ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
மைத்திரிபால சிரிசேனவின் 2015ற்கான ஜனாதிபதி செயலக செலவு 256 கோடி:- ஜனாதிபதி அலுவலகத்தின் கடந்த கால செலவுகள் 2009ம் ஆண்டு 634 கோடி ரூபாய், 2010ம் ஆண்டு 756 கோடி ரூபாய், 2011ம் ஆண்டு 5063 கோடி ரூபாய், 2012ம் ஆண்டு 5936 கோடி ரூபாய், 2013ம் ஆண்டு 8244 கோடி ரூபாய், 2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபா 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபா ஓதுக்கப்பட்டது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், பின் மைத்திரிபால சிறிசேன அரசால் அது 256 கோடியாக குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி…
-
- 0 replies
- 281 views
-
-
வடமாகாணத்திலுள்ள அரச அதிகாரிகள், முன்னைய அரசின் கட்டளையின் நிமித்தம் அச்சமான சூழலில் முன்னர் கடமையாற்றியிருந்தனர். இதனை தான் அனுபவத்தின் மூலம் கண்டறிந்ததாகவும் ஆதலால் அவர்கள் மீது குறைகூறுவதற்கு தான் விரும்பவில்லையென வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறுகையில், அலுவல் நிமித்தம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பதிவாளரைச் சந்திப்பதற்காக 2 மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்துக்கு சென்றிருந்தேன். நான் அவரைச் சந்திக்க சென்றபோது, அவர் என்னை உட்காரும்படி கூறவில்லை. நான் என்னை யார் என அறிமுகப்படுத்திய போதும் அவர் என்னை உட்காரக் கூறவில்லை. என்ன விடயம் என்றாலும் தொலைபேசியில் கேட்டிருக்கலாமே! ஏன் நேரில் வந்தீர்கள்? என…
-
- 1 reply
- 621 views
-
-
தெற்கு மற்றும் மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் அடுத்தவாரம் இரு நாள் விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை வரும் உதவி இராஜாங்க செயலாளர் அரசிலுள்ள முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி பராக் ஒபாமா இவ்வார முற்பகுதியில் இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது, இலங்கையில் ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். பிஸ்வால் ஜனநாயகத்தை வலுப்படுத்துவது தொடர்பான வலியுறுத்தலை இவ் விஜயத்தின் போது விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விர…
-
- 0 replies
- 548 views
-
-
தேசிய பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் புதிய திட்டங்களை வகுத்துள்ளதாக படைகளின் பிரதானியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சுக்கு நேற்று விஜயம் செய்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார். புதிய திட்டங்களின் மூலம் தேசிய பாதுகாப்பை பலப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பை பலப்படுத்த உள்நாட்டின் ஜனநாயக திட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=125540&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 354 views
-
-
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி படகில் சென்ற 157 ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல் சட்டரீதியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.சென்ற ஆண்டு இந்த அகதித் தஞ்சம் கோரியவர்களை சுமார் ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது. சிறு குழந்தைகள் உட்பட 157 பேரையும் நாட்கணக்கில் நடுக்கடலில் பலவந்தமாக தடுத்து வைத்ததன் மூலம் அவுஸ்திரேலியா அரசு அகதிகளை நடத்துவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளை மீறிவிட்டதாக ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்திருந்தன. ஆனால் தனது இந்த செயலை நியாயப்படுத்தியிருந்த அவுஸ்திரேலிய அரசு, அவுஸ்திரேலி…
-
- 1 reply
- 366 views
-
-
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000 ரூபாவும் ஜூன் மாதம் மிகுதி 5000 ரூபாவும் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 47% சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாக அவர் அறிவித்தார். இதேவேளை, …
-
- 0 replies
- 544 views
-
-
இராணுவ பிடியிலிருந்து வடமாகாணம் விடுபட வேண்டும்; சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணம் இராணுவ பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்பதை யாழிற்கு வருகை தந்த பிரித்தானிய வெளிவிவகார அலுவலக அமைச்சரிடம் எடுத்துரைத்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், புதிய அரசு ஆட்சிப் பெறுப்பினை ஏற்றுள்ள நிலையில் வடமாகாணத்தில் இடம்பெறும் மாற்றங்கள் தொடர்பாக அவர்கள் ஆவலாக கேட்டறிந்தனர். புதிய அரசின் செயற்பாடுகள் பல இடத்தில் நன்மை பயக்கின்றது. குறிப்பாக ஆளுநர், பிரதம செயளாளர் ஆகியவர்களின் மாற்றங்கள் …
-
- 1 reply
- 412 views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியடைறச் செய்ய பணியாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்கவிடம் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் புரியப்பட்ட அனைத்து தீமைகளுக்கும் மன்னிப்பு வழங்கி, அவருடன் இணைந்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிய, வெற்றிபெறும் கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும் என அவர் கோரியுள்ளனர். இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த, நாட்டிற்கும், கட்சிக்கும், தனக்கும் எதிராக கடந்த ஒன்பது வருடங்களாக நடந்துகொண்ட விதத்தை சந்திரிக்கா குமாரத…
-
- 5 replies
- 930 views
-
-
மினி பட்ஜெட்டினால் மக்களுக்கு 3 மடங்கு நன்மைகள்; அசாத்சாலி உறுதிமொழி அளிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகளவான பொருட்களுக்கு இன்றைய வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்கப்படும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத்சாலி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சியாளர்கள் வீணாக செலவுசெய்த கோடிக்கணக்கான பணத்தை மீதப்படுத்தியே மக்களுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சிக்கான அரசு முன்னைய ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த வீண் செலவுகளை தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த வீண்செலவுகளை சேமித்தே மக்களுக்கு நிவாரணங்கள…
-
- 0 replies
- 382 views
-
-
அணித் தலைவர் பதவிகளில் இருந்து தூக்கப்படும் மகிந்தவின் புதல்வர்கள் JAN 29, 2015 | 1:35by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர். மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், அவரது இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையின் ரக்பி அணியின் தலைவராகவும், இளைய மகன் ரோகித ராஜபக்ச சிறிலங்கா இராணுவ ரக்பி அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். தற்போது இவர்களை இந்தப் பதவிகளில் இருந்து நீக்குமாறு உயர்மட்டத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொ…
-
- 0 replies
- 600 views
-
-
நெடுந்தீவு மக்களை அச்சுறுத்தி வரும் ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்தவரும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபை பஸ் சாரதியுமான அப்பன் என்பவர் தொடர்பில் நடவடிக்கை எடுக்கமாறு நெடுந்தீவு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவிற்கு நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விஜயம் மேற்கொண்டதை அடுத்து இரவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மற்றும் நேற்றைய தினம் ஒழுங்குகளை மேற்கொண்டவர்களை அச்சுறுத்தினார் என நெடுந்தீவு மக்களால் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்னத்திற்கு மக்கள் இன்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளனர். அதேவேளை நெடுந்தீவுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு குறித்த சாரதி அச்சுறுத்தல் விடுத்திருந்தார். நெடுந்தீவு மக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அசித பிபாத் என்ற ஓய்வுபெற்ற மேஜர் அதிகாரி கடந்த 26ஆம் திகதி முதல் உண்ணாநிலைப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகிறார். தன்னையும், சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய அரசியல் கட்சிகளையும் வதைத்துவரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். இராணுவ அதிகாரியுடன் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதத்தினால் தன்மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இவ்வாறு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளவரின் குரல் (சிங்கள) பதிவை இங்கே கேட்கலாம். http://www.tamil.…
-
- 3 replies
- 531 views
-
-
நலத்திட்டங்களில் புறக்கணிப்பு! கிளிநொச்சி மக்கள் மகஜர் கையளித்தனர்…. கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதி மக்கள் கடந்த காலத்தில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அரசாங்க அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து (28.01.2015) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அரச செயலகம், கரைச்சி பிரதேச செயலகம் என்பவற்றின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிள்ளதுடன் பிரமதர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கும் பிரதிகளை கையளித்துள்ளனர். அத்துடன் என்னிடமும் தமது மகஜரின் பிரதிகளை எமது அலுவலகமான அறிவகத்தில் கையளித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளேன். இன்ற…
-
- 0 replies
- 415 views
-
-
வலி.வடக்கு மக்களை நாளைய தினம் பிரிட்டன் வெளியுவுத் துறை அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இங்குள்ள தற்போதைய நிலைமைகளை ஆராய்வதில் மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அதனடிப்படையில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியுகோ ஸ்வெயர் இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இன்று கொழும்பு வரும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பை முடித்துக் கொண்டு நாளைய தினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளார். கொழும்பிலிருந்து விசேட விமான மூலம் யாழ். வரும் அவர் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அதன…
-
- 1 reply
- 429 views
-
-
எக்காரணம் கொண்டும் ஜ.நாவினது போர்க்குற்ற விசாரணைகளை பின் போடுவதையோ அல்லது கைவிடுவதையோ தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் இது பற்றி மேலும் தெரிவிக்கையில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மீண்டும் உள்ளக விசாரணை பற்றியே பேசி வருகின்றனர். ஆனால் உள்ளக விசாரணை தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டதொன்று. கடந்த காலங்களினில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுக்கள் அவர்களது செயற்பாடுகள் என்பவை மக்களால் நிராகரிக்கப்பட்டது ஒன்றாகும். அவை மீதான நம்பிக்…
-
- 0 replies
- 579 views
-
-
நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு- கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், மிரட்டல்கள், உட்பட அனைத்து குற்றச்சசெயல்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே காரணம்என நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள்என்ற அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. வெலிக்கடைசிறைச்சாலையில் 2012 நவம்பரில் இடம்பெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அந்த அமைப்பு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. குறிப்பிட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி சேனஹ பெரேரா இதனை தெரிவித்துள்ளார். நவம்பர் 2012 இல் வெலிக்கடையில் நடைபெற்ற கலவரங்களை நியாயப்படுத்துவதிலேயே அதிகாரிகள் இத…
-
- 0 replies
- 543 views
-
-
இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கு , கிழக்கு மக்கள் இன்னமும் இந்தியாவையே நம்பியிருக்கின்றனர். அதேபோல அவற்றினை உரிய முறையில் பெற்றுக் கொடுக்கும் தார்மீக கடப்பாடும் இந்தியாவுக்கு உண்டு என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 66 ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ். நகர விடுதியொன்றில் இன்று இரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்திய குடியரசு தினத்தில் என்னை அழைத்தமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் புதியதொரு அரசியல் சூழலில் பதவியேற்று வடக்கு மாகாணத்திற்க…
-
- 6 replies
- 598 views
-
-
ஈ.பி.டி.பியின் கோட்டைக்குள் வட மாகாண உறுப்பினர் விந்தன் தலைமையில் முதல்வர் உள்ளிட்ட குழுவினர் விஜயம்! [ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:18.25 PM GMT ] லங்காசிறி யாழ்.மாவட்டத்தில் ஈ.பி.டி.பியின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட நெடுந்தீவு பகுதிக்குள் வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் தலமையிலான குழு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில் மக்கள் வீதிகளில் கும்பங்கள் வைத்து வெடிகொழுத்தி ஆர்ப்பரித்தபடி முதலமைச்சர் தலைமையிலான குழுவை வரவேற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தின் ஏற்பாட்டிலேயே இக்குழுவினர் நெடுந்தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். வடமாகாணத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று…
-
- 5 replies
- 1k views
-
-
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும். மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவ…
-
- 28 replies
- 2.5k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 2ஆம் இணைப்பு:- முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக மற்றுமொரு விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்ச்சித் திட்டமொன்றை கோதபாய ராஜபக்ஸ முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஊடாக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்ச்சித் திட்டம் குறித்த ஆவணங்கள் தேசிய நிறைவேற்றுப் பேரவையிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். வடக்கில் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி பாரியளவில் பிரச்சினைகளை உருவாக்குவதே கோதபாயவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர…
-
- 1 reply
- 728 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இராணுவத்தினரின் கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய செல்வராஜா ஜெகன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி எள்ளங்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மைதானத்தில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வழமைபோல் இன்று மாலையும் உதைபந்து விளையாடியுள்ளனர். இதன்போது பந்து அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் சென்றுள்ளது. இதனையடுத்து பந்தை எடுப்பதற்காக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஜெகன் என்ற இளம் குடும்பஸ்தர் இர…
-
- 65 replies
- 4.5k views
-
-
குற்றச்சாட்டுகளை மறுக்கிறார் மகிந்த JAN 28, 2015 | 0:38by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் நடந்த அதிபர் தேர்தலில் தாம் தோல்வியடைந்த பின்னர், தமக்கு எதிராகவும், தமது குடும்பத்தினருக்கு எதிராகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்லில் தோல்வியடைந்த பின்னர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதாக என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. அது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு. அதுபோன்று தேர்தலுக்கு பின்னர் எனது குடும்பத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வ…
-
- 2 replies
- 700 views
-
-
யோசித ராஜபக்சவின் பதவி விலகல் கடிதம் நிராகரிப்பு JAN 28, 2015 | 1:17by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான, லெப். யோசித ராஜபக்ச சிறிலங்கா கடற்படையில் இருந்து விலகுவதாக அளித்த பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா கடற்படைத் தளபதி நிராகரித்துள்ளார். அதிபர் தேர்தலுக்கு மறுநாளான கடந்த ஜனவரி 9ம் நாள், சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜயந்த பெரேராவுக்கு, லெப்.யோசித ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக சிறிலங்கா கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். ஆனாலும், அவரது பதவி விலகல் கடிதத்தை கடற்படை தளபதி ஏற்றுக் கொள்ளவில்லை என்று கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார். …
-
- 1 reply
- 873 views
-
-
கொழும்புக்கு படையெடுக்கவுள்ள அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்டங்கள் JAN 27, 2015 | 1:33by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள், அமெரிக்க மற்றும் பிரித்தானிய அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் சிறிலங்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த விருப்பம் கொண்டுள்ளன. மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட இடைவெளியை நிரவும் நோக்கில், அமெரிக்க, பிரித்தானிய உயர்மட்ட அரச பிரதிநிதிகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கொழும்பு வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கொழும்பு வரவுள்ளோரில், தெற்கு மற்றும…
-
- 1 reply
- 884 views
-
-
பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் யாழ்ப்பாணம் செல்கிறார் JAN 28, 2015 | 1:34by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்கு மூன்று நாள் பயணமாக இன்று கொழும்பு வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர் இன்று தொடக்கம் எதிர்வரும் 30ம் நாள் வரை சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இது அவர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் என்பதுடன், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், பிரித்தானியாவின் உயர்மட்ட அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது பயணமும் ஆகும். இந்தப் பயணத்தின் போது, பிரித்தானிய வெளிவிவகார ம…
-
- 0 replies
- 477 views
-