Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அநீதி இழைக்கப்பட்டால் மீண்டும் அரசியலுக்கு வருவேன் – மிரட்டுகிறார் மகிந்த FEB 04, 2015 | 0:05by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களின் சார்பாக தாம் மீண்டும் மக்களின் முன் செல்வேன் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச. தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையும் இல்லை. ஆனாலும்,எனது வெற்றிகளிலும் தோல்விகளிலும் துணை நின்ற கட்சிகளை கைவிட்டு விட முடியாது. அவர்களைத் தனிமைப்படுத்துவதை என்னால் அனும…

  2. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் நோக்கி பயணத்தை ஆரம்பித்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானமொன்று ஈரானின் தெஹரான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. யு.எல்.563 என்ற விமானம் இவ்வாறு அவரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு திடீரென ஏற்பட்ட இருதய நோய் காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. நோயாளி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின் விமானம் மீண்டும் பாரிஸ் நகர் நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tamilwin.com

  3. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மையமாக வைத்தே இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உறுதியற்ற அரசியல் நிலையை கருத்தில் கொண்டே தற்போதைக்கு ஜெனீவா பிரேரணைகள் எதுவும் அவசியமில்லை என்ற முடிவிற்கு அமெரிக்கா வந்துள்ளதாக தமிழ்தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான பிரதி இராஜாங்க செயலாளர் நிசா பிஸ்வால் இதனை தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் வெளியேற்றம் குற…

  4. இலங்கை 67வது சுதந்திர தினத்தை இன்றைய தினம் கொண்டாடுவதை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைத்தளம் ஊடாக சிங்கள மொழியில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மூவின மக்கள் வாழும் இலங்கை நாட்டிற்கு ஆங்கிலத்தில் சொல்லது சிங்கள மொழியில் மட்டும் வாழ்த்து சொல்லியதுள்ளது பெரும்பான்மை இன மக்களுக்கு சார்பாகவே இந்தியாவின் நிலைப்பாடுகள், நடவடிக்கைகள் உள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். http://www.pathivu.com/news/37479/57//d,article_full.aspx

  5. புதுடெல்லி, பிப். 4– இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணம் வடக்கு மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. விடுதலைப் புலிகள் ஆதிக்கம் இருந்த போது யாழ்ப்பாணம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது வடக்கு மாகாண முதல்–அமைச்சராக விக்னேஸ்வரன் இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபாலா சிறிசேனா ராஜபக்சேவை தோற்கடித்து புதிய அதிபர் ஆனார். சிறிசேனாவுக்கு தமிழர்கள் ஓட்டு பெருவாரியாக கிடைத்ததால் வெற்றி பெற்றார். இதையடுத்து சிறிசேனா இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவு வைத்துக் கொள்ள விரும்புகிறார். அதிபர் ஆன பின்பு முதல் வெளி நாட்டுப் பயணமாக வருகிற 16–ந் தேதி இந்தியா வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். அதன்பிறகு பிரதமர் நரேந்…

  6. சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் உள்ளன- நிஷா பிஸ்வால் FEB 04, 2015 | 10:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் உண்மையாக நிறைவேற்ற வேண்டிய பல விடயங்கள் இன்னமும் இருப்பதாக தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். தனது சிறிலங்கா பயணம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையை, கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது. “வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தலில் இலங்கை மக்கள் வெளிப்படுத்திய ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நானாகவே கண்டுணர்வதற்கு கொழும்புக்கு விஜயம் செய்தமை சிறப்பானதாக அமைந்தது. அரசாங்கம், சிவில் சமூகம், தனியார் துறை மற்றும் அரசியல் கட்சிகளுடன…

  7. VIEWS: 69 அயல்வீட்டு பெண் ஒருவரின் வாள்வெட் டுக்கு இலக்காகி படுகாயமடைந்த யுவதிகள் இருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறை கற்கோவளம் புனித நகர் கிராமத்தில் இடம்பெற்றது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நகுலன் சுஜாதா (வயது 25) சதீஸ் குசந் தினி (வயது 22) ஆகியோரே காயமடைந்து ள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மேற்படி பகுதியில் வசிக்கும் குறித்த யுவதிகளின் அயல்வீட்டு பெண் ஒருவர் நகுலன் சுஜாதா என்பவரை முதலில் வாளால் வெட்டி யுள்ளார். அதனை தடுக்க முயன்ற மற்றொரு யுவதியின் மீதும் பின்னர் வாள்வெட்டை நிகழ்த்தி விட்டு குறித்த பெண் தப்பியோடியுள்ளார் எனினும் பின்னர் அவர் பொலி ஸாரால் கைது செய்யப…

  8. இன்று சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் – படைபலத்தைக் காட்டும் அணிவகுப்புகள் இல்லை FEB 04, 2015 | 0:00by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் 67வது சுதந்திர நாள் நிகழ்வு இன்று கோட்டே சிறி ஜெயவர்த்தனபுர நாடாளுமன்றக் கட்டட மைதானத்தில் மிக எளிமையான முறையில் நடைபெறவுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நிகழ்வுகளில் பங்கேற்று சிறிலங்காவின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவார். இந்த நிகழ்வில் பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர். எனினும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவில்லை. முன்னதாக இந்த நிகழ்வு மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான வீரகெட்டிய…

  9. 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தாலும் வடக்கு - தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்க முடியாது போனதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். வடக்கு தெற்கு மக்களை ஒன்றிணைப்பது மிகவும் அவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லை பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், மக்களின் ஏழ்த்தைத் தன்மையை நீக்கி, வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். சுதந்திர தின விழாவில் உரையாற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ''2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டவரப்பட்டு நாட்டில் சமாதானம் நிலைப்பாட்…

  10. சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது சீனா FEB 04, 2015 | 0:41by கார்வண்ணன்in செய்திகள் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. முன்னைய ஆட்சியில், சிறிலங்காவில் சீனாவினால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. அத்துடன், இந்தியாவுடனும், நெருக்கமான உறவுகளை மைத்திரி…

  11. இலங்கையின் 67வது சுதந்திரத் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய மகாராணி இரண்டம் எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் மகிழ்ச்சியும் அபிவிருத்திக்கும் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு மக்களின் மகிழ்ச்சி, சௌபாக்கியத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் இலங்கையின் தேசிய தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்தை அனுப்புவது குறித்து மகிழ்ச்சியடைவதாக தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். http://onlineuthayan.com/News_More.php?id=821923854904496214

  12. இலங்கையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று உறுதி கூறியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைக்கானத் துணைச் செயலர் நிஷா பிஸ்வாலை கொழும்பில் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சந்தித்தபோதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக சுமந்திரன் கூறினார். இலங்கையில் எப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகள், புதிய ஆட்சியின் தமிழ் மக்களுக்கு எப்படியான நிவாரணம் கிடைக்க முடியும் என்பது உட்பட பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்தார். மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆட்சி அமைவத…

  13. தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சுதந்திர தினமான நாளை புதன்கிழமை இரவு 9.30 மணிக்கும் 9.34க்கும் இடையான காலப்பகுதியில் வீட்டுக்கு முன்னால் விளக்கொன்றை ஏற்றுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. இந்நாட்டிலுள்ள அனைத்து இன மற்றும் மத மக்களும் ஒன்றாக இணைந்து, எதிர்கால சந்ததியினருக்கு சுதந்திர நாடொன்றை கிடைக்க பிரார்த்திப்போம் என்று வேண்டிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றுமாறு உள்விவகார அமைச்சு கோரியுள்ளது. http://www.tamilmirror.lk/139072

  14. இன்று பாராளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற அதிகாரபூர்வ தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துக்கொள்ள விசேட விருந்தினர் அழைப்பு இருந்தும் நான் அதில் பங்கு பற்றவில்லை. ஆட்சி மாற்றம் வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவ்வேளையில் ஓடோடி சென்று எமக்கு முழுமையான சுதந்திரம் வந்துவிட்டதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த எனக்கு மனமில்லை. அதற்காக நான் தேசிய சுதந்திர விழாவை பகிஷ்கரிக்கின்றேன் என அர்த்தமில்லை. ஆனால், ஆட்சி மாற்றத்தின் மூலமான சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டாட நமது மக்களுக்கு இன்னமும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம் என்றும், அதேபோல் அதை பெற்றுக்கொடுக்க நமது அரசுக்கும் கொஞ்சம் கால அவகாசம் கொடுப்போம் என்றும் நான் நினைக்கின்றேன். நான் சுதந்திர தினத்தை புறக்கணிக்க வில்லை. அதனால்…

  15. இலங்கையின் 67 வது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். செயலகத்தில், பொலிஸ் நிலையத்தில், சிறைச்சாலையில், இலங்கையின் 67 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, யாழ். சிறைச்சாலையிலிருந்து 3 கைதிகள் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். http://onlineuthayan.com/News_More.php?id=166953854504681149

  16. புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் புதிய அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்வதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள அவர்- நேற்றுக்காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பிய மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கை புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாமோதரம் பாஸ்கரன் (வயது 29)என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக அவரின் தாயார் என்னிடம் தெரிவித்துள்ளார். டுபாய் நாட்டில் இருந்து இலங்கை…

  17. காணாமல்போன மகளின் புகைப்படத்துடன், கண்ணீருடன் தேடியலையும் தாயொருவரின் சோகம் நிறைந்த வடுக்கள் இவை. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினால் எனது மகள் பிடித்து செல்லப்பட்டாள். ஆனால் எனது மகளை இராணுவம் பிடித்து செல்லவில்லை என்று கையினை விரித்து விட்டார்கள். அவளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. சிறிது காலத்திற்கு பின்னர் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் எனது மகள் கொழும்பிலுள்ள ஒரு பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகிறாள். அவளை வந்து அழைத்து செல்லுங்கள் என்று கூறீனார்கள். எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது என வவுனியாவில் இன்றைய தினம் நடைபெற்ற காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் ஒரு தாய் கண்ணீர்மல்க கூறியிருக்கின்றார். தொடர்ந்தும் அவர் விபரிக்கையில், அடுத்த நா…

    • 7 replies
    • 1.1k views
  18. கிழக்கில் எமக்கு ஆட்சியமிக்க எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும். கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ் தேசிய கூட்டத்துக்கும் இடையில் 61 ஆயிரம் வாக்குகளே வித்தியாசம் அத்துடன் 3 இடத்தில் 2 இடங்களில் நாம் தான் வெற்றி பெற்றுள்ளோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். http://thinakkural.lk/article.php?local/tzbcrcweuj427234609bdc0816253e9ywsa07ace4e1526bbb1777673yigrz#sthash.qtJFwROf.dpuf

  19. போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், பொதுவான நாள் ஒன்றை சமாதானத்துக்கான நாளாக அனுஸ்டிக்க முடியுமா என்பது குறித்து தாம் ஆராய்வதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரத்துக்கு பொறுப்பாகவுள்ள நசெபி பிரபு தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட இவர், வடமாகாண ஆளுநர் எச்.என்.ஜி.எஸ்.பளிஹக்கார, யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், சிவில் சமூகப் பிரதிகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட தரப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். இதையடுத்து, புன்னாலைக்கட்டுவானிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு …

  20. சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்…

  21. சிறிலங்கா மீதான அழுத்தங்கள் தொடரும் – கூட்டமைப்புக்கு அமெரிக்கா உறுதிமொழி FEB 04, 2015 | 0:02by புதினப்பணிமனைin செய்திகள் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும் என்று, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார். கொழும்பில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். “சிறிலங்காவில் எப்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, அதன் காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்புகள், புதிய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எப்படியான…

  22. சிறிலங்காவுக்கு ஆறுமாத காலஅவகாசம் – தடை தற்காலிகமாக தளர்வு FEB 04, 2015 | 0:50by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு விதித்திருந்த தடையை, ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாகத் தளர்த்தியுள்ளதாக, சிறிலங்காவின் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வேதாராச்சி தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், சிறிலங்காவில் இருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்த்து. கடந்தமாத நடுப்பகுதியில் இந்த தடை நடைமுறைக்கு வந்திருந்தது. இதனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி மூலம் சிறிலங்காவுக்கு ஆண்டு தோறும் கிடைத்து வந்த சுமார் 100 மில்லியன் டொலர் வரைய…

    • 0 replies
    • 1.4k views
  23. முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்கள் – மைத்திரியின் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் FEB 04, 2015 | 0:18by கார்வண்ணன்in செய்திகள் பொதுமக்கள் பாதுகாப்பு என்ற போர்வையில் சிறிலங்காவின் முப்படைகளுக்கும் காவல்துறையின் அதிகாரங்களைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் அசாதாரணமான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். இந்த அசாதாரண வர்த்தமானி அறிவித்தல், நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், சிறிலங்கா ஆயுதப்படைகளிலும் பணியாற்றும் அனைவருக்கும், சிறிலங்காவின் 25 மாவட்டங்களிலும், காவல்துறையினரின் அதிகாரங்களைப்…

  24. இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையிலான சர்வதேச விசாரணைச் செயற்பாடுகளுக்கு தற்போது அவசியமில்லை எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலிடம் தெரிவித்துள்ளார். அரசாங்க மாற்றத்தின் பின்னர் இலங்கையில் ஜனநாயகம் வலுப்பெற்றுள்ளது. உள்ளக செயற்பாடுகள் நம்பிக்கையளிக்கும் வகையில் உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் சர்வதேச விசாரணைப் பொறி முறையினை விடவும் சுயாதீன உள்ளக விசாரணைகளுக்கு முக்கியத்துவமளிப்பது நாட்டின் இறையாண்மைக்கும் வென்றெடுத்துள்ள ஜனநாயகத்துக்கும் பலமானதாக அமையும். அத்தோடு வென்றெடுத்துள்ள சமாதானத்தையும் நல்லாட்சியினையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். http://virakesari.lk/articles/…

  25. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எதிர்வரும் 11ம் திகதி வரையில் வளிக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் திஸ்ஸ அத்தநாயக்க இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் இரகசிய ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பிலான ஆவணங்களையும் அவர் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். எனினும், இந்த ஆவணங்கள் போலியானவை என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பிலான விசாரணகைளின் போது இந்த …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.