Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே இந்த துண்டுப் பிரசுரங்கள் எறியப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 11ஆம் திகதி முதல் டிசெம்பர் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நடமாடுவதற்கும் விடுதியில் தங்குவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=97395&category=TamilNews&language=tamil

  2. -எஸ். பாக்கியநாதன், எம்.எச்.எம். ஹூசைன்., வி. சக்திவேல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் கணவனை இழந்த விதவைகள் சுமார் 90,000 பேர் உள்ளனர் என விழுது ஆற்றல் பேரவை மையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தம் தெரிவித்தார். யாழ்ப்பாணம், புத்தளம், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள விதவைகளின் குடும்பங்களுக்கு தலைமைதாங்கும் பெண்களின் மாநாடு௨013 மட்டக்களப்பு கிறீன் கார்டன் ஹோட்டலில் இன்று (22) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மேற்கூறப்பட்ட 4 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட எண்பது விதவைகள் செயலணியின் தலைவிகள் பங்குகொண்ட மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் கூறுகையில், வெளிநாட்டு விதவைகள் அமைப்புடன் விழுது …

  3. மன்னாரில் மனிதாவிமான பணியாளர்களுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டலை கண்டித்து கண்டனப்பேரணி மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை என்பவருடைய வீட்டிற்கு நேற்று வியாழக்கிழமை அதிகாலை சென்ற இனம் தெரியாத குழுவினர் அவருக்கும்,அவருடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டமையினை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு, தேசிய மீனவ ஒத்துழைப்புப்பேரவை,மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கம் ஆகியவை இணைந்து குறித்த கண்டனப்பேரணியினை நடாத்தினர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு முன் ஒன்று கூடிய மக்கள…

  4. ஒதிய மலைப் படுகொலையை நினைவு கூறுவதற்கு இந்த ஆண்டு எந்தத் தடையும் இருக்காது. தமிழ் மக்கள் கொல்லப்பட்ட இடத்திலேயே இந்த ஆண்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று மாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட, ஒதியமலைப் பகுதிக்கு நேரடியாகச் சென்ற மாகாண சபை உறுப்பினர். அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: ஒதியமலையில் தமிழ் மக்கள் குடியிருந்த வீடுகளின் அத்திபாரங்கள் கூடத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. அங்கேயிருந்த பழைய பாதை அழிக்கப்பட்டு, குடியேற்றப்பட்ட சிஙகள மக்களுக்காகப் புதிய பாதை அமைக்கப்பட்டு வருகின்றது. காடுகள் …

    • 2 replies
    • 514 views
  5. பொதுநலவாய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, அதன் தலைமைத்துவம் எமது நாட்டுக்கு வழங்கப்பட்டதனூடாக அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளைச் சர்வதேசம் அங்கீகரித்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இலங்கையில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்ற 53 நாடுகளும் அறிந்துகொண்டுள்ளன. இதனூடாக இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் மேற்கொள்ளும் பிரசாரங்கள் முற்றிலும் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 2014ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த உரையில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இந்த வரவு - செலவுத…

  6. யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினத்தை நினைவூட்டும் பிரசுரங்கள் சிலவற்றை இராணுவப் புலனாய்வுப்பிரிவு இன்று வீசிச்சென்றுள்ளது. இலக்கத்தகடற்ற மோட்டார் சைக்கிள்கள் சிலவற்றில் சென்றிருந்த குழு ஒன்றே குறித்த துண்டுப் பிரசுரங்களை உள்ளே வீசிச் சென்றதாக பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நிர்வாகத்திற்கு அறியத்தந்துள்ளனர். மாணவர்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்கும் சதி முயற்சியாக இது இருக்கலாமென பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் இத்தகைய துண்டுபிரசுரங்களை வீசி வேவு பார்க்கப்படலாமென தாம் நம்புவதாக ஆசிரிய சங்க வட்டாரங்களும் தெரிவித்தன. ஏற்கனவே இலங்கை முழுவதும் பொதுநலவாய மாநாட்டினை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு தற்போது அவை திறக்கப்பட்டும் விட…

  7. பிரித்தானிய பிரஜையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளருமான குர்ஹாம் சாக்கீ படுகொலைச் சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் சிமோன் டான்சூக் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். 2011ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று குர்ஹாம் சாக்கீ மற்றும் அவரது ரஸ்ய காதலி ஆகியோர் தங்காலை ஹோட்டலில் ஒன்றில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குர்ஹாம் சாக்கீ கொல்லப்பட்டதுடன், ரஸ்ய பெண் படுகாயமடைந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தத் தவறியுள்ளதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் டான்சூக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் நீதி கிட்ட வேண்டுமென குர்ஹாமின் குடும்பத்…

  8. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென பிரித்தானியா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கை உரிய விசாரணைகளை நடத்தத் தவறினால் சர்வதேச விசாரணைகளை நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என பிரித்தானியாவின் சிரேஸ்ட வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் பார்னோஸ் வார்சீ தெரிவித்துள்ளார். பிரதமர் கமரூன் இலங்கை அமர்வுகளில் பங்கேற்றமை சரியான தீர்மானமே என அவா சுட்டிக்காட்டியுள்ளார். 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றுக்கொண்டதன் பின்னர் வடக்கிற்கு விஜயம் செய்த முதலாவது வெளிநாட்டுத் தலைவர் கமரூன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் கமரூனின் தீர்மானம் காரணமாகவே வடக்கில் செய்தி சேகரிப்பில் ஈடுபட ஊடகவியலாளர்களுக்…

  9. தங்காலையில் படுகொலைசெய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையும், செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டு ஊழியருமான குர்ஹம் சாக்கி கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஆளும் கட்சியின் தங்காலை நகர சபைத் தலைவர் உள்ளிட்ட ஐந்து பேரை கொழும்பு மேல் உயர் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானியா தொடர்ந்து கோரி வருகிறது. 2001ஆம் ஆண்டு நந்தார் பண்டிகையன்று குர்ஹாம் சாக்கியும், அவரது ரஷ்ய காதலியும் தங்காலை விடுதியொன்றில் வைத்து ஆளும் கட்சி அரசியல்வாதி உள்ளிட்ட குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் குர்ஹாம் சாக்கி உயிரிழந்ததுடன், ரஷ்ய காதலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குற…

  10. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென இந்தியா கோரியுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவரையும் இலங்கை அரசாங்கம் தண்டிக்க வேண்டுமென மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். மனித உரிமை மீறல் விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தி தண்டிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டிள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டியது இலங்கை அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை வைத்து எதனையும் நிர்ணயித்து விட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். லாபம் கிடைக்க…

  11. கிளிநொச்சி , முல்லைத்தீவில் சில மாதங்களுக்கு முன்னர் கட்டாய கருத்தடை இடம் பெறுவதாக அறிக்கைகள் வெளியாகி இருந்தன. இது சனவரி 2012 முதல் அரசு ஆதரவுடன் படைத்தரப்பின் வற்புறுத்தலினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை இங்கு குளோபல் தமிழ் செய்திகள் ஆதாரத்துடன் பிரசுரிக்கிறது. Annual health bulletin 2012 S.No 1.21 family planning – new acceptors இல் வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன. முல்லைத்தீவில் IUD கருத்தடை மருந்தானது 11284 பெண்களுக்கு கருப்பையினுள் உட்செலுத்தப்பட்டுள்ளதுடன் 4694 பெண்களுக்கு Implants என்னும் தோல் ஊடு ஊசிமூலமும் உட்செலுத்தப்பட்டுள்ளது. இவை 5 தொடக்கம் 7 வருடங்கள் உடலில் கருக்கட்டும் தன்மையை இல்லாமற் செய்கின்றன. இக்கருத்தடை சாதனம் ஒரு கு…

  12. பாதுகாப்புச் செயலளார் பாப்பாண்டவரை சந்தித்தார்:- 21 நவம்பர் 2013 பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, பாப்பாண்டவர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்தித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் வத்திக்கானுக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பினை, பாப்பாண்டவரிடம் கோதபாய ராஜபக்ஷ ஒப்படைத்துள்ளார். விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாப்பாண்டவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். உலக சமாதானத்திற்காக பாப்பாண்டவர் ஆற்றி வரும் சேவைகள் பாராட்டுக்குரியவை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தள்ளார். 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் நாட்டில் பாரியளவில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …

  13. தமிழரசுக் கட்சியும் EPDPயும் இணைந்து பிரதேச சபை வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்தன – 21 நவம்பர் 2013 TNAயின் பங்காளிக் கட்சிகளின் குடுமிப்பிடி சண்டை மீண்டும் ஆரம்பம்? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது குடுமிப்பிடி சண்டை மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளதா என்ற கேள்விகள் யாழ்ப்பாணத்தில் எழுந்துள்ளன. இதன் முக்கிய எதிரொலியாக கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைய வைக்கப்பட்டுள்;ளது. பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமரால் சபையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்…

  14. எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் இலங்கை மனித உரிமை பிரச்சினை தொடர்பான குறைப்பாடுகளை நிவர்த்தி செய்ய தவறினால் சர்வதேச ரீதியான ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்படுவதை தவிர்க்க முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்திற்கு முன்னர் இலங்கை மேலும் முன்னேற்றமான முனைப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன். அடிப்படையான விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மேற்கொண்டுள்ள இந்த பணிகள் பராட்டத்தக்கது. இலங்கை மீதான சர்வதேசத்தின் கவனத்தை திரும்பும் நோக்கில் நான் கொழும்புக்கு வந்தேன். …

  15. நாடாளுமன்றத்தின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அறைக்குள்ளிருந்து பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அறையிலுள்ள பூச்சாடியொன்றின் கீழிருந்தே இந்த பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது விரியன் பாம்பாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அறையிலுள்ள தொலைபேசியை இன்று நண்பகல் 12 மணியளவில் பழுது பார்த்துக்கொண்டிருந்த ஊழியரே இந்த பாம்பைக் கண்டதாகவும் அது பின்னர் நாடாளுமன்ற ஊழியர்களால் பிடிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் வனவள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/90466-2013-11-21-09-46-19.html

  16. -எஸ்.கே.பிரசாத் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளதாக பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த நியமனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்; தெரிவித்தார். குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நாடு பூராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகிந்த சிந்தனையின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்தல், அந்த அபிவிருத்தி தொடர்பான ஆய்வுகள் செய்தல், திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பல்வேறு வி…

    • 2 replies
    • 378 views
  17. தமிழ் மக்கள் சலுகைகளுக்குச் சோரம் போகின்றவர்களல்ல என்பதை அரசு உணர்ந்துள்ளது (தம்பு கனகசபை ஒரு சட்டததரணி. “ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்” “மகாவம்சம் ஒரு மீளாய்வு” என்ற தமிழ், ஆங்கில நூல்களின் ஆசிரியர். அவர் அண்மைணில் யாழ்ப்பாணம் சென்ற போது வடமாகாண மாண்புமிகு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை நேர் காணல் கண்டார். எழுத்து மூலம் கேட்ட கேள்விகளுக்கு எழுத்தில் முதலமைச்சர் பதில் அளித்தார். கேள்விகளும் பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் எதிர்கால அரசியல் தந்திரத்தையும் உத்திகளையும் அறிந்து கொள்ள அவரது பதில்கள் துணை செய்கின்றன.) 1) திரு இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் உங்கள் முகத்தைக் காட்டி அமோக வெற்றிய…

  18. கடந்த 15ம் திகதி வெள்ளிக்கிழமையன்று; கிளிநொச்சி நகரப்பகுதிக்குள் வைத்துப் பொதுமக்கள் பலர் பார்த்திருக்க பகலில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக அழுது கொண்டு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இடம் எதுவென்றோ அல்லது அவரைக் கடத்தியவர்கள் யார் என்றோ இதுவரை அறிந்து கொள்ளமுடியவில்லை என குடு;ம்பத்தவர்கள் கூறுகின்றனர். வெள்ளை வான் குழுவால்; கடத்தப்பட்ட இவர் பிரதான வீதி, கண்டாவளையைப் பிறப்பிடமாகவும் கூழாவடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட 35 வயதுடைய சிவகுமார் பாஸ்கரன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடும்பஸ்த்தர் இராணுவத்தினரின் தடுப்பு முக…

  19. வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு:- வலி.வடக்கு இடம்பெயர்ந்த மக்களிற்கு மாற்றிடம் வழங்கி குடியேற்றுவதை முற்றாக நிராகரிப்பதாக வலி.வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்விற்கான அமைப்பு அறிவித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு நிலப்பரப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் 30 இற்கும் அதிகமான முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் கைவிடப்பட்ட கற்குவாரி பகுதிகளில் குடியமர்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொண்டால் வலி.வடக்கு நிலப்பரப்பு படையினரிற்கு கைமாறிப்போவதை என்றுமே தடுக்க முடியாதென அவ்வமைப்பின் தலைவரான சணமுகலிங்கம் சஜீவன் தெரிவித்தார். இன்று யாழ்.ஊடக அமையத்தில் …

  20. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் மூன்று பிரபலமான பெண்களில் ஒருவரை பொதுவேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. அடுத்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. அப்படி தேர்தல் அறிவிக்கப்பட்டால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இலங்கையின் 43வது பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா ஆகிய மூவரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வைப்பது என எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை நிறுத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் …

  21. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10105:2013-11-21-17-38-43&catid=1:latest-news&Itemid=18

  22. பரிசுத்த பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று உரோமிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் நாவலகே பேர்னாட் குரே தெரிவித்தார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் புஷ்பா ராஜபக்ஷ ஆகிய இருவரும் இன்று (20) வத்திக்கானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளரும் அவரது பாரியாரும் இன்றைய தினம் பாப்பரசரைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன் அழைப்புக்கான வேண்டுகோளையும் விடுத்ததாக பேர்னாட் குரே மேலும் தெரிவித்தார். http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/90310-2013-11-20-12-30-50.html

  23. -எஸ்.கே.பிரசாத் யாழ்ப்பாணம் வருகை தந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களின் துன்பங்களைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இன்று யாழ்பாணம் வருகை தந்த பிரிட்டன் பிரதமருடன் சனல் 4 ஊடகவியலாளர்களும் வருகை தந்திருந்தனர். காணாமல் போனவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தினைப் பார்வையிட்ட சனல் 4 ஊடகவியலாளர் ஜோண் சோ மக்களை ஆரத்தழுவி கண்ணீர் விட்டழுதுள்ளார். பிரிட்டன் பிரதமரைச் சந்திப்பதற்காக வருகை தந்திருந்த மக்களை பொலிஸார் தடுத்ததையடுத்து அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டு உடனடியாக பிரிட்டன் பிரதமரின் உதவியாளரிடம் அந்த கோரிக்கையை சமர்பித்துள்ளார். http://tamil.dailymirror.lk/--main/89728--4-.html

  24. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன தீர்மானமொன்று சாவகச்சேரி நகர சபையில் நேற்று புதன்கிழமை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபையின் மாதாந்தக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, முரளிதரனுக்கு எதிரான கண்டனத் தீர்மானத்தினை நகர சபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன் சமர்ப்பித்தார். அதனை நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் வழிமொழிய சபையின் முழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இதன்போது உரையாற்றிய நகரசபை உறுப்பினர் பா.ஸ்ரீதரன், “நாடுகளுக்கு இடையில் கிரிக்கெட விளையாடிக் கொண்டிருந்த முரளிதரனுக்கு வடக்கில் தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களும் இளைஞர் யுவதிகள் காணாமல் போனதும்…

  25. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை போன்று ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை நாடாளுமன்றத்தில் அவர் இன்று ஆற்றிய வரவு செலவுத் திட்ட உரையின் பொழுது தெரியவந்தது. வரவு செலவுத் திட்டத்தின் ஆரம்பத்தில் உரையாற்றிய ஜனாதிபதி "நான் அறிந்து நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக நினைவில் இல்லை" என்றுக் கூறினார். ஜனாதிபதி இப்படி கூறினாலும் கடந்த வருடம் ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஏனைய தினங்களில் அரசாங்கம் நாடு முழுவதும் மின்சாரத்தை துண்டித்தது. இதே போன்று பல தடவைகள் அரசாங்கம் மின்சாரத்தை துண்டித்தது. எவ்வாறானும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு வருடகாலத்திற்கு முன்னர் நடந்த சம்பவங்கள் மறந்து போயுள்ளதாக சிங்கள இணைத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.