ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143477 topics in this forum
-
26 NOV, 2023 | 05:35 PM போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நிலத்தை தோண்டும் நடவடிக்கை கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நேற்று (25) மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றைய தினம் (26) நான்காவது நாளாக அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த விடயம் கடந்த 19ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு, குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்…
-
- 1 reply
- 228 views
- 1 follower
-
-
Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…
-
- 1 reply
- 1.6k views
-
-
அடேல் பாலசிங்கத்தை கைது செய்ய கோத்த போடும் புதிய வியூயுகம் ! Thursday, September 1, 2011, 10:57 தமிழீழ விடுதலை புலிகளின் மா மேதையும் தேசத்தின் குரலுமான அன்டன் பாலசிங்கம் அவர்களின் பாரியாரான அடேல் பாலசிங்கத்தை கைது செய்துஇலங்கை கொண்டு செல்ல கோத்தா மற்றும் மகிந்தா புதிய வலை விரிப்பை மேற்கொண்டு வருகின்றனர் . இதற்கு பல நாடுகள் மீதினில் இவர் மீதான அப்பண்ட போலி குற்ற சாட்டை முன் வைத்துள்ளன .இவர் சிறார்களிற்கு பயிற்சி அளித்தது .புலிகள் பாசறையில் ஆயுத பயிற்சி பெற்றது .மற்றும்இலங்கை அரசுக்கு எதிராக போராட அவர்களை தூண்டிய குற்றங்களை முன்வைத்துள்ளதுடன் புலம் பெயர் நாட்டில் தங்கியிருந்து தடை செய்ய பட்ட புலிகள் அமைபிற்கு நிதி சேகரித்துஆயுதம் வாங்கினார் என்ற பொய்யான …
-
- 1 reply
- 884 views
-
-
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நடந்த கொடுமைகள் மற்றும் அந்த சூழலைப்பார்த்து பான் கி மூன் அதிர்ந்து போயிருந்தார்.யுத்தம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் முன்பு யுத்தசூனிய பகுதியாக காணப்பட்ட பிரதேசத்தின் ஊடக விமானத்தில் செல்லும் போது தான் முழு அழிவினையும் பார்த்ததாக ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததாக சர்ச்சைக்குரிய விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், தான் பார்த்தவற்றுள் மெனிக்பாம் அகதிகள் முகாம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாக பான் கி மூன் இராஜதந்திரிகளுக்கு தெரிவித்திருந்ததார். 2009ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி இரவு பான் கி மூன் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பவென கொழும்பு விமான நில…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறி நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த மூன்று ஊடகவியலாளர்கள் அடுத்த சில தினங்களில் நாடு திரும்பவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இந்த ஊடகவியலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இலங்கையில் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், எனினும், இவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அரசியல் தஞ்சம் கோரியிருந்த நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் குறித்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று முன்தினம்…
-
- 0 replies
- 475 views
-
-
ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர் வீரகேசரி நாளேடு தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர். இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். தொப்பிகலையில் சிக்கியிருந…
-
- 7 replies
- 4k views
-
-
நடந்து முடிந்த வன்னிப்போரின் போது பொது மக்கள் தஞ்சமடைவதற்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசங்களில் அரச படைகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதுடன் தாராளமாக ஷெல் வீச்சையும் மேற்கொண்டதாக இப்போது ஆதார பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இவை தொடர்பாகச் செய்மதி மூலம் எடுத்த படங்களை இலங்கை ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் ஓர் உண்மை வெளிச்சத்துக்கு வருகின்றது. சனல்4 காணொளிக் காட்சிகள் வெளியாகு முன்னரே வன்னியின் போர் அவலங்கள் வெளிநாடுகளைச் சென்றடைந் திருக்கின்றன என்பதுதான் அது. ஒரு தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்ப்பதற்காக ஒட்டுமொத்த இலங்கைத் தமிழினத்தையே அழித்து விடுவதற்கு இந்தியா தயங்கவில்லை என்பதையும் அந்த அழிப்பு ந…
-
- 3 replies
- 759 views
-
-
சிரச தொலைக்காட்சியில் சடன என்ற பெயரில் மிகவும் பிரபலமான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது வழக்கம். கடந்த வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இலங்கையில் பிரதிநீதியமைச்சர் சுஜீவ சேரசிங்க கலந்து கொண்டவர். (சுமந்திரனும் வந்திருந்தவர்) அவர் தன்ரை பேச்சிலை நான் இப்ப தான் ஜோன் கெரியுடனான சந்திப்பிலை கலந்து கொண்டு விட்டு வாறன். அவர் இனிமேல் இலங்கையின்ரை விவகாரங்களிலை அமெரிக்க தலையிடாது என எங்களுக்கு உறுதியாச் சொன்னவர். இது எங்களுக்குக் கிடைச்ச பெரிய வெற்றி எண்டு சந்தோசமாச் சொன்னவர். இதைப்பற்றி சுமந்திரன் ஐயா மூச்ச விட இல்லை. இதுக்குள்ளை தங்கடை பேச்சும் வெற்றி எண்டு சம்பந்தன்ரை ஆக்கள் சொல்லுகினம். இலங்கையின்ரை எந்த விவகாரத்திலையும் தலையிட மாட்டம் எண்ட…
-
- 7 replies
- 1.1k views
-
-
வாழைச்சேனை பிரதேச சபைக்குரிய காணியில் பள்ளிவாசல் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இக்குற்றச்சாட்டை முன்வைத்த அவர் பேசியதாவது, குறித்த காணி 60 வருட காலமாக பிரதேச சபையினால் பராமரிக்கப்படுகின்றது. 1958ம் ஆண்டில் பிரதேச சபையினால் கட்டப்பட்ட கிணறும் 1986ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டிடமும் அக்காணியில் இருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்தக் காணிக்கான உறுதி தனி நபரின் பெயரில் எழுதப்பட்டு அவரால் பள்ளிவாசலுக்கு கையளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இது விடயமாக தெளிவுபடுத்துமாறு கூட்டத்துக்கு தலைமை வகித்த பிரதியமைச்சர்…
-
- 0 replies
- 274 views
-
-
சிறீலங்காவில் யுத்த முன்னெடுப்புளால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு 15 மில்லியன் யூரோக்களை ஜரோப்பிய ஒன்றியம் வழங்க முன்வந்துள்ளது. இத்தகவலை ஜரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிராந்திய பொறுப்பதிகாரி பீட்டர் பர்ஜஸ் பிபிசி தமிழோசைக்குத் தெரிவித்துள்ளார். 15 மில்லியன் யூரோக்கள் இந்தவாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நியுதவிகள் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக பொது மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இவ்வுதவியில் ஒரு பகுதி தமிழகத்தில் அகதி முகாமில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கும் வழங்கப்படும் எனத் பீட்டர் பர்ஜஸ் குறிப்பிட்டுள்ளார். 15 மில்லியன் யூரோக்களும் அவரசகால தங்குமிடங்கள், குடிநீர் சுகாதாரம், உணவுப் பொருள்க…
-
- 1 reply
- 831 views
-
-
ஜனாதிபதி மஹிந்த, சவேந்திர சில்வாவுக்கு எதிரான வழக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், நியுயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராகவும் இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை தொடங்குவதற்கு முன்னர்,; மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க்கின் தெற்கு மாவட்டத்திலுள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முதலாவது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. போரின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட புலிகளின் கிழக்குத் தளபதி கேணல் ரமேஸின் மனைவி வத்சலாதேவி சார்பிலும், சுதந்திரபுரத்தில் படையினரின் ஆட்டிலறித் தாக்குதலில் கொல்லப்…
-
- 2 replies
- 1.1k views
-
-
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் சடலத்தின் மீது இனவாத அரசியல் ஆதாயம் தேடும் கேவலமான முயற்சியில், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இறங்கியுள்ளதாக, நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தை உலகமே அனுதாபத்துடன் நோக்கும் இந்தத் தருணத்தில், நாட்டின் முன்னாள் அதிபர் இந்தச் சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் பகடைக்காயாக உபயோகித்திருப்பது மனிதாபிமானமற்ற செயலாகும். தேசப்பற்றுடைய எந்தவொரு நபராலும் இதுபோன்ற மிலேச்சதனமான செயற்பாடுகளை தாங்கிகொள்ள இயலாது. ஆனால் மகிந்த ராஜபக்ச, தான் இந்த நாட்டின் முன்னாள் அதிபர் என்ற உணர்வின்றி இது குறித்து மிகவும் இழிவானத…
-
- 0 replies
- 563 views
-
-
சிறிலங்காவின் தேசிய நாள் நிகழ்வு – புறக்கணிக்கிறார் சரத் பொன்சேகா காலி முகத்திடலில் எதிர்வரும் 4ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின், 71 ஆவது தேசிய நாள் நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முடிவு செய்துள்ளார். தமக்கு இன்னமும், அழைப்பிதழ் கிடைக்கவில்லை என்று அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். “பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவருக்கு உயர் மதிப்புக் கொடுக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. அவ்வாறான நிலையில் இந்தப் பதவிக்கு உரியை கௌரவம் கொடுக்கப்படா விட்டால், அத்தகைய நிகழ்வில் பங்கேற்கமாட்டேன்.” என்றும் அவர் தெரிவித்தார். சிறிலங்காவின் தேசிய நாளை முன்னி…
-
- 0 replies
- 162 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
மகிந்தவுக்கு மூளையில் நோயிருக்கும் என்று எண்ணவில்லை! -ராஜித சேனாரத்ன [Thursday 2015-05-28 19:00] முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராகும் அளவிற்கு அவரது மூளையில் நோயிருக்கும் என்று தான் எண்ணவில்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், கேள்வி : மகிந்த ராஜபக்ச தவறியேனும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால். அது சம்பந்தமாக என்ன கூறுகிறீர்கள். பதில் : தவறுதலாக யாரும் போட்டியிடுவதில்லை. முடிந…
-
- 0 replies
- 640 views
-
-
சனி 18-08-2007 02:36 மணி தமிழீழம் [மயூரன்] இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிப்பு இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் அடுத்த வாரம் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த யோசனைகளை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அந்த குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ் விதாரன நேற்று தெரிவித்துள்ளார். பதிவு
-
- 1 reply
- 801 views
-
-
மேலும் மூவருக்கு பிரதி அமைச்சர் பதவி – மகிந்த அணியை பலவீனப்படுத்துகிறார் மைத்திரி JUN 03, 2015 | 1:18by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. காலி, கொழும்பு, புத்தளம் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரே நாளை சிறிலங்கா அதிபரால் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது. அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு அமைச்சர்கள் அண்மையில் வெளியேறிய பின்னர், ஐந்து புதிய அமைச்சர்களை நியமித்திருந்தார் சிறிலங்கா அதிபர். இந்த நிலையில் மேலும் மூவரை பிரதி அம…
-
- 0 replies
- 460 views
-
-
விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடி அறுப்பு February 13, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில்.கொள்ளையர்கள் இருவர் விபத்தினை ஏற்படுத்தி குடும்ப பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து தப்பி சென்றுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுசெவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழில். இருந்து அராலியை நோக்கி அராலி வீதி வழியாக இரண்டு பெண்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது , தமது முகத்தினை மறைத்து துணிகட்டியவாறு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு கொள்ளையர்கள் , பெண்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தினை ஏற்படுத்தி உள்ளனர். விபத்தினால் நிலைதடுமாறி கீழே விழுந்த பெண்கள் எழுந்து விபத்தினை ஏற்படுத…
-
- 0 replies
- 372 views
-
-
21 FEB, 2024 | 07:39 PM 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கான புலமைப்பரிசில் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவடையும். இந்த புலமைப்பரிசில் விருதுகள் ஆண்டுதோறும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் சுமார் 150 நாடுகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு புலமைப்பரிசில் விருதுகளை வழங்குகிறது. இந்த புலமைப்பரிசில் விருதுகள் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அவுஸ்திரேலியாவின் உயர் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கும் உலக தரம் வாய்த கல்வி சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் க…
-
- 0 replies
- 588 views
- 1 follower
-
-
தேசிய இனப்பிரச்சனையைப் பற்றிப் பேசும்போது தோழர் ஸ்டாலின் தனது வரலாற்றுச் சிறப்புமிக்க லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள் என்ற புத்தகத்தில் பின்வருமாறு கூறுவார். கடந்த இருபது வருடங்களாக தேசியப்பிரச்சனை அநேக முக்கிய மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது, இரண்டாவது அகிலத்தின் காலத்திய தேசிய இனப்பிரச்சனையும், லெனினிய காலத்திய தேசிய இனப்பிரச்சனையும் ஒன்றே அல்ல. பரிமாணத்தில் மட்டுமல்லாமல் அவற்றின் உள்தன்மையிலும் அவை தீர்க்கமாக வேறுபட்டுள்ளன. (120) இரண்டாவது அகிலத்தின் காலத்திற்கும் தோழர் ஸ்டாலின் சொல்லும் பேராசான் லெனினின் காலத்திற்கும் இடையே குறைவான ஆண்டுகள் இடைவெளியே இருந்தாலும் அதற்குள்ளாக தேசியப் பிரச்சனை பற்றிய புரிதலில் மற்றும் அதுபற்றிய உரையாடலில் ஏற்பட்ட பாரதூரமான ம…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம், அச்செழு பகுதியில் 13 வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வு செய்த அதேயிடத்தைச் சேர்ந்த குளிர்பான விற்பனை நிலையத்தில் பணிபுரியும் இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்.சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் சனிக்கிழமை (06) உத்தரவிட்டுள்ளார். பாடசாலை செல்லும் சிறுமியை இளைஞன் இனிப்புக்கள் வழங்கி வன்புணர்வு செய்து வந்துள்ளான். இது தொடர்பில் அறிந்த சிலர், சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் இது தொடர்பில் தெரிவித்தனர். சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரியின் உதவியுடன் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட அச்சுவே…
-
- 0 replies
- 401 views
-
-
பாராளுமன்றக் கலைப்பைத் தடுப்பதற்கு உயர்நீதிமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரா.சம்பந்தர் ஐயாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நீக்கம் செய்தபோது அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லவில்லை. இது எதற்கானது என்று ஆராயும்போது சிலவேளை ஆட்சிப்பீடத்தில் இருக்கக்கூடிய யாரேனும் நீதிமன்றம் செல்லாதீர்கள் என்று கூட்டமைப்புக்கு ஆலோசனை கூறியிருப்பார்களோ என்ற எண்ணத் தோன்றும். அல்லது இரா.சம்பந்தர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்குப் பிழையானது என்று கூட்டமைப்பு கருதியிருந்தாலும் நீதிமன்றத்தை நாடுவது ஏற்புடையதல்ல எனக் கைவிட்டிருக்கலாம். எது எவ்வாறாயினும் பாராளுமன்றக் கலைப்பை நிராகரிக்க வேண்டும் என நீதிமன்றப்படி ஏறியவர்கள் தங்களின் உரிமை பற…
-
- 0 replies
- 331 views
-
-
கனடாவுக்கு வருகை தரவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள்* அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நா.உ.பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, நா.உ. திரு. எம்.ஏ.சுமந்திரன், நா.உ. பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் ஒக்தோபர் 26, 27, 28 ஆகிய நாட்களில் பேசுகிறார்கள். நியூயோர்க்கில் உள்ள தமிழ் அமைப்புக்களின் ஆண்டு விழாக்களிலும் பங்குபற்ற இருக்கிறார்கள். இதனை முடித்துக் கொண்டு வானூர்தி மூலம் நா. உறுப்பினர்கள், திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன் நீங்கலாக கனடாவுக்கு ஒக்டோபர் 29ம் திகதி நள்ளிரவு வருகிறார்கள். ஒக்டோபர் 30 காலை ததேக…
-
- 0 replies
- 916 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் கொம்பு வைத்த பிசாசுகளல்ல! - பாராளுமன்றத்தில் மங்கள சமரவீர [saturday 2015-06-13 08:00] புலம்பெயர் தமிழர்கள் எவரும் நினைப்பது போல் பயங்கரவாதிகளோ அல்லது கொம்பு முளைத்த பசாசுகளோ அல்ல அவர்கள் இந்த நாட்டின் மக்களே என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நேற்று முன்தினம் எதிர்க் கட்சித் த லைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்று அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆட்சியின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு புலம்பெயர் தமிழர்களுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டி…
-
- 0 replies
- 552 views
-
-
முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் - கருணா அம்மான் Vhg மார்ச் 25, 2024 மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை கருணா அம்மான் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட அவர் எனக்கொரு கட்டளையி…
-
-
- 1 reply
- 617 views
-