ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பறிக்கப்பட்ட பட்டங்கள் சலுகைகள் அனைத்தையும் மீண்டும் பெறுகிறார்:- மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகபிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான பொதுமன்னிப்பை வழங்கி உள்ளதாவும் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீருபனமாகி உள்ளதாக இராணுவ நீதிமன்றம் இன்று 2011 இல் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115783/language/ta-IN/article.aspx
-
- 14 replies
- 1k views
-
-
சொர்ணகுமார் சொரூபன் இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நூல் இந்தியாவில் அண்மையில் எரிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.இலக்கிய குவியத்தின் ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. எழுத்தாளர் தெரிவித்த ஒரு கருத்துக்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், 'அவரது மாதொருபாகன்' நூல் அண்மையில் எரிக்கப்பட்டது. இதனால், எழுத்தாளர் தான் இதுவரையில் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீளப்பெற்றதுடன், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி இனி எழுதப்போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார். நூல் எரிக்கப்பட்டமை, ஒரு எழுத்தாளர் முடக்கப்பட்டமை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
- 41 replies
- 3.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், சுமார் 1080 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடியேறியுள்ளனர். அவர்களை தொடர்ந்தும் புலனாய்வுத் தரப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். அதேநேரம் அவர்களுக்கான எந்த உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று, பிரதேச செயலகங்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://www.pathivu.com/news/37173/57//d,article_full.aspx
-
- 0 replies
- 672 views
-
-
அலரி மாளிகையில் மொகான் பீரிசை கண்டதாக நினைவில்லையாம் – உதய கம்மன்பில கூறுகிறார் JAN 22, 2015 | 0:16by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தேர்தல் நாளன்று இரவு அலரி மாளிகையில் பிரதம நீதியரசர் இருந்தாரா என்பது தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ள முன்னாள் மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில, ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனம் செய்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பின்னர், இராணுவத்தின் உதவியுடன் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள மகிந்த ராஜபக்ச முயற்சித்த்தாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, அப்போது அலரி மாளிகையில் இருந்த உதய கம்மன்பிலவிடம் நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து வெளியே வந்த அ…
-
- 4 replies
- 2.6k views
-
-
முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள வீடு நேற்று சிறிலங்கா காவல்துறையினரால், சோதனையிடப்பட்ட நிலையில், இன்று அவர் கண்டியில் மகாநாயக்க தேரர்களை சந்தித்து, தாம் பழிவாங்கப்படுவதாக முறைப்பாடு செய்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில், லம்போகினி சொகுசு பந்தயக் கார் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற ஆணையுடன் நேற்றுக்காலை காவல்துறையினர் தேடுதல் நடத்தியிருந்தனர். இது மகிந்த ராஜபக்சவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், இன்று காலை கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளை சந்தித்து இரண்டு மணிநேரத்துக்கு மேலாக கலந்துரையாடியுள்ளார். இதன்போது அவர், தற…
-
- 18 replies
- 1.1k views
-
-
புலிகளின் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மாளிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான பல அதி சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி மாளிகையிலும், ஜனாதிபதி செயலகத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளன. இறுதிக் கட்ட போரின் பின்னர் மீட்கப்பட்ட மற்றும் போர் இடம்பெற்ற காலத்தில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட சில அரச சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும் மீட்கப்பட்ட வாகனங்கள் பற்றிய தகவல்கள் உரிய முறையில் பதியப்பட்டிருக்கவில்லை. பல வாகனங்கள் பற்றிய தகவல்கள் எந்தவொரு ஆவணத்திலும் பதியப்படாமலே வாகனங்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் உயர் அதிகா…
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக மொகான் பீரிஸ் முடிவு JAN 21, 2015 | 13:15by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் பிரதம நீதியரசர் மொகான் பீரிஸ் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுக்களை அடுத்தே, மொகான் பீரிஸ் பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலக இணக்கம் தெரிவித்துள்ளார். முன்னைய ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால், பழிவாங்கும் வகையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட, சிராணி பண்டாரநாயக்கவை மீண்டும் பதவிக்கு அமர்த்தும் நோக்கிலேயே, மொகான் பீரிசை பதவியில் இருந்து விலக வைக்க அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்த…
-
- 1 reply
- 645 views
-
-
மைத்திரி அரசின் மூன்று அதிரடி நடவடிக்கைகள் JAN 22, 2015 | 0:03by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில் பணியாற்றும், வெளிவிவகாரச் சேவையைச் சாராத, அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய வெளிவிவகாரச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சித்திராங்கனி வகீஸ்வரா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பணியாற்றும் 57 தூதுவர்களுக்கு இதற்கான உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவர்களை பெப்ரவரி 28ம் நாளுக்குள் நாடு திரும்புமாறும் கோரப்பட்டுள்ளது. 54 நாடுகளில் உள்ள சிறிலங்காவின் தூதரகங்களில், முன்னைய அரசாங்கத்தினால் பெரும்பாலும் அரசியல் செல்வாக்கு…
-
- 0 replies
- 643 views
-
-
நாடாளுமன்றத்தில் ஆசனம் கிடைக்காமல் அலைந்த திஸ்ஸ அத்தநாயக்க! [Wednesday 2015-01-21 09:00] முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரிய ஆசனம் ஒதுக்கப்படாத காரணத்தினால் அமர்வுகளில் பங்கேற்காது நேற்று திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாடாளுமன்ற அமர்வுகள் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான போது ஆளும், எதிர்க்கட்சியினருக்கான ஆசன ஒதுக்கீடு தொடர்பில் சிக்கல் நிலைமை காணப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு, ஆளும் கட்சிப் பகுதியில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் திஸ்ஸ அத்தநாயக்க அமர்வுகளில் பங்கேற்காது அவையை விட்டு வெளியேறிச் சென்று நாடாளுமன்ற செயலாள…
-
- 1 reply
- 227 views
-
-
கைது செய்யப்பட்டுள்ள பெருந்தொகை போதைப்பொருள் வர்த்தகரான வேலே சுதா என்றழைக்கப்படும் சமந்த குமாரவிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர் முக்கியஸ்தர்கள் அறுவரின் பெயர்களை அம்பலப்படுத்தியுள்ளார் என்று பொலிஸ் உள்ளக தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது. அந்த அறுவரும் நாட்டைவிட்டு தப்பியோடாமல் இருப்பதற்கான கதவுகளை மூடிவிடுமாறும் அவர் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெலே சுதாவினால் வெளிப்படுத்தப்பட்ட முக்கியஸ்தர்கள் அறுவரில் அரசியல்வாதிகள் இருவர், பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களைச்சேர்ந்த நால்வர் இருப்பதாகவும் தெரியவருகின்றது. 2012ஆம் ஆண்டிலிருந்து வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற வெலே சுதா, மூன்று வருட காலத்துக்குள் 1000 கிலோகிராமுக்கு மேல் ஹெ…
-
- 2 replies
- 648 views
-
-
தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் ஆதரவாளர்கள் தமது கட்சி ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார் தமக்கும் தமது கட்சியின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறான 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தாக்குதல்கள் தற்போதைய அரசாங்கத்திற்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் பாதக நிலைமைகளை உருவாக்கும் என பிள்ளையான் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 5 replies
- 937 views
-
-
சிறிலங்கா ஐனநாயக பண்புகளுக்கு மீளவும் திரும்ப அமெரிக்காவால் என்ன செய்ய முடியும்? JAN 21, 2015 | 11:36by நித்தியபாரதிin கட்டுரைகள் திரு.ராஜபக்ச அமெரிக்காவின் குடிமகன் என்ற வகையில் 1996 போர்க் குற்றச் சட்டத்தின் கீழ் இவர் உலகின் எந்தவொரு நாட்டிலும் வைத்து அமெரிக்க நீதிமன்றங்களின் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி கைதுசெய்யப்பட முடியும். மறுவழியில் பார்த்தால், திரு.ராஜபக்ச விடயத்தில் அமெரிக்கா மிகச் சரியான பொருத்தமான நியாயப்படுத்தலை தனிப்பட்ட ரீதியாக மேற்கொள்வதற்கான உரிமையைக் கொண்டுள்ளது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக்கொண்ட New York Times ஊடகத்தில் RYAN GOODMAN எழுதியுள்ள எண்ண வெளிப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்…
-
- 0 replies
- 466 views
-
-
கடமைகளைப் பொறுப்பேற்றார் வேலாயுதம் பெருந்தோட்ட நிறுவணங்களின் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். செத்சிரிபாயவில் உள்ள 8ஆம் மாடியில் அமைந்துள்ள பெருந்தோட்ட அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் அமைச்சுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட செயலளார் விஜயலக்சுமி மற்றும் கல்வி பிரதியமைசர் ராதகிருஸணன் ஆகியோர் கலந்து கொண்டார். - See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=456413824121436303#sthash.Rkn8jLYR.dpuf
-
- 1 reply
- 363 views
-
-
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திலக் கருணாரத்ன பங்கு பரிவர்த்தனை ஆணையகத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை உறுதி செய்துள்ளார். திலக் கருணாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 2011 டிசம்பர் 8ம் திகதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அதன் பின் அவர் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115786/language/ta-IN/article.aspx
-
- 0 replies
- 583 views
-
-
யாழ்ப்பாணத்தில் மைத்திரிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளிற்கு கழிவு ஓயில் வீசப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. இது தொடர்பினில் கட்சியின் செயலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பினில் யாழ் மாவட்டம் முழுவதும் நன்றி தெரிவிக்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மீது சில விசமிகள் ஒயில் பூசியதை காணக்கூடியதாக உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி மற்றும் கூட்டமைப்பு போன்றவை மைத்திரிக்கு ஆதரவளித்திருந்தமை தெரிந்ததே. http://www.pathivu.com/news/37129/57//d,article_full.aspx
-
- 17 replies
- 1k views
-
-
அரசியல் இலாபத்திற்காக எங்களை பயன்படுத்தாதீர்கள்: வேலையற்ற பட்டதாரிகள் அரசியல் தலையீடு காரணமாகவும் ,சுயஇலாப நோக்கத்திற்காகவும் எங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தாதீர்கள் என வடமாகாண வேலையற்ற பட்டாதாரிகள் சமூகம் தெரிவித்துள்ளது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் உள்ள பழைய பூங்கா முன்றலில் அமைதியான முறையில் இடம்பெற்றது. வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளை வேலைவாய்ப்புக்களில் உள்ளீர்ப்பது தொடர்பில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அதன்படி வடமாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளர் செல்வநாயகத்திடம் கையளிக்கப்பட்டு அதனூடாக ஆளுநருக்கும்,அர…
-
- 1 reply
- 377 views
-
-
மஹநுவர ஆயுதக்கப்பல் சட்டரீதியானது ; பாதுகாப்பு செயலர் காலியில் நங்கூரமிட்டிருந்த மஹநுவர என்ற கப்பலில் உள்ள ஆயுதக்களஞ்சியம் சட்ட ரீதியானதே என பாதுகாப்புச் செயலாளர் யூ.டி பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். காலியில் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் கப்பலில் இருந்து பெருந்தொகையான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன. எனினும் இந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 3000த்திற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மற்றும் லட்சக் கணக்கான தோட்டாக்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். காலி துறைமுகத்திலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில்…
-
- 0 replies
- 367 views
-
-
டெங்கை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கைகள் முதலமைச்சரின் தீர்மானத்திற்கமைய விசேட டெங்குக் கட்டுப்பாட்டு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் குருநகர் பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் மொத்தமாக 1090 குடியிருப்புகள் பார்வையிடப்பட்டன. இவற்றில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் கொண்ட 215 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் 35 இடங்களில் நுளம்புக் குடம்பிகளும் இனங்காணப்பட்டன. 53 குடியிருப்பாளர்களுக்கு எதிராக நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான சூழலினைக் கொண்டிருந்தமையால் எச்சரிக்கை அறிவித்தல்கள் வழங்கப்பட்டதுடன்,14 குடியிருப்பாளர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 277 views
-
-
ஐ.தே.க ஆதரவாளர் சாவு ; முன்னாள் பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் உட்பட மூவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதிமன்ற நீதவான் தினேஸ் லக்மால் பெரேரா உத்தரவிட்டார். நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரப்புரைக் கூட்டத்திற்காக கடந்த 5ஆம் திகதி கஹவத்தையில் ஏற்ப்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மின்சக்தி பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மாகாண சபை உறுப்பினர் நிலந்த ஜயகொடி, கஹத்தை பிரதேச…
-
- 0 replies
- 486 views
-
-
கழிவு எண்ணெய் விவகாரம்; யூனியன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் சுன்னாகம் கழிவு எண்ணெய் பிரச்சினையினை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான மாணவர்கள் 'பாட்டன்,பூட்டன் வெட்டிய கிணற்றில் கம்பனி கழிவு எண்ணையினை நிரப்பாதே', 'நன்னீரை நாசமாக்காதே எங்கள் வாழ்வை நசமாக்காதே', 'பிரச்சினைக்கான மூலத்தை கண்டறியுங்கள்', 'குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு தாருங்கள்', 'குழு என்றும் விசாரணை என்றும் காலத்தை கடத்தாதீர்', 'ஒரு புறத்தில் நன்னீர் நஞ்சாக்கப்படுகிறது மறுபுறத்தால் தண்ணீர் வியாபாரம் பெருகிறது',;…
-
- 0 replies
- 245 views
-
-
கூழாவடி ஆனைக்கோட்டை என்னுமிடத்தில் பொது மக்கள் பலருக்குச் சொந்தமான காணிகள் வீடுகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அக் காணிகள் ஸ்ரீலங்கா அரசினால் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கப்படவுள்ளது. ஜே-133 இல கிராமசேவகர் பிரிவில் சுவீகரிக்கப்பட்ட மேற்படி காணிகள் வீடுகளை ஸ்ரீலங்கா இராணுவத்தின் 11வது சிங்க றெஜிமென்ற் ‘பி’ அணிக்கான நிரந்தர நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக வழங்கப்படவுள்ளது. மேற்படி இராணுவ முகாம் அமைப்பதற்காக இராணுவத்தினரிடம் காணி கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெறவுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலரினால் குறித்த காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. மேற்படி காணிகளை இராணுவ முகாம…
-
- 2 replies
- 465 views
-
-
இலங்கை இந்திய உடன்படிக்கையின் அரிய சந்தர்ப்பத்தை புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்தார்:- வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ புரிந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறியமையே மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர…
-
- 13 replies
- 988 views
-
-
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை கிணற்றிலும் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெல்லிப்பளை சுகாதார வைத்தியதிகாரி பி.நந்தகுமார் புதன்கிழமை (21) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'தெல்லிப்பளை வைத்தியசாலையிலுள்ள கிணற்றில் எண்ணெய் படலம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்று பரிசோதனை செய்தபோது எண்ணெய் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார். இது தொடர்பில் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியதையடுத்து, வைத்தியசாலைக்கான நீர் விநியோகம் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கிணற்றில் மாசுபடலம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், உறுதிப்படுத்தும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மே…
-
- 0 replies
- 452 views
-
-
ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் பிரிவினைக்கான ஒப்பந்தமாம்! ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அரசியல் பழிவாங்கல்களும் பிரிவினைக்கான ஒப்பந்தமும் மட்டுமே காணப்படுகின்றன. ஜனநாயக சாயம் பூசி வடக்கு கிழக்கிற்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றதென குற்றம் சுமத்தும் பொதுபல சேனா பெளத்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சர்வதேசத்தின் முன்னிலையில் சிங்கள பெளத்த இனத்தை நிர்வாணப்படுத்தும் செயலை தேசிய அரசாங்கம் செய்வதாகவும் தெரிவித்தார்.பொதுபலசேனா பெளத்த அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, தற்போது ஏற்பட்…
-
- 0 replies
- 719 views
-
-
கூட்டமைப்பின் மனதை வென்றாலே தீர்வு சாத்தியம் என்கிறார் வாசுதேவ! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மனதை வெல்லாது, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணமுடியாது என்பதுடன் தேசிய சமத்துவத்தையும் கட்டியெழுப்ப முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.ஆட்சி மாற்றத்தின் பின்னர், புதிய அரசின் தலைமையில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு நேற்று நடைபெற்றது. இந்த அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக இடதுசாரி முன்னணி எதிரணியில் இருந்துகொண்டு அரசின் மக்கள் சார் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும். குறிப்பாக வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ…
-
- 0 replies
- 515 views
-