Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்டி அதன்மூலம் அடுத்த தேர்தலில் வெற்றிபெறுவதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நோக்கம் என்று ஏகாதிபதிபத்தியத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது. இந்த துரதிஸ்டவசமான நிலைமை நாட்டை அபாயமான கட்டத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருப்பதாக அந்த அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர் கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார். நாட்டில் சிங்கள மக்களின் சனத்தொகை கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டதாக செய்யப்படுவது போலியான பிரச்சாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். '1981-ம் ஆண்டில் 74 வீதமாக இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 2011-ம் ஆண்டில் 74.9 வீதமாக உள்ளது. அதேபோல 30 ஆண்டுகளுக்கு முன்னர் 70 வீதமா…

  2. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பாட்டது ஆதரவாக 25 நாடுகள் எதிராக 13 நாடுகள் நடுநிலையாக 8 நாடுகள்.

    • 27 replies
    • 2.9k views
  3. யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் ஈடுபட தடை!- டக்ளஸின் அதிரடி அரசியல் யாழ்.குடாக்கடலில் ஆழ்கடல் ரோலர் படகுகள் மூலம் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட இன்று ஏப்ரல் 1ம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக, கடற்றொழிலாளர்களைப் பழி தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். குடாக்கடல் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் அமெரிக்க ஜெனிவாத் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.நகரில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதன் போது கடற்றொழில் சமூகங்கள் இதில் கலந்து கொள்வதைத் தவிர்த்தமையே இந்த ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கு த…

    • 7 replies
    • 1.2k views
  4. வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான இந்தியாவின் வீடமைப்புத் திட்டம், வன்னியில் சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை, சிறிலங்கா இராணுவத்தின் வன்னிப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்தியா அமைத்துக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்திருந்தார். போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்ற போதிலும், இந்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை ஒரு சில ஆயிரம் வீடுகள் கூடக் கட்டிக் கொடுக்கப்படாமல் உள்ள நிலையில், இந்த உதவித் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் வடக்கில் சிங்கள…

    • 2 replies
    • 484 views
  5. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொதுபல சேனா அமைப்பின் கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலம் முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கிறார் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளார். பிக்கு ஒருவர் தலைமையிலான குழுவொன்று, அண்மையில், பெப்பிலியான பிரதேசத்தில் உள்ள பெசன் பார்க் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இனங்களுக்கு இடையில் விரோதத்தையும், குரோதத்தையும் ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் அரசு துரித நடவடிக்கை எடுக்காது போனால், அது தொடர்பாக சர்வதேசத்தின் கவனம் திரும்பும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுபல சேனா அமைப்ப…

  6. ஹகீமின் அழைப்பை புறக்கணித்த கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் ஞாயிற்றுகிழமை, மார்ச் 31, 2013 அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டதே முஸ்லிம்களின் பாதுகாக்க என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹகீம் கூறிவந்த நிலையில் இன்று முஸ்லிம் மக்கள் மீது அந்த அரசாங்கமே மறைமுக தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றது. ஆகவே இன்னும் ஏன் அந்த அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் முகமாக இன்று ஹகீமினால் கூட்டப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட சந்திப்பினை பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர். முஸ்லிம் மக்களுக்காக எனக் கூறிக்கொண்டு தமது நலன்களிற்காகவே அமைச்சுப்பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதாக …

  7. -எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கரசா தந்தை செல்வாவின் 115 ஆவது பிறந்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.தந்தை செல்வா சதுக்கத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சமாதிக்கு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவைசேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். http://tamil.dailymirror.lk/--main/62218-2013-03-31-05-12-26.html

    • 1 reply
    • 242 views
  8. என்னிடம் எதுவும் இல்லை.உயிர்மட்டும்தான் உள்ளது. அதை எம் அரசியல் வாதிகள் எடுத்தால் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்யுங்கள் என்று தம்பி சீமானுக்கு சொல்லி வைத்திருக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன். அவரது இயக்கத்தில் அமைதிப்படை இரண்டாம் பாகம் படம் தயாராகிறது.அதன் இசை வெளியீட்டுவிழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அமைதிப் படை 2ஆம் பாகம் அரசியல் படம் என்று சொல்கிறார்கள். உண்மைதான். எந்த அரசியல் கட்சியையும் தலைவரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல், சமகால அரசியலைச் சொல்லும் படம் இது. இதில் வரும் …

    • 2 replies
    • 844 views
  9. மனித உரிமை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப பொன்சேகாவின் ஜனநாயக கட்சிக்கு அங்கீகாரம்! Monday, 2013-04-01 18:18:17] முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி சட்ட ரீதியானதாக அங்கீகரிக்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் சின்னமாக தீப் பந்தம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளது பரிந்துரைக்கு அமைவாக ஜனநாயக கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது கட்சி பதிவு செய்வதில் தாமதம் எற்பட்டுள்ளமை தொடர்பில் பொன்சேகா ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம…

    • 1 reply
    • 458 views
  10. ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருக்கின்றது. இந்தியாவின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு விஜயம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது மத்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்புக்களின் போது இலங்கை-இந்திய நட்புறவு தொடர்பிலும் அவர் கலந்துரையாடுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்திய ஆதரவாக வாக்களித்து. அத்துடன், தமிழ…

  11. கொழும்பு ஹவ்லொக் மைதானத்தில் நேற்றுமாலை நடைபெற்ற சிறிலங்கா - சீன தாய்பே அணிகளுக்கு இடையிலான ரக்பி ஆட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கலகலப்பாக சிரித்துப் பேசும் ஒளிப்படம் ஒன்றை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று முகப்புப்படமாக வெளியிட்டுள்ளது. “ரோம் எரியும் வேளையில்” என்று இந்த ஒளிப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. சிறிலங்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த அடிப்படைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஹக்கீம் விசனம் வெளியிட்டிருந்தார். பெபிலியானவில் முஸ்லிம் வணிக வளாகம் தாக்கப்பட்ட பின்ன…

  12. கருணாவிற்கும் பிள்ளையானுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்! பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய பிக்குகள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய பிக்குகள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கருணா மற்றும் பிள்ளையானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மாறாக அவர்களுக்கு அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாகவுமு; தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பற்றி கருத்திற் கொண்டு புலிப் பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத…

  13. 90 றோல்ஸ் றொயிஸ் காரை மகிந்த இறக்குமதிசெய்யவுள்ளார் ! Mar 31, 2013 அன்று பிரசுரிக்கப்பட்டது. 41414கொழும்புவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற குரல்கள் தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில், மாநாட்டில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ள தலைவர்கள் பயன்படுத்துவதற்காக 90 றோல்ஸ் றோய்ஸ் கரை மகிந்தர் இறக்குமதிசெய்யவுள்ளார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. ஒரு புதுமொழி(பழமொழி அல்ல) ஆடான ஆடு எல்லாம் தவிடு… புண்ணாக்கு என்று அலைய ஒரு மக்-டொனால்ஸ் தேடி அலைந்ததாம் என்று. அப்படி ஆகிப்போச்சு மகிந்தரின் நிலை. இந்த மாநாட்டுக்காக 4000 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 90 நாடுகளின் தலைவர்களும் அடக்கம். இதற்காகவே 90 றோல்ஸ் றொ…

  14. கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுக்காக கூட்டம் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு தீடீரென வந்த கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. http://onlineuthayan.com/News_More.php?id=455741935901785750

  15. வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படலாம் என்று இன்றைய ஆங்கில நாளிதழ்களில் வெளியான எதிர்கூறல் செய்திகளை கூட்டமைப்பு மறுத்துள்ளது. கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார். இதேவேளை, குறித்த ஆங்கில மற்றும் சிங்கள செய்தித்தாள்களில் வெளியான செய்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான தமிழர் விடுதலைக் கூட்டணியும் மறுத்துள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்முடன் இணைந்துள்ள கட்சிகளை இணைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். http://www.hirunews.lk/tamil/56352

    • 1 reply
    • 604 views
  16. முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அறிந்ததிலிருந்து 6 மாதமாக ஐதேகவுக்கு நித்திரையில்லை! ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடுகள், பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் தாக்குதல் தொடர்பில் அறிந்ததன் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் வருந்துவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபு ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக கடந்த சில நாட்களுக்குள் 40 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. எனினும் அரசு இது தொடர்பில் பொருட்படுத்திக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக் காட்டினார். பொது பலசேனா அமைப்பிற்கும் அரசிற்கும்…

    • 1 reply
    • 425 views
  17. மீண்டும் அரசியலில் களமிறங்கப் போவதில்லை: சந்திரிக்கா தெரிவிப்பு! [Monday, 2013-04-01 07:04:29] மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கப் போவதில்லை எனவும், மீளவும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற விருப்பம் கிடையாது எனவும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த எவரேனும் முயற்சித்தால் பொதுவான அடிப்படையில் எந்தவொரு நேரத்திலும் அந்த முயற்சிக்கு ஆதரவளிக்கத் தயார். பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை கிடையாது. நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டம் ஒழுங்கின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தரணிகள் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட…

  18. இந்தியாவுக்கு மேர்வின் எச்சரிக்கை 01 ஏப்ரல் 2013 இலங்கை யாத்திரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக மிக விரைவில் இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால், சிங்கள் பௌத்தன் என்ற முறையிலும் துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்தவன் என்ற முறையிலும் கடும் தீர்மானங்களை எடுக்க போவதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் பண்டைய காலம் தொட்டு இருந்து வரும், உறவுகளை, கருணாநிதி உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்களினால் சீர்குலைக்க முடியாது. வழிப்பாட்டு தளங்களுக்கு இலங்கையர்கள் உட்பட மத தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு தாம் கடும் எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறேன். துட்டகைமுனுவின் பரம்பரையை சேர்ந்த இரத்த உறவுகள் நாங்கள். இந்…

  19. இலங்கையில் ஏற்றுமதிகள் கடந்த இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளன. இது அரசின் 'மஹிந்த சிந்தனையில்' திட்டமிட்டிருந்த ஏற்றுமதி இலக்குக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சிறிது கவலை அளிக்கக் கூடிய வகையில் இருந்தாலும், இதிலிருந்து மீள முடியும் என இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி யூசூஃப் மரைக்காயர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம் எனவும் அவர் கூறுகிறார். இலங்கையின் வெளிநாட்டு ஏற்றுமதிகளில் 43 சதவீதம் ஆயத்த ஆடைகள் மூலமானதாகும் என்று சுட்டிக்காட்டும் அவர், அதில் பெரும்பான்மையானது அமெரிக்கா…

  20. கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் மீது அரசின் அனுமதியுடன் இராணுவம், பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த புலனாய்வாளர்களும், அரசின் அடிவருடிகளும் நடத்திய அராஜகம் மூலம் வடக்கில் காட்டாட்சி எந்தளவிற்கு உச்சமடைந்துள்ளது என்பதை சர்வதேச சமூகம் விளங்கிக் கொள்ளவேண்டும். எனவே, சர்வதேசம் இந்தச் சம்பவங்களுக்கு கண்டனங்களை மட்டும் வெளியிடாது இலங்கை அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபைத் தேர்தல் செப்ரெம்பரில் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பில் கிளிநொச்சியில் கூட்டமைப்பு நடத்திய முதலாவது மக்கள் சந்திப்புக் கூட்டத்தை …

  21. தேசிய அரசியல் களத்தில் முக்கிய மூன்று பெண் பிரபலங்களை இறக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா ஆகிய மூவரையுமே கூட்டாகக் களமிறக்குவதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. இனிவரும் காலப்பகுதியில் நடைபெறவுள்ள தேர்தல்களைக் கருத்திற்கொண்டே எதிர்க்கட்சிகளின் முக்கிய புள்ளிகள் சிலர் இவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர் எனவும் தெரியவருகின்றது. எது எப்படியிருந்தபோதிலும், அரசின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அந்த மூவரும் அரசியல் களத்தில் நிச்சயம் குதிப்பர் எனத் த…

  22. வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்குப் பாதிப்பே உண்டாகும். இது 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்பானது. எனவே எமது கோரிக்கையை மீறி அரசு வடமாகாண சபைத் தேர்தலை நடத்த அனுமதிக்கோம். நாடெங்கும் பெரும் போராட்டங்களை முன்னெடுப்போம் இவ்வாறு பேரினவாத அமைப்புக்கள் மிரட்டல் விடுத்துள்ளன. வெறும் மிரட்டலோடு மாத்திரம் நிற்காமல் வடமாகாணசபைத் தேர்தலுக்கு எதிராக சிங்கள மக்களை அணிதிரட்டி நாடளாவிய ரீதியில் பெருமெடுப்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் கடும் போக்குடைய சிங்கள அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன. இதற்கான நடவடிக்கைகளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றது எனவும், சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர் முதற்கட்டப் போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு மே…

  23. அரசிற்கு எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தை அனுமதிக்க நாம் தயாராக இல்லை: � கோத்தா ராஜபக்ஷ [saturday, 2013-03-30 08:07:33] அரசிற்கு எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தை அனுமதிக்க நாம் தயாராக இல்லை: � கோத்தா ராஜபக்ஷ [saturday, 2013-03-30 08:07:33] News Service எமது தலைமைத்துவத்தை நோக்கி ஆயுதத்தைக் குறிவைத்த ஒரு நிர்வாகத்தை நாம் அனுமதிக்க முடியுமா? திட்டம் தீட்டி எதிராக செயல்படும் ஒரு மாகாண நிர்வாகத்தின் கருணையில் செயல்படுவதற்கு நாம் தயாராக இல்லை. வடக்கில் அல்லது கிழக்கில் பகைமை கொண்ட மாகாண நிர்வாகம் ஒன்று உருவாகுமானால் போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய மீள் இணக்கத்துக்கு அது பாதகமாக அமையும்.' இவ்வாறு கருத்து…

    • 2 replies
    • 835 views
  24. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் போர்குற்ற ஆதாரங்கள் என்பவற்றை வைத்து இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தான் விரைவில் ஈழத் தமிழர் தொடர்பான திரைப்படமொன்றை இயக்கவுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினர் மற்றும் பிற ஊடகவியலாளர்களும் இணைந்து இயக்குனர், உணர்வாளர் பாரதிராஜாவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். நேற்று இரவு நடைபெற்ற இச் சந்திப்பில், ஈழத்தில் தமிழர்களின் இன்றைய நிலை குறித்து பாரதிராஜாவுக்கு விளக்கப்பட்டது. பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) அழைப்பை ஏற்று லண்டன் வந்துள்ள பாரதிராஜா அவர்கள், இன்றைய தினம் நடக்கவுள்ள கலாச்சார நிகழ்வுகளில் பங்குபற்றவுள்ளார். ஈழத்தில் நடந்த கொடுமைகள் பற்றியும், அங்கே நடத்தப்பட்ட இன அழிப்பு தொடர்…

    • 3 replies
    • 483 views
  25. நடக்க வேண்டியதைப் பார்ப்போம் – தினமணி கட்டுரை [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 10:40 GMT ] [ அ.எழிலரசன் ] புலம்பெயர்ந்து வசதியோடும், புகுந்த நாட்டின் குடியுரிமையுடனும் வாழும் இலங்கைத் தமிழர்களின் ஆவேசக் குரலை மட்டுமே தமிழக அரசியல் கட்சிகள் பிரதிபலிக்கின்றன. இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்களின் விருப்பம் என்ன என்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் 30 March 2013 இரா. சோமசுந்தரம் எழுதிய கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழம் அமைவது குறித்து இலங்கைத் தமிழர்களிடமும் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த, ஐ.நா. மன்றத்த…

    • 5 replies
    • 714 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.