Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தற்பொழுது கிடைத்துள்ளதாகவும் அது தனது பெரும்பான்மையை எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் நிரூபிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாடாளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 113ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக் கட்சியின் 6 உறுப்பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட 25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழ…

  2. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து பணியாற்ற விரும்புவதாக புதிய மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்கனவே கல…

  3. நாடு முழுவதிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பேனர்கள் மற்றும் கட்அவுட்களையும் உடனடியாக அகற்றுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தமது உருவப்படம் பொறித்த கட்அவுட்கள் மற்றும் பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேவையற்ற வகையில் பேனர்கள் கட்அவுட்களை காட்சிப்படுத்த பொதுமக்கள் பணத்தை விரயமாக்கி வருவதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவானதனைத் தொடர்ந்து ஆதரவாளர்கள் நாட்டின் பல பாகங்களிலும் வாழ்த்து தெரிவித்து சுவ…

  4. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் நடத்த ஏற்பாடாகியிருந்த தேசிய சுதந்திர தினம் அங்கு இடம்பெறாது என நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சொந்த ஊரான வீரகெட்டியவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதி தேசிய சுதந்திர தின விழாவின் பிரதான நிகழ்வு நடாத்தப்படவிருந்தது. அதற்கான முன் ஆயத்தப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து, சுதந்திர தின நிகழ்வுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு பாராளுமன்ற மைதானத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். செலவு…

  5. கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மண் அகழ்வால் பாரிய சூழலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன் ஆறு 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து குடமுருட்டி ஆற்றுடன் இணைகின்றது. இந்த ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் நடைபெறும் மண் அகழ்வால் ஆற்றுப் பகுதியிலுள்ள அக்கராயன் மத்தியப்பகுதி, அக்கராயன் கிழக்குப்பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் பெரும் ஆபத்;தை எதிர்நோக்கியுள்ளது. அக்கராயன்மத்தி என்பது கடல் மட்டத்திலிருந்து 115 அடிக்கு மேலான உயர்வான பகுதியாகும். மேற்படி பகுதிகளில் நிலத்தடி நீரை தக்கவைப்பதில் அக்கராயன் ஆறு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது அக்கராயன் ஆற…

  6. தேர்தல் முடி­வுகள் அறி­விக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த போது இரா­ணு­வத்தை பயன்­ப­டுத்தி ஆட்சிக் கவிழ்ப்­புக்கு சதித்­திட்டம் தீட்­டி­யமை தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்றை நடத்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீர்­மா­னித்­துள்­ளனர். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜ­பக் ஷ, முன்னாள் வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மாகாண சபை அமைச்சர் உதயகம்மன்பில, பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் ஆகி­யோ­ருக்கு எதி­ராக எழுந்­துள்ள குற்றச் சாட்டு தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­ற­வுள்­ளன. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் முன் வைக்­கப்­பட்­டுள்ள இது தொடர்­பி­லான முறைப்­பாடு குறித்து தற்­ப…

  7. அரசியல் செல்வாக்கில் தூதுவர்களானவர்களுக்கு ஆப்பு வைக்கிறார் மங்கள சமரவீர JAN 16, 2015 | 3:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார். அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளைப் பெற்றவர்கள் தாமாகப் பதவி விலகுவதற்கு ஒருவார காலஅவகாசத்தை மங்கள சமரவீர வழங்கவிருக்கிறார். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலர் சித்ராங்கனி வாகீஸ்வரா பொறுப்பேற்றதும், அரசியல் செல்வாக்கில் இராஜதந்திரப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும், கொழும்புக்குத் திருப்பி அழைக்கப்படவுள்ளனர். எனி…

  8. நாமல் ராஜபக்ஸவிற்கு தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் 14 ஜனவரி 2015 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இது குறித்து தங்காலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஒரே தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நான்கு தடவைகள் மிரட்டல் விடுக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அரசியலை விட்டு விலகிச் செல்லுமாறு மிரட்டல் விடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி முதல் 12 மணி வரையில் இவ்வாறு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அரசியலை கைவிடாவிட்டால் கொலை செய்யப் போவ…

    • 2 replies
    • 2.5k views
  9. இலங்கையில் நடைபெற்று முடிவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தமிழர்களின் மனங்களில் ஓரளவுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ள தருணத்தில் தமது உசுப்பேத்தும் பாணியை தமிழகத் தலைவர்களுள் ஒருவரான தொல்திருமாவளவன் தொடங்கியிருப்பது வேதனை தருகின்ற விடயமாகும் எனத் தெரிவித்துள்ள தழிழர் ஆசிரியர் சங்கம், இதுபோன்ற கருத்துக்களை முன்வைத்தால் உலகளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர்களுக்கூடாக உங்களைக் கண்டிக்க வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா புவனேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள மடலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மடலில், காலம் காலமாக இலங்கையில் உள்ள இலங்கைத் தமிழர்கள் படுகின்ற துன்பங்களும், துயரங்களும் எண்ணிலடங்காதவை. …

  10. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி மாளிகையில் இருந்து செல்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் http://tamil.adaderana.lk/news.php?nid=65199

  11. யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்துவைப்பதுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை அடங்கலாக சகல தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைந்து வேலை செய்ய விரும்புவதாக புதிய அரசாங்கம் வியாழக்கிழமை (15) தெரிவித்தது. மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சராக பதவியேற்றுள்ள டி.எம். சுவாமிநாதன், தனது கடமைகளை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திர மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஆகியோரிடம் மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற…

  12. எம்மை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. எமக்கு இதுவரை எதுவித அறிவித்தலும் வரவில்லை. அவ்வாறு எம்மை எதேச்சையாக நீக்கிவிடமுடியாது. நாம் விரும்பினால் வெளியேறலாம் என தெரிவித்துள்ளார் சிவகரன். தமிழரசுக்கட்சியின் இளைஞரணி செயலாளர் சிவகரன் விடுத்துள்ள அறிவிப்பில்: தீவிரமான கடும் போக்குடைய உண்மையான, நேர்மையாக தமிழின விடுதலை எனும் கோட்பாட்டுடன் விசுவாசமாக எந்த வித எதிர்பாப்பும் இன்றி தேசியத்திற்காக சேவையில் ஈடுபடும் நாம். அரசியல் வியாபாரிகள் இல்லை. தமிழின விடுதலைக்காக, உயிர்தியாகம் செய்யவும் தயாராக இருக்கின்றோம். அத்துடன் பதவிகளுக்கு ஆசைப்படுபவர்கள் என்றால் வாய் மூடி மௌனிகளாகவே இருந்திருப்போம். அது எமது நோக்கமில்லை. புலிகளி…

  13. இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றத் தாம் தயார் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. நல்லாட்சி மற்றும் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயலாற்றுதல் குறித்த புதிய அரசின் அர்ப்பணிப்புக்களையும் அது வரவேற்றுள்ளது. இதேவேளை வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கும், அமைச்சரவை அலுவலகத்திற்குமான பிரபுக்கள் சபையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசு எதிர்காலத்தில் இலங்கை குறித்த ஐ.நா விசாரணைகள் குறித்து தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://seithy.com/breifNews.php?newsID=124667&category=TamilNews&language=tamil

  14. சீனாவுடனான உறவுக்கு சிறிலங்கா முன்னுரிமை கொடுக்குமாம் – ரணில் கூறுகிறார் JAN 15, 2015 | 13:20 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சீனாவுடனான உறவுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்ஹாவோ இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேசினார். இதன்போது, சீனப் பிரதமர் லி கெகியாங் கொடுத்தனுப்பிய வாழ்த்துச் செய்தியை புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சீனத் தூதுவர் கையளித்தார். இதன்போது, சீனத் தூதுவர், தமது நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் சிறிலங்காவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு ந…

  15. வொசிங்டன் பொங்கல் விழாவில் நிஷா பிஸ்வால் – சிறிலங்கா தூதுவருடன் முக்கிய பேச்சு JAN 15, 2015 | 12:35by கார்வண்ணன்in செய்திகள் வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார். சிறிலங்காவிலும், இந்தியாவிலும் உலகின் மற்ற நாடுகளிலும் இன்று தைப்பொங்கலைக் கொண்டாடும் தமிழ் நண்பர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதாக, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதேவேளை, இன்று வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவின் போது, அம…

  16. சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பசில் – தோல்விக்கு பொறுப்பேற்கிறார் JAN 15, 2015 | 10:13by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில் தனது சகோதரர் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்ததற்கு தாம் பொறுப்பேற்பதாகவும், பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்சவே மகிந்த ராஜபக்சவின் அதிபர் தேர்தல் பரப்புரைகளுக்கு பொறுப்பாக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, த…

  17. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை (14) இரவு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி விலகிவிடக்கூடாது என்று, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் மாகாண சபை உறுப்பினரான உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானத்தை மேல்மாகாண முதலைமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பார் என்று கூறப்படுகின்றது. …

  18. தேசிய அரசாங்கம் அமையப்பெறும் பட்சத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையே நேற்றிரவு சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் எதிர்க்கட்சி…

  19. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நடத்தப்பட்டு வரும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய அணுகுமுறையை பின்பற்ற உள்ளதாக புதிய அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்ட உடனேயே வெளிவிவகார அமை;சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைகள் தொடர்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். தொழில்சார் தகுதியுடைய ராஜதந்திரிகள் எதிர்வரும் காலங்களில் முக்கிய நாடுகளில் பதவியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், அரசியல் ரீதியான நியமனங்களை வரையறுக்…

  20. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற கடந்த 8 ஆம் திகதியும் அதற்கு முன்தினமான 7 ஆம் திகதியும் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்கள் இலங்கையில் உள்ள வங்கிகளில் இருந்து 500 கோடி ரூபா பணத்தை எடுத்துள்ளதாக நம்பிக்கையான வட்டாரங்களின் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினத்தில் இலங்கை வங்கிகளில் 5ஆயிரம் ரூபா நாணயத்தாள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இது குறித்து நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் கசிந்துள்ளது. இந்த பெருந் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. அவரது ஆலோனைக்கு அமையவே இந்த பணத்தை வங்கிகள் விடுத்துள்ளன. மைத்திரிபால சிறிசேன பதவிக்கு…

  21. ஊவா மாகாணசபை ஐதேக வசம் – ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் முற்றாக ஒழிகிறது JAN 13, 2015 | 10:56 by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பெறாமகனின் கையில் இருந்த ஊவா மாகாணத்தின் ஆட்சி அதிகாரத்தையும் ஐதேக தலைமையிலான கூட்டணி கைப்பற்றியுள்ளது. இதனால், ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச பதவி இழக்கவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஐந்து மாகாண சபை உறுப்பினர்கள், ஐதேக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர். அத்துடன் தேர்தலின் போது, மகிந்த ராஜபக்ச பக்கம் ஓடிய ஐதேக மாகாணசபை உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியும், மீண்டும் ஐதேகவுக்குத் திரும்பியுள்ளார். இந்தநிலையில், ஐதேகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளதால், ஊவா மா…

  22. இலங்கை அரசியலில் சிலபேரின்ட நிலை ரொம்ப கவலைக் கிடமாய் இருக்குது.. ஓ ஜனவரி எட்டுக்குப் பிறகும் நான்தான் ஜனாதிபதி எண்டார் மகிந்தர். அதுவும் சும்மா சொல்லேல்ல. கடும் கெப்பரில கொக்கரிச்சார். அவர்தான் என்ன நடக்கப்போகுது எண்டு தெரியாமல் சாத்திரியின்ட கதையை கேட்டு கொக்கரிக்கிறார் எண்டால் அவரைச் சுத்தி நின்ற வாலுகளும் ஏன் கொக்கரிக்க வேணும்? இப்ப போற இடம் தெரியாமல் அல்லாட அவையின்ட வாய் கண்டபடி திக்குமுக்காடி உளறுது. உவர் அமைச்சர் ஹிஸ்புல்லா இருக்கிறார்தானே? அவருக்கு மகிந்தவ தோற்கடிச்ச பெரும இருக்குது. ஏன் எண்டுறியளே? விடுதலைப் புலியள மகிந்த பூண்டோட படுகொலை செய்தவர் எண்டு போர்க்குற்ற இனப்படுகொலை சாட்சி ஒன்றை கிழக்கில நடந்த கூட்டத்தில் பதிவு செய்திருக்கிறார் எல்லே? அதப் பாத்த த…

  23. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்திக்க விரும்புகிறாராம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அத்துடன் இந்த சந்திப்பு விரைவில் இடமபெற வேண்டும் என மஹிந்த ஆசைப்படுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் திட்டத்துக்கு ஆதரவளிப்பார் என்றும் பிரியதர்சன யாப்பா மேலும் தெரிவித்தார். http://www.malarum.com/article/tam/2015/01/14/8097/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E…

  24. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கட்சியின் முக்கிய பதவிகளை துறப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை துறப்பதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் அழுத்தம் காரணமாக இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த தீர்மானம் எடுத்துள்ளதாக கட்சி உள்வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கட்சித்தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை. எனினும் நாளுக்கு நாள் மைத்திரிபால சிறிசேனவிற்கு திரண்டு வரும் ஆதரவு காரணமாக, பதவியை துறக்க ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். இதன்படி, சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவ…

  25. "இந்த விடயத்தில சர்வதேசக்திகள் புதிய அரசாங்கத்திற்கு சிறிது காலஅவகாசத்தை வழங்கவேண்டும்" - தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- யுத்த குற்றங்களுக்கு பொறுப்பு கூறும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என கருத்து வெளியிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானபிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் அதேவளை இந்த விவகாரத்தில் புதிய அரசாங்கத்திற்கு கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிறிசேனவாலும், விக்கிரமசிங்கவாலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? பாதை கரடுமுரடானதாக தான் காணப்படுகின்றது,தற்போதைய பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதே தற்போதுள்ள முக்கிய சவால்,ஜனநாயக சீர்திர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.