Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் போக்குவரத்து துறையில் முன்னேற்றங்கள் போதாதுள்ளமையால், அதனை முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டிய தேவையிருப்பதாக துணுக்காய் பிரதேச செயலாளர் சிவபாலன் குணபாலன் வியாழக்கிழமை (15) தமிழ்மிரருக்குத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டு, இதுவரையில் 20 கிராமஅலுவலர் பிரிவுகளை சேர்ந்த 3625 குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன. மீளக்குடியமர்ந்த மக்கள் போக்குவரத்து வசதியான வீதிகள் மற்றும் பேருந்துகள் ஆகியனவை இல்லைஎன பிரதேச செயலகத்தில் முறைப்பாடுகள் செய்து வருகின்றனர். குறிப்பாக துணுக்காய…

  2. இன்று கொழும்பின் சிங்கள ஊடகங்கள் முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவிற்குச் சொந்தமான வீட்டில் சுறா மீன்கள் வளர்க்கப்படுவது தொடர்பாகவும் சஜின் வாஸ் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட யானைக் குட்டி தொடர்பாகவும் தகவல்களை வெளியிட்டன. கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கோட்டாபய அமெரிக்காவிலிருக்கும் தனது மகனுக்காக வாங்கிய வீடு ஒன்றின் அருகில் வசித்தவர் என்று தகவல்கள் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார். கோட்டாபய தனக்குச் சொந்தமான வீடு ஒன்றில் சுறா வளர்த்த கதை இணையங்களையும், UPFA இன் சமூக வலைத் தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டது. சஜின் வாஸ் குணவர்த்தனாவின் வீட்டில் யானைக்குட்டி வளர்க்கப்பட்டு தீனி போடப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து யானைக்கு அனுமதிப்பத்திரம் பெற்றே வளர்க்கிறேன் என சஜின…

    • 0 replies
    • 650 views
  3. former president, Mahinda and Gotabaya Rajapaksa, at the Vatican's embassy

  4. நாமல், யோசித்த, ரோஹித்த ஆகிய தமது புதல்வர்களைப் பழிவாங்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாமல் ராஜபக்‌ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இணக்கம் தெரிவித்தால், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்கு தாம் இணங்குவதாகவும் மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் ஊடாக மகிந்த ராஜபக்ச இந்தத் தகவலை புதிய ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றிரவு சபாநாயகர் சமல் ராஜபக்சவ…

    • 0 replies
    • 761 views
  5. வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக் கரிசனைக்குரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஆயுதப்படைகளின் தளபதிகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முப்படைகளின் தளபதிகளும், ஏற்கனவே குழுவொன்றை அமைத்துள்ளனர். அத்துடன் அந்தப் பகுதிகளின் முறையான நில உரிமையாளர்களைக் கண்டறியும் பணியும் இடம்பெற்று வருகிறது. முக்கியமான, பாதிக்கப்படக் கூடிய, முப்படைகளுடனும் நேரடியாகத் தொடர்புடைய பகுதிகள் தவிர்ந்த பிற காணிகளை உடனடியாக உரிமையாளர்களி…

  6. மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த JAN 15, 2015 | 0:01by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களுக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த பிரிவின் தலைவர்களைக் கொண்ட குழுவொன்று கடந்த 12ம் நாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியது. இதன்போதே, மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேச மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனினும், பாப்பரசர் வருகையினால் உடனடியாக இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்ய முடியாது என்றும், மைத்…

  7. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் புஸ்பகுமார் வீட்டை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையிலான 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒன்றிணைந்து சுற்றிவழைத்தனர். அத்துடன், அவரை வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்ததுடன் வீட்டுக்குள் உள்நுழைந்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டபோது அவர் அங்கிருந்து பொலிசாரின் பாதுகாப்புடன் தப்பி ஓடியுள்ள சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகின்றது. ஜனாதிபதி தேர்தலில் மைத்திபால சிறிசேன வெற்றி பெற்றதையடுத்து திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 3 ஆயிரத்துக்கு …

  8. மானஸ் தீவில் உள்ள ஈழ அகதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 500க்கும் மேற்பட்ட ஈழ, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் அகதிகளில் இதில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கக்கான அகதி அந்தஸ்த்தை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால், தங்களின் விண்ணப்பங்களை ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையை பரிசீலிக்க அனுமதிக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். http://www.pathivu.com/news/36968/57//d,article_full.aspx

    • 0 replies
    • 1.2k views
  9. என்னைத் தமிழனோ, முஸ்லிமோ அழிக்கவில்லை. நீங்கள் தான்டா என்ர அரசியலை அழித்தீா்கள் என கோத்தபாயவிடமும் பிள்ளைகளிடமும் எரிந்து விழுந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. தோ்தலில் தோல்வியடைந்த பின்னா் தனது சொந்த இடத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்ச அங்கு வந்து தன்னைச் சந்தித்த பொதுமக்களுடன் கலந்துரையாடிவிட்டு அடுத்தநாள் காலையில் பிள்ளைகளுடனும் தனது சகோதரா்களுடனும் கோபதாண்டவம் ஆடியதாகத் தெரியவருகின்றது. தனது 45 வருட அரசியல் வாழ்க்கை எனது பிள்ளைகளாலும், சகோதரா்களாலும் அழிந்துவிட்டது என மகி்ந்த கத்தியுள்ளார். என்னை வீட்டுக்காவலில் வைத்திருக்கிறாகள் என கோத்தபாய தனது அண்ணணுக்கு தொலைபேசியில் எடுத்து கூறிய போதே மகிந்த இவ்வாறு கத்தியுள்ளார். எனக்கு வாய்த்த சகோதரங்களும்…

  10. இலங்கை மக்கள் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய தேர்தல் ஒன்று இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமை­தி­யான முறையில் ஆட்சி மாற்றம் இடம்­பெற்­றுள்­ளமை குறித்தும் அமெ­ரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மகிழ்ச்சி வெளி­யிட்­டுள்ளார். இலங்­கையில் மனித உரி­மை­க­ளையும், ஜன­நா­ய­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புதி­தாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள அர­சாங்­கத்­திற்கு உத­வு­வ­தற்கு தாம் தயார் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். தனது இந்­திய விஜ­யத்தின் போதே அவர் இந்த கருத்தை வெளி­யிட்­டுள்ளார். இலங்­கை­யு­ட­னான உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான அமெ­ரிக்­காவின் விருப்­பத்தை வெளிப்­ப­டுத்­து­வற்­காக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்­கையின் புதிய ஜனா­தி­ப­தி­யுடன் தொலை­பே­சியில் உரை­யா­டி­யுள்…

  11. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மற்றும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரிகளிலுள்ள கிணறுகளிலும் எண்ணெய் கசிவு இருப்பதாக சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, மாணவர்களுக்கான குடிநீருக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இரு கல்லூரிகளின் அதிபர்களும் தெரிவித்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி அதிபர் க.ரட்ணகுமார், 'கடந்த 6ஆம் திகதி சுகாதார பரிசோதகர்களால் எமது பாடசாலை கிணறு சோதனை செய்யப்பட்டு, அதில் எண்ணெய் கசிவுகள் தென்படுவதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தனர்' என்றார். 'இது தொடர்பாக தெல்லிப்பழை பிரதேச செயலகம், வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஆகியவற்றுக்கு அறிவித்து அவர்களின் மூலம், குடிநீர் வசதிகளை பாடசாலையில்…

  12. தோ்தல் தோல்வியை அடுத்த நாமல்ராஜபக்ச ஹருனிகா பிரேமச்சந்திரவுடன் தொலைபேசியில் தொடா்பு கொண்டதாகத் தெரியவருகின்றது. தோ்தலுக்கு முன்னரும் ஹருனிகா எதிர்க்கட்சியுடன் சேருவதற்கு முதல் நாமல் தனது நண்பா்கள் ஊடாக அவ்வாறு சேருவதைத் தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். அவ் வேளையில் ’ஏன் என்னுடன் நாமல் நேரடியாகத் தொடா்பு கொண்டு கதைத்தகலாமே” நாமலின் நண்பா்களுக்கு ஹருனிகா சொன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இருந்தும் நாமல் ஹருனிகாவை தனது ஈகோவால் தொடா்பு கொள்ளாது விட்டார். ஆனால் தற்போது தனக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு தீா்வு காண்பதற்காக ஹருனிகாவுடன் நாமல் நேரடியாக நேற்று மாலை தொடா்பு எடுத்துப் பேசியுள்ளதாகத் தெரியவருகின்றது. அவ்வாறு பேசும் போது ”நான் உன்னில் எவ்வளவு அன்பு வைத்திரு…

    • 7 replies
    • 1.8k views
  13. இலங்கையின் பிரபல போதைப் பொருள் கடத்தல்காரர் என கருதப்படும் ´வெலே சுதா´ என்ற கம்பொல வித்தானகே சமந்தகுமார (வடோவிட்ட சுதா) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். அண்மையில் பாகிஸ்தானில் வைத்து இவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று பிற்பகல் இடம்பெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஜூலை 1ம் திகதி வெலே சுதாவின் மனைவியும் மாமியாரும் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=65340 இலங்கையிலுள்ள இவரது வெவ்வேறு வங்கி கணக்குகளில் இரண்டு மில்லிய ரூபாக்கள் …

  14. மறைத்து வைக்கப்பட்டிருந்த உலங்கு வானூர்தியொன்று கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து உலங்கு வானூர்த்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த வானூர்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் ஒருவரினால் பயன்படுத்தப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை முதல் குறித்த உலங்கு வானூர்தியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான களஞ்சியப் பகுதியொன்றினுள் இந்த உலங்கு வானூர்தி மீட்கப்பட்டுள்ளது. http://www.tamilwin.com/show-RUmtyBSXKbfvz.html

  15. யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு வலிகாமம் தெற்கு (உடுவில்) பிரதேச சபையால் குடிநீர் விநியோகம் செய்யும் நடவடிக்கை, செவ்வாய்க்கிழமை (13) தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸ், புதன்கிழமை (14) தெரிவித்தார். சுன்னாகம் வர்த்தக நிலையங்களின் கிணறுகளில் எண்ணெய் கசிவு இருப்பதால் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் நீரைப்பரிசோதனை செய்யவேண்டும் அவ்வாறு செய்யாத வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார வைத்தியதிகாரி பணிமனையால் கடந்த திங்கட்கிழமை (12) அறிவித்தல் விடுக்கப்பட்டது. இதனால் வர்த்தகர்கள் குடிநீரைப் பெறும் பொருட்டு சிரமங்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்…

  16. மனநிலை பாதிக்கப்பட்டவர் தீயிட்டு எரித்து கொலை: வீடியோ சிக்கியது 15-01-2015 02:22 AM -ஜோசப் அன்டன் ஜோர்ஜ் வீரக்கெட்டிய, அக்குறுவெல பிரதேசத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட நபரொருவரை, ஒரு குழுவினர் தீயிட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில், புதன்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், வீரக்கெட்டிய, அக்குறுவெல பிரதேசத்தில், மனநிலை பாதிக்கப்பட்ட நபரொருவர் உறங்கிக் கொண்டிருந்த டிரக் வண்டியை தீயிட்டு எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார். இ…

  17. கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைக்கிறது த.தே.கூட்டமைப்பு இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாணசபை உள்ளிட்ட சில மாகாண சபைகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன. வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அந்தக் கூட்டணியின் பங்காளி கட்சிகள் சில அதிலிருந்து விலகின. சில மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்து கொண்டார்கள். எதிரணியிலிருந்து ஆளுந்தரப்புக்கும் சிலர் மாறினார்கள். 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபையில் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் ஐ. ம. சு. கூட்டமைப்பு 15 உறுப்பினர்களை…

    • 8 replies
    • 1.2k views
  18. தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழாவான தைப்பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் தைப் பொங்கலுக்கான பொருட்கள் கொள்வனவிற்காக பொதுமக்கள் பெருமளவில் கூடியுள்ளதனால் நகரபகுதி எங்கும் வியாபாரம் களைகட்டியுள்ளது. தமிழர் திருநாளாக இலங்கை, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமன்றி இவ்விழா சமயங்கள் கடந்து அனைத்து இன மக்களாலும் பல்வேறு பெயர்களினால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் சூரியனுக்கும், இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறத…

  19. புனித பாப்பரசரே எளிய சனங்களின் குரல் உங்கள் தேவ செவிகளுக்குக் கேட்டிகிறதா? சிங்கக் கொடிகளும் வத்திக்கான் கொடிகளுமாய் தங்களுக்காய் விரிந்திருக்கும் சோடனை செய்யப்பட்ட வீதிகளில் மக்களுக்கு கைகளை காட்டி ஆசீர்வதித்துக் கொண்ட புனித பாப்பரசரே ஒடுக்கப்பட்ட தாய் நிலத்திலிருந்துகொண்டு கண்ணீரோடும் ஆற்றாமையோடும் இருத வாசகங்களுடன் நிற்கும் எங்கள் சனங்களின் குரல்கள் தங்கள் தேவ செவிகளுக்கு கேட்கிறதா? சிங்களப் பேரினவாதத்தின் கொடிய ஆக்கிரமிப்புக்குள் சிக்குண்டு கிடக்கிறது எங்கள் தாய்நிலம். இராணுவ ஆட்சிக்குள் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது நாங்கள் வாழும் மண். எதுவும் எப்போதும் நடக்க முடியும் என்ற நிலையில் வாழும் நாங்கள் நம்பிக்கையற்ற பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். …

  20. திவிநெகும வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் வங்கிக் கணக்கில் இருந்து கடந்த ஆறாம் திகதி 1,456,980,000 ரூபா பணம் பெறப்பட்டுள்ளது குறித்து உரிய விசாரணை நடத்துமாறு கணக்காய்வாளர் நாயகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சாமர மத்துமகலுகே வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது. திவிநெகும என்ற வாழ்வின் எழுச்சித் திட்டம் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் கீழ் இயங்கி வந்தது. பசில் ராஜபக்ஷ இரண்டு நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://seithy.com/breifNews.php?newsID=124587&category=TamilNews&language=tam…

  21. யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த JAN 14, 2015 | 8:54 by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2006ம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்து கொண்ட யோசித ராஜபக்ச, கடைசியாக லெப்டினன்ட் தர அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார். அவர் சிறிலங்கா கடற்படையின் ரகர் அணியின் தலைவராகவும் இருந்தவர். அதிபர் தேர்தலில் தாம் தோல்வி கண்டதும், தனது மகன் யோசித ராஜபக்சவைத் தொடர்ந்து கடற்படையில் இருப்பதை அனுமதிக்க விரும்பாத மகிநத ராஜபக்ச அவரை பதவியில் …

  22. மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார் JAN 14, 2015by VANNIin செய்திகள் பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடுத் திருத்தலத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் முன்பாக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டார். உலங்குவானூர்தியில் மடுவைச் சென்றடைந்த பாப்பரசர் அங்கிருந்து, மடு அன்னையின் திருத்தலத்துக்கு திறந்த வாகனத்தில் பவனியாக வந்தார். தொடர்ந்து பாப்பரசர் தலைமையில் மடுமாதா திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி பூசை ஒப்புக் கொடுக்கப்பட்டது. நாட்டில் அமைதியை வேண்டி சமாதானப் புறாவையும் பாப்பரசர் பறக்கவிட்டார். இதன்போது மரத்தில் செதுக்கப்பட்ட மடு அன்னையின் உருவச்சிலை பாப்பரசருக்கு நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டது. பிற்பகல் 4.20 மணியள…

  23. போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள் JAN 13, 2015 | 11:51by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியகம் இன்று வெளியிட்டுள்ள 2014ம் ஆண்டுக்கான அகதிகள் தொடர்பான புள்ளிவிபரம் ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்காவைச் சேர்ந்த 1,23,028 பேர், அகதிகளாக உள்ள அதேவேளை,மேலும், 16,190 பேர் புகலிடம் கோரிகளாகவும் இருக்கின்றனர். 30,847 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு அகதி…

  24. கொழும்பு: இலங்கையில் தமிழர்களின் பிரச்னையை தீர்க்க சிறப்பு குழு அமைக்கப்படும் என புதிய அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.ராஜபக்சேவை தோற்கடித்து இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனவை வெற்றி பெற செய்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய பங்காற்றியது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு பகுதி தமிழர்கள் ராஜபக்சேவுக்கு எதிராக அளித்த வாக்குதான் மைத்ரியை வெற்றி பெற செய்தது. இந்நிலையில் இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் போதிய தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு இடையே நேற்று கொழும்புவில் சிறப்பு கலந்துரையாடல் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.