ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143195 topics in this forum
-
'அரசியல்வாதிகளின் பெயர்களை வெளிப்படுத்த மாட்டேன்' ப. பிறின்சியா டிக்சி 'நிதி மோசடி தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள அரசியல்வாதிகளின் பெயர்களை நான் வெளிப்படுத்த மாட்டேன். ஆனால், விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பில் தாமதம் இருக்காது. சட்டம் தனது கடமையைச் செய்யும்' என, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமன்ன, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார். குறித்த ஆணைக்குழுவின் அனுசரணையுடன், 'தூய ஆட்சி' எனும் கருப்பொருளில் எதிர்வரும் 09ஆம் திகதி, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் மாநாடொன்று நடைபெறவுள்ளது. இம் மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விள…
-
- 0 replies
- 219 views
-
-
'அரசே! கண்டிக்கிறோம் உம்மை கண்டிக்கிறோம்' (பழுலுல்லாஹ் பர்ஹான்) இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கவனயீர்ப்புப் போராட்டம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவின் அருகாமையில் இடம்பெற்றது. தாயக மக்களின் விடுதலையை வலியுறுத்தியும் மற்றும் காணாமல் போனோரை கண்டறியும் நோக்கோடும் மேற்கொள்ளப்பட்ட குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் காணாமல் போனோரின் குடும்ப உறவினர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்திய வண்ணமும் “எனது பிள்ளை எனக்கு வேண்டும்”, “அரசே! எனது கணவரை விடுதலை செய்” “தமிழர்களுக்கு ஒரு நியாயமா? மற்றவர்களுக்கு வேறு நியாயமா?” “அரசே…
-
- 0 replies
- 577 views
-
-
சிங்கள - பௌத்தப் பேரினவாத அரசுகள், தமிழீழ மக்களின் தேசிய மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஊடாகத் தீர்த்து வைக்காது| - என்ற கருத்தை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தியே வந்துள்ளோம். இக்கருத்தைப் பல தளங்களில், பல கோணங்களில் ஏற்கனவே நாம் தர்க்கித்து வந்தும் உள்ளோம். அவற்றில் ஒரு கருத்தை இன்று வேறு ஒரு பரிமாணத்தில் வைத்துச் சிந்திக்க................. தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_5818.html
-
- 0 replies
- 1.2k views
-
-
Stop the war in Srilanka என்று அச்சிடப்பட்ட கருப்பு வண்ண 'டி.சர்ட்' அணிந்து 'ஈழ மக்கள் தோழமைக் குரல்' அமைப்பினைச் சேர்ந்த தோழர்களின் பயணம் பிப்ரவரி பத்தில் சென்னையில் தொடங்கி டில்லி மண்டி ஹவுஸ் பகுதியை பிப்ரவரி பனிரெண்டில் அடைந்தது. ஒவ்வொருவரின் கைகளும் சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஒவியர்கள் இராப் பகலாய் வரைந்து தந்த நூற்றுக்கணக்கான கைப்பதாகைகளை ஏந்தியிருந்தன. அவைகளில் போர் நிறுத்தம், ஈழ மக்களின் பாதுகாப்பு, வாழ்வுரிமை, தமிழ் மீனவர்களின் கோரிக்கைகள், அகதிகளின் மாண்புரிமை ஆகிய முழக்கங்கள் அடங்கியிருந்தன. மண்டி ஹவுஸ் இருக்கும் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. பறை காய்ச்ச தீ மூட்டப்பட்டது. கொழுந்துவிட்டு எரிகின்ற தீயில் காய்ச்சிய பறைகளை புத்தர் கலைக்குழுவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
'அலிசியா' கப்பல் தமிழ் அகதிகள் பயங்கரவாதிகளாம்: அவர்களை நியூஸிலாந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதெனவும் சிறிலங்கா தரப்பு தெரிவிப்பு [Tuesday, 2011-07-12 16:18:54] நியூஸிலாந்துக்கு செல்லும் வழியில் இந்தோனேசியா கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட புகலிடம் கோருவோர் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று இலங்கை தெரிவித்துள்ளது. 85 இலங்கையர்கள் கப்பல் ஒன்றின் மூலம் நியூஸிலாந்துக்கு பயணித்த வேளையில் கடந்த சனிக்கிழமையன்று இந்தோனிசிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டனர். இந்தக்கப்பலில் 6 பெண்களும் 5 சிறுவர்களும் உள்ளடங்கியுள்ளனர் குறித்த கப்பலுடன் அவர்கள் தற்போது, இந்தோனேசிய பின்டான் தீவுக்கடலி;ல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் குறித்த புகலிடம் கோருவோரை நியூஸிலாந்து ஏற்றுக்…
-
- 1 reply
- 518 views
-
-
இலங்கை மீது மற்றுமொரு தீர்மானம் கொண்டுவரும் அமெரிக்காவின் திட்டத்துக்கு பதிலளிக்கும் வகையில் 'அளவுக்கு அதிகமான அழுத்தம்' ஒருபோதும் ஆக்கபூர்வமாக அமையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான அரசாங்க அணியினர் நேற்று மாலை இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க தூதுக்குழுவினரை சந்தித்தனர். இவர்கள் பிரதானமாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவது தொடர்பான விடயங்களை பேசினர். இந்த கூட்டத்தின் பின், பேசிய அமைச்சர் பீரிஸ், தீர்மானத்தின் மேல் தீர்மானம் கொண்டுவருதல், இலங்கையின் நிலைமையை கையாளும் முறையானது என்றார். சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு நேரம், சுதந்திரம் என்பன தேவையென கூறிய அவர் எல்லாவற்றையும் விட நாட்டின் கௌரவம் மு…
-
- 2 replies
- 542 views
-
-
'அளுகோசு' அல்ல 'உயிர் எடுப்பவர்' வெள்ளிக்கிழமை, 13 ஜூன் 2014 09:24 இதுவரையிலும் அளுகோசு என்று பயன்படுத்தப்பட்ட பதவிக்கான பெயராது உயர் எடுப்பவர் என்று மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியை தூக்கிலிட்டு அந்த மரணத்தண்டனையை நிறைவேற்றுகின்றவரை அளுகோசு என்றே அழைத்தனர். அளுகோசு என்ற பெயருக்கு பதிலாக புதிய பெயர்களை பிரேரிக்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களம் கோரியிருந்தது. அதனடிப்படையில் மக்களிடமிருந்து 200 பெயர்கள் கிடைக்கப்பெற்றன. அந்த பெயர்கள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் கண்காணிப்பின் கீழ் நியமிக்கப்பட்ட குழுவினாலேயே இந்த பெயர் தெரிவு செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 487 views
-
-
'க்ளீன் ஸ்ரீலங்கா' நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கடற்கரையினை சுத்தப்படுத்தல் நிகழ்வானது இன்றைய தினம் (23.02.2025) காலை 7.30 மணி முதல் நண்பகல் 11.30 மணிவரை அந்தந்த பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றது. அந்தவகையில் மாவட்ட நிகழ்வானது பருத்தித்துறை பிரதேதச செயலக பிரிவில் உள்ள சக்கோட்டை கடற்கரைப்பகுதியின் 2 கி.மீ பகுதியை சுத்தம் செய்யும் நிகழ்வு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினரகளாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கருணநாதன் இளங்குமரன் அவர்கள் கலந்து கொண்டார்கள். மேலும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடமாகாணப் கடற்படைகளின் பிரதித்…
-
- 1 reply
- 432 views
- 1 follower
-
-
அதிகாரத்தைப் பகிர்வதாக சர்வதேசத்திற்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை காண்பித்துவிட்டு அதனை நடைமுறைப் படுத்தாது விடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது. வடக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கம் போடும் முட்டுக் கட்டைகள் இதனையே காட்டுகின்றன என சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கில் அதிபாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் அமைந்துள்ள ஆலயங்கள், வீடுகள் இடிக்கப்படுகின்றன. இதனை பார்வையிடச் சென்ற போது என்னை இராணுவத்தினர் திருப்பி அனுப் பிவிட்டனர். இந்த நிலை தொடர்ந்தால் இராணுவத்தினரின் தடையை மீறி நான் அப்பகுதிக்குச் செல்வேன் அப்போது இராணுவத்தினர் என்மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் அந்த மண்ணில் விழுந்து உயிர் விடவும் நான் தயாராக உள்ளேன். அத்தகை…
-
- 0 replies
- 455 views
-
-
கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவரே, ''பெஷன் பக்'' என்னும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனத்தின் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாகத் தூண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள், இது குறித்து ஆராய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியை கேட்டிருக்கிறார். ஒரு சிங்கள பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அப்படி அவர் தூண்டியதாக ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார். கோட்டாபாய மீது விமர்சனம் …
-
- 17 replies
- 1.4k views
-
-
[size=5]'அவசரகாலசட்டம் இல்லாதது தான் பிரச்சனை': கோட்டா[/size] [size=4]இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.[/size] [size=4]குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்துவருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார். குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் இன்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப்…
-
- 2 replies
- 581 views
-
-
மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் ஒன்றினை முன்னெடுத்து சென்றமை தொடர்பில் அவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்தின் தலைவர் நிசங்க யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்செய்யுமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவே அவர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ஒன்றினை முன்னெடுத்து சென்றதன் ஊடாக அரசாங்கத்துக்கு 1140 கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பிலேயே இவர்கள் 8 ப…
-
- 1 reply
- 1k views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 13:08 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்] "தமிழ் மக்களின் அவலங்களை சிறிலங்கா அரச தலைவர் கேக் வெட்டி கொண்டாடி வரும் நிலையில் தமிழர்கள் தமது அவலங்களை புறந்தள்ள ஓரணியில் போராடுவதை தவிர வேறு வழியில்லை." கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மாவீரர்களான மேஐர் வினோதரன், லெப். பிரியன் ஆகியோரின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: "உலகில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் மக்களுடைய முழுமையான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்பவர்களாக போராளிகள் என்ற வரலாறு இல்லை. உலகில் நடைபெற்ற பல விடுதலைப் போராட்டங்களில் உச்ச நெருக்கடிகள் ஏற்படுக…
-
- 7 replies
- 1.6k views
-
-
'அவுஸ்திரேலியாவில் படகு அகதிகளும் விமான அகதிகள் போன்று நடத்தப்படுவர்' அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் 'பிறிட்ஜிங் விஸா' வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்…
-
- 0 replies
- 667 views
-
-
'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் நன்மைகளை இழந்தவர்கள் மற்றும் அநீதி இழைக்கப்பட்டவர்கள் அதிகம் காணப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடம் சம்பந்தப்பட்ட அமைச்சு மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்காக அமைச்சர் விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்னவினால் பத்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உரிய விசாரணைகளை நடத…
-
- 0 replies
- 231 views
- 1 follower
-
-
'ஆக்கப்பூர்வமாகச் செயற்படுங்கள்' -எஸ்.என்.நிபோஜன் “போராட்டங்களில் ஈடுபட்டுவரும் மக்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதை விடுத்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்” என, தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். கிளிநொச்சி யில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்போராட்டமும் பரவிபாஞ்சான் மக்களின் காணி மீட்புக்கான தொடர் பேராட்டமும், இரவு பகலாகத் தொடர்கிறது. இன்று மூன்றாவது நாளாகவும், இரண்டு போராட்டங்களிலும் ஈடுப்பட்டுள்ள அம்மக்கள் கூறியதாவது, “நாங்கள், மக்கள் பிரதிநித…
-
- 0 replies
- 219 views
-
-
'ஆக்கிரமிப்பு இராணுவமே மாவீரர் துயிலும் இல்லங்களை சிதைக்காதே” எனத் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் By DIGITAL DESK 2 04 JAN, 2023 | 05:32 PM மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் புதன்கிழைமை (ஜன.04) காலை 10 மணியளவில் தரவையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது. தொடர்சியாக கார்த்திகை 27ஆம் நாளில் ம…
-
- 1 reply
- 729 views
- 1 follower
-
-
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை பிணையெடுப்பதற்கு எவரும் செல்லாத காரணத்தால் அவரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (02.09.14) உத்தரவிட்டது. கமலேந்திரனை 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி அனுமதியளித்தார். வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிமன்ற அனுமதியில…
-
- 2 replies
- 646 views
-
-
-சுமித்தி தங்கராசா சிவில் உடையில் ஆலயத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவர் மேலாடையை கழற்றாமல் கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமன்றி தான் பாதுகாப்பு அதிகாரியென்றும் மேலாடையை கழற்றமாட்டேன் என்றும் அடம்பிடித்துள்ளார். நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பூஜையிலேயே குறித்த பொலிஸ் அதிகாரி மேலாடையை கழற்றாமல் கலந்துக்கொண்டுள்ளார். குறித்த கோவிலுக்கு பூஜைக்கு செல்கின்ற ஆண்கள் மேலாடையை கழற்றிவிட்டே ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். எனினும், குறித்த அதிகாரி அவ்வாறு செய்யவில்லை. அவரின் நடவடிக்கை தொடர்பில் ஆலயத்தில் இருந்த ஏனைய பக்தர்கள் அவருக்கு எடுத்துரைத்த போதிலும் குறித்த அதிகாரி அவர்களின் பேச்சை கணக்கில் எடுக்கவில்லை, குறித்த அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் அங்கிருந்த …
-
- 3 replies
- 764 views
-
-
'ஆட்சியாளர்களிடம் மனமாற்றம் தேவை'- மன்னார் ஆயர் இலங்கையில் போரினால் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை ஆட்சியாளர்கள் உணர்ந்து, நீதியான அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க முன்வந்தாலே நாட்டில் நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையும் ஐக்கியத்தையும் எதிர்பார்க்க முடியும் என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்துடன் இந்தப் பிரச்சனையை அணுகி, மக்கள் சுதந்திரமாக நடமாடும் சூழலை உறுதிப்படுத்த நாட்டின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆயர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அருட்தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் அருட் தந்தை ஜிம் பிரவுண் காணாமல் போய் 5 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில், அவரது நினைவாக மன…
-
- 0 replies
- 426 views
-
-
இலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான ஏசிஎப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள் 17 பேர் 2006ல் படுகொலை செய்யப்பட்டது குறித்து, இலங்கை பாதுகாப்புப் படைகள் மீது குற்றம் சுமத்தியிருக்கும் அந்த நிறுவனம், இந்த விவகாரத்தில் தமக்குக் கிடைத்த சாட்சியங்களை, சர்வதேச விசாரணை நடந்தால் , கையளிக்கத் தயாராக இருப்பதாகக் கூறுகிறது. ஏசிப் நிறுவனத்தின் உள்ளூர் ஊழியர்கள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்டு 4ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழங்காலிடப்பட்டு விசாரணையின்றி சுடப்பட்டனர் , இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின் பாதுகாப்புப் படையினர்தான் என்பதற்கு தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த நிறுவனம் கூறியிருந்தது. இந்த அறிக்கை பற்றி ப…
-
- 0 replies
- 515 views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இயங்கும் பிரபல புத்தக விற்பனை நிலையமான 'பூபாலசிங்கம்' புத்தகசாலை உரிமையாளர் சிறீதரசிங் நேற்று மாலை பயங்கரவாத தடுப்பு காவல்துறையால் கொழும்பில் கைது செய்யப்பட்டு கல்கிசை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் நடத்திய வான் தாக்குதல் தொடர்பான கட்டுரையும் அது தொடர்பான படங்களும் பிரசுரிக்கப்பட்டிருந்த 'ஆனந்த விகடன்' வார இதழை விற்பனை செய்தமை தொடர்பாகவே சிறீதரசிங் கைது செய்யப்பட்டதாக உறவினர்கள் பிரதியமைச்சர் இராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளனர். 'ஆனந்த விகடன்' வார இதழை யாழ்ப்பாணத்தில் உள்ள 'பூபாலசிங்கம்' புத்தகசாலைக்கும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கும் அனுப்புவதற்கான பொதியை இர…
-
- 2 replies
- 1.1k views
-
-
கடந்த ஏப்ரல்; 23 ஆம் நாள் முகமாலை முன்னரங்கில் பாரிய படுதோல்வியைச் சந்தித்த பின்னர், அதே போரரங்கில் மீண்டும் ஒரு பெருமெடுப்பிலான தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான ஆயத்தங்களில் சிறிலங்கா படைத்துறை இறங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. இழப்பு, அவமானம், உளச்சோர்வு என்பவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் படைச் சிப்பாய்களை உற்சாகப்படுத்தும் விதமாக .................. தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_7924.html
-
- 6 replies
- 3k views
-
-
பொதுபல சேனா இயக்கமும் தாமும் அரசியல் ஈடுபடுவதாக அதன் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியலில் தாம் ஈடுபடவில்லை எனவும், தேசிய அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவா தெரிவித்துள்ளார். பௌத்த சாசனத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியல் செய்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சி அரசியலில் ஈடுபடும் திட்டங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் தலைவர் விமலஜோதி தேரருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அழுத்தகம சம்பவங்கள் தொடர்பி;ல் பிழையான தகவல்களை வெளியிட்டதாகவும் அவர் கட்சியின் தலைமைப் பதவியை ரா…
-
- 1 reply
- 363 views
-
-
'ஆலயத்திற்கு போய் வந்துகொண்டிருந்த மகனை சுட்டுக் கொன்றார்கள். இன்னொரு மகன் பாடசாலையிலிருந்து வந்துகொண்டிருந்த போது கடத்தப்பட்டான் என்று ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த பூபாலபிள்ளை நேசம்மா என்ற தாய், காணாமல் போனோர் தொடர்பில் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட சாட்சிகளின் இறுதி சாட்சியப் பதிவின் போதே மேற்படி தாய் சாட்சியமளித்தார். மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழு அமர்வில் தொடர்ந்து சாட்சியமளித்த நேசம்மா கூறியதாவது, 'கடந்த 12.7.1989ஆம் ஆண்டு எனது மகன் பூபாலப்பிள்ளை திரேஸ்கான் ஆலயத்திற்கு சென்று அங்கு இடம்பெற்ற தீப்பாய்வதில் கலந…
-
- 0 replies
- 375 views
-