Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 150 பிக்குகள் போட்டியிடுவதால் தேர்தல் திணைக்களத்துக்கு நெருக்கடிJUL 17, 2015 | 13:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியில் இறங்கியுள்ளதால், வாக்களிப்பு நிலையங்களை அமைப்பதில் தேர்தல்கள் திணைக்களத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பௌத்த விகாரைகளிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இம்முறை 150இற்கும் அதிகமான பௌத்த பிக்குகளும் போட்டியிடுவதால், அவர்கள் தங்கியுள்ள இடங்களில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனை வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும், எங்கெங்கு அமைக்கப்படும் என்பது குறித்து இறுதியான தீர்ம…

    • 4 replies
    • 1.1k views
  2. சரவணபவன் மீது வித்தியாதரன் சீற்றம்…. July 17, 20157:26 pm ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் தலமை வேட்பாளர் வித்தியாதரன் யாழ் ஊடகங்களை “மாபியா” என திட்டியுள்ளார்.. முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி எவ்.ரீ பத்திரிகைக்கு வழங்கிய நீண்ட செவ்வியின் இறுதிக் கேள்வியான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எவ்வாறான சவால்களை தற்போது எதிர்நோக்குகின்றனர்? என்பதற்கு …

    • 2 replies
    • 723 views
  3. வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? - கேள்வி எழுப்பும் சிவாஜிலிங்கம்[Wednesday 2015-07-15 19:00] மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதன…

  4. லண்டனில் முதல்வர் விக்னேஸ்வரன் – பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சரைச் சந்திப்புJUL 17, 2015by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை, வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், அங்கு எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துக் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு பயனுள்ள…

  5. அன்று பிரபாகரன்! இன்று ரணில்! – என்னை எதுவும் செய்யமுடியாது!! – மஹிந்த July 17, 20159:28 pm அன்று பிரபாகரன் என்னைக் கொல்லவேண்டும் என்றார். இன்று ரணில் என்னை துடைத்து வீச வேண்டும் என்கிறார். ஆனால் இந்த மஹிந்த ராஜபக்‌ஷவை ஒருபோதும் அப்படி செய்து விட முடியாது. அடிப்படைவாதிகள் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து விட்டனர். எனவே இனி எங்களால் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.” இப்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கிறார். அனுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பெருமளவிலான மக்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில் மேலும் த…

  6. மகிந்தவால் மைத்திரி கொலையா…..?? July 17, 20156:41 pm மகிந்தவுக்கு எதிரான நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்படும் எச்சரிக்கை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஜா சக்தி என்ற அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. மகிந்தவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும், அவருக்கு தமது சுயவிருப்பத்தின் பேரில் வேட்புரிமை வழங்கப்பட்டிருக்கவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறி இருந்தார். இதற்கு ஆகஸ்ட் 17ம் திகதி பதில் வழங்கப்படும் என்று மகிந்த எச்சரித்தார். இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன, மகிந்த தரப்பினரால் தேர்தலுக்கு பின்னர் கொலை செய்யப்படக்கூடிய ஆபத்துகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. http://www.jvpnews.com/srilanka/116936.html

    • 0 replies
    • 438 views
  7. மைத்திரி குறித்து வாய் திறக்காத மஹிந்த! July 17, 20159:12 pm ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரம் நேற்று அநுராதபுரத்தில் ஆரம்பமானது. இதில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்‌ஷ உட்படப் பலர் கலந்துகொண்டு உரையாற்றினர். ஆனால், தனக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த ஜனாதிபதி மைத்திரிபால குறித்து மஹிந்த கருத்து எதனையும் நேற்றைய கூட்டத்தில் வெளியிடவில்லை. மஹிந்த தனது உரையில் விடுதலைப்புலிகள் குறித்து கருத்து வெளியிட்டு, இனவாதத்தைக் கக்கினார். அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கடுமையாகச் சாடினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் அவர் மறைமு…

    • 0 replies
    • 461 views
  8. importmirror.com THE MEDIA NETWORK July 17, 2015 அரசியல் ஆய்வு மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கட்சிகள் பெறும் ஆசனங்கள் -விபரம் அபு அலா - சமகால அரசியல் நல்லாட்சிக்கான தேர்தல் சம்பந்தமாக இலங்கை வாழ் சகல பிரதேசங்களிலும் புதிய அரசியல் சீர் திருத்தமும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சம்பந்தமாக எமது மையம் மேற்கொண்டுள்ள ஆரம்ப ஆய்வுகளின்; அடிப்படையில், நடைபெறவிருக்கின்ற பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் குறிப்பாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை அமையப்போகின்றது. அமையப்போகின்ற புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளில் பாரிய தாக்கத்தை செலுத்துவதுடன் குறிப்பாக கிழக…

  9. 2004ஆம் ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும்....... 2004 ஆண்டு முதல் 2010 வரை இலங்கைப் பாராளுமன்றில் அங்கம் வகித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்கள்... இந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களில் தற்போது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியில் போட்டியிடும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்... சமாதானப் பேச்சுவார்த்தை காலம் முதல் அது முறிந்து யுத்தம் ஆரம்பித்தது, இனப்படு கொலையின் ஊடாக புலிகள் அழிக்கப்படும் வரை இவர்கள், கூட்டமைப்பு + தற்போதையை…

    • 4 replies
    • 406 views
  10. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காணப்படும் சுமூகமான நிலைமை பொதுத் தேர்தலுக்கு பிறகும் தொடருமாயின் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உள்ள மிகுதி நிலங்களும் விடுவிக்கப்பட்டு மக்களை அங்கு மீளக் குடியேற வைத்து அவர்களை வாழவைக்க முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை இந்த ஆட்சி மாற்றத்தில் பொதுமக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கேற்ப நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆயிரத்து 100 ஏக்கர் நிலம் ஆரம்ப கட்டமாக விடுவிக்…

  11. பாராளுமன்றத்; தேர்தல்களில்தமிழர் பங்குபற்றுவதானது வெறுமனே கட்சியரசியலில் ஈடுபடுவதற்காக மட்டுமன்று. பாராளுமன்ற அரசியல் எமக்கு கடந்த காலத்தில் விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் தான் நமது இனம் ஆயதம் தாங்கி போராட்டம் ஒன்றை நடாத்தியது. இன்றைய சூழலிலும் பாராளுமன்ற அரசியல் மூலம் - பாராளுமன்றத்தில் ஆசனங்களை அதிகமாக்கிக் கொள்வதன் மூலம் மட்டும்- தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையானதல்ல. தமிழர்களது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல்ஒரு சில அரசியல்வாதிகளின் பாராளுமன்றத்தில் ஆசனங்களைப் பெறுவதற்கான சுயநல, ஆசன அரசியலாக மாற்றப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறெனின் இத்தேர்தல்களில் நாம் ஏன் பங்குபற்ற வேண்டும்? தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை எமது மக்களின் ச…

  12. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த ஒரு அணியுடனும் கூட்டிணைய வேண்டிய அவசியம் இல்லை என்று, அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனை மறுத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த தேர்தலில் மகிந்தவை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது. இதனால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டி வந்தது. ஆனால் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து போட்டியிடுகிறது. யாருடனும் கூட்டிணைய வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் தேர்தலுக்கு பின்னர் ஆட்சி அமைப்பதற்கு பிரதான கட்சிக்கு ஒன்றுக்கு தேவை ஏற்படுமாக இருந்தால்…

  13. வடமாகாண கல்வி அமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கல்வி சமூகம்; தங்களுக்கு அநீதிஇழைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தது. இந்த விடயம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வை…

    • 0 replies
    • 376 views
  14. மகிந்த ராஜபக்ஷ தமது இனவாத அரசியலை தொடர்ந்து நடத்தி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அதன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதாக மகிந்தராஜபக்ஷ சிங்கள மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்கிறார். இது தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக, அரசியல் நோக்கில் சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தை தோற்றுவிப்பதற்காக மகிந்த முன்னெடுக்கும் செயற்பாடு. இது முற்றிலும் இனவாத செயல் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.pathivu.com/news/41657/57//d,article_full.aspx

    • 0 replies
    • 379 views
  15. மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மிகநீண்ட வாக்குச்சீட்டுJUL 17, 2015 | 11:49by கி.தவசீலன்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில் இம்முறை மிக நீளமான வாக்குச்சீட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கே அச்சிடப்படவுள்ளது. அடுத்தமாதம் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகளில் தேர்தல்கள் திணைக்களம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 18 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுகளின் மாதிரிகள் தயாரிக்கப்பட்டு, ஒப்புநோக்கும் பணிகள் யாவும் முடிந்து அச்சிடுவதற்கு தயார் நிலையில் உள்ளன. ஏனைய நான்கு மாவட்ட வாக்குச்சீட்டுகளின் ஒப்புநோக்கும் பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. இவை முடிந்த பின்னர், நாளை பெரும்பாலும் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள…

    • 0 replies
    • 503 views
  16. யாருக்கு வாக்களிக்க வேண்டும்? சிவில் சமூகம் அறிக்கைhttp://www.tamilkingdom.org/2015/07/civil.html?m=1

  17. 2015 நாடாளுமன்ற தேர்தலில் உங்களின் தெரிவு யார்? http://epoll.me/ACiyv3TBekk/?wid=&ref=voted

  18. வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிபர்களின் இடமாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில் வடமாகாண கல்வி அமைச்சினால் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இது பல்வேறு மட்டங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், சில பாடசாலைகளின் அதிபர்கள் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக பல்வேறு மட்டங்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். அந்த வகையில் இந்த விடயம் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டிருந்தது. இதனையடுத்து, தேர்தல்கள் ஆணையாளரினால் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்ப…

    • 0 replies
    • 230 views
  19. பாட்டனார்கள் முப்பாட்டனார்கள் ஆதரவளித்த கட்சி உற்றார் உறவினர் நண்பர்கள் அங்கம் வகிக்கும் கட்சி என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் கடந்து ஆகஸ்ட் 17 அன்று எமது சமூக தேசியக் கடமையை மனதிலிருத்தி பொறுப்புடன் வாக்களிப்போம் என தமிழ்ச்சிவில் சமூகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்மக்களை கேட்டுள்ளது. தமிழ்ச்சிவில் சமூகமானது வடக்கு கிழக்கில் உள்ள 100 இற்கும் மேற்பட்ட சிவில் சமுக செயற்பாட்டாளர்களின் வலையமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வறிக்கையின் முழுவடிவம் வருமாறு. 17 ஜூலை 2015 பாராளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ் வாக்காளர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள். அறிமுகம் பாராளுமன்றத்; தேர்தல்களில் தமிழர் பங்குபற்றுவதானது வெறு…

    • 0 replies
    • 187 views
  20. “105 பொலிஸார், 104 இராணுவ வீரர்கள், 4 டிரக் வண்டிகள், 3 டிபென்டர்கள், 3 லென்ட் குரஸர்கள், 2 கெப் வண்டிகள், 2 பஸ்கள், 7 பென்ஸ் கார்கள், 750 லீட்டர் பெற்றோல, 1200 லீட்டர் டீசல்” “105 பொலிஸார், 104 இராணுவ வீரர்கள், 4 டிரக் வண்டிகள், 3 டிபென்டர்கள், 3 லென்ட் குரஸர்கள், 2 கெப் வண்டிகள், 2 பஸ்கள், 7 பென்ஸ் கார்கள், அதி பாதுகாப்பு பென்ஸ் காருக்கு வழங்கப்படும் 750 லீட்டர் பெற்றோல், 1200 லீட்டர் டீசல்” பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் ஏனைய வேட்பாளர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ள…

  21. சீனாவின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட போர்ட்சிட்டி திட்டத்தினால் இந்தியாவிற்கு ஆபத்து என்பதால் அதனை நிறுத்துமாறு இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வேண்டுகோள் விடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தை அதுமைத்தவுடன் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கான புதிய ஆலோசகர் அஜித்டோவலை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கிருந்தது. நான் அவரை சந்தித்தவேளை கொழும்பு போர்ட்சிட்டிதிட்டத்தை நிறுத்தவேண்டும் என்பதே அவரது முக்கிய வேண்டுகோளாக காணப்பட்டது. எங்கள் அரசாங்கத்திடம் இந்த வேண்டுகோளை முன்வைத்த அவர் நிச்சயமாக சிறிசேன அரசாங்கத்திடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்திருப்பார். போர்ட் சிட்ட…

  22. ஜனவரி 8ஆம் திகதிய அமைதிப் புரட்சி இப்போது நூரிழையில் தொங்குகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதுவும் செய்ய முடியாதவராக இருக்கின்றார். நிறைவேற்று அதிகாரம் இருந்தும் அவரால் செயற்பட முடியாத அளவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளும் மகிந்த ராஜபக்ஷவின் கை மேலோங்கிவிட்டது. கட்சி யாப்பின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்ற போதிலும் கட்சிக்குள் தன்னை பலப்படுத்தத் தவறிவிட்டார். கட்சியின் பொதுச் செயலாளரான அனுர பிரியதர்சன யாப்பா மைத்திரிபால சிறிசேனவின் வெளியேற்றத்துக்குப் பின் மகிந்த ராஜபக்ஷவினால் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டவர். மைத்திரிபால சிறிசேன தனக்குச் சார்பான ஒருவரை அப்பதவி…

    • 0 replies
    • 178 views
  23. தேசியப்பட்டியல் மூலம் தமக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார். தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பாவும் தனக்கு வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறியிருந்த நிலையில், கடைசியில் தனது பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படாதது வருந்தத்தக்கது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். ‘போர் முக்கியமான கட்டத்தை எட்டியிருந்த போது, முன்னாள் பாதுகாப்ப…

    • 5 replies
    • 1k views
  24. கவியரசு கண்ணதாசனின் உறவினர் யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்! [Thursday 2015-07-16 19:00] அடுத்த மாதம் இடம்பெற உள்ள ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் கவியரசு கண்ணதாசனின் உறவினரும், ஊரவருமான இந்திய வம்சாவளித் தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார். ஈழத்து எம். ஜி. ஆர் என்று அறியப்படுகின்ற டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்துக்கு வந்து குடியேறினர். இவர் பிரசித்தி வாய்ந்த யாழ். இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவர்களில் ஒருவர். இவர் சைவத் தமிழ் வித்தகரும், நாடறிந்த பேச்சாளரும், கவிஞரும், எழுத்தாளரும் ஆவார். அத்துடன் பிரபல விஞ்ஞான ஆசிரியராகவும், …

    • 1 reply
    • 1.2k views
  25. இலங்கைப் போர்க் கால ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகஸ்டில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். நீண்ட கால தலைவராக விளங்கிய ஒருவர் நாட்டின் அரசியலுக்கு மீள வருகின்றமை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விடயம் தொடர்பாக டச்சி வில்லி (DW) சர்வதேச நெருக்கடிக் குழுவின் இலங்கை திட்டப் பணிப்பாளரும் ஆய்வாளருமான அலன் கீனுடன் உரையாடியது. அவர் இது தொடர்பாக தெரிவித்ததாவது; இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக தலைமை தாங்கும் கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக ராஜபக்ஷவை நியமித்துள்ளது. 69 வயதுடைய ராஜபக்ஷ, நாட்டில் உள்ள பெரும்பான்மை சிங்கள மக்களினால் யுத்த கதாநாயகனாக கருதப்படுபவர். 2009இல் முடிவுக்கு வந்த மூன்று தசாப்த கால உள்நாட்டு யுத்தத்தின் க…

    • 0 replies
    • 356 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.