Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்.. ஜக்கிய தேசியக் கட்சி அலுவலகத்தில் நடாத்தப்பட்ட மனித உரிமை மீறல் தொடர்பிலான நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொதுபல சேனா அமைப்பினால் இன்று ஆர்பட்டம் மேற்கொள்ளப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் நடாத்தப்பட்டது. இதன்போதே பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்குள் பிரவேசித்து நிகழ்வை குழப்ப முயற்சித்தார் எனவும் இதனால் அங்கு நின்ற ஜக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களால் இவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்…

  2. நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்காக இலங்கை வந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். காலை 8 மணிக்கு நயினாதீவு நாக விகாரை மற்றும் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளை மேற்கொண்டதோடு நயினாதீவு இயற்கை அரண்களையும் பார்வையிட்டனர். பின் காலை11.30 மணியளவில் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமை நாயகத்துடன் யாழ் மாவட்டத்தின் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=742282443514899474#sthash.bpFjsgYZ.dpuf

  3. கொழும்பில் இவ்வாரம் பொதுநலவாயத்தின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால் சிறிலங்காவின் ஆளும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர். இவர்களில் சிலர் மீது போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையிலும் இவர்கள் பொதுநலவாய அமைப்பின் உச்சி மாநாட்டை நடாத்துவதற்கு ஒன்றாக இணைந்துள்ளனர். ஆகவே இந்த ராஜபக்சக்கள் யார்? 2005லிருந்து சிறிலங்காவின் அதிபராக ராஜபக்ச உள்ளார். இவர் நாட்டில் வாழும் மக்களின் அரைவாசிப் பேரின் வாக்குகளை மட்டுமே பெற்று நாட்டின் அதிபராகினார். மகிந்த ராஜபக்ச பதவிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தை இவர் நிறைவுக்குக் கொண்டு வந்ததுடன் தமிழ்ப் புலிகளை அழித்ததன் மூலம் பிரபலமடைந்துள்ளார். 2010ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் சிறிலங்கா அத…

  4. நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வடக்கில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துக் கொள்ளும் வகையில் தற்பொழுது வடக்கில் போராட்டம் நடத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். போலியான காணிப் பிரச்சினை ஒன்றினை மையமாகக் கொண்டு போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் தற்போது நடத்தப்பட்டு வரும் போராட்டமானது மெய்யான நோக்கங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய பிரித்தானிய பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு போராட்டம் நடத்தப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 11000 ஏக்கரில் இராணுவ முக…

  5. யாழ்ப்பாணம் மற்;றும் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரண்டு பேரூந்துகள் மீது இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பேரூந்து ஒன்றின் சாரதி காயமடைந்து சிலாபம் வைத்தியவாலையில் அனுமதிக்கபப்பட்டு உள்ளார். சிலாபம் கொழும்பு வீதியில் காக்கைப் பள்ளி மற்றும் மாதம்பே என்ற இடங்களிலேயே இந்த கல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேரூந்து ஒன்றின்மீதும் இட்டக்குளம் பகுதியில் வைத்து கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவங்களில் பயணிகளுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. எனினும் திடீரேன ஏற்;படடுள்ள பேரூந்து மீதான கல்வீச்சுகளினால் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்புக்கு இடையில…

  6. கொழும்பை தலைமையாக கொண்டு யாழ்ப்பாணத்திலும் அச்சிட்டு வெளியிடப்படும் பிரபல தமிழ் நாளேடு ஒன்றில் இருந்து அரசியல் பகுதிக்கான ஊடவியலாளர் ஒருவர் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளார். வட மாகாணசபையின் இரண்டாவது அமர்வில் ஆளுநர் சந்திரசிறி நிகழ்த்திய உரையை பிரசுரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் நாளேட்டின் கொழும்பு நிர்வாகம் குறித்த ஊடகவியலாளரை இடைநிறுத்தி உள்ளது. இடைநிறுத்தும் முன்னர் சிறிய விசாரணைகள் கூட நடத்தப்படவில்லை என சக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆளுனரின் உரை நீண்டதாக இருந்ததால் அதனை அடுத்தபதிப்பில் கட்டுரையாக அல்லது முழுமையான செய்தியாக வெளியிடலாம் என்று கருதி அந்த உரையை குறித்த ஊடகவியலாளர் முதல் பதிப்பில் வெளியிடவில்லை. உரை மொழிபெயர்க்கப்பட்டு பகல் வேளை கிட…

  7. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் புது தில்லியில் இன்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தார். இந்தியாவிலிருந்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் இவர், அதற்கு முன்பு கொல்கத்தா செல்கிறார். பிரிட்டன் மற்றும் இந்தியாவுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்தும் விதமாக இந்தியாவுக்கு சுற்றுபயனத்தை மேற்கொண்டுள்ள டேவிட் கேமரன் நேற்று புதுதில்லி வந்தடைந்தார். பின்னர் இன்று மன்மோகன் சிங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையான வர்த்தகம், தொடர்புகள், பாதுகாப்பு, சர்வதேச பிரச்சனைகள் மற்றும் தீவிரவாதம் குறித்தும் பேச்சு நடத்தினார். பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேவிட் கேமரன், இந்தியா , இலங்கையில் நடைபெறும் காம…

  8. "வழமைபோல் வாகனங்களில் மக்களை இறக்கி சுலோகங்களில் தமிழை கொலைசெய்தது அரசாங்கம்" இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை சனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவதாக கூறி, கலம் மெக்ரே உட்பட சனல் 4 ஊடகத்தின் செய்தியாளர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் இன்று வியாழனன்று (14.11.13) ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. ஏ9 வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சனல் 4 ஊடகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர் வவுனியா மன்னார் வீதிச் சந்திக்கருகில் யாழ் வீதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா அரச செலயக வாயில்வரை சென்றது. ஆர்…

  9. Wednesday, 2013-11-13 வடக்கு மக்களைப் போல் மிகக் கொடூரமானதொரு வாழ்க்கையினை இலங்கையில் வேறொருவரும் அனுபவிக்கவில்லை. யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இராணுவத்தினரும் அரசாங்கமுமே முழுப்பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஜக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த 1,47,642 பொது மக்களின் நிலமை என்ன? சர்வதேச ஊடகங்கள் தலையிட்டில்லாதிருப்பின் இலங்கையில் நடந்த இனப்படுகொலை மூடி மறைக்கப்பட்டிருக்கும். எனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீ கொத்தாவில் நேற்று சமகி இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அவர்…

  10. இது தொடர்பான செய்திகள் கிடைத்தால் இத்திரியில் இணையுங்கள். William Hague ‏ Meeting members of the Tamil National Alliance to discuss and support #humanrights and reconciliation in Sri Lanka (twitter)

  11. காணொளி : இலங்கைச் சித்திரவதைகள் தொடர்பாக அவுஸ்ரேலிய தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி காணொளியை பார்க்க,,, http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9998:2013-11-14-13-41-47&catid=1:latest-news&Itemid=18

  12. Sri Lanka: people 'putting themselves at risk' - video President Mahinda Rajapaksa tells Channel 4 News he is "not concerned" by allegations of war crimes - but Jonathan Miller says people in Sri Lanka could be at risk after speaking to the programme http://www.channel4.com/news/sri-lanka-human-rights-president-rajapaksa-video

  13. Sri Lanka president: 'You must respect our culture' - video Sri Lankan President Mahinda Rajapaksa, who has been accused of war crimes, says his country has a "system" to deal with complaints of human rights violations. http://www.channel4.com/news/sri-lanka-president-mahinda-rajapaksa-human-rights-video

  14. கண்டனப் போராட்டம் கொழும்பில் பொதுநலவாய நாட்டுத் தலைவர்களின் மாநாடு நடைபெறும் நாட்களில் நில அபகரிப்புக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரிய கவனயீர்ப்புப் போராட்டம் நொவெம்பர் 15, 16 நாட்களில் நடைபெற இருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களும் த் ததேகூ நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் முகமாக கண்டனப் போராட்டங்கள் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலஅபகரிப்பு, இனவழிப்பு, இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல், காணாமல் போனவர்கள், சிறைகளில் விசாரணையின்றி ஆண்டுக்கணக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் போன்றவற்றைக் கண்டித்த…

  15. இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்ட செய்தி கேட்டு அடக்க முடியாத ஆத்திரமும் அதே நேரம் அதேயளவுக்கு வேதனையும் ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் என்ற பெயர் அந்த நினைவு முற்ற சுவரை இடித்தவர்களுக்கும் இடிக்க உத்தரவிட்டவர்களுக்கும் வெறும் எட்டெழுத்து சொல்மட்டமே. ஆனால் நமக்கு அது ஒரு இனத்தின் வரலாறு. ஓரு இனத்தின் துயரம்;.இந்த நூற்றாண்டில்; நடந்த மிகப்பெரிய மனிதப்படுகொலையின் சான்று.எங்கள் சொந்தங்களை எங்கள் உறவுகளை இழந்த இடம்.அந்த வேதனையும் வலியும் அது ஏற்படுத்திய சோகமும் இந்த நடிப்பு சுதேசிகளால் துளியளவும் புரிந்து கொள்ளவோ உணரவோ முடியாது. முள்ளிவாயக்கால் மண்ணிலே எங்கள் இனத்தையே கருவறுத்துவிட்டு ராஜபக்ஷ சொன்ன காரணங்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை …

    • 3 replies
    • 1.7k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றச் செயல்களை அங்கீகரிக்கவில்லை என கனடா அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் சகல இலங்கையர்களும் எதிர்நோக்கிய இன்னல்களை கனேடிய அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள், கனடாவில் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கனடாவின் சார்பில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் தீபக் ஒபுராய் தொடர்பில் இலங்கை ஊடகங்கள் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என குறிப்பிட்டுள்ளது. தீபக் ஒபுராய், தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளுக்…

  17. மீண்டும் வெற்றிபெற்றுள்ள ராஜபக்சவின் ராஜதந்திரம் – தினமணி ஆசிரியர் தலையங்கம் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்திற்கு பிரதமர் போகவில்லை. அவருக்கு பதிலாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கலந்து கொள்ளப் போகிறார். இதிலென்ன பெரிய ராஜதந்திரமோ, ராஜபட்ச அரசுக்கு எதிரான கண்டனமோ இருக்கிறது என்பது தெரியவில்லை. பிற மாநிலப் பத்திரிகைகள் பிரதமரும் மத்திய அரசும் தமிழக அரசியல் கட்சிகளின் பயமுறுத்தலுக்கு அடிபணிந்து விட்டதாகவும், மாநிலத்தின் வற்புறுத்தலுக்காக தேசிய நலன் பலி கொடுக்கப்பட்டிருப்பதாக விமர்சிக்கின்றன. இந்தியா என்பது பல மாநிலங்களில் கூட்டமைப்பு. மாநில உணர்வுகளை மதித்துதான் மத்திய அரசு செயல்பட்டாக வேண்டும். அதனால், தமிழக அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்கு மத்தி…

  18. காணாமல் போனோர் தொடர்பில் சிறீலங்கா அரசை பொறுப்புக்கூற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் வவுனியா நகரப்பகுதியில் எதிர்வரும் 15ம் திகதி காலை 11.00 மணிக்கு மாபெரும் தீப்பந்த ஊர்வலத்தை வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. "கொமன் வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும், அரசியல் பிரமுகர்களும், சர்வதேச ஊடகவியலாளர்களும் எதிர்வரும் 15ம் திகதி வட பகுதிக்கு விஜயம் செய்து சமகால நிலைவரங்கள் தொடர்பில் அவதானிக்கவுள்ளதால் காணாமல் போனோரின் பெற்றோர்கள், உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவிருப்பதாக எமக்கு தெரியப்படுத்தியமைக்கு அமைவாக அந்த போராட்டத்த…

  19. தமிழக மீனவர்களை விடவும் இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் வடக்கு மக்கள் பூரண சுதந்திரத்;தை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக தமிழ் மக்கள் குறித்து அம்மாநில அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறத்தியுள்ளார். தமிழக வாழ் தமிழ் மக்களை விடவும் பொருளாதார ரீதியில் வடக்கு தமிழ் மக்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார். வீடு, மின்சாரம், குடிநீர் மற்றும் உட்கட்டுமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வலிகாமத்தில் தமிழ் மக்கள் போராட்டமொன்றை நடத்தி வருவதாகவும் அரசாங்கம் அதனை தடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். …

  20. எமது உரிமைகளை மீட்பதற்காக நாங்கள் சாதாரணமானவர்களுடன் போராட்டம் நடத்தவில்லை நாட்டினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்துடன் போராடுகின்றோம். எனவே நினைத்தவுடன் எதனையும் செய்ய முடியாது படிப்படியாகவே மேற்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும் நில ஆக்கிரமிப்பை வலியுறுத்தியும் மாவட்டபுரம் கந்தன் ஆலய முன்றலில் நடைபெற்று வரும் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்றைய தினம் கலந்துகொண்டு உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்து 4 ஆண்டுகள் கடந்தும் இதுவரை மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அத்துடன் …

  21. கேமரனுக்கு இலங்கை அமைச்சர் கண்டனம் கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2013 - 16:04 ஜிஎம்டி கேமரனுக்கு இலங்கை அமைச்சர் கண்டனம் இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச் செய்யவேண்டும் என்று கூறுவதற்காக, காமன்வெல்த் உச்சிமாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு பிபிசியிடம் தெரிவித்திருக்கிறது. கேமரன் பிரிட்டனில் வாழும் தமிழ்ச் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காகவே விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார் என்றும் இலங்கை செய்தித் தொடர்பு அமைச்சர் கெஹெலிய ரம்புக்கவல்ல பிபிசியிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார். ஏற்கனவே இந்த மாநாட்டுக்காக இலங்கை வந்தி…

  22. இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். உலக அளவிலும், பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளிலும் இலங்கையிலும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் படையினர் கைதிகள் மீது துன்புறுத்தல்கள் மேற்கொண்டு வருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், நிலக்கண்ணி வெடிகள் அகற்றல், மாகாணசபை…

  23. புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012 12:28 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கனேடியத் தமிழ் இளைஞர்கள் இருவருக்கு எதிரான விசாரணைகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன. பிரதீபன் நடராஜா (36), சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (32) ஆகிய இருவருக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்கள் இருவரையும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கோரி கனேடிய உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையிலேயே அவ்விருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்விருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்…

  24. உதயன் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமை எனக்கு அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் அளிக்கின்றது. ஊடகங்களைப் பாதுகாக்க இலங்கை அரசு தவறியுள்ளமை தொடர்பில் கனேடிய அரசின் ஆழ்ந்த கரிசனையை இலங்கை அரசிடம் சுட்டிக்காட்டுவோம் என்று தெரிவித்தார் தீபக் ஒப்ராய். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கனேடிய நடாளுமன்றச் செயலர் தீபக் ஒப்ராய் உதயன் அலுவலகத்துக்கும் வருகை தந்தார். உதயன் மீது இதுவரை மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் அவர் விரிவாகக் கேட்டறிந்தார். அது தொடர்பான ஒளிப்படங்களையும் பார்வையிட்டார். இதன் பின்னர் அவர் கருத்துத் தெரிவிக்கையில் இந்தப்படங்களைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருக்கின்றது. இவை பேச்சுச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.