Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்தியாவின் கைகளிலேயே பந்து : ஜெனீவாவில் செந்தமிழன் சீமான் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் கூட்டாக கருத்து ! ஐ.நா மனித உரிமைச்சபையில் வாக்கெடுப்பின் இறுதி நிமிடம் வரை தீர்மானத்தின் வரைவில் மாற்றங்களை கொண்டு வரலாம் என்ற நிலையில் சுதந்திரமான அனைத்துலக விசாரணையினை அமெரிக்காவின் தீர்மானத்தின் வரைவுக்குள் உட்கொண்டு வருவது இந்தியாவின் கைகளிலேயே உள்ளதென ஜெனீவாவில் உள்ள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழகத்தில் ஜெனீவா சென்றுள்ள நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் ஆகியோர் கூட்டாக கருத்து தெரிவித்துள்ளனர். சிறிலங்கா தொடர்பிலான அமெரிக்க தீர்மானத்தின் நான்காவது வரைவு நீர்த்துப் போயுள்ளதான கருத்து உலகத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ள நிலையில் இக்க…

  2. தமிழ்நாட்டில் பிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து பிக்குனி ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.எம்பிலிபிட்டி பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவே அந்த பிக்குனி இன்று காலையிலிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சுமந்திரா சில் என்ற பிக்குனியியே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61073-2013-03-19-17-27-53.html

    • 2 replies
    • 638 views
  3. புலிகளின் தாகமான தமிழீழம் இன்று உலகத் தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது - ருத்திரகுமாரன் சென்னை: தாய்த:தமிழகம், தமிழீழத் தாயகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பிரிவுகளும் இணைந்து போராடும் சூழல் வந்துள்ளது. புலிகளின் தாகமாக இருந்த 'தமிழீழம்' இப்போது, உலக தமிழர்களின் தாகமாக மாறியுள்ளது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தென்னாசியப் பிராந்திய அதிகாரமாக திகழும் இந்தியாதான், ஐ.நா மனித உரிமைச சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வந்திருக்க வேண்டும் என்பது அவரது கருத்தாகும். சென்னையில் கடந்த திங்கட்கிழமை இணைய வழி நடந்த ஊடக மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் மூலமாக பேசியபோது ருத்திரகுமாரன் இதைத் தெரிவித்தார். அவரத…

  4. சென்னை மெரினா காந்திசிலை அருகில் தற்போது நடைபெற்றுவரும் "ஒருகோடி மாணவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. ஏராளமான இளைஞர்கள் திரண்டபடி இருக்கின்றார்கள். இளைஞர்களின் ஏகோபித்த ஒத்துழைப்பு. உணர்வு எழுச்சி..எல்லாமும் அங்கே புயலடித்து நிற்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் இன்று போராட்டங்களை நடத்துகிறார்கள். கொளுத்தும் வெயில்-கொதிக்கும் மாணவர்கள் !-சென்னை மெரினா காந்திசிலை அருகில் 5000 க்கும் மேற்பட்ட மாணவ பட்டாளங்களின் தொடர் முழக்கங்கள் .கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை...கல்லூரி விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. எங்கிருந்து வந்தார்கள் இம்மாணவர்கள் எனமத்திய,மாநில உளவுத்துறையினர் விழிபிதுங்கி நிற்கின்றனர் அரச பயங்கரவாதத்தின் அத்துணை அடக்குமுறைகளையும் தகர்த்…

    • 0 replies
    • 764 views
  5. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற திமுக முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, அக்கட்சியை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் நோக்கில், இத்தீர்மானத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த தீர்மானத்தை வரைவு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி இன்று அறிவித்த பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும்,, ஐ.ந…

    • 1 reply
    • 611 views
  6. தமிழீழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு தேவை இவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் திரைதுறையினர் இன்று 19.03.2013 ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இயக்குனர் சங்கத் தலைவர் அமீர் தலைமையில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இளையராஜா , நடிகர் சிறிகாந்த் ,கௌதம்மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்பட ஏராளமான இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நடிகைகள் சுகாஷினி, குயிலு என ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத்தையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. {youtube}mB9s0EZmT8{youtube} உண்ணாவிரதத்துக்கு தமி்ழ்நாடு சி்ன்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக…

  7. ரஜினி, கமல் மற்றும் அனைத்து முக்கியமான தமிழ் நடிகர்கள் நடித்து வழங்கும் "ஆகையால் மௌனம்செய்வோர்" இதுவரையில், இயக்குனர் மணிவண்ணன்,சீமான், நடிகர் சிலம்பரசன், சிவகார்திகேயன் போன்றோர்தவிர வேறு எந்த தமிழ்த்திரைப் பிரலங்களும், தமிழக மாணவர்கட்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழ்ப்பட அரசியல். தமிழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் மௌனித்திருக்கும் இந்த தமிழ்ப்பட உலகம் (கோடம்பாக்கம்), மற்றும் அதன் அரசியல் பற்றி சிறிது அலசுவது நன்கு. றஜினி: அன்றுமுதல் இன்றுவரை என்னை வாழவைத்தது தமிழ்நாடு என்று மட்டுமே பேசி வருகின்றார். ஆனால் இன்றுவரை, ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதியோ அன்றி தமிழகமக்களின் உணர்ச்சிகள் கருதியோ அவரது பெருங்கருத்து "மௌனம்" இவரின் அரசியல் என்ன? அரச…

  8. நேற்று சென்னை காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 100 பேர் கைது ! சாலை மறியல் செய்த காங்கிரஸ் கட்சியினர் ! நேற்று காலை சுமார் 100க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டனர் . இதை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் கட்சியினர் உடனே கதவுகளை இழுத்து மூடினர் . கதவுகளுக்கு வெளியே நின்று மாணவர்கள் முழக்கமிட்ட படியே இருந்தனர் . இலங்கையை இனப்படுகொலை செய்த நாடு என காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் . நெடு நேரம் முழக்கமிட்டும் காவல்துறை மாணவர்களை கைது செய்ய வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் கட்சியனர் சுமார் 20 நபர்கள் (பார்பதற்கு குண்டர்களை போல இருந்தனர் ) திடீர் சாலை மறியலில் ஈடுபட…

    • 0 replies
    • 850 views
  9. முருகதாசன் யார்? http://www.youtube.com/watch?v=7i2z5AqUapE

    • 1 reply
    • 663 views
  10. புலம்பெயர் தேசங்களில் இளையோர் காலவரையறையற்ற போராட்டம் நடத்த முன்வரவேண்டும். எஸ். ஜெயானந்தமூர்த்தி தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் மாணவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு அமைவாக புலம் பெயர் தேசங்களில் இளையோர் காலவரையறையற்ற போராட்டங்களை நடத்த முன்வர வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழின உணர்வாளருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ‘இன்று தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்து பெரும் கொந்தளிப்பு நிலைக்குச் சென்றுள்ளது. அமெரிக்கத் தீர்மானத்தினால் எமக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை. அத்தீர்மானத்தினால் சிறிலங்கா அரசுக்கே நன்மை ஏற்பட வாய்ப்புண்டு. சிறிலங்காவுக்கு கற்றுக…

  11. பிக்குகள் மீதான தாக்குதல்-முஸ்லிம் அமைப்புக்கள் பின்னணியில் புதன்கிழமை, மார்ச் 20, 2013 தமிழகத்தில் சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லிம் அடிப்படைவாதிகள் உள்ளனர் என சந்தேகம் எழுதுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். இவ்வாறான தாக்குதல்கள் தமிழக அரசின் ஆதரவுடனேயே இடம்பெற்று வருகின்றன. தமிழக அரசியல்வாதிகள் கூட இந்தத் தாக்குதல்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியுள்ளனர். இவர்களின் ஆதரவுடனேயே தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதலை நட…

    • 1 reply
    • 651 views
  12. VIA FB Rajkumar Palaniswamy இலங்கைக்கு செல்லும் விமான பயணச் சீட்டுகளை விற்பனை செய்ய மாட்டோம். சென்னையில் ஒரு பயண நிறுவனம் அதிரடி. சர்வதேச பயணச் சீட்டுகளை விற்பனை செய்யும் பயண நிறுவனம் (flyair service) அதன் நிறுவனர் மற்றும் பயண ஏற்பாட்டாளர் திரு சரவணனை தொடர்பு கொண்டு பேசினோம். ஏன் நீங்கள் இலங்கைக்கு பயணச் சீட்டுகளை விற்பனை செய்வதில்லை ? அதற்கு அவர் கூறியது . என்னால் மாணவர் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை . என்னால் முடிந்தது இலங்கைக்கு , இலங்கை விமான சேவைக்கு கிடைக்கும் வருமானத்தை சிறிதளவு தடுக்க முடியும் . அதனால் இலங்கை விமானத்தின் பயணச் சீட்டுகளை விற்க மாட்டோம் என்று முடிவெடுத்துள்ளோம் . இனி எங்கள் மூலம் இலங்கைக்கு எந்த வகையிலும் வருமானம் கிடைக்காது…

  13. இலங்கை அரசாங்கம் செய்யும் தவறுகளுக்காக இந்தியாவுக்குச் செல்லும் சாதாரண மக்களைப் பழிவாங்கவேண்டாமெனத் தமிழகத்தைக் கேட்டுக் கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. இதேவேளை, தமிழகத்தில் இலங்கையர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதனைத் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் கதைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துவதாகவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜே.வி.பி. பிரசார செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவிக்கையில்; இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரை இராணுவ ஆட்சியை மேற்கொள்ளும் அரசாங்கம் அங்கு தமிழர்களின் உரிமைகளை மீறிக்கொண்டிருக்கின்றது. இதற்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. …

    • 6 replies
    • 982 views
  14. Started by hari,

    Please sign and share this petition now to gather global solidarity and pressure the UN. http://www.avaaz.org/en/petition/Vote_for_an_independent_probe_in_Sri_Lanka/?cyxthbb

    • 0 replies
    • 599 views
  15. பௌத்த தேரர் உட்பட இலங்கையர்கள் மீது தமிழ் நாட்டில் மேற்கொள்ளப்படும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சிங்கள ராவய அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன) http://tamil.dailymirror.lk/--main/61033-2013-03-19-10-28-15.html

  16. ஹிலாரி சொன்னதையே இப்போது செய்கிறோம் – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 01:39 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், சிறிலங்கா அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றவும் ராஜபக்ச அரசாங்கம் தவறியதால் தான் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. வொசிங்டனில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட், “சிறிலங்காவின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்படாதது குறித்த கவலைகளை கொண்டுள்ள ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்றி வருகிறது. எமது இந்த செயற்பாடு, சிறிலங்கா அரசுக்…

    • 1 reply
    • 756 views
  17. ஜெனீவாவுக்கான தனது தூதுவரை நாடு திரும்புமாறு இந்தியா அழைப்பு? [ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 14:44 GMT ] [ அ.எழிலரசன் ] சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடும்போக்கை கடைப்பிடிக்குமாறு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலிலதா இந்திய மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ள நிலையிலும், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.கருணாநிதியை சமாதானம் செய்யும் நடவடிக்கையில் இந்திய மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருந்த நிலையிலும், சிறிலங்கா மீதான அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பில் ஆலோசிப்பதற்காக ஜெனீவாவுக்கான தனது தூதுவரை நாடு திரும்புமாறு திங்களன்று இந்திய மத்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளதான இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஜெனீவாவுக்கான இந்தியத் தூதரும் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதிய…

    • 1 reply
    • 753 views
  18. இத்தாலிக்கான இலங்கைத் தூதுவரின் வீட்டிலிருந்த இலங்கையர் மூவரை காணவில்லை 2013-03-19 09:40:56 இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் அசித்த பெரேராவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணியாற்றி வந்த மூன்று இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் தூதுவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தூதுவரை நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர் அதற்கு தயாராகும் காலப்பகுதியில் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெருந்தொகையான பணத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தாலி தூதுவருக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அண்மையில் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து மீ…

  19. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற திமுக முடிவு செய்துள்ளதை தொடர்ந்து, அக்கட்சியை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. திமுகவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வைக்கும் நோக்கில், இத்தீர்மானத்தை கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளதாகவும், இந்த தீர்மானத்தை வரைவு செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவதாக கருணாநிதி இன்று அறிவித்த பின்னர் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இலங்கை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும்,, ஐ.ந…

    • 0 replies
    • 838 views
  20. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தில், மத்திய அரசு திருத்தம் செய்யாவிட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், தி.மு.க., நீடிக்காது என, தி.மு.க., மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, இதுகுறித்து, காங்., - எம்.பி.,க்களுடன், அக்கட்சித் தலைவர் சோனியா,இன்று, முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்த முடிவை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக் கட்ட போரின்போது, இலங்கை ராணுவம், பெருமளவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது.இலங்கையில் நடந்த படுகொலைய…

  21. இன்று தமிழீழம் அமைய வற்புறுத்தி கோவை கல்லூரி மாணவர்கள் வரலாறு காணாதவாறு பல்லாயிரக் கணக்கில் திரண்டு பிரமாண்ட பேரணி நடத்தினர் . அரசியல் கட்சிகளே இது போன்ற பேரணியை நடத்த முடியாது ஆனால் மாணவர்கள் தங்களை தாங்களே ஒழுங்குபடுத்தி தமிழீழ மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இப்படி ஒரு கவன ஈர்ப்பு பேரணியை நடத்தி உள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது . இது வரை நடந்த மாணவர் ஒன்றுகூடலில் இந்தப் பேரணி தான் மிகப் பெரியது என்றும் கூறலாம் . நிச்சயம் இது அரசியல் கட்சிகளை மட்டுமல்லாமல் அரசையும் திரும்பிப் பார்க்க வைக்கும் என்பது ஐயமில்லை . இம்மாணவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசியல் கட்சிகளும் இனி ஆட்சிக் கட்டிலில் ஏற முடியாது . தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அரசு கவனத…

    • 0 replies
    • 779 views
  22. ''ஈழப் போரில் மாண்ட போராளிகளின் காலடி மண்ணெடுத்து திலகமாக இட்டுக் கொண்டு''.. கருணாநிதி சென்னை: ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் மத்திய ஆட்சியில் திமுக நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், அமைச்சரவையிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் உடனடியாக விலகிக் கொள்வதென முடிவு செய்தோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில் வாசித்த அறிக்கை: ஈழத் தமிழர்ப் பிரச்சனையில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக செல்வா காலந்தொட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் அங்குள்ள தமிழர்களின் உரிமைக்காகவும்- தமிழர் வாழ்வாதாரங்களின் பாதுகாப்புக்காகவும்- தமிழ் மொழியின் சமத்துவமான தகுதிக்காகவு…

  23. படங்கள் டெயிலிமிரர். சிறீலங்கா பர்மாவில் அரசாலும் முஸ்லீம்களாலும் புத்த பிக்குகள் கொல்லப்பட்ட போது... (பர்மிய அரசு தமிழர்களை அழிக்க சிங்கள பெளத்த பேரினவாதிகளுக்கு உதவி நின்றது..!) அப்ப எல்லாம் உவை எங்க போனவை. தமிழர்களைக் கொன்ற களிப்பில் விழா நடத்திக் கொண்டிருந்தவை போல. தமிழர்கள் சாகச் சாக கொழும்பில.. தெற்கில.. வெடிகொழுத்தேக்க இப்படி ஆகும் என்று தெரியல்லைப் போல...! http://www.reuters.com/article/2012/06/04/us-myanmar-violence-idUSBRE8530CW20120604 http://www.france24.com/en/20120903-buddhist-monks-march-back-rohingya-deportation-plan-muslim-myanmar-sectarian-conflict http://www.standard.co.uk/news/burma-thousands-dead-in-massacre-of-the-monks-dumped-in-th…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.