ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார். இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தம…
-
- 36 replies
- 2.7k views
-
-
பௌத்த சமயத்தின் இரண்டு முக்கியமான அம்சங்களைத் 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கி வைத்ததில் முன்னணியில் வகித்தவரும், எழுத்தாளருமான அனகாரிக தர்மபாலவின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான சாஸ்திரி பவனில் வைத்து இன்று சனிக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130840-2014-10-25-14-03-57.html
-
- 4 replies
- 504 views
-
-
சம்பந்தனின் தோளில் கைபோட்டபடி உரையாடிய ஜனாதிபதி மஹிந்த! – நாடாளுமன்றில் நடந்தது என்ன? [saturday 2014-10-25 07:00] நாடாளுமன்றத்தில் நேற்று வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைலாகு கொடுத்து கலந்துரையாடினார். தேநீர் விருந்தில், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்டோர், ஒரே மேசையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இரா.சம்பந்தனின் தோளில் கை போட்டபடியே மாவை சேனாதிராசாவுக்கு கைலாகு கொடுத்தார். பின்னர்…
-
- 4 replies
- 4.2k views
-
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ| கோப்புப் படம். பாரதிய ஜனதா அரசு சிங்கள அரசுக்கு வெளிப்படையாகவே உதவுகிறது. அதனால்தான் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்ல முடிகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும், இலங்கைக்கு துணையாகவும் செயல்படும் மத்திய அரசின் போக்கு எதிர்காலத்தில் விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: "உலகின் பூர்வகுடி மக்களான தமிழர்களின் நெடிய வரலாற்றில் தமிழ் இனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள துன்பமும், கேடும் போல இதுவரையில் நேர்ந்ததில்லை. இந்தியாவில் புதிய அரசு பொறு…
-
- 1 reply
- 445 views
-
-
இலங்கையில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கொடுமைகளை வெளிப்படுத்தும், 'இலங்கையின் இரகசியங்கள்' என்ற தலைப்பிலான நூல் அவுஸ்திரேலியாவில் நாளை வெளியிடப்படவுள்ளது. ஆங்கிலத்தில் 'சிறிலங்காஸ் சீக்கிரட்' என பெயரிடப்பட்டுள்ள இந்த நூலில், சொந்த மக்களுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலை செய்தியாளரும் அகதிகளுக்கான சட்டத்தரணியுமான ட்ரேவர் க்ரான்ட் எழுதியுள்ளார். இந்த நூல் 49 க்லீபுக்ஸ், க்ளேப் பொயின்ட் ரோட் என்ற இடத்தில் நாளை பிற்பகல் 3.30க்கு வெளியிடப்படவுள்ளது. இந்த நூலினை இணையத்திலும் பெற்றுக்கொள்ள முடியும். http://www.seithy.com/breifNews.php?newsID=119298&category=TamilNews&lan…
-
- 2 replies
- 412 views
-
-
(ஜே.ஜி.ஸ்டீபன், ப. பன்னீர் செல்வம்) அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதான பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் அதற்கான அழைப்பு ஆகியவற்றை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக்கத் தெளிவாகவே அறிவித்து விட்ட நிலையில் வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி மீண்டும் அழைப்பு விடுத்திருப்பது பாடிய பாட்டையே மீண்டும் பாடிக்கொண்டிருப்பதற்கு ஒப்பானது என்று அதன் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா இன்று சபையில் விமர்சித்தார். தமிழர் தொடர்பில் ஏதாவதொன்றை கூறிவிட வேண்டும் என்பதற்காக இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொன். செல்வராசா, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் மீள்குடியேற்றப்பட்டவர்கள் தொடர்பில் எதுவும் கூறப்படா…
-
- 0 replies
- 314 views
-
-
-எஸ். பாக்கியநாதன் வென்றெடுத்த சுதந்திரத்தைப் பாதுகாப்போம், எமது உரிமைகளைக் காத்திடுவோம் எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (25) கூட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு தொழிற்; சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இக் கூட்டத்தில், இன மத பிரதேச வேறுபாடுகள் இன்றி செயற்பட்டு வரும் ஜனாதிபதியை எல்லோரும் ஆதரிப்பது எமது கடமையாகும் என, நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் இராஜன் மயில்வாகனம் தெரிவித்தார். சகலருக்கும் நன்மை பயக்கும் வரவு- செலவுத் திட்டத்தை தயாரித்தமையானது, அவர் எல்லோரிடமும் கொண்டுள்ள கருசினையைக் …
-
- 0 replies
- 314 views
-
-
-ரீ.கே.றஹ்மதத்துல்லா அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டமடு பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (25) பதற்றமான நிலையொன்று ஏற்பட்டது. இப்பிரதேசத்தில் மகா போகத்துக்கான நெற்செய்கையை மேற்கொள்ளவதற்கென உழவு இயந்திரங்கள், உபகரணங்களுடன் ஒரு தரப்பினர் அங்கு சென்ற போது மற்றுமொரு தரப்பினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இரு சாராருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இரு குழுக்களுக்குமிடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டது. விவசாயச் செய்கையாளர்கள் தமது காணிக்கான உத்தரவுப்பத்திரம் உள்ளதாகவும் தமக்கு விவசாயம் மேற்கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதானது சட்டவிரோதமானது என தெரிவித்தனர். இதேவேளை, 500க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கான மேய்ச்சல் தரையினய…
-
- 2 replies
- 507 views
-
-
1980களில் இலங்கை எதிர்நோக்கிய நிலைமைகளை கனடா தற்போது எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார். மொன்டரயல் மற்றும் ஒட்டாவா ஆகிய இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் இரண்டு படைவீரர்களும் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1983ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பித்ததற்கு நிகரான வகையில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகத்தின் ஒரு தரப்பின…
-
- 24 replies
- 1.1k views
-
-
நன்னீர் மீன்பிடித் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வட மாகாண மீன் பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரனால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அக்கராயன் குளம் மற்றும் வன்னேரிக்குளம் ஆகிய குளங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன. இதன்படி இரு குளங்களிலும் தலா 75ஆயிரம் நன்னீர் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. http://malarum.com/article/tam/2014/10/25/6458/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%A…
-
- 0 replies
- 402 views
-
-
மீண்டும் நாடு திரும்பும் முயற்சியில் விடுதலைப் புலிகள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சர்வதேச நாடுகளிலிருந்து மீ்ண்டும் இலங்கை திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினருடனான இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தனர். இவர்களில் உயர்மட்ட உறுப்பினர்கள் சிலரும் உள்ளடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீண்டும் நாடு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிறு சிறு குழுக்களாக அவர்கள் மீண்டும் நாடுதிரும்பும் சாத்தியம் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளன…
-
- 2 replies
- 497 views
-
-
அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 69ஆவது வரவு செலவு திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=497913574324459698
-
- 5 replies
- 613 views
-
-
விக்னேஸ்வரனுக்கும் நரேந்திர மோடிக்கம் அடுத்த மாதத்தில் சந்திப்பு 25 அக்டோபர் 2014 வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் அடுத்த மாதத்தில் சந்திப்பு நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பிற்கான நேரத்தை ஒதுக்கீடு செய்யும் முனைப்புக்களில் இந்திய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருவதாக குறிப்பிடப்படுகிறது.இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று விக்னேஸ்வரனுக்கு இந்தியா விஜயம்செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது. சிவில் சுதந்திரத்திற்கான மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பு இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும் நவம்பர் மாதம் 9ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் பங்கேற்குமாறு அழைப்பு வி…
-
- 0 replies
- 506 views
-
-
மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள் வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும…
-
- 30 replies
- 2.3k views
-
-
-ற.றஜீவன் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் 2 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வெளிச்சவீடு மக்களின் பாவனைக்காக புதன்கிழமை (22) இரவு 7 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது. கட்டைக்காட்டு சென்.மேரிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவத்தின் 55ஆவது படைப்பிரிவினரால் இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டது. இந்த வெளிச்ச வீட்டை, 55ஆவது படைப்பிரிவின் அதிகாரி பிரிகேடியர் மு.திருநாக்கரசு திறந்து வைத்தார். இந்த வெளிச்சவீடு அமைக்கப்பட்டதன் மூலம் வடமராட்;சி கிழக்கு பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கும் போது காலநிலை மாற்றத்தின் போதான ஆபத்துக்களிலிருந்து தப்பித்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இந்நிகழ்வில…
-
- 1 reply
- 464 views
-
-
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து. தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமுக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்hக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது. 1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது. இச்சமவாயமானது இனப்…
-
- 0 replies
- 341 views
-
-
இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட உளவு விமானம் கல்குடா கடலில் கண்டுபிடிப்பு! [Friday 2014-10-24 19:00] மட்டக்களப்பு கல்குடா கடற்கரையில் இருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள கடலில் இரண்டாம் உலக போரின் போது மூழ்கியதாக கூறப்படும் விமானங்களின் பாகங்கள், கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடல் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டுள்ள தர்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். கடலில் 42 மீற்றர் ஆழத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய அலுமனியம் துண்டு ஒன்றை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த விமான பாகங்கள் கிடைத்துள்ளன. கடலில் இருந்து கிடைத்த இந்த விமான பாகங்கள் கெட்டலினா விமானத்தின் பாகங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளத…
-
- 2 replies
- 491 views
-
-
நாட்டில் இராணுவம் மற்றும் பொலிஸ் சேவையில் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக 1,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=472023577624220161#sthash.oeckv0Ds.dpuf
-
- 1 reply
- 468 views
-
-
2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1,689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2,210 பில்லியன் ரூபாவாகும். தனியார் ஊழியர்களின் ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 10,000 ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் சம்பளம் எடுப்பவர்களின் மாதாந்த சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்குமாறு யோசனை கூறப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்தும், விசேட நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படும் என்று வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். விமான நிலையப் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திகளுக்காக 2015 …
-
- 0 replies
- 677 views
-
-
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதின் பொருத்தப்பாடு குறித்த எமது கருத்து. தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட, தொடர்ந்தும் நடாத்தப்படும் இனப்படுகொலை சம்பந்தமாக, வடமாகாணசபையானது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவது பொருத்தமானதா என்பது குறித்து தமிழ் சிவில் சமுக அமையத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்hக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது. தேவைப்பட்டவிடத்து சர்வதேச சட்டம் தொடர்பில் கருத்துக் கூறவல்ல சட்டத்தரணிகளின் ஆலோசனையும் இவ்வறிக்கையை வெளியிடும் பொருட்டு எம்மால் பெறப்பட்டது. 1) ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை தொடர்பான 1948ஆம் ஆண்டு சமவாயம் இனப்படுகொலையைத் தடுப்பதையும், இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதையும் இலக்காக கொண்டது. இச்சமவாயமானது இனப்படுக…
-
- 0 replies
- 336 views
-
-
அமைச்சர் விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசல ஜாகொட ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள தயார் நிலையில் இருப்பதாக லங்கா சி நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 'லங்கா சி நியூஸ்' இணையத்தளம் அமைச்சர் விமல் வீரவங்சவிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ள செய்தியில், அசல ஜாகொட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இதுகுறித்து சிங்கப்பூரில் வைத்து பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கொலன்னாவ தொகுதி அமைப்பாளர் பதவியை அசல ஜாகொட கோரியிருந்த போதிலும், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அசல ஜாகொட இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்படுகிறது. http…
-
- 0 replies
- 500 views
-
-
விசேட மொழியாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள் - இணைப்பு 2 01:19 ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னர் எப்போதையும் விட தற்போது அரசியல் ரீதீயாக பலவீனமான நிலையிலுள்ளதாக தெரிவித்துள்ள அரசியல் ஆய்வாளர் அலன்கீனன்-அவரின் தேர்தல் பிரச்சாரம் பெருமளவிற்;கு சிங்கள தேசியவாதத்தை மையப்படுத்தியே அமையப்போகின்றது, மிகவும் விலைகொடுத்து பெறப்பட்ட வெற்றியை தன்னாலேயே உறுதிப்படுத்த முடியும் எனவும்-மேற்குலகிலும் உள்நாட்டிலும் உள்ள சதிகாரர்களின் ஆதரவுடன் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்க்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தன்னாலேயே தடுக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கப் போகிறார் என குறிப்பிட்டுள்ளார். டிடபில்யூ.டிஈ செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்;ள சர்வதேச நெரு…
-
- 0 replies
- 536 views
-
-
யாழ் நகா்பகுதிக்கு சற்று தொலைவில் உள்ள பிரபல பாடசாலை மாணவிகள் பாடசாலையில் கைத்தொலைபேசிகளைக் கொண்டு வந்து ஆபாசப் படங்கள் பாா்ப்பதாக அதிா்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்றகும் மாணவிகள் சிலரே இ்வ்வாறு கைத்தொலைபேசிகளைப் பாடசாலைக்குள் கொண்டு வந்து துஸ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவா்களின் இந்த நடவடிக்கையை அறி்ந்த பாடசாலை நிா்வாகம் அவா்களில் சிலா் கொண்டு வந்த கைத்தொலைபேசிகளை பறிமுதல் செய்து பெற்றோரை வரவழைத்து அறிவுறை கூறியதாகவும் தெரியவருகின்றது. இதே நேரம் குறித்த பாடசாலை மாணவிகள் இருவரை பாடசாலை நிா்வாகம் நிறுத்த முற்பட்ட வேளை மாணவி ஒருவரின் தந்தை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மாணவிகளை தொடா்ந்து அப்பாடசாலையில் கல்…
-
- 16 replies
- 1.6k views
-
-
இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களின் வருகையைத் தடுத்து நிறுத்துவதற்காக, கடற்தொழில் சட்டவிதிகளின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்று அரச ஆதரவு மன்னார் மற்றும் யாழ்.மாவட்ட கடற்றொழில் சங்கத் தலைவர்கள் சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கோரியுள்ளனர். மன்னார் மாவட்ட கடற்றொழில் சங்க சமாசங்களின் தலைவர் என்.எம்.எம்.ஆலம், யாழ் மாவட்ட கடற்தொழில் சங்க சமாசங்களின் தலைவர் அன்ரனி எமிலியான்பிள்ளை ஆகிய இருவருமே வடபகுதி கடற்றொழிலாளர்களின் சார்பில் இந்தக் கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். தற்போது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழேயே இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக் கடற்பரப்பில் பிரவேசிக்கின்றார்கள் என்ற குற்றத்துக்…
-
- 0 replies
- 210 views
-
-
தமிழ்த் தேசிய உணர்வோடு , தமிழின நலனுக்காக , தம்மை இரவு பகலாக அர்ப்பணித்து தமிழகத்தில் பல போராட்டங்களை மேற்கொண்ட மாணவத்தலைவர்களை நேற்று 23.10.2014 அதிகாலை 2 மணிக்கு காவல்துறை பொய் வழக்கில் கைது செய்துள்ளது . கைது செய்யப்பட்டவர்கள் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செம்பியன் மற்றும் மாற்றம் மாணவர் இளையோர் அமைப்பின் பிரதீப் ஆகியோர் ஆவார் . முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு பின்னர் 2009 ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இன்றுவரை ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு எதிராக தமது குரலை ஓங்கி ஒலிக்க செய்தவர்களில் மாணவர்கள் ஆகிய இவர்களின் பங்கு அளப்பரியது . எவ்வித அரசிய…
-
- 0 replies
- 186 views
-