ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143456 topics in this forum
-
வன்னிப் போர் உக்கிரமடைந்த காலப்பகுதியில் முழுத்தமிழகமும் தமிழீழ மக்களுக்கு உறுதுணையாக அணிதிரண்டு நின்ற அவ்வேளையில் தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் சூடிபிடித்திருந்த சூழலில் டில்லியையும், கொழும்பையும் அதிரவைத்த அதிரடியான கருத்து ஒன்றை செல்வி ஜெயலலிதா அவர்கள் வெளியிட்டிருந்தார். 25.04.2009 அன்று தமிழகம் சேலத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே இக்கருத்தை செல்வி ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். அதாவது தனி ஈழமே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வு என்றும், தனது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடிய அரசாங்கம் புதுடில்லியில் அமையும் பட்சத்தில் இந்தியப் படைகளை அனுப்பித் தமிழீழத்தை தான் நிச்சயம் நிறுவிக் கொடுப்பார் என்றும் தனது தேர்தல் பரப்புரையில் செல்வ…
-
- 2 replies
- 851 views
-
-
கச்சதீவு பிரச்சினை பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமாகி முடிந்துபோன ஒன்று அதற்காக இப்போது பிரச்சினை எழுப்ப தேவையில்லை என இந்தியாவுக்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசம் தெரிவித்துள்ளார். தற்போது ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரினை அடுத்து இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்கள் கடும் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் பல்வேறு முரண்பாடான கருத்துக்களைக் கூறிவருகின்றார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் தென் பகுதியிலும், சிங்களவர்களுக்கு வடகிழக்கு பகுதியோடும் தொடர்புகள் உள்ளன. இதை மறுக்க முடியாது. அப்படி குடியேறியவர்களுக்கு அப்போதே அரசாளும் உரிமை இருந…
-
- 4 replies
- 1.5k views
-
-
சென்னைக்கு சென்று வளையாடப் போவதில்லை என இலங்கையின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலையும், விளையாட்டையும் கலக்க முயற்சிப்பது மிகவும் வேதனைக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.சென்னையில் தாம் விளையாடக் கூடாது என தமிழக அரசாங்கம் கருதினால், அங்கு சென்று விளையாடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தம்மால் எதனையும் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியள்ளார். முத்தையா முரளீதரன் இம்முறை இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் பங்களுர் றோயல் சலன்ஜர்ஸ் அணியில் அங்கம் வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தாம் விளையாடுவதனை பார்ப்பதற்கு சென்னை விரும்பவில்லையென்றால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது …
-
- 19 replies
- 1.4k views
-
-
தமிழர் பகுதிகளில் அரச அராஜகம் நீடித்தால் வீண் விபரீதம் ஏற்படும்! - மூதூரில் இரா.சம்பந்தன் உரை!! 'தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும், அவர்களை அச்சுறுத்தும் விதத்தில் அராஜகங்கள் புரிவதையும் அரச படைகளும், சிங்கள மக்களும் உடன் கைவிடவேண்டும். இல்லையேல் வீண்விபரீதங்களைச் சந்திக்க வேண்டி நிலை ஏற்படும்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரித்துள்ளார். மூதூர் பிரதேசத்துக்குட்பட்ட படுகாடு, முதலைமடு ஆகிய பகுதிகளில் தமிழ் மக்கள் விவசாயம் செய்த காணிகளை சிங்கள மக்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பல கிராமங்களைச் சேர்ந்த தமிழ் விவசாயிகள…
-
- 4 replies
- 544 views
-
-
தமிழக பிரச்சினைகள் அதிகாரப் பகிர்வு குறித்தத் திட்டங்களை மோசமாக பாதிக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலங்கையர்களுக்கு எதிரான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் முனைப்பை வலுவிழக்கச் செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலி ஆதரவாளர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் ஆதரவுடன் தமிழகம் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.வங்குரோத்து அடைந்த உள்நாட்டு அரசியல் சக்திகளை சில வெளிநாட்டு சக்திகள் பயன்படுத்தி இறைமையுடைய நாடுகளில் தலையீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுச்…
-
- 4 replies
- 850 views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மிதிவண்டி ஏற்றுமதி கடுமையாக சரியும் [ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 03:30 GMT ] [ கார்வண்ணன் ] ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மிதிவண்டி ஏற்றுமதி இந்த ஆண்டில் கடுமையாக வீழ்ச்சியடையும் என்று ஐரோப்பிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஆண்டுக்கு சராசரியாக ஒரு மில்லியன் மிதிவண்டிகளை ஆண்டுதோறும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சிறிலங்காவில் இருந்து 2011ம் ஆண்டு 1.2 மில்லியன் மிதிவண்டிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. 2012ம் ஆண்டில் இந்த ஏற்றுமதி 1 மில்லியனாக வீழ்ச்சியடைந்தது. இந்த ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான சிறிலங்காவின் மிதிவண்டி ஏற்றுமதி சுமார் 7 இலட்சமாக வீழ்ச்சியடையு…
-
- 1 reply
- 508 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது திருநங்கைகளும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் ,தனித் தமிழீழத்திருக்கு பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும் , ராஜபக்சேவை இனப்படுகொளையாளி என அறிவித்த…
-
- 4 replies
- 986 views
-
-
யாழ்ப்பாணத்தில் சாதீய முரண்பாடுகளைத் தூண்டிவிடும் முயற்சியில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவு? 30 மார்ச் 2013 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் சாதீய முரண்பாடுகளைத் தூண்டிவிடும் முயற்சியில் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவும் ஈடுபட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ச் சமூகத்தினுள் சாதிய முரண்பாடுகள் நீறு பூத்த நெருப்பாக தமீழீழ விடுதலைப் போராட்டகாலத்தில் உறங்கிக்கிடந்ததை யாவரும் அறிவர். சாதிய ஒடுக்கு முறையினை ஒழிப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களோ உரையாடல்களோ இல்லாத போராட்ட அரசியலூடாக வளர்ந்த காரணத்தினால் சாதிய முரண்பாடுகள் மீண்டும் வலுவுடன் தலையெடுத்து வருகின்றன. இதனை அறிந்துள்ள இலங்கையின்…
-
- 2 replies
- 913 views
-
-
ஜெனிவாவுக்கு பழிதீர்க்குமா சிறிலங்கா? – நடுக்கத்தில் இந்தியா [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 01:25 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர ரீதியான முறுகல், இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக மனிதஉரிமைகள் விவகாரத்தில் இந்தியா இராஜதந்திர ரீதியாக எடுத்துள்ள நிலைப்பாடு, இந்தியாவின் மோட்டார் வாகன ஏற்றுமதித்துறையில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை அடுத்து, இந்திய வாகனங்களின் இறக்குமதிக்கான தீர்வைகளை சிறிலங்கா அதிகரித்தது. இந்த ஆண்டும் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்னொரு ஆயுதப் போராட்டத்தை ஊக்குவிக்கும் களம் – ‘இந்தியா ருடே‘ [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 15:43 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழர்கள், ஊடகவியலாளர்களுடன் பேசவே அஞ்சுகின்ற நிலையில் உள்ளதை, அங்கு உண்மை நிலவரங்களை அறியச் சென்ற தமது ஆசிரியர் குழு கண்டறிந்துள்ளதாக ‘இந்தியா ருடே‘ இதழின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘உதவிக்கான பிரார்த்தனை‘ என்ற அட்டைப்படத் தலைப்பில் இன்று வெளியாகியுள்ள இந்தியா ருடே இதழின் ஆசிரியர் தலையங்கத்தில், “போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா அதிபர் ராஜபக்ச வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகவும், பாகுபாடுகளுக்கு முடிவு கட்டுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். நான்கு ஆண…
-
- 1 reply
- 839 views
-
-
-எம்.இஸட்.சாஜஹான் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடையதென மதிப்பிடப்பட்டுள்ள 30 கஜமுத்துக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் இருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகில் வீதியில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 கஜமுத்துக்களையும் இராணுவ கேணல் ஒருவர் பயன்படுத்தும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் 30 கஜமுத்துக்களையும் 35 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இராணுவ வாகனத்தில் வந்த போதே பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அ…
-
- 9 replies
- 11k views
-
-
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்து உணவகங்களில் பணியாற்றுகின்ற இந்தியர்களிடம் இருந்து ஒருவகையான காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் பல பகுதிகளில் இந்த நோய் பரவிவருவதாக அவர் தெரிவித்துள்ளார். இது மேலும் பரவாதிருப்பதற்காக, உணவகங்களில் கடமையாற்றி வருகின்றவர்களுக்கு தடுப்பூசி ஒன்றை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/56171
-
- 2 replies
- 798 views
-
-
கண்டியில் நடந்த கூட்டம் ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவரே, ''பெஷன் பக்'' என்னும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனத்தின் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாகத் தூண்டியதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை நீதி அமைச்சரான ரவூப் ஹக்கீம் அவர்கள், இது குறித்து ஆராய அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடத்துமாறு ஜனாதிபதியை கேட்டிருக்கிறார். ஒரு சிங்கள பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அப்படி அவர் தூண்டியதாக ரவூப் ஹக்கிம் கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக்கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்ததாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறுகிறார். கோட்டாபாய மீது விமர்சனம் …
-
- 17 replies
- 1.4k views
-
-
இலங்கை தூதரை நாடு கடத்துமாறு ஜெயலலிதா கோரிக்கை இந்தியாவிற்கான இலங்கை தூதர் பிரசாத் கரியவாசத்தை நாடு கடத்துமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த 71 சதவீதத்தினர் வட இந்திய தேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களே, ஆகையால் இந்தியா 71 சதவீத சிங்கள மக்களுக்கே ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஒருங்கினைந்த இந்தியாவில் இன பிரிவை உண்டு செய்யும் முறையில் பேசினார். பிரசாத் காரியவாசத்தின் இந்த கூற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாக இலங்கை தூதர் பிரசாத் காரியவசத்தை நாடு கடத்துமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, இலங்கைக்கு இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்யக் …
-
- 1 reply
- 888 views
-
-
கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த நிலத்தில் வட மாகாண மின்சாரசபை கட்டிடத்தை அமைப்பதற்கான முன்னெடுப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 2009ம் ஆண்டின் பின்னர் வட,கிழக்கில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டன. அந்த நிலத்தில் இராணுவ முகாம்களும், சிறைச்சாலைகளும் அமைக்கப்பட்டன. மேலும் விசுவமடு- தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்குரிய நிலத்தில் வீதி புனரமைப்பிற்கான கற்களும், மண்ணும் கொட்டப்பட்டுள்ளது. இதனோடு கனகபுரம், ஆலங்குளம் உள்ளிட்ட சில மாவீரர் துயிலும் இல்லத்திற்கான, நிலத்தில் படையினர் மக்களை குடியேற்ற பல வழிகளிலும் முயற்சிகள் எடுத்திருந்தனர். ஆனால் மக்கள் எவரும் அதனை விரும்பாத நிலையில் அந்த இடத்தில…
-
- 0 replies
- 3.6k views
-
-
தேயிலைத் தோட்டங்களுக்கு சீனா வியட்நாமில் இருந்து பௌத்த மத யுவதிகளை அழைத்துவருவோம் - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கச்சத்தீவு மீண்டும் பெற்றுக்கொள்ளும் தேவை ஏற்பட்டிருக்குமாயின், அந்த தீவை மீண்டும் இந்தியாவுக்கு கொடுக்குமாறும், அத்துடன் ஒரு நிபந்தனையை மாத்திரம் இந்தியாவுக்கு முன்வைக்குமாறும் லக்பல சேனா அமைப்பின் தலைவர் மருத்துவர் சுதத் மல்லிக்காராச்சி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள 8 லட்சத்து, 42 ஆயிரத்து 323 இந்திய தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசாங்கம் இதற்கு விருப்பம் தெரிவித்தால், தாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை எடுக்குமாறும், தேயிலை தோட்டங்களில் வேலைக்கு ஆட்கள் தேவையாக இ…
-
- 10 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) நடாத்தவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் கலந்துகொள்ள இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் லண்டன் வந்துள்ளார். அரசியல் கலப்பு இல்லாது தமிழீழ உணர்வுகொண்ட பாரதிராஜா அவர்கள், 2009ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் ஆற்றிய உரை இன்றுவரை ஈழத்தமிழர்களால் பேசப்பட்டுவருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழீழம் சென்று அங்கே தேசிய தலைவர் அவர்களைச் சந்தித்துள்ளார். அங்கே நடந்த விடையங்கள் என்ன , மற்றும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது போன்ற நிகழ்வுகளை, அவர் நடக்கவிருக்கும் கலாச்சார மாலை நிகழ்வில் தெரிவிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாது அவர் இன் நிகழ்வில் தமிழீழ மக்களோடு கலந்துரையாடவும் உள்ளார். லண்டன் ஹாரோ பகுதிக்கு அருகாமையில் உள்ள ரைசிலிப் என்னும் இ…
-
- 5 replies
- 868 views
-
-
இலங்கையில் ஜெ. வைகோ, கொடும்பாவி எரிப்புஸ இந்திய பணியாளர்கள், மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு Posted by: Mayura Akilan Published: Friday, March 29, 2013, 13:33 [iST] கொழும்பு: இலங்கையில் பணிபுரியும் இந்தியர்களுக்கும், அங்கு கல்வி பயிலச் சென்றுள்ள மாணவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை அரசுக்கு எதிராக போராடி வரும் மதிமுக தலைவர் வைகோ, தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் கொடும்பாவிகளை சிங்களர்கள் எரித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட பாலசுப்ரமணியன், லட்சுமி தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பு நகரில் வசித்து வருகின்றனர். அங்குள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிகிறார் பாலசுப்ரமணிய…
-
- 2 replies
- 2.2k views
-
-
புனர்வாழ்வு பெற்ற யுவதிகள் இருவர் கிளிநொச்சியில் காணாமற்போயுள்ளனா்! [Friday, 2013-03-29 13:02:24] கிளிநொச்சியில் புனர்வாழ்வு பெற்ற இரு யுவதிகள் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் காணாமல் போயுள்ளதாக யுவதிகளது பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களில் ஒருவர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளி என்றும் மற்றயவர் செஞ்சோலையில் இருந்து கல்வி கற்றவர் என்றும் அவர்களது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தானைச் சேர்ந்த இ.ரோஹினி (வயது 23) கிளிநொச்சி திருநகரைச் சேர்ந்த கே.வினோதினி ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர். இது தொடர்பில் காணாமல் போன இ.ரோஹினியின் தாயார் தெரிவிக்கையில், 'தனது மகள் 2010ஆம் ஆண…
-
- 1 reply
- 703 views
-
-
செந்தமிழ்ச்செல்வன் சீமான் அவர்கள் 27.03.2013ம் திகதி செவ்வாய்கிழமை பிரான்சு பாரிசுக்கு வருகை தந்திருந்தார். காலை கேணல். பரிதி அவர்களினதும், மற்றும் லெப் கேணல். நாதன் கப்டன் கஐன் ஆகியோரின் கல்லறைகளுக்கு சென்று வணக்கம் செலுத்தியதுடன் தமிழீழ தேசத்தின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலைக்குச்சென்று வணக்கம் செலுத்தி பின்னர் மாவீரர் கேணல் பரிதி அவர்கள் வீரச்சாவடைந்த இடத்திற்கு சென்றும் வணக்கம் செலுத்தியிருந்தார். நண்பகல் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு காரியாலையத்தில் நடைபெற்ற உறுப்பினர்களின் சந்திப்பிலும் கலந்து கொண்டதுடன் ரிரிஎன் தொலைக்காட்சி கலையகத்திற்கும் சென்றும் பி.பகல் 4 மணிக்கு மக்ஸ்தொர்மி மண்டபத்தில் பொதுமக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பல கோரிக்கைகளை நடுவண் அரசுக்கும் சன் குழுமத்திற்கும் வைத்துள்ளது . முதல் கட்டமாக சன் தொ.கா. வின் உரிமையாளரின் அணியான ஐதராபாத் ஐ பி எல் அணியில் இருந்து இலங்கை ஆட்டக் காரர்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் , வரும் வெள்ளிக் கிழமை இரவிற்குள் சன் குழுமம் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும், அப்படி இலங்கை விளையாட்டாளர்களை வெளியேற்றாத பட்சத்தில் மாணவர்கள் தமிழகமெங்கும் உள்ள சன் குழும அலுவலகங்களை முற்றுகையிடுவதாக தெரிவித்தனர் . மேலும் நடுவண் அரசுக்கு சில கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர் 1. தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு அமைவாக இலங்கை உடனான ராஜதந்திர உறவுகளை இந்திய இத்துடன் முறித்துக் க…
-
- 2 replies
- 729 views
-
-
வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி 28 மார்ச் 2013 கைதானவரில் மாணவி ஒருவரும் மாணவனும் அடங்குகின்றனர்.. வன்னியினில் யுத்த பாதிப்புகுள்ளான சில பெண்களை வைத்து விபச்சார விடுதி யாழ்ப்பாணத்தினில் நடத்தப்பட்டுவந்ததாக கூறப்படும் மற்றொரு பாலியல் விடுதியும் இன்று முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி அலுவலகத்தின் அருகாக இயங்கி வந்த விடுதியொன்றே பாலியல் முறைகேடுகளுக்கும் தளம் அமைத்து கொடுத்திருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் இவ்விடுதியும் குறித்த கட்சி பிரமுகர் ஒருவருக்கு சொந்தமானதென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. வன்னியினில் யுத்த பாதிப்புகளிற்குள்ளான சில பெண்களை வைத்து இவ்விடுதி இயக்கப்பட்டமையும் கண்டுபிடிக…
-
- 3 replies
- 844 views
-
-
சந்திரிகா, ரணில் முக்கிய பேச்சு! - அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு!! கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்லையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமாகப் பேசப்பட்டதாக அறியமுடிகின்றது. ஏற்கெனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை முஸ்லிம்கள் நீதி கோரி ஜெனிவா செல்ல முயற்சி! - ஆதாரம் திரட்டும் பணியில் புத்திஜீவிகள் தீவிரம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கும் சிங்கள இனவாதக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடுவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ள முஸ்லிம் இராஜதந்திரிகள் பலர், அதற்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் நிலையில், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அரசிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில…
-
- 1 reply
- 1.7k views
-
-
போத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளி வந்திருக்கிறது : அமைச்சர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம்களின் சமய, சமூக, கலாசார தனித்துவங்களை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தி நோக்கும் பார்வை இப்பொழுது மேலோங்கியுள்ளதாக குறிப்பிட்ட நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமது தனித்துவத்தைப் பேணும் ஆடை அணிகளை முஸ்லிம்கள் அணிந்து வந்துள்ளனர் என்றும் அவ்வாறு அவர்கள் தங்களது தனித்துவத்தை வெளிக்காட்டுவது புதியதல்லவென்றும் தெரிவித்தார். நிந்தவ+ரில் நடைபெற்ற ஒன்றுகூடலொன்றின் போதே கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களுக…
-
- 8 replies
- 904 views
-