ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் காரணமாகவே தமிழக சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் இந்திய மத்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்திய மத்திய அர சாங்கத்துக்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்புகள் ஏற்படவில்லை. இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக வரலாற்று ரீதியான தொடர்புகள் காணப்படுகின்றன. நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 196…
-
- 2 replies
- 573 views
-
-
கிளிநொச்சித் தாக்குதல் - ஜெனிவாவுக்கு பதிலடியாம் [ ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2013, 03:37 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், கிளிநொச்சியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு சென்ற சுமார் 50 பேர் வரையிலான குழுவொன்று, நேற்று கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயலகம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சிறிதரன், சரவணபவன் ஆகியோர் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர…
-
- 3 replies
- 685 views
- 1 follower
-
-
இலங்கைக்கு உலக வங்கி கடனுதவி இலங்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை அரசிற்கு உலக வங்கி சலுகை அடிப்படையில் கடனுதவி வழங்க முன்வந்துள்ளது. உலக வங்கியானது 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க திட்டமிட்டுள்ளது. புற்றுநோய், உடற் பருமண் அதிகரித்தல், நீரிழிவு, இருதய நோய், இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த இந்த கடனுதவி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் 21 மில்லியன் மக்கள் நன்மை அடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=3738
-
- 1 reply
- 366 views
-
-
சர்வதேச சமூகம் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்திற்குப் பதில் கூற வேண்டும்! - சுரேஷ் பிரேமச்சந்திரன் 'இலங்கை அரசுக்கெதிராக நடவடிக்கைகளை எடுக்காமல் கால அவகாசம் வழங்கிக்கொண்டிருக்கும் சர்வதேசம் சமூகம் தான் கிளிநொச்சி தாக்குதல் சம்பவத்திற்கு பதில் கூறவேண்டும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் மீதும், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மீதும் குண்டர்களினால் நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்…
-
- 6 replies
- 717 views
-
-
தெற்கிலிருந்து வடக்கிற்கான திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையிலான சமாதானப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நிறைவடைந்துள்ளது. கடந்த 06ம் திகதி இந்த சமாதானப் பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகசவின் பங்கேற்றலுடன் வெற்றி கொண்ட சமாதானத்தை உறுத்திப்படுத்திக் கொள்ளும் நோக்கில் கதிர்காமத்தில் ஆரம்பமானது. இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 ற்கு மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். கடந்த 25 நாட்கள் நடை பயணத்தின் பின்னர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த இந்த சமாதானப் பேரணி இன்று காலை யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து யாழ் நாகவிகாரையை வந்தடைந்தது. …
-
- 1 reply
- 502 views
-
-
-சுமித்தி தங்கராசா யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வாள் வெட்டில், ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். மாநகரசபை ஊழியர்கள் ஐவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவாந்துறை மீன்சந்தை குத்தகைக் குழுவினருக்கும் யாழ். மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/6…
-
- 4 replies
- 762 views
-
-
கிறீஸ் மனிதர்களைப் போல பொதுபலசேனாவின் நடவடிக்கைகளும் தானாகவே செயலற்றுப் போகும் என முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரபீக் ரஜாப்டீன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/56310
-
- 1 reply
- 471 views
-
-
வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முன்னர் சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். கல்குடாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரைறயாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள எதிர்தரப்பினர் முகம் கொடுக்கும் சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக இவ்வாறான ஆணைக்குழு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தின் போது ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். வட மாகாணத்தில் சாதார…
-
- 0 replies
- 539 views
-
-
இலங்கையில் பிடிக்கப்பட்ட மிகப்பெரிய நண்டு ஒன்று கொழும்பிலுள்ள நண்டுகள் அமைச்சின் ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடலில் பிடிக்கப்பட்ட இந்த நண்டு 3 கிலோவும் 200 கிராமும் நிறையுடையது என தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி இராட்சத நண்டை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு – கித்சிறி டி மெல்) http://tamil.dailymirror.lk/--main/62282-2013-03-31-13-34-23.html
-
- 3 replies
- 969 views
-
-
வடக்கில் மாகாணசபை அமைத்தால் அதன் ஊடாக ஈழம் உருவாகுவதைத் தடுக்க முடியாது என்று தேசப்பற்றுடைய தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: அதிகாரப் பகிர்வின் ஊடாக நாட்டைப் பிளவுபடுத்த சில சர்வதேச சக்திகள் முயற்சிக்கின்றன. இந்தச் சதி முயற்சிக்கு இடமளிக்கக் கூடாது. வடக்கில் மாகாணசபை அமைப்பதானது ஈழ இராச்சியத்தை உருவாக்குவதற்கான பாதையாகக் கருதப்பட வேண்டும். அதிகாரப் பகிர்வை நோக்கி நாட்டைத் தள் ளுவதே அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நோக்கமாக அமைந்துள்ளது. நாட்டின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்வதை அனு மத…
-
- 1 reply
- 576 views
-
-
நேற்று Headlilne Today சேனலில் Sri Lanka's Terror Tourism என்ற நிகழ்ச்சி வந்தது. போர் நடந்து முடிந்த புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் பகுதிகளை எப்படி இலங்கை அரசு தனது ராணுவ வெற்றியை அராஜகத்துடன் வெளிப்படுத்தும் சுற்றுலா மையமாக ஆக்கியுள்ளது என்பதை முதன்முறையாக இந்தியா டுடே நிருபர் சந்தீப் உன்னிதன் கவர் செய்துள்ளார். புலிகள் பயன்படுத்திய டாங்கர்கள், வாகனங்களை அப்படியே காட்சிப் படுத்தியுள்ளார்கள்.. இந்த இடத்திற்கு சிங்கள பள்ளிக் குழந்தைகள் மற்றும் மற்ற இலங்கைப் பகுதியில் உள்ளவர்களை அழைத்து வந்து காண்பிக்கிறார்கள். எல்லா இடங்களீலும் சிங்கள, ஆங்கில பெயர்ப்பலகை மட்டுமே (தமிழ் கிடையாது). மாபெரும் தமிழ் சிவிலியன் படுகொலை நிகழ்ந்த இடத்தில் அது பற்றி எந்தக் குறிப்பும் கிடையாது …
-
- 3 replies
- 762 views
-
-
உங்களுக்கு தெரியாத மஹிந்தர்! அரிய புகைப்படங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள்.நீங்கள் பார்த்து இருக்க முடியாத மஹிந்த ராஜபக்ஸவை நாம் உங்களுக்கு காண்பிக்கப் போகின்றோம். முதன்முதலாக மஹிந்தர் அரசியலில் பிரவேசித்தபோது எப்படி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?கொலைக் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் சிறைச்சாலை சென்றபோது மஹிந்தர் எப்படி இருந்தார் என்பது தெரியுமா? சட்டத்தரணியாக நீதிமன்றத்தில் தோன்றிய மஹிந்தரை தெரியுமா?நாதஸ்வரம் வாசிக்கும் மஹிந்தரை அறிவீர்களா?இப்புகைப்படங்கள் அம்பாறையில் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்ற தேசத்தின் மகுடம் கண்காட்சியில் ஜனாதிபதி செயலகத்த்தின் கண்காட்சிப் பிரிவினரால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த அரிய புகைப்படங்களில் மிக…
-
- 2 replies
- 719 views
-
-
நாட்டை சீரழித்துவரும் ஊழல்மிக்க இந்த அரசாங்கத்தை எதிர்க்கும் சக்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடையாது என முன்னள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். குளியாபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய சரத் பொன்சேகா, 'இன்று இந்த நாட்டில் பெயரளவிலேயே ஜனநாயகம் உள்ளது. அது தேர்தலின் போது புள்ளடி இடுவதற்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதுவும் இல்லாமல் போய்விடும். நீதிமன்றத்தின் சுயாதீனம் இன்று அரசியல் பிடியில் இருக்கின்றது' என்றார். இதன்போது கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார தெரிவ…
-
- 0 replies
- 575 views
-
-
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே சகல மதத்தினருக்கு தத்தமது மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருக்கின்றது. இதேவேளை பௌத்தர்கள், ஏனைய மதத்தினரை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தறை வெஹெரஹேன ரஜ மஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இனம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாத்து பௌத்த மக்கள் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியானவர்களாக செயற்பட வேண்டும். இனவாதம் அல்லது மத தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. மாறாக உலகமே நம்மை அவதானித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்மாதி…
-
- 1 reply
- 469 views
-
-
தமிழ் - முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மீள்குடியேற்றக் கிராமமான உறுகாமத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகளை ஆரம்ப வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சருமான எம்.எஸ்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, காணியமைச்சர் விமலவீர திஸாநாயக்க, முன்னாள் அமைச்சரும் தற்போத…
-
- 1 reply
- 782 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில், புதுடெல்லிக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இந்தியாவின் ‘டெக்கான் ஹெரால்ட்‘ நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குழப்பமான கருத்தை வெளியிட்டுள்ளார். பாலச்சந்திரனின் கொலை தொடர்பாக வெளியான ஒளிப்படங்கள் குறித்து, சிறிலங்கா அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “அந்தப் படங்கள் மாற்றம் செய்யப்பட்டவை. அந்தப் படம் எடுக்கப்பட்ட பதுங்குகுழி சிறிலங்கா இராணுவத்தினருடையது அல்ல என்று முன்னாள் இராணுவத் தளபதி…
-
- 1 reply
- 553 views
-
-
திவயின கூறுகிறது- இடம்பெயர்ந்த மக்களை குடியேற்றும் போரவையில், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டாயிரத்து 500 ஏக்கர் நிலத்தில், 1500 முஸ்லிம் குடும்பங்களுக்கு, முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் காணிகளை பகிர்ந்தளிகக் நடவடிக்கை எடுத்துள்ளார் என திவயின கூறுகிறது. வடக்கு, கிழக்கில் உள்ள அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதை அரசாங்கம் முற்றாக நிறுத்தியுள்ள நிலையில், இந்த முஸ்லிம் அரசியல்வாதி சட்டவிரோதமாக காணிகள் தொடர்பான சட்டத்திட்டங்களை மீறி, முஸ்லிம் குடும்பங்களுக்கு காணிகளை பகிர்ந்தளித்து வருகிறார். தமக்கு ஆதரவான அதிகாரிகளின் உதவி மற்றும் அரசியல் பலத்தை தவறாக பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காணி கொள்ளையை தடுத்து நிறுத…
-
- 0 replies
- 242 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா சுயநினைவை இழந்து விட்டார் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் படிப்பறிவு இல்லாத காரணத்தால் சுயமாக சிந்திக்காமல் பேசுகிறார்கள்தமிழ் நாட்டில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட தலைவர்கள் படிப்பறிவில்லாதவர்கள். அத்துடன் ஜெயலலிதா தன்னுடைய சுயவுணர்வை இழந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு விவகாரங்களில் அவர் தலையிடக்கூடாது. அத்துடன் வெளிநாட்டு விவகாரங்களில் மத்திய அரசே முடிவு எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தமிழக சட்ட சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்மை குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=554091931729228023
-
- 11 replies
- 1.3k views
-
-
நாட்டில் சர்வாதிகார ஆட்சியும் வடக்குக் கிழக்கில் இராணுவ ஆட்சியும் நடைபெற்று வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தந்தை செல்வா எந்த நிலம் தமிழர்களுக்கு பாதுகாப்பு என்று நினைத்தாரோ, எந்த நிலத்தில் தமிழர்கள் தமது ஆட்சியை நிலை நாட்ட வேண்டும் என்று நினைத்தாரோ அந்த நிலம் இன்று அபகரிக்கப்பட்டு தமிழர்களின் நிலம் இல்லை என்று கூறும் அளவிற்கு அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. 2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறிய அரசாங்கம் அதன் பின்னர் தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கை…
-
- 0 replies
- 368 views
-
-
"தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அராஜகங்கள் புரிவதையும் அரச படைகளும், சிங்கள மக்களும் உடன் கைவிட வேண்டும். இல்லையேல் வீண்விபரீதங்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட படுகாடு, முதலை மடு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் விவசாயம் செய்த காணிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் விவசாயிகளை நேற்று முன்தினம் கங்குவேலியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்தனர். அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் …
-
- 0 replies
- 492 views
-
-
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுக்காக கூட்டம் நேற்று நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அங்கு தீடீரென வந்த கும்பல் ஒன்று சரமாரியாக கற்களை வீசி குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 2 replies
- 442 views
-
-
தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு: தமிழக சட்டமன்ற தீர்மானத்தை நிராகரித்தார் சல்மான் குர்ஷித்! தமிழீழம் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் நிராகரித்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் சி.என்.என் - ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு இன்று வழங்கிய செவ்வியிலேயே இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: 'ஈழத்தமிழர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு 'தனி ஈழம்' குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும், இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட …
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்றிரவு அவசரமாக கூட்டப்பட்டிருந்தது. எனினும் இந்த கூட்டத்தில் முக்கியமான ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொள்ளமை குறித்து, சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் உயர் பீட கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போது, அதில் பொது செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாலர் பசீர் சேகுதாவும் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர். எனினும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதில் கலந்துக் கொண்டிருக்கவில்லை என்று கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை நேற்று இரவு ஏழு மணியில் அதிகாலை 1.30 வரையில் இந்த அவசர கூட்டம் நடத்தப்பட்டும், எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவி…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழீழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக, தமிழக சட்டப் பேரவையில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய முதலமைச்சர்: இலங்கையில் தமிழர்கள் இடையே பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு. அதற்கு இந்தியா ஐ.நா, பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார்.மேலும் இலங்கை நட்ப…
-
- 16 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்பலைகள் தற்காலிகமானவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அண்மைக்காலகமாக இடம்பெற்று வரும் சம்பவங்கள் இந்தியாவுடனான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவங்கள் தற்காலிகமானவை எனவும கடும்போக்குடைய சிலரே இந்த வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக கருதப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த எதிர்ப்பலைகள் மிக விரைவில் மறைந்து விடுமென அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவங்களினால் இலங்கை இந்திய உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என எவரேனும் கருதினால் அது தவறாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://ww…
-
- 7 replies
- 855 views
-