Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இரண்டாவது முறையாகவும் இரத்தானது சம்பந்தன்- விக்னேஸ்வரன் சந்திப்பு! October 2, 2018 வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு இரண்டாவது முறையாகவும் இரத்தாகியுள்ளது. இது குறித்த நம்பகரமான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்த சந்திப்பு முயற்சி, பின்னர் இரத்தான சம்பவம் நடந்தது. கடந்த மாத இறுதியில் 23ம் திகதி வரையும்- கிட்டத்தட்ட ஒரு வாரமாக கொழும்பில் தங்கியிருந்தார் முதலமைச்சர். அந்த சமயத்தில் ஒரு இரவு, சட்டத்தரணி கனகஈஸ்வரனை தொலைபேசியில் அழைத்த சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதை பற்றி பேசியிருக்கிறார். விக்னேஸ்வரன் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்…

  2. முதலமைச்சர் விக்னேஸ்வரன் ’ஒன்றில் வெற்றி; ஒன்றில் தோல்வி’ Editorial / 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, மு.ப. 05:29 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் செல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானம் தொடர்பில், அம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவரால் எழுப்பட்ட வினா ஒன்றுக்கு…

  3. சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து விபத்து – பலர் காயம் October 2, 2018 பூநகரி, சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று நண்பகல் யாழில் இருந்து முழங்காவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து மாடு ஒன்று பாதையின் குறுக்கே வந்ததனால் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் வண்டி மூலம் பூநகரி மற்றும் யாழ் போதான வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விபத்து குறித்த மேலதிக விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/98016/

  4. மகசீன் தமிழ் அரசியல் கைதிகள் 42 பேர் நாளை முதல் உண்ணாவிரதம் October 2, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அநுராதபுரம் சிறையில் பொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வு எனும் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக கொழும்பு மகசீன் சிறைச்சாலை கைதிகளும் நாளை முதல் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். மகசீன் சிறைச்சாலையில் உள்ள 42 அரசியல் கைதிகளும் நாளை மூன்றாம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுப்படவுள்ளனர். இதற்கான கடிதத்தினை சிறைச்சாலை அத்தியட்சரிடம் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டமானது, அனைத்து அரசிய…

  5. காவல்துறையினரால் கொல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் – 42 சாட்சிகள் இணைப்பு October 2, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகினர். எனினும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின்…

  6. ஒரு பக்கம் தொல்லியல் திணைக்களம், மறுபக்கம் வனவளத் திணைக்களம்- முல்லைத்தீவில் மக்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி அபகரிப்பு! October 2, 2018 குளோபல் தமிழ் செய்தியாளர் முல்­லைத்­தீ­வு மாவட்டத்தில் வன­வ­ளத் திணைக்­க­ளத்தால் காணி அபகரிக்கப்படும் நிலமை தொடர்வதாகவும் பொதுமக்களு்ககுச் சொந்தமான 100 ஏக்கரை் நிலப் பகுதி அபகரிக்கப்பட்டு, எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்­லைத்­தீவு, செம்­மலை புளி­ய­மு­னைப் பகு­தி­யில் பொதுமக்களின் தோட்டக் காணிகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  7. வவுனியா செட்டிகுளம் பெரியகட்டு பகுதியிலேயே காட்டு யானை ஒன்றின் உடல் நேற்று மீட்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டுப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில், யானையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் சென்று பார்த்துள்ளனர். இதன்போது வெடிபட்ட நிலையில் காயமடைந்து யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளது. பின்னர் பொதுமக்களால் பொலிஸார், மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குத் தெரியப்படுத்தினர். காயமடைந்த யானைக்கு வைத்தியரினால் சிகிச்சைகள் வழங்கபட்ட நிலையிலும், யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. https://newuthayan.com/story/14/யானையின்-உடல்-மீட்பு.html

    • 3 replies
    • 799 views
  8. ’பொதுமன்னிப்போ அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலோ விடுதலை வேண்டும்’ பா.நிரோஸ் பொதுமன்னிப்பு அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலாவது, தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள அரசியல் கைதிகள், தங்களது விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இன்றைய பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்காவிட்டால், புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்படப்போவதாக எச்சரித்துள்ளனர். வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் சிலர், தமிழ்மிரருக்கு பிரத்தியேகமாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர். இதன்போது மேலும் தெரிவித்த அவர்கள…

    • 0 replies
    • 310 views
  9. கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தை பாதுகாப்பதற்கும் அதனை அழகுப்படுத்துவதற்குமான விசேட கூட்டம் ஒன்றை விரைவில் கூட்டவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி குளத்தின் நீரேந்து பகுதியான அதன் பின்புறம் வசதி படைத்தவர்களாலும் செல்வாக்கு மிக்கவர்களாலும் அத்துமீறி நாளாந்தம் பிடிக்கப்பட்டு வருகின்றமைக்கு எதிராக தங்களால் சட்டரீதியான நடவடிக்கைக்கு செல்லமுடியாமைக்கு குறித்த பகுதி தங்களுடைய சொத்து என்பதற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை. அதற்கான ஆவணங்களை கோரி கிளிநொச்சி மாவட்ட அரச அதிபருக்கு 16-04-2018 திகதியிடப்பட்ட கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந.சுதாக…

  10. கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 க்கு மேற்பட்ட பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன. இதில் பல முக்கியமான வீதிகளாக நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன. இந்த பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் இடம்பெற்று பலரும் உயிரிழந்துள்ளனர். எனவே இப் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளின் நிலைமைகளை கருத்தில் எடுத்து பாதுகாப்பான புகையிரத கடவைகளாக மாற்றுவதற்கு உரிய பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கோருகின்றனர். …

  11. வாழைச்சேனை பிரதேச சபையை TMVP ஒட்டுகுழு கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் இவையாகும் தமிழ் பிரதேசங்களில் எந்தவித வீதி அபிவிருத்தி பணிகளும் நடைபெறவில்லை ஆனால் தவிசாளரல் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி பணிகள் விபரம் கீழே 1. அல்ஹச் வீதி அபிவிருத்தி _ 1522100.61 ரூபா 2.தாஹ்மஹால் வீதி பிறைந்துரை சேனலை _ 1320443.51 ரூபா 3.ஹிமாம் வீதி வாழைச்சேனை _ 1327998.72.ரூபா 4.வை.அகமட் வீதி வாழைச்சேனை _1614574.58 ரூபா 5.அகமட் வீதி வாழைச்சேனை _1758839.90 ரூபா 6.சலீம் வீதி வாழைச்சேனை செம்மண் ஒடை _ 895907 .66 ரூபா 7. கோறளைப்பற்று மத்தி மீன்பிடி துறைமுக அபிவிருத்தி _ 3917475.ரூபா இதுதானா அபிவிருத்தி தமிழ் பிரதேசங்களில் உள்ள எந்த வீதி…

    • 0 replies
    • 399 views
  12. பலாலி விமான நிலைய அபிவிருத்தித் திட்டம் – இன்று அமைச்சரவையில் கார்வண்ணன்Oct 02, 2018 | 3:39 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார். போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு, சுற்றுலா அமைச்சு, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து, 2 பில்லியன் ரூபா செலவில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக, அபிவிருத்தி செய்வதற்கான இந்த திட்டத்தை, முன்வைக்கவுள்ளன என்றும் அவர் …

    • 1 reply
    • 378 views
  13. ’மஹிந்தவுக்கும் புனர்வாழ்வு தேவை’ 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, நாட்டில் இனவாதத்தை தூண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், நாடாளுமன்ற உறுப்பினர் 225 பேருக்குமே புனர்வாழ்வு தேவைப்படுவதாக, அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். வெலிக்கடை புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளைச் சந்தித்த பின்னர் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அருட்தந்தை மா.சத்திவேல் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், அநுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்து வருவதாகவும்…

    • 1 reply
    • 1.3k views
  14. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய சத்தியாகிரகப் போராட்டத்தை புறக்கணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் காலை 7 மணிமுதல் 5 மணிவரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போராட்டத்தில் அர…

  15. யுத்தத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லை: மகேஸ் சேனாநாயக்க யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை நினைவுகூருவதில் பிரச்சினை இல்லையென இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தமிழீழ விடுதலைப்புலிகளின் மறைவுகளை நினைவுகூர்ந்து நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வடக்கில் யுத்தம் நிறைவடைந்து மக்கள் சுமூகமாக வாழ ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரவேண்டியது அவசியமான …

  16. இராணுவத்துக்கு அதிகாரத்தை வழங்குவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல: ஜீ.எல்.பீரிஸ் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க கோருவது போன்று பொலிஸ் அதிகாரத்தை இராணுவத்தினருக்கு வழங்க முடியாதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அது ஜனநாயகத்திற்கு ஏற்புடைய செயற்பாடு அல்லவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு, பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நாட்டில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்தக்கூடிய முழு பொறுப்பும் பொலிஸ் அதிகாரிகளை சார்ந்தது. அந்த அதிகாரத்தை இராணுவத்திற்க…

  17. மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தொழில் பயிற்சிக்கு 200 பேர் தெரிவு : October 2, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் 25,000 தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப ஆராய்சி திறன்கள் அபிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொழில் பயிற்சி நெறிகளில் மாணவர்களை தெரிவு செய்து அவர்களை பயிற்சி நெறிகளில் இணைக்கும் ஆரம்ப நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(1) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம் பெற்றது. மோட்டார் வாகன துறை, சுற்றுலாதுறை ,சுகாதாரதுறை , கட்டுமாணத் துறை என பல் துறைகளில் பயிற்சிகளை பெற தகுதியுள்ள மாணவர்களை நேர்முக தேர்வு முலம் தெரிவு செய்து அவர்களுக்குறிய தகுதிகளி…

  18. மணல் கடத்திச் செல்கின்ற டிப்பர் வாகனங்கள் எழுதுமட்டுவாழ் கிராமத்தின் உள்வீதிகளில் செல்வதால் தாம் ஆபத்தை எதிர்கொள்வதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் எழுதுமட்டுவாழ் பொது நோக்கு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். ஏ9 பிரதான வீதியின் எழுதுமட்டுவாழ் சந்தியில் கடத்தல்களை தடுக்க பொலிஸ் காவலரண் ஒன்றை அமைத்துள்ளனர். இதனால் அனுமதியின்றி மணல் கடத்தி வருகின்ற டிப்பர் வாகனங்கள் கிராமத்தின் உள்வீதிகளூடாக வேகமாக செல்கின்றனர். இதன்காரணமாக கால்நடைகள் வாகனங்களில் மோதி இறப்பதோடு மக்களும் நடமாட அச்சப்படுகின்றனர். இது தொடர்பாக டிப்பர் சாரதிகளிடம் கேட்க முற்படுகின்றபோது அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள்…

  19. அமெரிக்க ஜனாதிபதியால் நடுவீதியில் நின்ற மைத்திரி! நியூயோர்கில் நடந்த சம்பவம் Report us Vethu 12 hours ago அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐ.நா பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி தனது குழுவினருடன் நியூயோர்க் சென்றிருந்தார். இதன்போது ஐ.நா தலைமையகத்தில் போதைப்பொருளில் இருந்து உலகை காப்பாற்றிக் கொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார். மாநாட்டின் பின்னர் கனேடிய பி…

  20. யாழ்ப்பாண மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம் பதியரின் எண்ணிக்கை அதிகரி த்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட சமூகப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர்தலைமையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த சிறுவர் பாதுகாப்பு அலுவலர்கள், சிறுவர் நன்நடத்தை அலுவலர்கள், குடும்பநல உத்தியோக த்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோக த்தர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது பிரதேச செயலக ரீதியாக சிறுவர் மற…

  21. தமிழ் மொழியின் தொன்மையையும் செழுமையையும் கண்டு பயந்ததாலேயே இரண்டாம்தர மொழியாக்குவதற்கு முயற்சிக்கின்றனர் October 1, 2018 1 Min Read தமிழ் மொழியின் தொன்மையையும் அதன் செழுமையையும் எதிரிகள் பார்த்து பயந்ததாலேயே தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கத்தினால் வருடம் தோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் வட மாகாண பண்பாட்டுப்பெருவிழா நேற்று கற்சிலைமடு பண்டாரவன்னியன் வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போத…

  22. ஆவா குழுவின் பகிரங்க எச்சரிக்கை! வீதிகளில் துண்டுப்பிரசுரங்கள் Report us Theesan 2 hours ago வவுனியாவில் இன்று காலை முதல் பல வீதிகளில் ஆவா குழுவினரின் பொது மக்களுக்கான பகிரங்க எச்சரிக்கை என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா - குருமன்காடு, வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி, கண்டி வீதிகளில் வீசப்பட்ட நிலையில் துண்டுப்பிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குருமன்காட்டு பகுதிகளில் வியாபார நிலையங்களுக்கு முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை சோதனையிட்டுள்ளனர். …

  23. மன்னார் மாவட்டத்தில் இடம் பெறவுள்ள தேசிய சுற்றாடல் தின நிகழ்லிர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ள நிலையில் குறித்த நிகழ்வக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார். -மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை(1) காலை ; இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்,,, தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேசிய ரீதியில் மன்னாரில் இடம் பெறவுள்ளது.குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் வருகைய…

  24. அனைத்துலக விசாரணையில் இருந்து மகிந்தவைக் காப்பாற்றினோம் – மங்கள சமரவீர கி.தவசீலன்Oct 01, 2018 | 4:47 by in செய்திகள் அனைத்துலக குற்றவாளியாவதில் இருந்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காப்பாற்றினார், என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவினால் இப்போது, அனைத்துலக சமூகத்தின் முன் சென்று தற்போதைய அரசாங்கத்தை விமர்சிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது என்றால், அதற்காக தற்போதைய அரசாங்கத்துக்கே அவர் நன்றி கூற கடமைப்பட்டவர். 2014 டிசெம்பரில் எமது நாடு எப்படி இருந்தது? உலகப் படத்தில் எமது நாடு இ…

  25. பொறுப்புக்கூறல் என்பதும், உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியமானது-சுமந்திரன் - சமகளம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாகக் கணித்து, பொதுமன்னிப்பு வழங்குகின்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால், கூட்டமைப்பு அதை நிராகரிக்கும். பொதுமன்னிப்பு என்பது, விசாரணை இன்றி, அனைவரையும் விடுவிப்பது. அதை நாம் கோரவில்லை. நாம் கேட்டது, நீண்டகால அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பதையேயாகும் என தெரிவித்துள்ளார். அதேபோல், பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான திட்டத்தை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜனாதிபதி சிறிசேன முன்வைப்பார் என்ற எதிர்பார்ப்புகள் காணப்பட்ட நிலையில், அவ்வாறு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.