ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தீர்வுகாண முடியும் என எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணக் கூட்டத்தில் சம்பந்தர் ஆனால் அந்தத் தீர்வை எட்டுவதற்கு அனைத்துத் தரப்பும் விசுவாசமாகச் செயல்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு சுமுகமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது என, யாழ்பாணத்தில் செய்தியாளர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உண்மையாக விரும்புகின்றனர் என தான் கணிப்பதாகவும் சம்பந்தர் கூற…
-
- 2 replies
- 470 views
-
-
“சந்தைகளில் விற்பனை செய்ய முடியாத, வலையில் சிக்கும் சிறு மீன்களை அவை உயிருடன் இருக்கும் போதே கடலில் விடுவியுங்கள். அதன்போதே கடல்வாழ் உயிரினங்கள் அழிவடைவதைத் தடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப்பணிப்பாளர் பா.றமேஸ்கண்ணா மீனவர்களிடம் திங்கட்கிழமை (18) வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில், “பண்ணை – ஊர்காவற்றுறை, புங்குடுதீவி – வேலணை, காரைநகர் - பொன்னாலை ஆகிய பாலங்களில் கீழ் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தங்கள் வலையில் சிக்கும், சந்தையில் விற்க முடியாத சிறிய மீன்கள் மற்றும் சிறிய நண்டுகளை வீதியில் போட்டுவிட்டுச் செல்கின்றனர். சிறிய மீன்களைப் பிடித்து வீதியில் போட்டுவிட்டுச் செல்வதால் வீதியில் போக்குவரத…
-
- 1 reply
- 580 views
-
-
Views - 5 -சண்முகம் தவசீலன் 'குளங்களின் தரமற்ற புனரமைப்பில் பல மில்லியன் ரூபாய் வீணடித்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முடிந்த நிலையிலும் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை' என வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 'தண்ணிமுறிப்பு மற்றும் உடையார்கட்டுக்குளங்கள் மீள்குடியேற்றத்தின் பின் புனரமைக்கப்பட்டது. இப்புனரமைப்புக்களில் தரமற்ற வேலைகளும், முறைகேடுகளும் இடம் பெற்றுள்ளதாக அங்குள்ள விவசாய அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதன்பின் குறித்த இரண்டு குளங்களின் புனரமைப்பு வேலைகள் பற்றி நான் நேரடியாக சென்று மக்களுடன் பார்வையிட்டு குறைகளை உறுதிப்படுத்தினேன். பின்னர், இது விடயத்தை மாகாணசபையின் 25ஆவது அம…
-
- 0 replies
- 467 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையானது சடுதியாக அதிகரித்துள்ளது. ஒரு முட்டை 20 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கோழி இறைச்சி கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கோழி இறைச்சியின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் 480 ரூபாய் என நிர்ணயித்திருந்த நிலையிலும், யாழ்ப்பாணத்தில் இறைச்சி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த 3 வாரங்களாக அதிகரித்து இருந்த வெப்பத்தால் முட்டையிடும் வீதம் வீழ்ச்சியடைந்தமையால், முட்டையில் விலையானது அதிகரித்துள்ளது எனவும் கோழி இறைச்சி உற்பத்தி வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/170…
-
- 0 replies
- 473 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக வெற்றிலைக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது. ஒரு வெற்றிலை 04 ரூபாய் தொடக்கம் 06 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வெற்றிலை உற்பத்தி குறைவடைந்த நிலையில், சித்திரைப் புத்தாண்டு கைவிசேடம் கொடுப்பதற்காக வெற்றிலையின் கேள்வி அதிகரித்திருந்தது. இதனால் வெற்றிலைக்குத் தட்டுப்பாடு நிலவி வெற்றிலையின் விலையானது அதிகரித்துள்ளது. வெற்றிலைச் சீவல் 10 ரூபாய் பாசலில் முன்னர் 2 வெற்றிலைகள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு வெற்றிலை மாத்திரம் வைக்கப்படுகின்றது. 05 வெற்றிலைகளுக்கு மேல் வைத்து விற்பனை செய்யப்படும் 20 ரூபாய் பாசலில் தற்போது 3 வெற்றிலைகள் மாத்திரம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றன. http://…
-
- 4 replies
- 747 views
-
-
ஒரே தட்டில் உணவு உட்கொண்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் - எம்.றொசாந்த் வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவர், ஒன்றாக இணைந்து ஒரே தட்டில் உணவு உட்கொண்ட சம்பவம், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவின் வீட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது. மாவை சேனாதிராசாவின் தாயாருடைய அந்தியோட்டிக் கிரியைகள் அன்றைய தினம் மாவையின் வீட்டில் நடைபெற்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வடமாகாண சபை உறுப்பினர்களாக இமானுல் ஆர்னோல்ட், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகியோரே இவ்வாறு உணவு உட்கொண்டனர். இவர்கள் மூவரும் முறையே கிறிஸ்தவம், இந்து மற்றும் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.…
-
- 3 replies
- 642 views
-
-
-
மன்னார் விபத்தில் பாதிரியார் பலி: எண்மர் காயம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில், இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற விபத்தொன்றில், இலங்கை பெந்தகோஸ்து சபையின் பாதிரியார்; ஒருவர் பலியானதோடு மேலும் 8பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கை பெந்தகோஸ்து சபைக்குச் சொந்தமான ஹயஸ் ரக வாகனம், மன்னார் - தள்ளாடி பிரதான வீதியில் உள்ள விமானப் படைத்தள பிரதேசத்தில் வைத்து விபத்துக்குள்ளாகியே, மேற்படி பாதிரியார் உயிரிழந்துள்ளார்.காயமடைந்தவர்களில், அருட்சகோதரர் ஒருவரும் அருட்சகோதரிகள் அறுவரும் உள்ளடங்குகின்றனர். …
-
- 0 replies
- 710 views
-
-
15 வயது சிறுமி துஷ்பிரயோகம் -செல்வநாயகம் கபிலன் ஊர்காவற்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் பாடசாலை செல்லும் 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், நேற்று சனிக்கிழமை (16) முறைப்பாடு செய்துள்ளனர் என ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவர், அல்லைப்பிட்டிப் பகுதியிலுள்ள உறவினர்கள் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த காலங்களில் அதே பகுதியினைச் சேர்ந்த குறித்த சிறுமியுடன் காதல் தொடர்பினை மேற்கொண்டிருந்தார். சிறுமியின் வீட்டில் நேற்று சனிக்கிழமை (15) யாரும் இல்லாத நேரம் பார்த்து வந்தவர் சிறுமியுடன் நீண்டநேரம் பேசி…
-
- 0 replies
- 480 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் கட ந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அவரின் யாழ்ப்பாண வருகை ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பின ராக தெரிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுக் கொண்ட இரா.சம்பந்தர் யாழ்ப்பாணத்துக்கு வருவதில் என்ன தான் ஆச்சரியம் இருக்கிறதோ தெரியவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற அடிப்படையில் அவர் வடக்கு கிழக்கு மாகாணங் களிலேயே தங்கியிருக்க வேண்டும். எனினும் அவரின் வயது, உடல்நிலை என்பவ ற்றைக் கருதில் கொள்ளும்போது, அவர் கொழும்பில் இருப்பது தவிர்க்க முடியாதது என்று எடுத்…
-
- 0 replies
- 530 views
-
-
இலங்கை மக்கள் எதிர்வரும் மே மாதத்திலும் அதிகளவு வெப்பத்துடன் கூடிய காலநிலையை அனுபவிக்க நேரிடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதம் இறுதி வரையில் காற்று வீசக்கூடிய சாத்தியங்கள் கிடையாது எனவும், மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/5301
-
- 0 replies
- 537 views
-
-
24 மணிநேரத்தில் ரூ.2 கோடி வருமானம் 18-04-2016 09:00 கடந்த 15ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மாத்திரம், அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஒரு கோடியே 76 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார். குறித்த தினத்தில் மாத்திரம், அதிவேக நெடுஞ்சாலையில் 5 இலட்சத்து 57 ஆயிரத்து 023 வாகனங்கள் பயணித்துள்ளன என்று தெரிவித்த அவர், அவற்றில் பெருமளவான வாகனங்கள் (9,600 வாகனங்கள்) கடவத்தையூடாகவே, அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்துள்ளன என்றும் கூறினார். கடந்த 8ஆம் திகதிக்கும் 12ஆம் திகதிக்கும் இடையில், அதிவேக நெடுஞ்சாலை, அதிக வேலைப்பளுவுடன் காணப்பட்டது. அக்காலப் பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் 23 விபத்துகள் ஏற்பட்டு, மூவர் காயமட…
-
- 0 replies
- 670 views
-
-
காளிகோயில் காணியை அடாவடித்தனமாக கைப்பற்றிய அமைச்சர் ஹிஸ்புல்லா! Posted By: 0333on: April 17, 2016In: அணியம், சிறப்பு பதிவுகள்No Comments Print Email 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடைபெற்ற இனப்பிரச்சனையில் முஸ்லிம்களால் தமிழ் மக்கள் பலர் கொல்லப்பட்டதுடன் பல வழிபாட்டுத் தலங்களும் இடித்தழிக்கப்பட்டு அதில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. இதன் சாட்சியாக, தற்போது மீள்குடியேற்ற பிரதி ராஜாங்க அமைச்சராக இருக்கும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மட்டக்களப்பு ஓட்டமாவடியில் அமைந்திருந்த காளிகோயிலை அழித்துவிட்டு, அதனை பள்ளிவாசல் அமைக்கும் நிர்வாகத்திற்கு கொடுத்தார் என்பதை தனது வாயாலேயே கூறுகின்றார். 1990ஆம் ஆண்டு ஓட்டமாவடி பிரதான வீதியில் அமைந்…
-
- 15 replies
- 958 views
-
-
பொருத்து வீட்டுத் திட்டம் எமது கலாசாரத்துக்கு ஏற்றதல்ல! - சம்பந்தன் [Sunday 2016-04-17 18:00] வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டத்தை மீள் பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு வலியுறுத்தி வருவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், பல்வேறு சந்திப்புகளின் பின்னர், இன்று பத்திரிகையாளரை சந்தித்தார். இதன்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு தனியே வட, கிழக்கு தமிழ் மக்கள் சார்பாக மட்டும் இரா.சம்பந்தன் பேசுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலை…
-
- 1 reply
- 913 views
-
-
ஹட்டனில் நடைபெற்ற தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் ! [Thursday 2016-04-14 20:00] தேசிய சித்திரை புத்தாண்டு கொண்டாங்கள் மலையகத்தின் கொட்டகலை வூட்டன் ஹில்ஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிலும் ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்திலும் வெகு விமர்சியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் (14) தலைமையில் கொண்டாப்பட்டது. கல்வி இராஜாங்க அமைச்சு நேத்திரா தொலைகாட்சி ஹட்டன் டிக்கோயா நகர சபை ஹட்டன் பொலிஸ் ஹட்டன் கல்வி வலைய பனிமனைää அம்பகமுவ பிரதேச செயலகம் அம்பகமுவ பிரதேச சபை நுவரெலியா பிரதேச சபைää ஹட்டன் நகர வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளும…
-
- 0 replies
- 481 views
-
-
தமிழினியை பயன்படுத்தி ஜெயக்குமாரன் புலி எதிர்ப்பு அரசியல் செய்கிறார்! கணவர் ஜெயக்குமாரன் தமிழினியின் பெயரை வைத்து புலி எதிர்ப்பு அரசியல் செய்வதாக கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிடுகிறார். தமிழினியைப் போலவே சில போராளிகள் புற்றுநோயால் இறந்துள்ளார்கள் என்றும் அவர்களின் மரணங்கள் திட்டமிட்ட அழிப்பா என்ற சந்தேகத்திற்குரியது என்றும் தீபச்செல்வன் தன் முகப்புத்தகத்தில் எழுதியிருந்தார். தமது அரசியலுக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவுமே இவ்வாறான சந்தேகங்கள் உலாவ விடப்படுகின்றன என்றும் இதனால் புலம்பெயர் புலிகளின் உண்டியல் நிறையும் என்றும், தமிழினி விடுதலைப் புலிகள் காலத்தில் ஓய்வின்றி உழைத்தமையினாலேயே புற்றுநோய் தாக்கத்திற்கு ஆளானார் என்றும் ஜெயக்குமாரன் தனது முகப்புத…
-
- 16 replies
- 1.1k views
-
-
இலங்கையில் கடந்த முப்பது வருடங்களாக இல்லாத வகையில் தற்போது ஏற்பட்டுள்ளகடும் வெப்பநிலை, வரட்சி காரணமாக மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதுடன் குடிநீர் பிரச்சினையையும் எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்க்கையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாகவும், மே மாதம் வரையில் இதே கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும் என்பதால் பொதுமக்கள் இந்த வெப்பத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள அவசியமான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையின் உயர் வளிமண்டல வெப்பநிலையில் காணக்கூடியதாக உள்ள பிராந்திய மாற்றங்களுக்கு முக்கியமாக அகலாங்குகளை விட நெட்டாங்குகள…
-
- 5 replies
- 893 views
-
-
தாஜூடீன் கொலை சம்பவம் காரணமாக காவல்துறை மா அதிபர் பதவியை இழக்கும் விக்ரமசிங்க குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு வசீம் தாஜூடீன் கொலைச் சம்பவம் காரணமாக காவல்துறை மா அதிபர் பதவியை பெற்றுக்கொள்ள சாத்தியமில்லை என தற்போதைய பதில் காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதிக் காவல்துறை மா அதிபர் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும், முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவுடனும் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே, காவல்துறை மா அதிபர் பதவி எஸ்.எம். விக்ரமசிங்கவிற்கு கிடைக்காது என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 587 views
-
-
சமஷ்டி என்ற எண்ணக்கரு தமிழ் மக்களின் கோரிக்கையல்ல - ஜே.வி.பி : சமஷ்டி என்ற எண்ணக்கருவும் கோரிக்கையும் தமிழ் மக்களின் கோரிக்கையென நாம் நம்பவில்லை. இது தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கையென்றே எண்ணுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரிவின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியென்ற ரீதியில் நாம் எதிர்பார்ப்பது தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்கள் உட்பட, அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் சமஷ்டி என்பதை தேசிய ஒற்றுமைக்கான தீர்வாக நாம் ஒரு போதும் எண்ணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சமஷ்டி மக்களை தூ…
-
- 2 replies
- 639 views
-
-
புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்படுவது ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த கைதுகள் தொடருமாக இருந்தால் அரசு பாரிய சவால்களை சரவதேச ரீதியில் எதிர்நோக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. முதலில் வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரது கைதுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடைய கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்றைய தினம் தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவிகையில்; கைது செய்யப்படும்…
-
- 1 reply
- 462 views
-
-
ஒபாமாவை சந்திப்பார் மைத்திரி.? ஜீ 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் நோக்கில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ௪ப்பானின் ஷிமா நகரில், மே மாதம் 26, 27 ஆம் திகதிகளில், ஜி 7 நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இத்தாலி, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர்களாக, பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வியட்நாம் பிரதமர் ஆகியோருக்கு ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே அழைப்பு விடுத்…
-
- 0 replies
- 344 views
-
-
பிபிசின் கண்டுபிடிப்புப் படி சிறீலங்காவில் முதலில் குடியேறியது இந்தோ - ஆரியர்களாம். பிறகு தானாம் தமிழர்கள் வந்தார்கள். இந்த அடிப்படையில் தான் பிரித்தானியா ஆட்சி அதிகாரங்களைச் சிங்களவனிடம் கையளித்திருக்குமோ...?! நாங்கள் நினைச்சுக் கிட்டு இருக்கம்... பிரித்தானிய நாங்கள் சொல்லுறதைக் கேட்கும் என்று. பிபிசியே கேட்குதில்லை. கொடுமையைப் பாருங்க... Fifth century BC - Indo-Aryan migrants from northern India settle on the island; the Sinhalese emerge as the most powerful of the various clans. Third century BC - Beginning of Tamil migration from India. 1505 - Portuguese arrive in Colombo, marking beginning of European interest. 1833 - Whole island …
-
- 0 replies
- 652 views
-
-
வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குமிடையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த சந்திப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் திடீர் சுகயீனம் காரணமாக யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதையடுத்தே இந்தச் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வடமாகாண நிலைமை தொடர்பில் இச்சந்திப்பு நடைபெறவிருந்தது. இச்சந்திப்பில் குறிப்பாக காணி சுவீகரிப்பு மற்றும் 65 ஆயிரம் வீட்டுத் திட்டம் குறித்து பேசப்படவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சருக்கு நேற்றுக் காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவர் யாழ். ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்பத்திரி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வ…
-
- 0 replies
- 476 views
-
-
தென்பகுதியில் இருந்த தமிழர்களின் சிறப்பு வாழ்வு வளம் அனைத்தும் விழுங்கப்பட்டுவிட்டது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பட்டாபுரம் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் தமிழ் புதுவருட கலாசார விளையாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. பெரியபோரதீவு பொதுவிளையாட்டு மைதானத்தில் லக்கிஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பே.கங்காதரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த விளையாட்டு விழாவின்போது பல்வேறு கிராமிய விளையாட்டுகள் நடைபெற்றதுடன் கிராமத்தில் பல்வேறு சாதனை படைத்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இங்கு உரையாற்றிய விவசாய அமைச்சர்…
-
- 0 replies
- 475 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் அமீர்அலி அவர்கள் அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றியும், பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியும் பேசியதற்கு தகுந்த பதிலடி வழங்கியுள்ளேன். ஊடகவியலாளரை அழைத்து 03.04.2016 அன்று அவரது கருத்துக்குரிய பதிலடியை வழங்கியுள்ளேன். மீண்டும் எனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் பல ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பாக கூறியுள்ளேன். இதில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களும் கலந்துகொண்டார். இதற்கான ஆதாரங்ககளை எமது மட்டக்களப்பு ஊடகவியலாளர்களிடம் பெற்றுக்கொள்ளவும். பா.உ அமீர்அலி அவர்கள் கூறிய பதவிக்காக நாக்குவழித்தல் நாக்கை தொங்கப்போட்டு அலையும் விடயங்கள் என் வீட்டு நாய்க்கும் பொருந்தாது! இது யாரென அவர் கூறவேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளில் த…
-
- 0 replies
- 349 views
-