Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை நாளை ஜனாதிபதியிடம் கையளிப்பு! [Friday 2015-08-21 09:00] ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பாக நடத்தப்பட்ட போர்க்குற்ற விசாரணை அறிக்கையின் பிரதி நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. போர் இடம்பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடா்பில் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது. எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் விசாரணை நடத்தினால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் ஆரம்பமாகும் முன்னதாகவே அந்த அறிக்கையை குறித்த நாட்டுக்கு இரகசியமாக வழங்குவது வழமையானதாகும்.அதன்படி இந்த அறிக்கை நாளை கையளிக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் மாதம் …

  2. கூட்டமைப்புக்கு இலங்கைத் தேசிய அரசில் இடமில்லை..! மைத்திரிரி பால சிறி சேனாவின் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும்தான் முக்கிய மந்திரிப் பதவிகளை எடுக்க உள்ளன.. கூட்டமைப்பின் கடுகளவு ஆதரவு கூட சிங்கள அரசால் எதிர் பார்க்கப் படவில்லை! விரக்தியால்… எதிர்க் கட்சி தலைவர் பதவியை குறி வைக்கும் சுமந்திரன்! எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சம்பந்தன்! -மு.வே.யோ- ஆம்!..நாளை காலை சுமார் பத்து மணியளவில் இலங்கை பாராளுமன்றத்தின் புதிய பிரதம அமைச்சராக ரணில் விக்கிரம சிங்கா பதவி ஏற்க உள்ளார். அவருக்கு இலங்கை அதிபர்,மைத்திரி பால சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார் என்னும் செய்தி வந்து சேர்ந்து விட்டது. எனக்கு கிடைத்த கடைசித் தகவலின்படி.. கூட்டமைப்ப…

  3. இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, எல்லா இன மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் விதத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள், ஊழலை ஒழித்தல், கல்வியையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துதல், நட்புறவுடன் கூடிய வெளியுறவுக் கொள்கை, பெண்கள் மற்றும் சிறார் உரிமைகளை பாதுகாத்தல், கலைஞர்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் விதத்தில் கைச்சாத்தாகியுள்ள இந்த உடன்படிக்கை இருதரப்பு இணக்கப்பாட்…

    • 0 replies
    • 477 views
  4. ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் வெளியானது : அங்கஜன் உள்ளே, ரங்கா வெளியே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியில் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, எஸ்.பி.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க சுமதிபால, அங்கஜன் இராமநாதன், எம்.ஹிஸ்புல்லாஹ், மலிக் ஜயதிலக்க, பைசர் முஸ்தபா, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2015/08/21/ஐமசுகூட்டமைப்பின்-தேசியப்பட்டியல்-வெளியானது-அங்கஜன்-உள்ளே-ரங்கா-வெளியே

  5. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை காலை சுபநேரமான 10.3க்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இலங்கையின் 19ஆவது பிரதமாராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். - See more at: http://www.tamilmirror.lk/152496#sthash.k1FvibfJ.dpuf

    • 2 replies
    • 499 views
  6. சுயநிர்ணயமுடைய சமஷ்டிக்காக உழைத்தால் கூட்டமைப்புடன் இணையத் தயார்! - கஜேந்திரகுமார்[Wednesday 2015-08-19 19:00] கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது போன்று சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உழைக்குமானால் தாம் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதுடன் அதனுடன் இணைந்து செயற்படவும் தயாராக இருகப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இன்று மதியம் யாழ் ஊடக மையத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் - நடந்து முடிந்த தேர்லில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க…

    • 33 replies
    • 2k views
  7. கொழும்பு வந்தது ஐ.நா விசாரணை அறிக்கை – நாளை மைத்திரியிடம் கையளிப்புAUG 21, 2015 | 2:09by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரித்த, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கையின் பிரதி சிறிலங்காவுக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு ஒன்றுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்ட அறிக்கை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், குறிப்பிட்ட நாட்டின் அரச தலைவரிடம் அதன் பிரதியை கையளிப்பது மரபாகும். அதற்கமையவே, அடுத்த மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கைய…

    • 3 replies
    • 545 views
  8. கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர பிரதேசத்தில் உள்ள அழகுநிலையமொன்றுக்கு சென்று திரும்பிய நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரது மரணத்துக்கு அழகு நிலையத்தில் உபயோகிக்கப்பட்ட எதேனும் இரசாயனப் பொருள் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகப்படுகின்றனர். இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/articles/2015/08/21/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE…

  9. சபாநாயகர் பதவி கரு ஜெயசூரியவுக்கு? [Thursday 2015-08-20 18:00] புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் கரு ஜயசூரியவை முன்மொழிய திட்டமிட்டுள்ளதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறை பொது தேர்தலின் வெற்றிக்காக ஐக்கிய தேசிய கட்சி வழிக்காட்டி குழுவின் தலைவராக கரு ஜயசூரிய செயற்பட்டார். கட்சியிக்காக பல்வேறு அர்ப்பணிப்புகளை மேற்கொண்ட கரு ஜயசூரிய இம்முறை பொதுத் தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்திருதார். எனினும், ஐக்கிய தேசிய கட்சிக்காகவும், இலங்கையின் ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக மேலும் சில வருடங்கள் தன்னை அரப்பணிப்பதாகவும், அதன் பின்னர் கௌரவமாக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்திருந்…

  10. தேசிய அரசுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி! - இரண்டாகிறது ஐ.ம.சு.மு [Friday 2015-08-21 09:00] தேசிய அரசு அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கு மஹிந்த ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி ஆதரவு அணியினரின் முடிவே இதுவென்று தெரிவித்துள்ள வாசுதேவ நாணயக்கார, சுதந்திரக் கட்சியில் உள்ள மஹிந்த ஆதரவு அணியினர் எதிரணியில் இருந்தபடி செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்தவுடன் கைகோர்த்து எதிரணியில் செயற்படுவதற்கு 60 இற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் தயாராகவே இருக்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைவதற்கு முடிவெடுத்துள்ளதால்,…

  11. இனவிடுதலைக்கு ஒன்றுபட்டு உழைப்போம் ! - நன்றி நவிலலில் சிவசக்தி ஆனந்தன் [Friday 2015-08-21 09:00] உரிமைகளுக்காக பேரம் பேசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே தமிழ் மக்கள் உள்ளார்கள் என்பதை மீண்டுமொரு தடவை தமிழ் மக்கள் உணர்த்தியுள்ள நிலையில் இனவிடுதலைக்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வெற்றியீட்டிய ந.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காகவும், கூட்டமைப்பின் பெருவெற்றிக்காகவும் ஆதரவளித்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பிற்கும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார். தனது வெற்றிக்காக ஆதரவளித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்ட…

  12. புதிய அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம்[Friday 2015-08-21 09:00] இலங்கையில் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் இது தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், அதிகளவான மக்கள் இலங்கை தேர்தலில் வாக்களித்து, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் புதிய அரசாங்கம், நல்லாட்சி, மனித உரிமைகள் காப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கத்தை உறுதிசெய்ய வேண்டும் என்று பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல்கள் ஆணையாளரின் பங்கு சிறப்பானது என்றும் அவர் குறிப்பிட்ட…

  13. போர்க்குற்றப் பொறியில் நாட்டை சிக்க விடமாட்டோம்! - சம்பிக்க உறுதி[Friday 2015-08-21 09:00] போர்க்குற்றங்கள் என்ற பொறியில் நாட்டை சிக்க வைக்க எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கவோ அல்லது போர்க்குற்றங்களில் சிக்க வைக்கவோ இடமளிக்கப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதற்கு எவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படாது. இந்த விடயம் குறித்து மக்களுக்கு பொறுப்புகூறத் தயார். எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் நாட்டில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல்கள் நடைபெறாது. நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த எதிர்க்கட்சி தரப்புக்கள் ஒத்துழைப்பு வழங்க வ…

  14. தேசிய அரசாங்கம் மக்களின் ஆணைக்கு எதிரானது! - என்கிறார் உதய கம்மன்பில[Friday 2015-08-21 09:00] தேசிய அரசாங்கம் என்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கைக்கு எதிராகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தனர். எனவே தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவது மக்கள் ஆணையை மீறும் செயல் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய அரசாங்கத்துக்கு எதிராகவே பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதனை ஏற்றுக்கொண்டே மக்களும் வாக்களித்தனர். எனினும் இன்று கூட்டமைப்பின் மூலம் தெரிவானவர்கள், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது ஏற்க முடியாதது என்று கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். http://www.…

  15. சபாநாயகர் பதவி தொடர்பில் கட்சியின் தீர்மானத்திற்கு அமைய செயற்படுவோம் : சம்பந்தன் | சுதந்திரம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு இலஞ்ச ஊழலுக்கு இடமளிக்கக்கூடாது என்பதே ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையாக இருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மக்களின் இந்த ஆணையானது முன்னெடுக்கப்படவேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும்இ தற்போதைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், அந்த ஆணையை நீடிக்கும் வகையில் மக்களின் தீர்வு அமைந்துள்ளதாகக் கருதுவதாகவும் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான, சுதந்திரமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூட…

    • 0 replies
    • 214 views
  16. தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை மக்கள் இணங்கண்டு நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.பதிவு இணைச் செய்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று இரவு மருதனால் மடப் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வழைப்பினை விடுத்துள்ளார்.பதிவு இணைச் செய்தி அங…

    • 42 replies
    • 3.5k views
  17. சம்பூர் மக்களுக்கு காணி பத்திரங்களை வழங்குவதற்கு நாளை வருகிறார் ஜனாதிபதி (திரு­மலை நகர் நிருபர்) சம்பூர் மக்­க­ளுக்கு நாளை சனிக்­கி­ழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் காணிப் பத்­தி­ரங்கள் கைய­ளிக்கப் படவுள்ளன. இவ் வைப­வத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரி­கா ­கு­மா­ர­துங்க ஆகி­யோரும் கலந்து கொள்­கின்­றனர். இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­ வது; சம்பூர் மக்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக காணிப் பத்­தி­ரங்­களை கைய­ளித்து மீள்­கு­டி­யேற்­றத்தை ஆரம்­பித்து வைக்க வருகை தர­வி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சனிக்கிழமை மாலை சம்­பூ­ருக்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­ப­தி­யுடன் பிர­தமர் ரணில் விக்­க…

    • 1 reply
    • 778 views
  18. நாடாளுமன்ற தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றுக்கொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சியில் மஹிந்த தரப்பினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதிநிதிகள் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், எம்.சரவனபவன், மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வாசு தேவ நாணயக்கார, டலஸ் அலகபெரும, விமல் வீரவன்ச, டிரான் அலஸ் மற்றும்…

  19. எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன் இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வே…

  20. புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரம் வர்த்தமானியில் வெளியானதுAUG 21, 2015 | 3:15by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட 196 உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் வழங்கப்பட்ட ஆணைக்கு அமைய, இந்த சிறப்பு வர்த்தமானி நேற்று மாலை அரசாங்க அச்சகத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இதில் மாவட்ட ரீதியாக – ஒவ்வொரு கட்சிகளில் இருந்தும் தெரிவாகியுள்ள- 196 உறுப்பினர்களின் விபரங்கள் இடம்பெற்றுள்ளன. அதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் இதில் இடம்பெறவில்லை. தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்ற அரசியல் கட்சிகள், தேர்தல் ம…

    • 0 replies
    • 552 views
  21. மகிந்த ஆதரவு அணியின் பலம் 60 ஆக குறைந்தது – எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மறுக்கிறார்AUG 21, 2015 | 2:48by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் 60 ஆக குறைந்துள்ளது. மகிந்த ராஜபக்சவினால் நேற்று மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் கூட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், 60 பேர் மட்டும் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில், சுசில் பிரேமஜெயந்த உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் பங்கேற்கவில்லை. நேற்று சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்த இந்தக் கூட்டத்தில், தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ள, சி…

    • 0 replies
    • 405 views
  22. கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்[Thursday 2015-08-20 07:00] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார். இதேவேளை பொதுத் தேர்தல் பெ…

    • 4 replies
    • 678 views
  23. புதிய அரசிலும் அமைச்சராகிறார் தொண்டமான்! [Thursday 2015-08-20 18:00] இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தேசிய அரசாங்கத்தில் இணைந்து தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியொன்று, தொண்டமானுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை வென்றது. இரண்டு ஆசனங்களைக் கொண்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எதிர்காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http:/…

  24. -நன்றி பதிவு இணையதளம் - ஞாயிறு, ஜூலை 26, 2015 - 22:33 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது! சுமந்திரனிற்கு ஆதரவு தேடும் வகையினில் பருத்தித்துறை கடற்கரையினில் தமிழரசுக்கட்சியினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தை வடமராட்சி மக்கள் பகிஸ்தரித்துள்ளனர். வெறும் நூறிற்கும் குறைவான மக்களுடன் கூட்டம் கூடி கலைந்துள்ளது.கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பங்கு கொண்ட கூட்டத்தினில் பங்காளிக்கட்சிகள் எவையும் பங்கெடுத்திருக்கவில்லை. அதன் தலைவர்கள் மற்றும் அதன் சார்பினில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பங்கெடுத்திருக்காமை சுமந்திரனை புறக்கணிக்கும் மனோநிலையினில் உள்ளமை மற்றும் உள்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தி நி…

    • 5 replies
    • 417 views
  25. இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2015 அமைதியாக நடந்து முடிந்துவிட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெற வைத்த வட கிழக்கு தமிழ் மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்கிற சிந்தனையி ஆழ்ந்துள்ளனனர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் வழங்கிய ஆணை தொடர்வேண்டும் என் திரு சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார். திரு சம்பந்தனுக்கு ஈழ தமிழர் வளங்கிய ஆணை அரசியல் தீர்வுக்கு உகந்த தேசிய சர்வதேசிய சூழலை உரூவாக்கி தமிழ் மக்களின் கோரிக்கைகளை வென்று தருவதாகும். தேசிய அரசை வெளியில் இருந்து ஆதரித்தல் அல்லது அமைச்சராக இணைந்து கொள்ளுதல் போன்றவை தவறான சமிக்ஞையாகி விடலாம். ஈழத்தமிழர் சம்மதத்துடன் இனப் பிரச்சினையைத் தீர்பதற்க்கான உழ்வாரிப் பொறிமுறை ஒன்று உருவாகியுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை நா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.