ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
மகிந்தவை ஆதரிக்கும் அதிகாரிகள் மீது வெளிநாட்டு பயணத்தடை – எதிரணியின் கிடுக்கிப்பிடி DEC 12, 2014 | 0:17by கார்வண்ணன்in செய்திகள் தேர்தல் விதிமுறைகளை மீறி, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசாங்க மற்றும் இராணுவ, காவல்துறை அதிகாரிகள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் இதுகுறித்து தகவல் வெளியிட்ட அவர், “தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும், தேர்தல் விதிமுறைகளை மீறும், ஆளும்கட்சிக்கு சார்பாக பரப்புரைகளில் ஈடுபடும் அரசாங்க அதிகாரிகளின் விபரங்களைப் பதிவு செய்யும், கருப்பு பதிவேடு (Black Book) ஒன்றை …
-
- 0 replies
- 463 views
-
-
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இறுதியாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது. இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்சித் தாவக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கட்சித் தாவுவதனை தடுக்கும் நோக்கில் கட்சிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 1.30 அளவில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளவும், ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சித் தாவாமல் இருப்பதற…
-
- 0 replies
- 297 views
-
-
போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அனுராதபுரவில் இன்று மாலை தனது முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த தயார். நாட்டு மக்கள் கோரினால் என்னால் அரசியலமைப்பை மாற்றமுடியும். ஆனால் அதற்கு பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை. போர் முடிந்து விட்டாலும் விடுதலைப் புலிகள் இன்னமும் செயற்படுகின்றனர். அவர்களின் வலையமைப்புகள் வெளிநாடுகளில் செயற்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பங்கெட…
-
- 4 replies
- 677 views
-
-
போரில் பங்கேற்ற படையினரின் விபரங்களைக் கோரியுள்ளதாம் ஐ.நா – சிறிலங்கா அதிபர் கூறுகிறார் DEC 11, 2014 by சிறப்புச் செய்தியாளர்in செய்திகள் போரில் பங்கெடுத்த படையினரின் விபரங்களைத் தரக்கோரி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச. அனுராதபுரவில் இன்று மாலை தனது முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ”அதிபர் தேர்தலுக்குப் பின்னர், அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த தயார். நாட்டு மக்கள் கோரினால் என்னால் அரசியலமைப்பை மாற்றமுடியும். ஆனால் அதற்கு பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்களின் ஆணை தேவை. போர் முடிந்து விட்டாலும் வி…
-
- 0 replies
- 649 views
-
-
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடைவிதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி மருத்துவ கல்விக்கு தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக வருபவர்கள் மருத்துவ கல்வி கறக்க முடியாது. என்பதனால் பொறியியல் கல்வியை கறக்க முடியுமென கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டு. அவர்களை குடும்பத்துடன் இலங்கைக்கு திருப்பி அழைத்தன…
-
- 1 reply
- 528 views
-
-
யாழ்ப்பாணத்தில், வயது குறைந்த சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்படும் சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளதாக, யாழ்.போதனா மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 18 சம்பவங்கள் யாழ்.போதனா மருத்துவமனையில் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை கடந்த ஜூன், ஜூலை மாதங்களிலேயே இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள யாழ். போதனா மருத்துவமனையின் பொதுச் சுகாதார பரிசோதகர் குணராஜா நக்கீரன், இந்த ஆண்டில் 24 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 18 வயதுகுறைந்த சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார். ஏழு பதின்ம வயது கர்ப்பங்களும் இந்த ஆண்டில் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 711 views
-
-
வாசுதேவ நாணயக்கார தற்கொலை செய்து கொள்ள உள்ளார்? 11 டிசம்பர் 2014 தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாசுதேவ எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாக தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக வாசுதேவ தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்திற்குள் இந்த நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படாவிட்டால், தாம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டியது அவசியமானது எ…
-
- 3 replies
- 787 views
-
-
ஐனாதிபதி தேர்தலுக்குப் பின்னராக அமையும் அரசு தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வொன்றை நிச்சயமாக வழங்கும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்களை கொழும்பில் நேற்று சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அடுத்து அமையும் அரசு தற்போதைய அரசு போன்று பாராளுமன்றத் தெரிவுக் குழுவை வைத்து காலத்தை இழுத்தடிப்பதாக அமையாது. குறித்த கால எல்லை ஒன்றினுள் தீர்வினை வழங்கத் தயாராக இருக்கும். பெரும்பாலும் மாகாண சபைக்கான அதிகாரப் பகிர்வாக அது இருக்கும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே மாகாணசபை முறைமை கொண்டு வரப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மகிந்த ஆட்சியில் பறித்துக் கொண்டது. மகாநாயக்க தேரர் உட்பட எதிரணியி…
-
- 1 reply
- 382 views
-
-
வன்முறைகளற்ற சாத்வீக போராட்டமே தென்னாபிரிக்காவின் விடுதலைக்கு வித்திட்டதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜனநாயக இளைஞர் இணையம் நடத்திய நெல்சன் மண்டேலாவின் முதலாம் ஆண்டு நினைவுரை நிகழ்வில் உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறியதாவது; நாட்டின் கறுப்பினத்தவரின் விடுதலைக்காக போராடிய ஒரு மாமனிதர். அவரின் செயற்பாடுகள் தொடர்பில் புதிதாக சொல்லத் தேவையில்லை. ஒரு பெரும்பான்மை சமூகம் அங்கிருந்த சிறுபான்மை வெள்ளையினத்தவரிடம் அடிமையாக வாழ்ந்தனர். உலக வரலாற்றில் இது மிகவும் …
-
- 5 replies
- 552 views
-
-
நமது நாட்டுடன் நட்பாக இருப்பதாக காட்டிக் கொள்ளும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தென்னாசியாவில் இந்தியா முதன்மை சக்தியாக வளரக் கூடாது என்பதற்காகவே முதுகில் குத்தும் வகையில் இங்கே நாசவேலைகளை அரங்கேற்ற பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடமளித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் தேசப் பாதுகாப்பில் குறிப்பாக தென்னிந்தியாவின் பாதுகாப்பில் இலங்கையின் முக்கியத்துவத்தை நாம் தவிர்த்துவிட முடியாததுதான். மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் முன்னைவிட சில நல்லெண்ண சமிக்ஞைகளை மகிந்த ராஜபக்ச வெளிப்படுத்திக் கொண்டிருந்தாலும் அவரது செயல்பாடுகள் என்னவோ போதுமானவையா என்ற கேள்விக் குறியையே எழுப்புகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் இந்தியாவின் தேச நலன்களுக்கு எதிராக…
-
- 0 replies
- 308 views
-
-
புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட உலங்குவானூர்திகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினருமே பயணம் செய்வதாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கல்கிசையில் தேசிய வழக்கறிஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஏழு புதிய உலங்கு வானூர்திகள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் கொள்வனவு செய்து கொண்டு வரப்பட்டது எனக்குத் தெரியும். இவை அனைத்தையும் அவர்களது குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். காலையில் உலங்குவானூர்தியில் ஏறி நுவரெலியா செல்வார்கள். அங்கிருந்து யாழ்ப்பாணம் செல்வார்கள். பிறகு மாலையில் கொழும்புக்குத் …
-
- 0 replies
- 647 views
-
-
தன்னைப் பற்றி முகநூல் மற்றும் சமூக வலைய தளங்களினூடாக பொய்யான, பொறுப்பற்ற தகவல்கள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடை பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட அவர், என்னைப் பற்றி தெரிவிக் கப்படும் செய்திகளை தூசளவேனும் நான் பொருட்படுத்த வில்லை. மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவது உறுதியாகியுள்ளதால் எதிர்த்தரப்பின் பைத்தியம் உக்கிரமடைந்துள்ளது. இதனால் இணையத்தளங்கள் ஊடாக பொய்ப் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ‘பேஸ் புக்’ தகவல்களை மக்கள் நம்புவதில்லை. ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை விரும்பாத சக்திகளே இவ்வாறு ப…
-
- 0 replies
- 380 views
-
-
இங்கிரிய, றைகம் தோட்டத்தில், இராணுவ முகாமொன்றை நிர்மாணிப்பதற்காக, அந்த தோட்ட மக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை, இராணுவம் சுவீகரித்துள்ளது. இருப்பினும், தாம் இந்த காணி சுவீகரிக்கப்படவில்லை என்றும் அது விலைக்கு வாங்கப்பட்டது என்றும் இராணுவ தரப்பு விளக்கமளித்தது. இந்த காணியை இராணுவம் அபகரித்துள்ளது என்றும் அந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, குறித்த தோட்ட மக்கள், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மேற்படி காணி சுவீகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, கு…
-
- 0 replies
- 407 views
-
-
ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச புதுடெல்லி சென்றாரா சம்பந்தன்? [Thursday 2014-12-11 07:00] ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவசரமாக சம்பந்தன் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து பேச்சு நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், பிரதான வேட்பாளர்கள் இருவரும் தமிழர் பிரச்சினை பற்றி எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறித்து சம்பந்தன் தெளிவுபடுத்த உள்ளார். ஜனாதிபதித் தேர்தல் குறித்து பேச்சு நடத்தவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த…
-
- 4 replies
- 892 views
-
-
தமிழ் மக்கள் தனக்குத் தேவையில்லை எனக் கூறும் மகிந்தவிற்கு தமிழ் மக்களின் கடவுளான திருப்பதி வெங்கடாசலபதி மட்டும் தேவையாக இருப்பதாக நையாண்டி செய்தார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. கொழும்பில் எதிரணியின் ஊடக பணிமணையில் வடக்கு கிழக்கு ஊடக வியலாளர்களை இன்று சந்தித்த வேளை மேலும் இது பற்றித் தெரிவிக்கையில்… மகிந்த திருப்பதிக்குச் செல்வதை அறிந்ததும் உண்டியல்களை பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள் நகைகளை ஒழித்து வைத்து விட்டார்களாம். அத்தோடு அங்குள்ள கடவுள்களும் ஒழித்துவிட்டனராம் என நையாண்டிச் சிரிப்புடன் தெரிவித்தார் ரணில். சாதாரணமான எவருமே கடவுளிடம் தேவை கருதி முன்னர் சென்று பிரார்த்திப்பார்கள் அல்லது வெற்றி பெற்ற பின்னர் பிரார்த்திப்பார்கள் ஆனால் இவரோ தேர்தல் அறிவ…
-
- 0 replies
- 310 views
-
-
சீனி லொறியுடன் கடத்தப்பட்ட தமிழர் கொலை news கொழும்பில் இருந்து 300 சீனி மூடைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த லொறியை இடைநடுவே கடத்துவதற்காக சாரதியும்,நடத்துநரும்,சீனி மூடைகளுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் இளைஞரைக் காட்டுப் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் லொறியில் கொண்டு வந்த பொருள்களை அரைவிலைக்கு விற்றுக்காசாக்கியுள்ளனர். 19வயதுடைய மல்லாவி,வவுனிக்குளத்தைச் சேர்ந்த தி.துசாந்தன் என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யபட்டுள்ளார். யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் இணைந்து கொழும்பிலிருந்து சீனிமூடைகள்,தேங்காய் எண்ணெய் போன்ற சுமார் 35 லட்சம் முதல் 45 லட்சம் ரூபா பெறுமதியா…
-
- 0 replies
- 533 views
-
-
பரீட்சை நடைபெறும் இடத்தில் யுத்த வெற்றி குறித்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது? 11 டிசம்பர் 2014 கல்விப் பொதுத்தராதார சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் இடத்தில் யுத்த வெற்றி குறித்த திரைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளிக்கும் தரப்பினர் இவ்வாறு திரைப்படமொன்றை காட்சிப்படுத்தியுள்ளனர். நாவுல அபான சந்தியில் இவ்வாறு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டதாகவும் அதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்ட இடத்திற்கு அருகாமையில் கும்பியாகஹா பாடசாலை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அரசாங்க வாகனங்களில் பாரிய திரையொன்றில் இவ்வாறு திரைப்படம் காட்சிப்படுத்தப்பட…
-
- 0 replies
- 282 views
-
-
இலங்கை அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற போரின்போது ஏராளமான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார். “போரின்போது அப்பாவிப் பொதுமக்கள் ஏராளமாகக் கொல்லப்பட்டது உண்மைதான். ஆனாலும் அதற்காக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி எமது படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தவோ, அவர்களைத் தண்டிக்கவோ ஒருபோதும் நான் இடமளிக்க மாட்டேன்,” என்று மைத்ரிபால சிறிசேன இன்று கண்டியில் இடம்பெற்ற தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார். ஆனாலும் போரின் போது அப்பாவிப் பொது மக்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டதற்கும் மிக அதிகமான தொகையின…
-
- 5 replies
- 1.3k views
-
-
தமிழர்களின் சமஷ்டிக் கோரிக்கையை ஏற்கமாட்டேன்- மைத்திரி news ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையினை ஏற்கமாட்டேன் என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். இலங்கையில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வரும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க வேண்டும் என தமிழ்த் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும் தான் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கோரிக்கையினை நிராகரிப்பேன் என உறுதியளித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமயவுடன் ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின்படி பெளத்த மதத்துக்கு அரசமைப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படும். சுதந்திரமான தனிநாடு ஒன்றை உருவாக்கும் நோக்கில் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டம் இலங்கை இராணுவத்தால் 20…
-
- 69 replies
- 5.5k views
- 1 follower
-
-
டிசம்பர் 20 இற்கு பின்னரே கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளிவரும் – மாவை சேனாதிராசா Dec 06, 2014 | 2:25 by கார்வண்ணன் சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரை நிறுத்தாது என்று கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, இந்த தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு இம்மாதம் மூன்றாவது வாரத்தில் தான் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். “வரும் 8ம் நாள் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. பல்வேறு மட்டங்களிலும் உள்ள எமது பிரதிநிதிகளைக் கலந்துரையாடி வருகிறோம். இந்தக் கூட்டங்கள் இன்னமும் முடிவடையவில்லை. இந்தக் கலந்துரையா…
-
- 21 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதிக்கு இறந்த கிளியொன்றை வழங்கிவிட்டு அங்கிருந்து அழகான பச்சைக்கிளி ஒன்றை பெற்றுள்ளோம் என எதிர்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் மகாநாயக்க தேரரிடம் தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே சிறி சுமங்கள தேரரை சந்தித்தவேளையே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மிகவும் மகிழ்ச்சிகரமான மனநிலையில் காணப்பட்ட ரணில்விக்கிரமசிங்க, வெளிநாடுகளில் மூழ்கும் கப்பல்களிலிருந்து எலிகள் வெளியேறும்,ஆனால் எங்கள் எலிகள் என்னசெய்கின்றன வென்றால் மூழ்கும் கப்பலில் ஏறுகின்றன. ஜனாதிபதிக்கு இற்ந்த கிளியொன்றை வழங்கிவிட்டு நாங்கள் அழகான பச்சைக்கிளியொன்றை பெற்றுள்ளோம். எங்களிடமிருந்து இவ்வாறான நபர்களை எடுத்துக்கொண்டு கட்சியை சுத்தம்செய்தமைக்காக ஜனாத…
-
- 15 replies
- 1.9k views
-
-
எமது மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் காரணமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் டக்ளஸ் – சிறீதரன் வாக்குவாதம்! வெளியேறிய விக்னேஸ்வரன் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தது. குற…
-
- 5 replies
- 490 views
-
-
inShare தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் இன்றி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெறுவார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிக்கின்றார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஆள். கொழும்பிலுள்ள பிஸ்னஸ்காரன் தூற்றுவான். அது பரவாயில்லை. ஆனால் கிராமங்களுக்கு போனால் அந்த மக்கள் ஜனாதிபதியை மறக்கமாட்டாங்க. அதனால் அவர் தான் வருவார். அதனால் அதனை பயன்படுத்திகொள்வோம். தமிழ் மக்களின் வாக்கோ முஸ்லிம் மக்களின் வாக்கோ இல்லாமல் அவர் வெல்லுவார். அதற்கு வாக்களிக்கவும் தேவையில்லை. நீங்க எதிர்த்து வாக்கள…
-
- 0 replies
- 519 views
-
-
அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண இளைஞர் மாநாடு இன்று புதன்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. வடபகுதி இளைஞர், யுவதிகளது பிரச்சினைகளை வெளி உலகுக்கு தெரியப்படுத்தும் நோக்ககாக கொண்ட இந்த மாநாட்டிற்கு வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் இருந்து 15௦௦க்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் சுதந்திர பயணம் -2014 இளைஞர் பிரகடனத்தினை பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் இளைஞர் சம்மேளன யாழ். மாவட்ட அமைப்பாளறினால் கையளிக்கப்பட்டது. இருப்பினும் குறித்த நிகழ்வை தடுக்கும் வகையில் தமக்கு இராணுவ, புலனாய்வு தரப்பினர் கடும் அழுத்தங்களைக் கொடுத்தனர் என்றும், எனினும்…
-
- 1 reply
- 1k views
-
-
அரசு எந்த சூழ்ச்சிகளையும் செய்து வெற்றி பெற முடியாது. அவ்வாறு வெற்றி பெற முனைந்தால் பத்து லட்சம் பேரைத் திரட்டி கொழும்பை முற்றுகையிட்டு அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் அத்துலிய ரத்தின தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று நடைபெற்ற எதிரணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் அரசாங்கம் சர்வதேச சூழ்ச்சி என்று கூறி வாக்குகளைப் பெற முயற்சிப்பதாகவும் அவ்வாறு ஒரு சூழ்ச்சியும் இல்லை அரசிற்குள்ளேயே சூழ்ச்சிக்காரர்கள் உள்ளனர். இதேவேளை மகிந்தவுக்கான எதிரி அவரின் அணியிலேயே இருப்பதாகவும் பொது எதிரணியில் இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை நாட்டு மக்களிடம் கையளிக்காது விட்ட…
-
- 0 replies
- 540 views
-