2 hours ago மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை , நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வார்த்கைளினால் கடுமையாக தாக்கியுள்ளார். காலி முகத் திடலில் இன்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், மஹிந்த ராஜபக்ச கூறுகின்றான் மக்களுக்காக தேர்தல் தேவை என்று, அடேய் முட்டாள், அடேய் பேயே, நீ நினைக்கும் போது தேர்தலை நடத்த முடியாது. உனக்குத் தேவையான நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது. கோதபாய ராஜபக…
-
- 1 reply
- 535 views
-
-
December 17, 2018 Facebook Twitter Google Plus Pinterest LinkedIn ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில…
-
- 4 replies
- 651 views
-
-
ரணில் பக்கம் தாவுகிறார் வியாழேந்திரன்! மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர். எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்…
-
- 4 replies
- 947 views
-
-
எனது கணவரை விடுதலை செய்யுங்கள் அவர்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை அப்பாவை கேட்டு எனது பிள்ளைகள் அழுகின்றனர் என வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். வவுணதீவு சம்பவத்தின் பின்னனியில் தனது கணவரான அஜந்தன் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் மேற்கண்டவறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் சோதனைச் சாவடியில் வைத்து இரு பொலீசார் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட எனது கணவர் அஜந்தன் அவர்களை தொடர்ந்தும் எந்தவித ஆதாரமும் இன்றி அடைத்துவைத்து விசாரணை செய்து வருகின்றனர். …
-
- 3 replies
- 1.1k views
-
-
உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த! Report us Nivetha 51 minutes ago இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் இன்றைய தினம் நடைபெற்று வரும் மாபெரும் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவு வழங்கியதற்காக அவர்களை பிரிவினைவாதிகள் என விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர். சதித்திட்டத்தின் மூலம் மஹிந்தவும் அவரது சகாக்களும் ஆட்சியை கைப்பற்றி நன்மையடைய முயற்சித்தனர். ஆனால் …
-
- 0 replies
- 524 views
-
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச தலையீடு அவசியம் என வட.மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வாரம் ஒரு கேள்வி பதில் பகுதிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ” போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தை ஏற்கனவே ஜனாதிபதியுடன் சேர்ந்து பலரும் கூறிவிட்டார்கள். ‘எமது படையினர் தப்பேதும் செய்யவில்லை. அவர்கள் எந்த வித நீதிமுறைத் தண்டனைக்கும் உள்ளாவதற்கு நாங்கள் விடமாட்டோம்’ என்று ஜனாதிபதியே கூறியுள்ளார். அதன் அர்த்தம் என்ன? ‘எமது படையினர்’ என்பதைக் கவனிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் பலர் படையினருள் உ…
-
- 2 replies
- 1.3k views
-
-
(நா.தினூஷா) நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக இரத்து செய்யவும், அரசியலமைப்பில் காணப்படுகின்ற குறைபாடுகளை திருத்திக் கொள்ளத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவினை மக்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதே நிலையான ஜனநாயகத்தை செயற்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார். ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுத்த நீதிக்கான போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய தேசிய முன்னணியாக இதுரை காலமும் செயற்பட்ட நாங்கள் எதிர்கால சவால்களை வெற்றிக் கொள்ள ஜனநாயக தேசிய முன்னணி…
-
- 0 replies
- 413 views
-
-
வடகிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகளில் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய செயற்பாடுகள் மேலும் தொடரப்படுவதை அனுமதிக்க முடியாது என்பதனால் அத்தகைய காணிகளை விடுவிப்பதற்கான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்செயலணியின் இதற்கு முன்னரான நான்கு அமர்வுகளின்போது வட, கிழக்கு மாகாணங்…
-
- 0 replies
- 772 views
-
-
எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியைக் கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய மண்டபத்தில் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் தலைமையில் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்து வரும் கற்குவாரி பிரச்சனை தொடர்பாக இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுடைய அபிலாசைகளுக்கு ஏற்றவகையில் செயற்படும் ஒர் கட்சி. அந்த வகையில் நாம் வெறும் கையோடு அல்லது வெறுமையான ஒர் ஆதரவை தெரிவித்திருக்க மாட்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். …
-
- 5 replies
- 1.2k views
-
-
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டதன் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களிடம் ஆற்றிய உரை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அந்தவகையில் கிராமங்களில் மங்கள நிகழ்வுகள் ஏற்பாடு பண்ணும் போது, இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசுவார்கள். தனக்கு தெரிந்தவரை மணமகனை சபைக்கு அழைத்து மணமகன் தரப்பில் பேசுபவர் மணமகனை விமர்சித்து பேசுவதைப் போன்றே நேற்று ஜனாதிபதியின் உரை அமைந்திருந்ததாக நளின் ப…
-
- 0 replies
- 300 views
-
-
December 17, 2018 இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு – 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்…
-
- 0 replies
- 344 views
-
-
December 17, 2018 மஹிந்த ராஜபக்ஸவால் இதுவரை எதையும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொள்வதற்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பம் தான் கடந்த 50 நாள்கள் என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு- காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சம்பிக்க, “அப்பச்சிக்கும் முடியாது. ராஜபக்ஷவுக்கும் முடியாது என்பதை, கடந்த 50 நாள்களாக நாம் காட்டினோம்” என குறிப்பிட்டுள்ளார். இன்றைய நிலையில், நாடாளுமன்றத்தில் பலமிக்க அரசாங்கத்தை அமைப்…
-
- 0 replies
- 367 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகாரணமாக இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றம் தேவையற்றதாக மாற்றியுள்ளது என தமிழ்த்தேசியக் மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். இன்று (17) கிளிநொச்சியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான தங்கவேல் ஜேகதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்ப…
-
- 0 replies
- 338 views
-
-
கரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும் அமரிக்காவின் CIA மற்றும் பிரித்தானியாவின் MI6 போன்ற புலனாய்வு துறைகளுடன் மோதினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாடுகளின் தூதுவர்கள் தற்போது சுகமான நித்திரையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்தமை தாய…
-
- 5 replies
- 1.3k views
-
-
பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற சாதாரண பிரச்சினைகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்ததாகவும், அதனை தீர்ப்பதற்கு தாம் உறுதியளித்துள்ளதாகவும், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். ஆனால், கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கூட்டமைப்புடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை. பொருளாதார அபிவிருத்தி, காணி உரிமை போன்ற விடயங்களையே கூட்டமைப்பினர் கோரினர். பெரிய விடயமொன்றையும் அவர்கள் கேட்கவில்லை. ஜனநாயக உரிமையை பாதுகாக்குமாறு கோரினார். அவர்கள் முன்வைத்தது…
-
- 1 reply
- 1.3k views
-
-
அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார் பிரதமர் ரணில் Editorial / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, மு.ப. 11:10 Comments - 0 இலங்கையின் பிரதமராக, 5ஆவது முறையாகவும் நேற்றுப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, தான் பதவியேற்ற சில மணித்தியாலங்களில் அலரி மாளிகையிலிருந்து வெளியேறி, கொழும்பு - 07இல் அமைந்துள்ள தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். மேலும், பிரதமரின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க நேற்றுப் பகல், அலரி மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்து தங்கியிரு…
-
- 2 replies
- 710 views
-
-
தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித் இன பிரச்சினையாலும் ஆயுதப் போராட்டத்தினாலும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீர்வதுடன், அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சர்வாதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயக போராட்டமானது நீதித்துறையினூடாக இன்று வெற்றி பெற்றுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் நன்றித் தெரிவிக்கின்றேன். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக ப…
-
- 4 replies
- 935 views
-
-
சாதாரண தர பரீட்சையில் மோசடி – மூவர் கைது கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் பரீட்சார்த்திகளுக்கு பதிலாக தோற்றிய 3 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கணிதப் பாட பரீட்சைக்காக, உரிய பரீட்சாத்திகளுக்கு பதிலாக வேறு நபர்கள் தோற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிபை்படுத்தவுள்ளனர். டிசம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர பரீட்சைகள், நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://ath…
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது! மைத்திரி அதிரடி Report us Vethu 5 hours ago தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பத்தில் சிக்கல் நிலை உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாயின், தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரையும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். குற்றமிழைத்த விடுதலைப் புலிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர்களில் பலர் வெளிநாடுகளில் வாழுகின்றனர். நாட்டுக்காக போராடிய இராணுவத்தினர் மாத்திரம் ஏன் குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்? சிறையில…
-
- 0 replies
- 465 views
-
-
ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர் என்பதாலே பிரதமர் பதவியை வழங்கினேன் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்கியது பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கும் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்கும் தலைவர் என்ற வகையிலேயேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய பிரதமர் மற்றும் நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டாலும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்…
-
- 3 replies
- 623 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ .கஜேந்திரன் அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில்...
-
- 0 replies
- 274 views
-