ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து ஆறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், சித்திரவதைகள், பெண்களுக்கெதிரான வன்முறைகள், சட்டவிரோதமாக தடுத்துவைத்தல், கொலைகள் ஆகியவற்றின் ஊடாக தமிழர்கள் இன்னமும் இலங்கை அதிகாரிகளினால் திட்டமிட்ட வகையில் துன்புறுத்தப்பட்டு வருவதாக உண்மை, நீதி ஆகியவற்றைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. சித்திரவதை, பாலியல் வன்முறை ஆகியன இலங்கை அரசாங்கம் மற்றும் உயர்மட்டப் பாதுகாப்புத் தரப்பினர் ஆகியோர் கொள்கைரீதியாக கடைபிடித்து வருவதாக 155 நிபுணர்கள் குழுவொன்று தயாரித்துள்ள ஆய்வறிக்கையின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரவதை மற்றும் தடுப்பு முகாம்கள் என 41 இடங்கள் அறிக்கையில் பெயரிடப்பட்டுள்ளது. போர்க் காலத்தில் மட்டுமல்லாது 2015ஆம் ஆண்டு முன்னைய அ…
-
- 0 replies
- 345 views
-
-
தமிழீழ விடுதலைப் புலி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் கரிசனை காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அண்மையில் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் சயனைட் வில்லைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு காரணிகளின் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள…
-
- 0 replies
- 278 views
-
-
எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சம்பூரில் தத்தமது சொந்த இடங்களை அடையாளம் கண்டு அவற்றை அப்பிரதேச செயலாளர் ஊடாக உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அந்த மக்களிடம் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார கேட்டுக்கொண்டுள்ளார். சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான விசேட கூட்டம், சம்பூர் கோவில் வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், மீள்குடியேற்றத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் அரசாங்க அதிபர் கூறினார். சம்பூரிலுள்ள காணிகளை பரிசீலனை செய்ய குழுவொன்றை நியமிக்குமாறு மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப்பிடம் அரசாங்க அதிபர் பணித்தார். http://www.tamilmirror.lk/150996#sthash.08MJNXEY.dpuf
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுத்தேர்தலிற்கான தேர்தல் விஞ்ஞாபனம் சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் முக்கிய விடயமாக மாறிவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய ஆனால் சமஷ்டி இலங்கைக்குள் சுயநிர்ணய உரிமைக்கு குரல்கொடுத்துள்ளதுள்ளமை சுதந்திர தமிழ்ஈழத்திற்கான கோரிக்கையாக சிங்களசமூகம் அர்த்தப்படுத்த தொடங்கியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு 13 திருத்தத்தை நீக்கிவிட்டு மாகாணசபைகளிற்கு அதிகளவு அதிகாரங்களை வழங்கும் சமஸ்டி முறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் பிரிவினைவாதம் குறித்து அச்சம் வெளியிட தொடங்கியுள்ளது.தமிழ் தேசியகூட்டமைப்பிற்கு நெ…
-
- 1 reply
- 357 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி கேள்வியெழுப்பிய விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தாக்கியமை கடும் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இன்றைய மருதனார்மட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மகன் ஒருவரை அக்கட்சியினரே தாக்கி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். சும்பவம் நடைபெற்ற வேளை கூட்ட மேடையினில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உட்பட யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உரையாற்றியிருந்தனர். அவர்கள் தமது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர், மாவீரர்கள் என்று உணர்ச்சிவசமாக தமது பேச…
-
- 8 replies
- 1.4k views
-
-
றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம், விபத்தினால் ஏற்பட்டது ஒன்றல்ல என்றும் அது படுகொலை என்றும் இரகசிய பொலிஸார், கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு நேற்று திங்கட்கிழமை கொண்டுவந்தனர். பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகன், இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் இதற்கு முன்னர் கூறியிருந்தனர். அவருடைய மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல் உடைக்கப்பட்டு, விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, பாதங்கள் கழற்றப்பட்டு பாதங்கள் அசிட்டினால் ஊறவைக்கப்பட்டு, கூரிய ஆயுதத்தை கழுத்தில் ஏற்றி, மொட்ட ஆயுதத்தினால் தாக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று இரகசிய பொலிஸார், நீதிமன்றத்…
-
- 0 replies
- 236 views
-
-
"தமிழர்களைக் கொன்று குவித்து - அவர்களின் வாழ்விடங்களைத் தரைமட்டமாக்கி யுத்தவெற்றி என்று உள்நாட்டில் மட்டுமல்ல, சர்வதேசத்திற்கும் மஹிந்த அரசு பறைசாற்றியது. அப்போது வாயை மூடிக்கொண்டு அவர்களுடன் ஒட்டிக்கொண்டிருந்தவர்கள் இன்று வடக்கு, கிழக்கில் வெற்றிலை சின்னத்திலும், வீணை சின்னத்திலும் வாக்குக் கேட்டுவருகின்றார்கள். இவர்களை தமிழ் மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெறவுள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கைத் தமிழரசுக் கட்சியின்) வீடு சின்னத்திற்கு அனைத்துத் தமிழ்…
-
- 0 replies
- 226 views
-
-
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பெயரை கேட்டதும் கூட்டத்தில் எழுந்த கரகோசத்தையும், ஆர்பரிப்பையும் பார்த்து புன்முறுவல் பூத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்.யாழ்.மருதனார்மடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அக் கூட்டத்தில் மக்களோடு மக்களாக நின்று ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தை அவதானித்துக்கொண்டு நின்றார்கள். அவ்வேளை பேச்சாளர் ஒருவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெயரை உச்சரித்த போது கூட்டத்தில பலத்த கரகோஷம் எழுந்ததுடன் கூட்டத்தில் இருந்தவர்களும் ஆர்ப்பரித்தனர்.பிரபாகரன் எனும் பெயரை கேட்டவுடன் மக்கள் மத்தியில் எழுந்த கரகோஷத்தையும் ஆர்ப்பரிப்பையும் பார்த்து ஐரோப…
-
- 48 replies
- 2.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு, மகிந்த ராஜபக்ச முன்னிலைக்கு அழைத்துவரப்பட்ட பின்னரே கொலை செய்யப்பட்டதாக தன்னை மேற்கோள் காட்டி வெளிவந்துள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தான் தெரிவித்ததாக குறித்த செய்திகளில் வெளியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் பரப்புரைப்பாக இதன்மூலம் தன்னைப் பயன்படுத்தப் பயன்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களிலும், சில பொறுப்பற்ற இணையளத்தளங்களும் இவ்வாறான செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் பொறுப்பான ஊடகங்கள் இவ்வ…
-
- 14 replies
- 1.9k views
-
-
இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன். https://youtu.be/RMaqtYN594g யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு தற்போது முன்வைப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள் இந்தியாவோ 13 வது திருத்தச்சட்டம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றதேயென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் நாங்கள் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லையென்ற செய்தி இந்தியாவிற்கு தெளிவான சொல்லப்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கெதிராக சட்டக் கடிதம் ஒன்றை அனுப்பியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச, தமது ஊழல்கள் தொடர்பில் பேசுவோரின் வாய்களை அடைப்பதற்காகவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ச, எவ்வாறு சுனாமி நிவாரண நிதியை தமது சகோதரியின் கணக்குக்கு மாற்றி, நிதி மோசடி மேற்கொண்டார் என்பதை தன்னால் சாட்சிகளுடன் நிரூபிக்க முடியும் என்றும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது தொடர்பில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வாவின் குரல் பதிவு தம்மிடம் உள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தமது கட்சிக்காரருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சும…
-
- 0 replies
- 347 views
-
-
யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம…
-
- 3 replies
- 1.5k views
-
-
மஹிந்த குற்றவாளி என்பதனை நீதிமன்றில் நிரூபிக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் - ரஞ்சன் ராமநாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றவாளி என்பதனை நிரூபிக்க ஆவலுடன் காத்திருப்பதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தமது நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அண்மையில் சட்டத்தரணி ஊடாக நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். இந்த கடிததத்திற்கு பதிலளிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்து உண்மையானவை எனவும், அதனை நிரூபிக்க ஆதாரங்கள் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவருக்கும் அஞ்சப் போவதில்லை என அவர் சுட்டிக்க…
-
- 1 reply
- 200 views
-
-
கடற்படையினரால் பொன்னாலைப் பகுதியிலுள்ள கிணறுகளில் இருந்து அளவுக்கதிமாக நன்னீர் எடுக்கப்படுவதால் அதனைச் சுற்றியுள்ள பொதுமக்களின் கிணறுகள் உவர்நீராக மாற்றமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். கடற்படையினர் 24 மணிநேரமும் பாரிய பவுஸர்களில் நன்னீர் எடுத்துச் செல்வது தொடர்பாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் என்பன அறிந்திருந்தும், இதனை கட்டுப்படுத்துவதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். சுழிபுரம் சம்பில்துறை மற்றும் மாதகல் ஆகிய இடங்களில் உள்ள கடற்படை முகாம்களுக்கும் சம்பில்துறையிலுள்ள விகாரை மற்றும் ஹோட்டலுக்குமாக பொன்னாலையிலுள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து தினமும் பாரிய பவுஸர்கள் மூலம் ந…
-
- 0 replies
- 323 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்ற கூட்டத்தில் சிங்கள கொடி ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வகை கொடிகளை ஏந்தி போராட்டம் நடத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. நாட்டின் சிறுபான்மை இன சமூகங்களை குறிக்கும் வர்ணங்கள் இன்றி சிங்கள பெரும்பான்மை சமூகத்தை மட்டும் குறிக்கும் வகையில் இந்த கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. யட்டிநுவர பிரதேசத்தில் இவ்வாறான கொடிகள் ஏற்றப்பட்டிருந்தது. எனினும், இந்த கொடிகள் ஏற்றப்பட்டமை குறித்த புகைப்படங்களை எடுத்த ஊடகவியலாளரை மஹிந்தவின் பாதுகாவலர்கள் தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது இந்த படங்களை போட வேண்டாம் என குறித்த பாதுகாவலர்கள், ஊடகவியலாளரிடம் கோரியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை மஹிந்த பார்த்தால் கூட்டத்தில் பங்கேற…
-
- 0 replies
- 350 views
-
-
சம்பந்தன் பங்கெடுக்கவிருந்த கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஆள்பிடிக்க சென்றிருந்த உள்ளுராட்சி தலைவர்கள் மீது வலி.வடக்கு முகாம் மக்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினை அடுத்து முகாம் தலைவர்களை மாவை சேனாதிராஜா கலந்துரையாட அழைத்திருந்த போதும் அச்சந்திப்பினை முகாம் மக்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டம் மருதனார் மடப் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சேர்ப்பதற்கு வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமில் உள்ள மக்களை அணிதிரட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சுன்னாகம் பிரதேச சபைத் தலைவர் பிரகாஷ் மற்றும் சுகிர்தனும் முகாம் மக்களை கூட்டமைப்ப…
-
- 2 replies
- 576 views
-
-
புலிகளை அழித்தவர்கள் புலிகளின் பெயரால் வாக்குத் திரட்டும் அருவருப்பான ஆதாரங்கள்: கோசலன் 07/27/2015 இனியொரு... LEAVE A COMMENT சுனாமி நிதியுதவி என்ற பெயரில் இலங்கை சென்ற ஜோர்ஜ் பூஷ் மற்றும் பில் கிளின்டன் – 2004அமெரிக்க அரசு போராட்டங்களை அழிப்பதற்கும் எதிர்ப்புரட்சிகர நடவடிக்கைகளில் (counterinsurgency) ஈடுபடுவதற்கும் பணம் வழங்குவதற்கான அரச அமைப்பின் பெயர் யூஸ்எயிட்(USAID). இந்த நிறுவனம் உலகம் முழுவதிலும் ஏற்படுத்திய அழிவுகள் புதியவை அல்ல. சர்வதேச அபிவிருத்திக்கான அமரிக்க முகவர் அமைப்பு( United States Agency for International Development (USAID)) என்று அழைக்கப்படும் இந்த நிறுவனம் இலங்கையில் 1972 ஆம் ஆண்டிலேயே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் அரசியல் நிலைமை…
-
- 0 replies
- 614 views
-
-
கூட்டமைப்புக்கு வந்த சோதனை? நிலாந்தன் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து அது அனுபவித்து வரும் ஏகபோகத்திற்கு இப்பொழுது சோதனைக் காலம் தொடங்கிவிட்டது போலத் தெரிகிறது. கடந்த ஆறு ஆண்டுகளிலும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் படிப்படியாக அதிகரித்து வந்த அதிருப்தியும் சலிப்பும் தற்பொழுது சமூகத்தின் ஏனைய மட்டங்களுக்கும் பரவத் தொடங்கியுள்ளன. அண்மைய ஆண்டுகளில் இணையப் பரப்பில் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கூட்டமைப்புக்கு எதிரான கேள்விகளும் விமர்சனங்களும் அதிகரித்து வந்தன. இப்பொழுது அந்த அதிருப்தியானது மெய்நிகர் யதார்த்த பரப்பையும் தாண்டி ஒரு பௌதீக யதார்த்தமாக பரவிவருகிறது. யாழ்ப்பாணத்தின் பத்திரிகைகள் சிலவற்றின் ஆசிரியர் தலையங்கங்களும் அதைப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறா…
-
- 18 replies
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாதாரண கோரிக்கைகள் குறித்து ஆராயப்படும் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பொதுத் தேர்தல் வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டை பிளவுபடுத்தும் கோரிக்கைக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். http://www.jvpnews.com/srilanka/118239.html
-
- 0 replies
- 481 views
-
-
கால்டன் இல்லத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டபோது, சில செல்ஃபிகளை எடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதியை இந்த இளைஞர்கள் சம்மதம் தெரிவிக்க வைத்தனர். http://www.jvpnews.com/srilanka/118160.html
-
- 0 replies
- 448 views
-
-
காணாமல் போய், 28 நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட கிளிநொச்சி, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி உதயகுமார் யர்சிகா, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. பிரேத பரிசோதனையின் போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் சடலம், சிறுமி காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்;றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்திலுள்ள வயல் வெளியிலிருந்து கடந்த 19ஆம் திகதி, உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. அச்சடலத்துடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி என்பனவும் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலம், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் குழுவால் …
-
- 0 replies
- 451 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும்போக்கு ரீதியான தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் வேட்பு மனுவில் கடும்போக்கு ரீதியான கொள்கைகளே காணப்படுகின்றன. இது எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் யுத்த காலத்தில் தமிழ் மக்களை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த வகையிலும் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். http://www.pathivu.com/news/…
-
- 0 replies
- 530 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களிடையே குடுமிப்பிடி சண்டை உச்சமடைந்துள்ளது. அவ்வகையில் வட்டுக்கோட்டை தொகுதியில் தன்னை தவிர வேறு எவரிற்கும் பிரச்சாரங்களைச் செய்யக்கூடாதென அப்பகுதி மகளிர் அமைப்புக்களினை மிரட்டியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்:- தொட்டிலடிப் பகுதியினைச் சேர்ந்த சில மகளிர் அமைப்புக்கள் கூட்டமைப்பின் அனைத்து வேட்பாளர்களையும் அழைத்து அறிமுக கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. அதன்படி கூட்டமைப்பின் பத்து வேட்பாளர்களிற்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி உள்ளுராட்சி மன்ற தலைவியாக இருந்து வரும் நாகரஞ்சனி ஜங்கரனின் கணவன் ஜங்கரன் தொடர்புபட்ட மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளை தொலைபேசியினூ…
-
- 0 replies
- 303 views
-
-
-நன்றி பதிவு இணையதளம் - ஞாயிறு, ஜூலை 26, 2015 - 22:33 மணி தமிழீழம் | தமிழ்நாடன், யாழ்ப்பாணம் வடமராட்சி தமிழரசினை புறக்கணித்தது! சுமந்திரனிற்கு ஆதரவு தேடும் வகையினில் பருத்தித்துறை கடற்கரையினில் தமிழரசுக்கட்சியினால் கூட்டப்பட்ட பொதுக்கூட்டத்தை வடமராட்சி மக்கள் பகிஸ்தரித்துள்ளனர். வெறும் நூறிற்கும் குறைவான மக்களுடன் கூட்டம் கூடி கலைந்துள்ளது.கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா பங்கு கொண்ட கூட்டத்தினில் பங்காளிக்கட்சிகள் எவையும் பங்கெடுத்திருக்கவில்லை. அதன் தலைவர்கள் மற்றும் அதன் சார்பினில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் பங்கெடுத்திருக்காமை சுமந்திரனை புறக்கணிக்கும் மனோநிலையினில் உள்ளமை மற்றும் உள்கட்சி முரண்பாடுகளை வெளிப்படுத்தி நி…
-
- 2 replies
- 831 views
-
-
“எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே” – தெற்கில் தூண்டப்படும் இனவாதம்JUL 27, 2015by கி.தவசீலன்in செய்திகள் கேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார் ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம். “கட்சி அல்லது நிறம் எதுவானாலும், எங்கள் வாக்கு ஒரு சிங்கள பௌத்தருக்கே” என்று சிங்களத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் கேகாலை மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டு வருகின்றன. கேகாலை மாவட்டத்திலேயே ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம் போட்டியிடுகிறார். அவரைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டும் ஒளிப்படங்களும் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசனம…
-
- 1 reply
- 846 views
-