ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143441 topics in this forum
-
1300 ஆண்டுகளாக இருந்த வந்துள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் இன நல்லுறவை சீர்குலைக்க பெரும்பான்மை சமூகத்தவர்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலான குழு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத வெறுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கிண்ணியா ஜம்இய்யத் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சபையின் நிருவாக சபை உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அங்கு மு…
-
- 10 replies
- 885 views
-
-
இஸ்லாம் மதத்திற்கு எதிராக மேற் கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள், அதன் பின்னணி தொடர்பில் காத்தான்குடி தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவிருந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டது. நாட்டில் சில பேரினஜாதக் குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விமர்சித்து இன முரண்பாடொன்றை திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர். இந்த இனவாதக் குழுவின் பின்னணி என்ன? இந்தக் குழு முஸ்லிம்களை மாத்திரம் குறிவைப்பது ஏன்? முஸ்லிம்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகளா? பள்ளிவாசல்களில் ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றனவா? ஹலால் சான்றிதழ் ஏன் எதற்கு? அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை விமர்சிக்க இந்தக்குழுவுக்கு யோக்கியதை இருக்கின்றதா? ஊடக பலத்தினால் இஸ்லா…
-
- 2 replies
- 471 views
-
-
யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகள் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக அகற்றப்பட்டு வருகின்றன.ஏ-9 வீதியில் முகமாலை மற்றும் பளை பிரதேசத்தில் மிதிவெடிகள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் பிரதேசங்களில் மிதிவெடிகள் அகற்றப்பட்டு அங்கு அச்சமற்ற நிலைமை இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த இடங்கள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும். த ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் மிதிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த…
-
- 3 replies
- 480 views
-
-
தமிழீழம் என்பது இன்னமும் அடக்கப்பட்டவர்களாக, அவலங்கள் சுமப்பவர்களாக ஈழத்தில் வாழும் எஞ்சிய தமிழர்களது விடுதலைக்கானது மட்டுமல்ல, அதுவே புலம்பெயர் தமிழர்களதும் உயிர் வேட்கை! அதுவே உலகத் தமிழாகளது தமிழ்த் தேசிய சிந்தனை. அதுவே மனிதத்துவம் மிக்க மானுடர்களின் மனச்சாட்சி... முள்ளிவாய்க்கால் பெருந் துயரில் ஈழ மண் எரியூட்டப்பட்டபோது, புலம்பெயர் தமிழர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். அது மட்டுமாக இல்லாமலே எங்கள் ஈகப் பேரொளி முருகதாசன் உடல் பற்றி எரிந்தே உலக மன்றத்தில் நீதி கேட்டான். இப்போதும் புலம்பெயர் தமிழர்கள் இன்னமும் தமிழீழ விடுதலைக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழீழத்தின் அவலங்கள் கரைகடந்து சென்றபோது... முத்துக்குமாரன் தன்னையே நெருப்பாக்கித் தமிழக…
-
- 0 replies
- 443 views
-
-
வட மாகாண சபைக்கான பொதுத் தேர்தலை வடப் பகுதியில் வாழும் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு தேர்தல் ஒன்றை அரசாங்கம் நடத்துமாயின் ஆட்சி அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் பொது எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், வட மாகாண மக்களின் வட மாகாண சபைக்கான தேர்தல் விருப்பத்தை கருத்தில் கொண்டு தேர்தலை உடன் நடத்த வேண்டும். இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இந்த …
-
- 1 reply
- 535 views
-
-
நல்லிணக்க பரிந்துரைகளை அமுல்படுத்த 50 பேர் கொண்ட செயற்குழு அமைக்க வேண்டும்!- ரணில் கோரிக்கை Published by News on February 16, 2013 | Comments Off நல்லிணக்க பரிந்துரைகளை அமுல்படுத்த 50 பேர் கொண்ட செயற்குழு அமைக்க வேண்டும்!- ரணில் கோரிக்கை [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 03:14.47 PM GMT ] அதில் ஆளும் கட்சித் தரப்பில் 25 பேரும் எதிர்கட்சிகளின் தரப்பில் 25 பேரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கருத்தை வெளியிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர். வட மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்…
-
- 5 replies
- 505 views
-
-
மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இராணுவ வீர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்லடியிலுள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக நேற்று மாலை கல்லடி இராணுவ முகாமில் கடமையாற்றும் வெல்லவாய பிரதேசத்தைச் சோ்ந்த 27 வயதுடைய விஜயலால் என்ற இராணுவ வீரரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கல்லடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ப…
-
- 0 replies
- 715 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாக இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா குழுவை தெரிவு செய்ய முடியாமல் சிறிலங்கா அரசாங்கம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது. வரும் 25ம் நாள் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில், சிறிலங்கா கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மற்றொரு தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ஜெனிவா கூட்டத்தொடரில் சிறிலங்காவின் சார்பில் பங்கேற்கும் குழு கடுமையான நெருக்கடிகளை சந்திக்கும். இதனால், அமைச்சர்களை ஜெனிவாவுக்கு அனுப்புவது சிறிலங்கா அரசு மீது நேரடியாக அழுத்தங்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அம…
-
- 4 replies
- 654 views
-
-
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் மோதல் 17 பெப்ரவரி 2013 இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கற்பிட்டி கடற் பரப்பில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக இலங்கை மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் தாக்குதல் நடத்தியதாக கற்பிட்டி ட்ரோலர் உரிமையாளர் பேரவையின் தலைவர் அன்டன் ரெக்ஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டதாகவும், சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த போது இரு தரப்பினருக்கும் இடையில் சுமூக நிலைமை ஏற்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/ta…
-
- 1 reply
- 598 views
-
-
அமெரிக்காவில் தமிழர்கள் நடத்திய திருக்குறள் போட்டியில் 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார். அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளின் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் டல்லாஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் முறையாக டெக்சாஸ் மாநில அளவில் விரிவுபடுத்தப்பட்ட போட்டி பெப்ரவரி 9ம் திகதி நடைபெற்றது. இந்த போட்டியில் 2 வயது முதல் 16 வயது நிரம்பிய அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த 200 தமிழ்க் குழந்தைகள் பங்கேற்றனர். 13 வயது சீதா 320 குறள்கள் ஒப்புவித்து முதல் பரிசு பெற்றார், பெரியவர்களுக்கான போட்டியில், பிரபல தயாரிப்பாளர் மற்றும் கதை, திரைக்கதை, பாடலாசிரியர் பஞ்சு அருணாசலத்தின் மகள்…
-
- 4 replies
- 917 views
-
-
2009ம் ஆண்டு இறுதி யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இராணுவத்தினரிடம் நாங்கள் ஒப்படைத்த எங்கள் உறவினர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதையாவது வெளிப்படுத்தச்சொல்லுங்கள் என கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொது எதிரணியினர் முன்னிலையில் மக்கள் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். சனிக்கிழமை காலை கிளிநொச்சியிலுள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் (அறிவகம்) சென்றிருந்த பொது எதிரணியினர் அங்கு கூடியிருந்த சுமார் நூற்றுக்கணக்கான காணாமல்போனவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே மக்கள் இந்த உருக்கமான வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். 'முள்ளிவாய்க்காலில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்…
-
- 2 replies
- 551 views
-
-
யாழில் ஜனாதிபதி மஹிந்த அரகேற்றிய நாடகம்! பிப் 17, 2013 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் விடுதலையானது, ஜனாதிபதியின் திட்டமிட்ட நாடகம் என கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் அலி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கம் யாழ்.நகரில் நேற்று ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தியது. இதன் போது கருத்து வெளிட்ட அசாத் அலி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்கின்றன. இங்குள்ள யாழ்ப்பாண மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அவர்கள் முன்னர் இருந்ததை விட மோசமான நிலையிலேயே இருக்கின்றனர். இங்குள்ள தாய்மார் தமது பிள்ளைகளைக் காணவில்லை என்று தேடி அலைகின்றனர். அவர்களின் வாழ்க்கை கண்ணீர…
-
- 0 replies
- 453 views
-
-
மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் நேற்று பயங்கரவாத தடுப்பு புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரையும் கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு புலனாய்வு பிரிவின் தலைமைக் காரியாலயத்திற்கு (4ம் மாடி) அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கைதுசெய்யப்பட்ட உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மனோகரன் தெரிவித்துள்ளார். http://www.virakesari.lk/article/local.php?vid=3077
-
- 0 replies
- 324 views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் மிகவும் நம்பிக்கைக்குரிய -விசுவாசமான நண்பர் ஒருவர் இருப்பாராக இருந்தால், அது இந்த நாட்டின் எதிர்க் கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிவிடலாம். ஜனாதிபதி மகிந்த ராஜபக் அல்லது அவரின் ஆட்சி பற்றி ரணில் கூறுகின்ற விமர்சனங்கள், ரணில் ஒரு எதிர்க் கட்சித் தலைவரா? என்ற சந்தேகம் மற்றவர்களிடம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கானதாகும். உண்மையில் இந்த நாட்டில் பலமான -திடமான - உறுதியான எதிர்க் கட்சி ஒன்று இருக் குமாக இருந்தால்; பொருட்களின் விலையேற்றம், வரிவிதிப்பின் கடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் முன்கொண்டு வந்து அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்க முடியும். ஆனால் எதிர்க் கட்சித…
-
- 0 replies
- 403 views
-
-
ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில் நாம் ஆட்சி அமைத்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதுடன் நாம் தமிழ் மக்களுக்கு ஒரு புரட்சிகரமான தீர்வினை வழங்குவோம். மக்களின் இறைமையை மதிக்கின்றவர்கள் எம்முடன் வரலாம் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமிங்க அழைப்பு விடுத்துள்ளார்.எதிர் கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நண்பகல் ஒரு மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளர்.அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம். இந்த அரசாங்கம் எங்க…
-
- 14 replies
- 649 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்ட ரீதியான இயக்கமாக மாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முயற்சித்து வருவதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையானது புலிகளுக்கு சார்பாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புலிகளை சட்ட ரீதியாக நவநீதம்பிள்ளை முயற்சித்துள்ளார். இந்த அறிக்கையானது நாட்டின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்தில் தலையீடு செய்தலாகும்.இந்த அறிக்கையின் 63-3 பிரிவில் படையினருக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தி படையினரை சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 511 views
-
-
இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் உள்ள சண்டேலீடர் ஊடகவியலாளர் பரஸ் சௌகத் அலிக்கு பாதுகாப்பு அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐ.நா. மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், “இது ஊடகவியலாளரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி. எனவே, அவர் உடனடியாகப் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினால் நான் கலக்கமடைந்துள்ளேன். ஏனென்றால், அவர் ஒரு ஊடகவிலாயளர். அவர் பொறுப்புக்கூறல், நீதித்துறை விவகாரங்களில் சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சிக்கும் செய்தித்தாள் ஒன்றில் பணியாற்றுபவர். இந்த விவகாரங்கள் என்னால் கவனிக்கப்படுபவை. …
-
- 0 replies
- 435 views
-
-
வன்னியில் நெடுங்கேணி மாறா இலுப்பையில் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்கேணி மாறா இலுப்பை மகிழமோட்டையைச் சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று சென்றுள்ளது. இதில் உன்னை கொலை செய்வோமென மிரட்டல் விடுக்கப்படவே இவர் தனது மனைவியுடன் வீட்டிற்கு அருகிலுள்ள இராணுவ பொலிஸ் காவலரணுக்குச் சென்று முறையிட்ட போது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவர்கள் கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அதன் பின்னர் குறித்த நபர் வெட்டிக்கொலை …
-
- 0 replies
- 485 views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் இன மோதல்களைத் தூண்ட முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி அதன் மூலம் அரசியல் நடாத்த ரணில் குழு ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் படையினரும் அரசாங்கமும் மேற்கொண்டு வரும் அபிவிருத்திப் பணிகளை மறந்து ரணில் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தந்திரோபாய மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளிலிருந்து படையினர் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள் எனவும், அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை எனவும்…
-
- 0 replies
- 224 views
-
-
முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள…
-
- 9 replies
- 1.4k views
-
-
சண்டே லீடர் பத்திரிக்கையின் ஊடகவியலாளர் மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஊடகவியலாளரான பர்ஷா சகுல்கெட்டாலி என்பவர் மீதே இனந்தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்,தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாக வும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59003-2013-02-15-22-30-07.html Sunday Leader Journalist Faraz Shaukatally was shot by an unidentified group, around midnight on Fri…
-
- 17 replies
- 1.6k views
-
-
இலங்கை பற்றி நவனீதம்பிள்ளை சனல்-4 க்கு வழங்கிய பேட்டி ... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=6491:----4---&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 841 views
-
-
சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான உண்ணாவிரதத்தைக் குழப்பும் முயற்சி தோல்வி [ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 00:28 GMT ] [ யாழ்ப்பாணச் செய்தியாளர் ] வலி-வடக்கில் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிறிலங்கா இராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட பாரிய உண்ணாவிரதப் போராட்டத்தைக் குழப்பும் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் நேற்றுக்காலை தொடங்கிய போராட்டத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐதேக. தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ரணில் விக்கிரமசிங…
-
- 2 replies
- 647 views
-
-
Our mendacious President declared in India that everyone has a right to protest in a democracy. But Tamils are questioned over religious functions and protesters are ducked in dirty engine oil, locked up or disappeared. He claimed to be performing a Suprabhata Seva for Venkateswara. But that seemed farcical given how many Hindu temples have been destroyed by his army. Claiming “a private visit” he reportedly met the head of RAW, Alok Joshi. http://www.colombotelegraph.com/index.php/who-will-speak-for-tamils-at-unhrc/
-
- 1 reply
- 600 views
-
-
'வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கின்றேன்' என்று எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று யாழ். விருந்தினர் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 'எதிர்க்கட்சினராகிய நாம் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணத்தினை மேற்கொண்டு நேற்றைய தினம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகளைச் சுவீகரிப்பதினை எதிர்த்து பொதுமக்களினால…
-
- 8 replies
- 601 views
-