Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா சென்றுள்ளனர். இந்த பயணத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வூ தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த விஜயம் முக்கியமாக நோக்கப்படுகிறது. இந்திய பிரதமரின் அழைப்பை ஏற்றே கூட்டமைப்பு டெல்லி செல்கின்றது. கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலைநாதன், பொன். செல்வராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரே இக்குழுவில் அங்க…

    • 0 replies
    • 410 views
  2. தங்கையை 13 வயது அக்கா கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று மொனராகலை படல்குபுர பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் பதிலா பானு (வயது 6 ) என்ற சிறுமியே கத்திக்குத்துக்கு இலக்காகி படல்குபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். அக்கா - தங்கை இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடே இக் கொலைக்கான காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மரத்தில் இருந்து விழுந்ததாக கூறியே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இதேவேளை சந்தேகநபரான 13 வயது சிறுமி கைதுசெய்யபட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=121343…

  3. ஈரோடு அருகில் உள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்.SSM கல்லூரியில் நடைபெறும் மகளிருக்கான தொழில் முனைவோர் மாநாடு 22-08-2014 அன்று நடை பெற இருந்தது. அதற்கு இன்று இலங்கையைச் சேர்ந்த சிங்களப் பெண்தொழிலதிபர்கள் இலங்கை பண்டாரநாயகா விமானநிலையத்தில் புறப்பட்டு Mahin langa என்ற விமானம் மூலம் மதுரைக்கு வந்திறங்கி பின்னர் அங்கிருந்து தரைவழியாக குமாரபாளையம் செல்வதாக இருந்தது . இதனை அறிந்த தந்தை பெரியார் திராவிடர் கழகம் இலங்கையின் மீது பொருளாதாரத்தடை விதிக்கவேண்டும் என தமிழகம் சட்டசபைத்தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் இங்குள்ள தொழிலதிபர்களை இலங்கையில் தொழில்நிறுவனம் அமைக்க அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு தமிழகம் வரும் சிங்களவர்களைத் தமிழ்நாட்டில் நுழையவிடமாட்டோம் என கழக பொதுசெ…

    • 0 replies
    • 369 views
  4. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் தொடர்பான ஆலோசகர் சமன் திஸாநாயக்க பிரபல தொலைக்காட்சி நாடக இயக்குனர் நாலக வெதமுல்ல என்பவரின் மனைவி சந்தி ரணதுங்கவை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்படுத்தினார். என்று நுகேகொட சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. எனது பெயர் சந்தி ரணதுங்க தொலைக்காட்சி நாடக இயக்குனரின் மனைவி திருமணம் முடித்து ஒரு குழந்தையும் உள்ளது. நான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாச்சார அமைச்சில் சங்கீத ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தேன். கடமையாற்றிய காலத்தில் ஜனாதிபதி ஆலோசகர் சமன் திஸா நாயக்கவே ஜனாதிபதியின் சங்கீத மற்றும் கலாச்சார ஆலோசகராக கடமையாற்றினார் இதன் காரணமாக நா…

    • 0 replies
    • 534 views
  5. வடமாகாணசபையில் இலங்கையினில் நடந்தது நடந்து கொண்டிருப்பது இன அழிப்பே எனும் பிரேரணை தொடர்பில் கடுமையாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. விவாதத்தின் ஒரு கட்டத்தில் எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் அமர்விலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.முஸ்லீம் காங்கிரஸின் பிரதிநிதி ஒருவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண உறுப்பினர்கள் 33பேர் ஒன்றிணைந்து நவநீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்திற்கு வலுச்சேர்ப்பதாக இத்தீர்மானம் அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கே.சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது இழுத்தடிக்கப்பட்டு வந்திருந்த நிலையினில் அது இன்று விவாதத்திற்க…

    • 0 replies
    • 464 views
  6. 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா இலங்கையை பலவந்த படுத்த முடியாது என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் 95 வீதமான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் குறித்த உடன்படிக்கையானது இந்தியா இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உடன்படிக்கையாகும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் பின்னணியில் 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கையை இந்தியா பலவந்தப்படுத்த முடியாது எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை ஓர் ஜனநாயக நாடு எனவும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த விமர்சனங்கள் …

    • 5 replies
    • 784 views
  7. தேர்தல் காலங்களில் மட்டும் அரசியல் கைதிகளில் கரிசனை காட்டும் தமிழ் அரசியல் ஜாம்பவான்கள் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- அனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் உண்ணாவிரதம் தொடர்கிறது. மிகவும் பலவீனமான முறையில் அவர்கள் இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்புகொண்ட மனித நேயம் மிக்க சிங்கள அரசியல் கைதி ஒருவர் தெரிவித்தார். நடக்க முடியாத நிலையில் இருக்கும் இந்த அரசியல் கைதிகளின் நிலை பற்றி ஏற்கனவே குளோபல் தமிழ்ச் செய்திகள் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியின் கீழ் உள்ள பகுதியில் முழு விபரங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. தொடரும் உண்ணாவிரதம் குறித்து வெளியில் எவருக்கும் தெரியக் கூடாது என்றும், சிறைச்சாலை மேலதிகாரிகளுக்கு தெரியக் கூடாது என்பதிலும் சிறைக் கா…

  8. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் 14 ஆவது அமர்வில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம் ஒன்றில் விவாதித்து தீர்மானம் எடுக்கப்படும் என் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 14ஆவது அமர்வில் உறுப்பினர் சிவாஜிலிங்கம் சபையில் 3 பிரேரணையினை கொண்டு வந்தார். அதற்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருந்தனர். அத்துடன் குறித்த பிரேரணைகள் தொடர்பில் ஆளும்கட்சிக்குள்ளும் பல விவாதங்கள் இடம்பெற்றன. இதனையடுத்து குறித்த பிரேரணைகள் குறித்து விசேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து தீர்மானம் எடுக்கலாம் என்ற வேண்டுகோளினை முதலமைச்சர் முன்வைத்தார். இதனையடுத்து உறுப்பினர் கொண்டுவந்த 3 பிரேரணையில் 2ஆவது மற்றும் 3அவது பிரேரணைகள் உறுப்…

  9. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் 14 ஆவது அமர்வு தற்போது நடைபெற்று வருகின்றது. அதன்போது சிவாஜிலிங்கம் 3 பிரேரணைகளை கொண்டுவந்தார். அதனை தாங்கள் எதிர்ப்பதாகவும் அத்துடன் வெளிநடப்பும் செய்வதாகவும் எதிர்க்கட்சியினர் கூறி சபையில் இருந்து வெளியேறினர். இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினரான முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ரயீஸ் சபையில் ஆதரவு தெரிவித்து அமர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/News_More.php?id=338323355421735800

  10. 48 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5 விஸ்கி போத்தல்களுடன் மலேசிய பிரஜைகள் இருவர், குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரில் பெண்ணொருவரும் அடங்குகின்றார். கடந்த 19ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ள இவர்கள், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்கியிருந்து போலி கடனட்டைகள் மூலம் இந்த விஸ்கி போத்தல்களை கொள்வனவு செய்துள்ளனர். கொழும்பில் அமைந்துள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் ஐந்திலிருந்து இந்த 5 விஸ்கி போத்தல்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இவை தலா 9 இலட்சத்து 72 ஆயிரம் ரூபா பெறுமதியானவை என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மலேசியர்களை கைது செய்த குற்றத்தடுப்பு பிரிவினர், அவர்களிடமிருந்து 25 போலி கடனட்டைகளையும் விஸ்கி போத்தல்களைய…

  11. ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச ! பொங்குதமிழென அணிதிரளத் தயாராகும் வட அமெரிக்கத் தமிழர்கள் ! [Thursday 2014-08-21 10:00] ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற இருக்கும் சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் எதிராக, வட அமெரிக்கத் தமிழர்களை அணிதிரட்டி மாபெரும் நிகழ்வொன்றுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தயாராகி வருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 25ம் நாளன்று சிறிலங்கா அரசுத் தலைவர் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நியூ யோர்க் ஐ.நாவின் முன் 'பொங்குதமிழ்' ஒன்றுகூடலாக இந்த ஒன்றுகூடல் இடம்பெற இருக்கின்றது. இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான நரேந்திர மோடி அவர்களும், சபையில் பங்கெடுக்க…

  12. டக்ளஸ், கருணா, கூட்டமைப்பை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்தது பெருந்தவறு! - என்கிறார் ரொஹான் குணரட்ன. [Thursday 2014-08-21 09:00] ஆயுதப் போராட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அரசியல் நீரோட்டத்தில் இணைத்து, அவர்களை நாடாளுமன்றத்துக்குள் அனுமதித்து அரசு மாபெரும் தவறிழைத்து விட்டது. இது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஆகியோருக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார், சர்வதேச தீவிரவாதம் தொடர்பான நிபுணரும் பேராசிரியருமான ரொஹான் குணரட்ண. 'மோடியின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கை -இந்திய உறவு' என்ற தலைப்பில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

  13. பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இன்று வடக்கிற்கு பயணம்! [Thursday 2014-08-21 07:00] கொழும்பில் நேற்றுடன் முடிந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வையிடவுள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்…

  14. சீன எக்ஸிம் வங்கியிடமிருந்து 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் கடனாக பெற்றுக்கொண்டுள்ளது:- 21 ஆகஸ்ட் 2014 பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்காக இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி நிதி அமைச்சர் சரத் அமுனுகம பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம், கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை, நுரைச்சோலை அனல்மின் நிலையம், வட மாகாண மின்சாரத் திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்காக இந்தக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். 2 வீதம் முதல் 6.5 வீதம் வரையிலான வட்டியின் அடிப்படையில் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மிகவும்…

  15. வவுனியா, கள்ளிக்குளம், பெரியபுளியங்குளம் என்ற தமிழ் கிராமத்தில் 300 சிங்கள குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவில் அண்மைக் காலமாக பல தமிழ் கிராமங்களில் சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, தமிழ் மக்கள் மத்தியில் இன சிதைப்பை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமான கள்ளிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பெரியபுளியங்குளத்தில் 300 சிங்கள குடும்பங்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.…

  16. காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது. கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு முகாமைத்துவம் மற்றும் நீடித்த அபிவிருத்திக்கான துணைத் தலைவர் பிந்து லொஹானி தெரிவித்துள்ளார். ஆகவே, கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி…

    • 0 replies
    • 917 views
  17. போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பரஸ்பரம் உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இலங்கை - இந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர். நேற்றுப் புதன்கிழமை இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-இலங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இலங்கையில் இருந்து வடக்கு மாகாண பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையிலான குழுவினரும் இந்தியாவின் சார்பில் அந்நாட்டு தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உதவி இயக்குநர் விஜயகுமார் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் இரு நாடுகளினிடையே கடல், வான் வழியாக போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கக் கையாளப்படும் உத்திகள் குறித்து விவா…

    • 0 replies
    • 367 views
  18. இந்த வீடியோ இப்போ என் கண்ணில் பட்டது ..............உண்மையில் எம் போராட்டத்தின் மேல் பற்றுக்கொண்டவர்கள் புலிப்பார்வை படத்தின் சூழலால் சீமான் மீதுஎன்னைப்போல சந்தேகம் கொண்ட உறவுகளே பொறுமையாய் ஒரு தடவை நீங்களும் பாருங்கள் . பப்ளிக்காக பல விடயங்களை கூறுகிறார் ... பொய் என்று தோன்றினாலும் இப்படி பப்ளிக்காக பொய் சொல்ல முடியாது என்றே நான் கருதுகிறேன் ..... சீமானை எதிர்க்கவேண்டும் துரோகியாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அன்று தொட்டு இன்று வரை உள்ள உறவுகளே நீங்க பார்க்கவேண்டாம் ........... அதனால் மீண்டும் ஒருதடவை அவசரப்படாமல் சிந்திக்கின்றேன் ......... எப்பொருள் .யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

  19. 'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் கதாபாத்திரத்தில் மாற்றம் செய்து படப்பிடிப்பு நடத்த இருப்பதாக இயக்குநர் பிரவீன்காந்தி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரகனின் மகன் பாலசந்திரன் மரணத்தைப் பின்னணியாக கொண்டு தயாராகி வரும் படம் 'புலிப்பார்வை'. பிரவீன் காந்தி இயக்கி வரும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சிறுவன் பாலசந்திரனை போராளி போன்று சித்தரித்து இருப்பதாக, இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், இப்படத்தை திரையிட விடமாட்டோம் என்று 65 தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து அறிவித்தன. தமிழ் அமைப்புகளின் அறிவிப்பைத் தொடர்ந்து இயக்குநர் பிரவீன் காந்தி இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது: …

  20. மன்னார் சாவற்கட்டு பகுதியில் புனித அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக உயிரிழந்து கிடக்கும் கழுதையை பல நாட்கள் ஆகியும் மன்னார் நகர சபை அதை அப்புறப்படுத்தவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். சாவற்கட்டு அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக கடந்த 15ஆம் திகதி இறந்த நிலையில் காணப்பட்ட கழுதையை இதுவரை அப்புறப்படுத்துவதற்கு மன்னார் நகர சபை நடவடிக்கை எடுக்காமையால் குறித்த கழுதை சிதிலமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது. மிருகங்கள், பறவைகள் என இறந்து கிடக்கும் கழுதையின் உடற்பாகங்களை இழுத்து ஆங்காங்கே போட்டுள்ளதுடன் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இந்தச் சுகாதாரச் சீர்கேடு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளதோடு மக்கள் அப்பகுதியில் நடமாடுவதற்கும் தடையாக உள்ளது. மன்னார…

    • 13 replies
    • 1k views
  21. டாட்டா, லைக்கா, லிபரா, வேதாந்தா மற்றும் பல பல்தேசிய நிறுவணங்கள் மிஞ்சியிருக்கும் உயிர்களை உறிஞ்சியெடுக்க இலங்கை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. பல் தேசிய நிறுவணங்களின் குறுகிய லாப நலன்களுக்காக இயங்கும் அரசுகள் ஒன்றினைந்தே எமது மக்களை வேட்டையாடினர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை அரச பயங்கரவாதத்தை பலப்படுத்தும் பல்தேசிய நிறுவனங்களின் சதியை முறியடித்து எமது விடுதலையை வென்றெடுப்போம் வாரீர்!!! நடந்த படுகொலையை விசாரிக்க மறுக்கும் ஐநா -இந்திய மற்றும் மேற்குலக பல்தேசிய நிறுவனங்களின் நலன்களை அடைவதற்கு ஆயுதமாகத்தான் போர்க்குற்ற விசாரணையைப் பயன்படுத்துகிறது. பல்தேசிய நிறுவனங்கள் மக்களை இலங்கை அரசின் இராணுவ அதிகாரத்தின் பிடியில் வைத்துகொண்டு சகல வளங்களையும் சூறையாடுகின்…

    • 0 replies
    • 1.1k views
  22. கடந்த மாதம் சுவிஸ் நாட்டில் இருந்த குடும்பமாக யாழ்ப்பாணத்திற்கு வந்த நபா் ஒருவா் தனது மனைவியி்ன் தங்கையுடன் தலைமறைவானார். தீவகப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பத்தில் மனைவி தற்போது தனது கணவனையும் தங்கையையும் தேடி வருவதாகத் தெரியவருகின்று. தலைமறைவான நபருக்கு வயது 38 என்றும் மனைவியின் தங்கைக்கு 20 வயது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மனைவியின் தங்கையுடன் கணவா் வெளிநாட்டில் இருக்கையில் தொடா்ந்து ஸ்கைப்பில் கதைத்து வருவதும் அவளுக்கு பல தடவைகள் தனிப்பட்ட முறையில் பணம் அனுப்பியமையும் தனக்கு தெரிந்திருந்தாலும் தனது கணவா் இந்த நோக்கத்திற்காகத் தான் இவ்வாறு செய்தார் எனத் தெரியவில்லை என மனைவி அழுதபடி உள்ளதாக தெரயவருகின்றது. இரு குழந்தைகளின் தந்தையான குறித்த நபா் தற்போது மனைவியி்ன…

  23. விஜய்,சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி படத்திற்கு ரிலீஸ் ஆகும் முன்னரே பயங்கர எதிர்ப்பு நிலவுவதால் இந்த படத்தின் தயாரிப்பாளர் படத்தை கைமாற்ற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பரான லைகா புரடொக்ஷன் நிறுவனர் ஏ.சுபாஷ்கரன் மற்றும் கருணாமூர்த்தி ஆகியோர் தயாரித்திருக்கும் கத்திபடத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என தமிழ் அமைப்புகளும், மாணவர்கள் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரச்சனையை சுமூகமாக முடிக்க தற்போது நேரடியாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தில் ஏற்பட்டுள்ள ஒரே பிரச்சனை தயாரிப்பாளர் என்பதால் தயாரிப்பாளரிடம் பேசி படத்தை வேறொரு தயாரிப்பாளரிடம் கைமாற்றும்படி விஜய் ஏ.ஆர்.முருகதாஸிட…

  24. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் பிரபல இடது கை துடுப்பாட்டாக்காரரும் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜயசூரியவிற்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில் தெரிவிய வருவதாவது, எனது பெயர் கசுன் தனுஷ்க வேலாரத்ன எனது மனைவியின் பெயர் ரதீஷா வேலாரத்ன இலங்கை விமான சேவையில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகின்றார். சனத் ஜயசூரிய எனது மனைவியுடன் இரகசியமாக தொடர்பை பேணி எனது மனைவியுடன் கடந்த காதலர் தினத்திலன்று 14 பிப்ரவரி 2014 அன்று சிங்கப்பூரில் இவர்கள் இருவரும் நட்சத்திர விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த வருடம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.