ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
சர்வதேசமும் உள்நாட்டு அரசாங்கமும் எமக்கு சாதகமாக இருக்கின்ற சூழ்நிலையில் அந்தச் சந்தர்ப்பங்களை நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறுவோமானால் நாம் பூச்சிய நிலைக்கே மீண்டும் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இன்று வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாவட்ட நிலைகள் பற்றி ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை ஜனாதிபதி செயலணிக்கு சமர்ப்பிக்க நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் நடைபெற்ற விளக்கம் அளிக்கும் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் …
-
- 35 replies
- 1.6k views
-
-
மகிந்தவைப் பிரதமராக நியமிக்க வேண்டும்- என்கிறார் கோத்தா APR 22, 2015 | 3:01by கார்வண்ணன்in செய்திகள் நாட்டைக் காப்பாற்றுவதற்கு, சிறிலங்கா அதிபர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். “மைத்திரிபால சிறிசேன அதிபராக ஆறு ஆண்டுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எனவே அவர் அதனைத் தொடர வேண்டும். ஆனால், அவர் விரைவாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, மகிந்த ராஜபக்சவை பி்ரதமராக நியமிக்க முடியும். அவர்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம், இலக்குகளை வெல்லும் உறுதி கொண்ட ஒரு அரசாங்கத…
-
- 4 replies
- 561 views
-
-
மகிந்தவை காப்பாற்றும் ரணிலின் தந்திரம் அம்பலம் [ செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2015, 03:32.53 PM GMT ] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற போதிலும், அவர் மீது தற்போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டானது ஒரு உப்புச்சப்பில்லாதது. இதன் பின்னணியில் ரணிலின் சூழ்ச்சி உள்ளது. ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருக்கமான உறவு உள்ளது. மகிந்தவை ரணில் காப்பாற்றுகிறார் என்பதே உண்மையான கருத்து என மூத்த அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார். தமிழ்வின் இணையத்தளத்தின் நடப்பு அரசியலின் சிறப்பு பார்வை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://www.tamilwin.com/…
-
- 1 reply
- 558 views
-
-
மற்றொரு கேந்திர நிலையை இழக்கப் போகிறது சிறிலங்கா இராணுவம் – அலறுகிறார் வசந்த பண்டார APR 22, 2015 | 3:29by கார்வண்ணன்in செய்திகள் இந்திய அரசாங்கத்தின் ஆணையின் பேரில், சிறிலங்கா விமானப்படை வசம் உள்ள பலாலி விமான நிலையத்தை, சிவில் விமான நிலையமாக்க முயற்சிகள் நடப்பதாகவும், அவ்வாறு மாற்றப்பட்டால், சிறிலங்கா இராணுவம் வடக்கில் மற்றொரு கேந்திர நிலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், தேசப்பற்று தேசிய இயக்கத்தின் பொதுச்செயலர் கலாநிதி வசந்த பண்டார கருத்து வெளியிடுகையில், “2002-2004 காலப் பகுதியில், நோர்வேயின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய போர் நிறுத்த உடன்பாட்டின் மூலம், ரணி…
-
- 0 replies
- 579 views
-
-
தாமரைக் கோபுரம் கண்காணிப்பு அரண் அல்ல – இந்தியாவின் குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா APR 22, 2015 | 1:34by நித்தியபாரதிin செய்திகள் தற்போது கொழும்பில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரத்தைப் பயன்படுத்தி சீனா, இந்தியா மீது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முனைவதாக இந்திய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை சீன ஒப்பந்தக்காரர்கள் நிராகரித்துள்ளனர். இக்கோபுரமானது தொலைத் தொடர்பாடல் கட்டுப்பாட்டு ஆணையாகத்திற்குச் சொந்தமானது எனவும் சீன ஒப்பந்தக்காரர்கள் கூறுகின்றனர். சீனாவின் எக்சிம் வங்கியின் நிதியுதவியுடன் 104.3 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் தாமரைக் கோபுரம் முற்றுமுழுதாக நிர்மாணிக்கப்படும் போது, 1148.3 அடி உயரத்தையும் 30,600 சதுர மீற்றர் விஸ்…
-
- 0 replies
- 382 views
-
-
மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும 24ம் திகதி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்கட்சிகள் குழப்பம் விளைவித்தன. எதிர்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் மையப்பகுதிக்கு பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனால் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக நாடாளுமன்றம் நாளைய தினம் காலை 9.30 வரையில் சபாநாயகரால் பிற்போடப்பட்டது. எனினும் விமல் வீரவன்ச தலைமையிலான எதிர்கட்சிகளின் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் வரையில், தாங்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவிருப…
-
- 5 replies
- 700 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலையை விட்டு இடைவிலகி பாடசாலைக்கு செல்லாமல் 186 சிறுவர்கள் இருப்பதாக மாவட்டச் செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளது. இச்சிறுவர்களை மீண்டும் பாடசாலைக்கு அனுப்புவதற்காக, இவர்களிடமுள்ள பிரச்சினைகளை அடையாளங்கண்டு தொடர்ந்தும் கற்க விரும்பும் சிறுவர்களுக்கு உதவிகள் செய்யப்படவுள்ளன. மேலும் கல்வி கற்க விருப்பம் தெரிவிக்காத பிள்ளைகள், தொழில் செய்ய விரும்பினால் அவர்களின் வயதைக் கருத்திற்கொண்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, அடிப்படை கல்விச் சான்றிதழ் பெறுவதற்கு அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலைக்குச் செல்வதற்கு தாயாராகவுள்ள பிள்ளைகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி அவர்களின் எதிர்காலமும் வளமாக்கப்படும்.…
-
- 0 replies
- 422 views
-
-
எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது! - சிவாஜிலிங்கம் [Tuesday 2015-04-21 20:00] ஐ.நா விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கட்டாயம் வெளியிடப்படும். எக்காரணம் கொண்டும் உள்ளக விசாரணையை ஏற்றக்கொள்ள முடியாது. உள்ளக விசாரணையில் இலங்கை அரசாங்கம் எத்தகைய தில்லுமுல்லுகளை செய்யும் என்பது எமக்குத் தெரியும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஏழு நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட சிவாஜிலிங்கம், அந்த நாடுகளின் விஜயம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், சுவிற்சலாந்து, பெல்ஜியம், இத்தாலி, nஐர்மனி உள்ளிட்ட 7 நா…
-
- 0 replies
- 588 views
-
-
தேர்தல் முறை மாற்றம் குறித்து கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நீண்ட ஆலோசனை! [Tuesday 2015-04-21 20:00] வட,கிழக்கு மாகாணங்களில் 10 வருடங்களுக்கு தற்போதுள்ள நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தொடருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுவதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தீர்மானித்திருப்பதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற குழு கூட்டம் சுமார் 3 மணிநேரம் இடம்பெற்றிருந்தது. இதன் போது தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக பேசியிருந்தோம். இதில் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்கள் கடந்த 30 வருடங்களாக போரினால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாகும். இதனடிப்படையில் மேற்படி மாகாணங்களின் நாடாளுமன்ற ப…
-
- 0 replies
- 462 views
-
-
மைத்திரி- மகிந்த சந்திப்புக்கு இணக்கம்! - பிரச்சினைகளை தீர்க்க முயற்சி. [Tuesday 2015-04-21 20:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய சில விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இருவரும் சந்திப்பதற்கு பொதுவான ஓர் இடமொன்று ஒழுங்கு செய்யப்படும். இருவரும் சந்திப்பு நடத்துவதற்கு பொருத்தமான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எ…
-
- 0 replies
- 549 views
-
-
முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பிற்குள்ளானவர்களிற்கான நினைவேந்தல் இம்முறை பெருமெடுப்பினில் மேற்கொள்ளப்படவேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்துள்ளார்.மே12 முதல் 18 வரை நினைவேந்தல் வாரமாக பிரகடனப்படுத்தி தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அதே போன்று தமிழகத்திலும் நினைவேந்தல்களை பெருமெடுப்பினில் முன்னெடுக்கவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையினில் இவ்வாறு நினைவேந்தலை செய்வதன் மூலம் எமது அழிவுக்கு நீதிவேண்டுமென்ற எண்ணத்தை சர்வதேசம் தொடர்ந்தும் கொண்டிருக்க செய்யமுடியுமெனவும் அவர் தெரிவித்தார். எமது தற்போதைய கோ…
-
- 3 replies
- 490 views
-
-
மகிந்தவின் மாளிகை யாழ்.பல்கலைக்கு? சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது வருடங்களாக வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் போரினாலும் வன்முறைகளாலும் தமது கல்வியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர். அண்மையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களு…
-
- 4 replies
- 788 views
-
-
ஊழல், மோசடிகள் குறித்து கடந்த காலத்தில் நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த விசாரணைகளின் ஆரம்பகட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கமைய பாரியளவிலான லஞ்ச, ஊழல் குறித்த ஐந்து குற்றச்சாட்டுக்களுக்காக ராஜபக்ச அரசாங்கத்தின் உயர் பதவியில் இருந்த மூன்று அரசியல்வாதிகளும், மூன்று அரச அதிகாரிகளும் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த கைதுகள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தா…
-
- 2 replies
- 667 views
-
-
மகிந்த ஒன்றும் கடவுள் இல்லை: சம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடவுள் இல்லை என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, முன்னாள் ஜனாதிபதியை விசாரணைக்கு வரைவழைத்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துமளவுக்கு, எவ்வித தேவையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எந்த தவறும் செய்திருக்காவிடில், ஆணைக்குழுவுக்கு ஆஜராவதற்கு எவ்வித தயக்கமோ, பயமோ ஏற்படவேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கோடு செயற்படும் ஆணைக்குழுவுக்கு எதிராகவும் அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் மற்றையோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவேண்டிய அவசியம் கிடையாது என்று ஊட…
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழில் அட்சய திருதியை அட்சய திருதியை தினமான இன்று யாழ். நகரிலுள்ள நகைக்கடைகளில் நகைகள் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தினத்தில் நகைகள் கொள்முதல் செய்தால், தொடர்ந்து நகைகள் கொள்வனவு செய்யலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் நகைகளை கொள்வனவு செய்து வருகின்றனர். நகைகளை கொள்வனவு செய்பவர்களுக்கு பரிசுப் பொதிகளும் நகைக்கடை உரிமையாளர்களால் வழங்கப்படுகின்றது. 22 கரட் உடைய ஒரு பவுண் நகை 43,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=658963989721758223
-
- 5 replies
- 705 views
-
-
தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார். ஊழல் மோசடி வழக்கில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வி அடைந்த உடன் அமெரிக்காவுக்கு தப்பி ஓடினார் பசில் ராஜபக்சே. அவர் மீது ஏராளமான ஊழல் மோசடி புகார்கள் தெரிவிக்கப்பட்டன. தப்பி ஓடிய பசில் ராஜபக்சே இலங்கை திரும்பினார்! எந்த நேரத்திலும் கைது? ‘திவிநெகும' என்ற அரசு நிதியிலிருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் பசிலுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இரு…
-
- 4 replies
- 720 views
-
-
சிறிலங்கா அதிபருக்கு எதிராக குற்றப்பிரேரேணை கொண்டு வர முயற்சி APR 21, 2015 | 9:06by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணையைக் கொண்டு வரும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றிரவு சிறிலங்கா நாடாளுமன்றத்தில், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு ஆதரவாக கையெழுத்து திரட்டும் பணி முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தைக் கலைப்பதை தடுப்பதே இந்தக் குற்றப் பிரேர…
-
- 0 replies
- 479 views
-
-
நாடாளுமன்றம் 27ம் நாள் வரை ஒத்திவைப்பு – மகிந்த ஆதரவாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது APR 21, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்றக் கூட்டமும் வரும் 27ம் நாள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றுமுதல் நாடாளுமன்றத்துக்குள் போராட்டம் நடத்தப்பட்டதுடன், இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வெளியிடும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், ஆணைக்குழு அதிகாரிகளை மகிந்த ராஜபக்சவிடம் சென்று வாக்குமூல…
-
- 0 replies
- 302 views
-
-
முன்னர் இருந்த தலைமை தங்களை ஏமாற்றிவிட்டதாக ஜனநாயக மக்கள் காங்கிரசின் புதிய தலைவர் நல்லையா குருபரன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் புதிய தலைவராக நல்லையா குருபரன் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது உரையாற்றிய முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன், கொழும்பு அரசியல் நேர்மையாக இல்லை எனவும், வாக்குகள் பிரிந்து செல்வதாகவும், எனவே கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தாம் ஒன்றிணைந்து பணியாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், கொழும்பில் தமிழர்களின் வாக்குகளினால் மாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்கள் வெறும் வாய்ச…
-
- 0 replies
- 656 views
-
-
நாடாளுமன்றத்துக்குள் மதுபானம் அருந்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? – சபையில் குழப்பம் APR 21, 2015 | 7:41by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து சபை நடவடிக்கைகள், சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று காலை நாடாளுமன்றம் கூடியதும், மகிந்த ராஜபக்சவுக்கு ஆரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையைத் தொடர விடாமல் போராட்டம் நடத்தினர். அப்போது சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்கு முன்னர் தனக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இந்தநலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு எதிராக 113 நாடாளுமன்ற உறுப…
-
- 0 replies
- 486 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள மகிந்த ஆதரவாளர்கள் APR 21, 2015by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும், சிறிலங்கா நாடாளுமன்ற வளாகப் பகுதியி்ல் பெரியளவிலான எதிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகிறது. மாகாணசபை மற்றும், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பி்னர்களால் அழைத்து வரப்பட்ட மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் இன்று காலை 9 மணியளவில் நாடாளுமன்ற வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேறிச் சென்று அதனை முற்றுகையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வருக…
-
- 0 replies
- 411 views
-
-
இன்று முற்பகல் முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் ,தமிழ் மக்களின் காணிகளை நில அளவை செய்து அபகரிக்கும் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் சென்ற தமிழ் மக்கள் மேற்படி முயற்சியை நீண்ட நேர போராட்டத்தின் பின் தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்தில் பெருந்தொகையான சிங்கள மக்களும் கூடியதால் அப்பகுதியில் ஒரு முறுகல் நிலை தோன்றியது. இது பற்றி மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக் காணிகளை நில அளவை செய்யும் நோக்கில் நில அளவையாளர்களும் ,தேசிய வீடமைப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்களும் வருகை தந்திருந்தனர். ஏற்கனவே குறித்த காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் தமிழ் மக்களிடம் இர…
-
- 0 replies
- 442 views
-
-
இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுக்க உள்ளனர்.தமிழகத்தைச் சேர்ந்த 100 மீனவர்கள், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுராஜை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். இலங்கைக் கடற்பரப்பில் தடைகளற்ற வகையில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டுமென கோரவுள்ளனர். இலங்கைக் கடற்படையினர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை மத்திய அரசாங்க http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118860/language/ta-IN/article.aspx
-
- 2 replies
- 268 views
-
-
தந்தை செல்வா நினைவுப் பேருரையை நிகழ்த்துகிறார் சந்திரிகா! [Tuesday 2015-04-21 08:00] 'யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது' என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளை வருடாந்தம் நடத்தும் தந்தை செல்வா நினைவுப் பேருரைத் தொடரில் இம்முறை அந்தப் பேருரையை மேற்படி தலைப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிகழத்துகிறார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவு தினத்தை ஒட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் கட்சி…
-
- 1 reply
- 330 views
-
-
மகிந்த, கோத்தபாயவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் இரத்த ஆறு ஓடும்! - மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை [Tuesday 2015-04-21 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வாக்குமூலமொன்றை அளிக்குமாறு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் அனைத்து நடவடிக்க…
-
- 1 reply
- 495 views
-