Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொங்கலுக்கு முதல் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் - எஸ்.ஜெகநாதன் எதிர்வரும் 15ஆம் திகதி பொங்கல் தினத்துக்கு முன்னதாக 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படும் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (11) மாலை நேரில் சென்று பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறினார். பொதுமக்களுக்குச் சொந்தமான 5,048 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரின் வசம் இன்னமும் உள்ளதாகவும் இதனை விட…

  2. இன்று எமக்கு எதிரி நாடுகளே இல்லை! இலங்கைக்கு தற்போது எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உலகிலுள்ள அனைத்து நாடுகளிடமும் இலங்கை தற்போது நட்புக் கரம் நீட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே, ஜனாதிபதி இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=75965

    • 7 replies
    • 757 views
  3. செல்வநாயகத்தின் கோரிக்கை அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்க மாட்டார் புதிய அரசியலமைப்பு முறை ஒன்றை உருவாக்குவதற்கான பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த இந்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வுகள் இன்று காலை ஆரம்பமாகின. இதன்போது அரசியலமைப்பு சபை ஒன்றை உருவாக்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்பித்தார். புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் பாராளுமன்ற அரசியலமைப்பு சபைக்குறிய உறுப்பினர்கள் குறித்து அவர் தெரிவித்திருந்தார். அதன்பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற அரசியலமைப்பு சபை அமைப்பது குறித்த விஷேட உரையை நிகழ்த்தினார். புதிய அரசியலமைப்பு அமைக்கப்படவுள…

    • 19 replies
    • 669 views
  4. இராணுவத்தின் இரண்டாம் இடத்திற்கு 5 பேரின் பெயர்கள் பரிந்துரை! [ செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2016, 01:02.43 AM GMT ] இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலைப் பதவி வெற்றிடத்திற்காக ஐந்து பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இராணுவத்தில் இராணுவத் தளபதிக்கு அடுத்த நிலையாக கருதப்படும் இராணுவ பிரதம அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் அண்மையில் ஓய்வு பெற்றுக்கொண்டார். இந்தப் பதவிக்காக இராணுவத்தில் கடமையாற்றி வரும் ஐந்து பேரின் பெயர்ளை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருசாந்த டி சில்வா, பாதுகாப்பு அமைச்சிற்கு அனுப்பி வைத்துள்ளார். மேஜர் ஜெனரல்களான மிலிந்த பீரிஸ், ஜனக ரட்நாயக்க, சுமேத பெரேரா, சுமித் மானவடுகே மற்றும் சன்ன குணதிலக்க ஆகியோ…

  5. வரலாற்றில் முதல்தடவையாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் மன்றில் ஆஜர் [ செவ்வாய்க்கிழமை, 12 சனவரி 2016, 12:06.34 AM GMT ] உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி அப்றூவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர்நீதிமன்றம், நேற்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது. பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர் உபாலி அபேரத்ன மற்றும் நீதியரசர் பிரயந்த ஜயவர்த்தன ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. வீட்டுப் பணிப் பெண்ணைத் தான், தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு தனக்கு எதிராக, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானம், சட்டத்துக்கு முரணானது என்றும் அது தன்னுடைய அடிப்படை மனித உரிமையை மீறும் செயலாகும் எனவும…

  6. ஜப்பான் - ஸ்ரீலங்கா உயர்மட்டப் பேச்சுவார்த்தை இன்று [ Tuesday,12 January 2016, 04:26:51 ] ஜப்பானுக்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகின்றது. கடற்பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கடல்சார் பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இரண்டு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பங்குபற்றும் ஸ்ரீலங்கா- ஜப்பான் கொள்கை பேச்சுவார்த்தை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் குழுவிற்கு கிழக்காசிய பசுபிக் மற்றும் பொதுத் தொடர்பாடல்கள் பிரிவின் மேலதிக செயலாளர் ராஜித உயன்கொட தல…

  7. விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்! அரசின் செயற்பாடுகள் தடையின்றித் தொடரும்! : ஜனாதிபதி பேட்டி விமர்சிப்போர் விமர்சிக்கட்டும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். வேலையில்லாமல் வெறுமனே திரிவோரே விமர்சிப்பர். நாம் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் சும்மா இருக்க முடியாது அது செயற்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை அது செய்யும். இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பத்திகையொன்றுக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்தார் அவர் வழங்கிய பேட்டியின் விபரம் வருமாறு, கேள்வி: அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளில் தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது? இதில் வடமாகாண சபையிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு பற்றி கூற முடியுமா? பதில்: – வட மாகாண சபை த.தே.கூட்டமைப…

  8. புதிய அரசியலமைப்பில் 13க்கு அப்பால் அதிகாரங்களைப் பகிர இடமளியோம்! - சுதந்திரக் கட்சி போர்க்கொடி [Tuesday 2016-01-12 07:00] அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் அதிகாரத்தை பகிர்வதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரே…

  9. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட இலங்கையர் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது:- 12 ஜனவரி 2016 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட இலங்கையர்கள் யார் யார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பாக உருவாகி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்து கொண்டுள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யார் என்பதனை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக வலையமைப்புக்களைப் பயன்படுத்தி அமைப்பிற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கி…

  10. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பெப்ரவரி நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் [ Tuesday,12 January 2016, 03:19:32 ] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹுசைய்ன் அடுத்த மாத நடுப்பகுதியில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பதவியில் இருந்து விலகிச் செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் சபீனாய் நான்டி தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனை மரியாதை நிமிர்த்தம் அவரின் அலுவலகத்தில் வைத்து சந்தித்த போதே சபீனாய் நான்டி இதனைக் கூறியுள்ளார். இந்த விஜயத்தின் போது உள்நாட்டில் இடம்பெயர்ந்தும் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் பிரச்சி…

  11. கச்சதீவு உற்சவம் பெப்ரவரி 21ம் திகதி 12 ஜனவரி 2016 கச்சதீவு உற்சவத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில்திங்கட்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உற்சவம் எதிர்வரும் பெப்பரவரி மாதம் 21ம் திகதி இடம்பெறவுள்ளது. திருவிழாவுக்கு செல்வோருக்கான படகு சேவைகள் 20ம் திகதி மதியம் ஒரு மணி வரையில் குறிகட்டுவானில் இருந்து இடம்பெறும். மதியம் ஒரு மணிக்கு பின்னர் கச்சதீவு செல்வதற்கான அனைத்து படகு சேவைகளும், இடைநிறுத்தப்படும். எனவே திருவிழாவுக்கு செல்வோர். ஒரு மணிக்கு முன்னர் பயணத்தை மேற்கொள…

  12. கடந்த ஆட்சியில் 42,650 கோடி ரூபாவை சுருட்டிய மஹிந்த குடும்பம்! சதுர சேனாரத்ன பரபரப்புத் தகவல் [ திங்கட்கிழமை, 11 சனவரி 2016, 04:43.51 PM GMT ] மஹிந்த குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் 42,650 கோடி ரூபாவை சுருட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்ற வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்னவுக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் முக்கிய அதிதியாக அழைக்கப்படுவது வாடிக்கையாகி உள…

  13. ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை! நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவெளியில் பிணையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். "ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வெளியே வருவார்" என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்…

  14. இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது இனப் பிரச்சினைக்கு இலங்கைக்குள் ஒரு தீர்வை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது. மூன்றாந்தரப்பு மத்தியஸ்தின் மூலமே இனப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். என வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் திங்கட் கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அரசியல் கைதிகள் விடயத்தில் ஒருவரை மாத்திரம் விடுவித்துவிட்டு மற்றவர்களை விடுவிக்காது ஏமாற்றியுள்ளார்கள். ஓர் அரசாங்கம் உருவாகி 100 நாட்களுக்குள் செய்யும் வி…

  15. கொழும்பின் குப்பை மலைகள்: 'அரசிடம் முறையான மீள்சுழற்சி திட்டம் இல்லை' இலங்கை அரசிடம் முறையான கழிவகற்றல் கொள்கைத் திட்டங்கள் இல்லாத காரணத்தினால் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். தலைநகர் கொழும்பிலும் முக்கிய பெரு நகரங்களிலும் தினசரி சேருகின்ற குப்பைகளை முறையாக மீள்சுழற்சி செய்வதற்கோ அப்புறப்படுத்துவதற்கோ சரியான திட்டங்கள் எதனையும் அரசாங்கம் இன்னும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள புறநகர்ப் பகுதிகளிலும் சேருகின்ற குப்பைகள் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள இடங்களிலேயே கொட்டப்பட்டுவருகின்றன. …

  16. ஒற்றுமை என்பது தமிழர் தரப்பில் இப்போது அல்ல எப்போதும் ஏற்படாது- இரா.துரைரத்தினம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின் கடந்த வருடம் லண்டனுக்கு விஜயம் செய்திருந்தார். அச்சமயத்தில் லண்டனில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்ற அமைப்பு மைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தது. அப்போது பிரித்தானிய மகாராணி எலிசபெத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் இங்கு ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது தெரியாது என கூறியிருந்தார். கள யதார்த்தங்களை புரியாது செயல்படுபவர்களுக்கு எலிசபெத் மகாராணியின் இந்த கூற்று மிகப்பொருந்தமானதாகும். மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களில் சிலர் குறிப்பாக சில தமிழர் அம…

    • 13 replies
    • 1.3k views
  17. புதிய யாப்பு பற்றி '25 மாவட்டங்களிலும் மக்கள் கருத்து திரட்டப்படும்' இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் திரட்டுவதற்கான சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட 20 பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். புதிய அரசியலமைப்பு எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதே இந்தக் குழுவின் நோக்கம் என்று மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரசியல் யாப்பும் அதற்கு முந்தைய யாப்பும் உருவாக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மக்களின் …

  18. ராஜபக்ஷ ஆட்சியை மாற்றிய தேர்தலின் ஓராண்டு நிறைவு இலங்கையில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான புதிய ஆட்சிக்கு வழிவகுத்த ஜனாதிபதி தேர்தலின் ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் என்று பல தரப்பினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். மகாத்மா காந்தியின் பேரனும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகருமான கோபாலகிருஷ்ண காந்தி இன்றைய நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றினார். 'பிரபாகரனின் லட்சியம்' கோபாலக…

  19. புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்கள் குற்றவாளிகள் இல்லையாம் 11-01-2016 11:15 AM நாங்கள் குற்றவாளிகள் இல்லை. எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் ஊர்காவற்றுறை பொலிஸார் எங்களை கைது செய்துள்ளனர் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஊடகவியலாளர்களிடம் கூறினர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான வழக்கு நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அறிக்கைகள் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், சந்தேகநபர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். வழக்கு முடிந்து சிறைச்சாலை வாகனத்தில் சந்தேகநபர்கள் ஏறியபோது, ஊடகவியலாளர்களை தமது அருகில் அழைத்து, 'நா…

    • 4 replies
    • 697 views
  20. கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமு…

    • 66 replies
    • 3.4k views
  21. பிரபாகரனின் ஈழக் கனவை நனவாக்குகின்றார் மைத்திரி! புலி உறுப்பினரை விடுவிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை, புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஈழக்கனவை நனவாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆயுத ரீதியாக தோற்கடித்தாலும் அவர்களின் இலக்கு மற்றும் செயற்பாடுகள் முற்றுப் பெறவில்லை. புலிகள் மற்றும் பிரிவினைக்காரர்களின் மனம் மாறும் என்று மைத்திரி தப்புக் கணக்குப் போடுகின்றார். முப்பது வருடங்களாக போராட்டம் என்றும் போர் என்றும் இருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களின் மனம் மாறிவிடும் என கணக்கு போட இயலாது. அவர்கள் சர்வதேச வலையமைப்பை இன்னமும் கொண்டிர…

  22. கிளிநொச்சியில் சடலங்கள் அகற்றப்பட்டு மணல் அகழ்வு; பொலிஸார் பாராமுகம் [ Monday,11 January 2016, 03:34:28 ] கிளிநொச்சி - வட்டக்கச்சி, பன்னங்கண்டி பாலத்தின் அருகில் உள்ள பொது மயானப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் விவகாரத்தில் பொலிஸார் பாராமுகமாக செயற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அவர், அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளார். அங்கு மயானப்பகுதி முழுவதும் மணல் அகழப்பட்டுக்கொண்டுடிருந்ததாகவும், மயானத்தில் புதைக்கப்…

  23. தமிழ் மக்கள் பேரவை மூடிமறைத்து உருவாக்கப்பட்டதன் இரகசியம் என்ன? சுமந்திரன் கேள்வி [ Monday,11 January 2016, 03:08:44 ] தமிழ் மக்கள் பேரவை அரசியல் நோக்கமற்றதாக அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்ற போதிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தெரியாமல் மூடிமறைத்து ஏன் உருவாக்கப்பட்டது? என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் உண்மை உருவம் இதுவரை வெளிவரவில்லை எனவும் அதனை மக்கள் சார்ந்த அமைப்பாக எவ்வாறு கருத முடியும்? என்றும் அவர் கூறியுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்…

  24. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு விரைவில் விசேட நிதியம்; பிரதமர் ரணில் அறிவிப்பு [ Monday,11 January 2016, 03:58:08 ] யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட நிதியமொன்றை இந்த வருடத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச வங்கிகள் மற்றும் நாணய பரிமாற்றல்களின் கேந்திர நிலையமாக ஸ்ரீலங்காவை மாற்றியமைக்க உள்ளதாகவும், இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு கொழும்பு துறைமுக நகரத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். தேசிய இளைஞர் சம்மேளன பிரதிநிதிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடுகையிலேயே…

  25. தமிழ்மக்கள் பேரவையுடன் CVயின் தொடர்பு இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் அதிருப்தி? 11 ஜனவரி 2016 தமிழ்மக்கள் பேரவையுடன் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் நெருக்கமான தொடர்புகளை பேணுவது குறித்து கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் மத்தியில் அதிருப்தி நிலவுதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது தமிழமக்கள் பேரவை தமிழர்விடயங்கள் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை பேணுவது குறித்து கொழும்பை மையமாககொண்ட இராஜதந்திரவட்டாரங்கள் அதிருப்தியடைந்துள்ளன.தமிழர் விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்காக தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளிற்கு ஆதரவளிக்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்வதற்காக சில இராஜதந்திரிகள் விரைவில் அவரை சந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.