ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143434 topics in this forum
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இன்று ஆரம்பம். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மாணவர் சங்க பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், மற்றும் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவினருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடளை தொடர்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்ப்;ட்டதாக, பல்கலைக்கழகத்தின் முதல்வர் வீ.கான்டிபன் தெரிவித்தார். கடந்த நெவம்பர் 28 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்ப்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தினை தவிர்த்த ஏனைய அனைத்து பீடங்களின் கற்றல் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன. இந்த குழப்பநிலையைத் தொடர்ந்து 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.…
-
- 0 replies
- 440 views
-
-
நான் இப்போது எல்லோருக்கும் உதைப் பந்து போல! ரணில் கவலை ரஷ்ய நாட்டு விலை மாதுக்களை நாட்டிற்குள் ஒரு பக்கமாக அழைத்துக் கொண்டு பிரதம நீதியரசரை மறுபுறமாக வெளியேற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2013ஆம் ஆண்டிற்கான ஐக்கிய தேசியக் கட்சி அபிவிருத்திக் கூட்டம் இன்று (07) சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய எதிர்க் கட்சித் தலைவர், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நீதிமன்றத்திற்கு போனமை அவரது உரிமை. எனினும் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை உடைத்தெறிய முடியாது. ராஜபக்ஷ ஆட்சியை எதிர்ப்பதன் மூலம் நடுத்தெருவிற்கு…
-
- 0 replies
- 378 views
-
-
அகதிகள் முகாமில் இலங்கை தமிழ் பெண்களுக்கு பாலியல் தொல்லை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்கள் 42 பேர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 23 பேர் தங்களை திறந்த வெளிமுகாமிற்கு மாற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் அங்கும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனன், போலீஸ் எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனா, கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்பிரமணியம், செங்கல்பட்டு டி.எஸ்.பி. மூவேந்தன், தாசில்தார் இளங்கோவன் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் 14 பேர் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்று சிறப்பு முகாமிற்கு திரும்பினர். …
-
- 0 replies
- 540 views
-
-
ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில் செயற்படவில்லை - கெஹெலிய தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்குவதற்கான குற்றப் பிரேரணை நடைமுறைகளில் ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்குமென்று இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளை பதவி நீக்குவதற்கு கடைபிடிக்கப்பட்டு வந்துள்ள நடைமுறைகளையே அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்துள்ளதாகவும் அதற்கு புறம்பாக செயற்பட…
-
- 0 replies
- 298 views
-
-
அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிங்களப் படைகளின் ஏற்பாட்டில் நடந்த புது வருட ஆராதனை நிகழ்வின் போது.. கருத்து வெளியிட்ட யாழ். ஆயர் இனவாத சிங்கள அரசையும் அதன் பயங்கரவாதப் படைகளையும் புகழ்ந்து தள்ளியதோடு.. போரின் பின்னான யாழ்ப்பாண "அபிவிருத்தி" குறித்தும் சிங்கள அரசை பாராட்டித் தள்ளியுள்ளார். ஒரு அரச ஆதரவு பிரச்சாரமாகவே அதனை அவர் முன்னெடுத்திருக்கிறார். இந்த அணுகுமுறையை மட்டு. ஆயர் தவறென்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது ஆகும். 1995 சிங்கள படைகளின் ஆக்கிரமிப்பின் பின் யாழ்.ஆயர் அதிகம் சுருதி மாற்றி பேசி வருவது ஊரறிந்த விடயமாகும். இருந்தாலும் முள்ளிவாய்க்கால் பேரவலம் கண்ட பின்னும் அவர் இப்படி இனப்படுகொலை இராணுவத்தை புகழ்ந்து தள்ளி இருப்பது ப…
-
- 1 reply
- 588 views
-
-
தமிழர்களைக் கொன்றொளித்த சிங்கள இனவாத அரசாங்கத்தின் அரக்கத்தனங்களை மறைக்க அல்லும் பகலும் உழைக்கும் சிறிலங்கா கிரிக்கற் அணிக்கெதிரான போராட்டத்துக்கு சிட்னித் தமிழர்களை அணிதிரளுமாறு அறைகூவல் விடப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ந்திகதி (03-01-2013) சிட்னியில் நடைபெற உள்ள மூன்றாவது* டெஸ்ட்டின் தொடக்க நாளில் காலை 9.30 மணியளவில் தமிழ் இளையோர் அமைப்பும் Refugee Action Coalition அமைப்பும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியுள்ளனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான மக்களைக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இடம் :சிட்னி கிரிக்கட் மைதானம் gate 6 க்கு அருகாமை காலம்: 03-01-2013 காலை 9.30 http://www.tamilleader.com/prathanaalias/8406-2013-01-01-12-1…
-
- 10 replies
- 936 views
-
-
'இலங்கையில் நீதித்துறைக்கும் சட்டவாக்கத் துறைக்கும் இடையிலான பிரச்சினைகள் உட்பட ஏனைய தொழிற்சங்க பிரச்சினைகளும் தொடர்ந்தால், அது ஒரு அரபு வசந்தத்துக்கு இட்டுச் செல்லலாம்' என்று ஆய்வாளர்கள் கூறுவதாக மூத்த பத்திரிகையாளரான அனந்த் பாலகிட்ணர் கூறியுள்ளார். http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/12/121231_anandaudio.shtml
-
- 7 replies
- 1k views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை 07 ஜனவரி 2013 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பேர்த் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தங்கியிருந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். குடும்பஸ்த்தரான தமிழர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உயிரிழந்தவரின் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா அல்லது மறுக்கப்பட்டதா என்பது பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் வழங்கவில்லை. நெஹ்ரூ மற்றம் மனுஸ் தீவுகளில் புகலிட முகாம்கள் அமைக்கப்படுவதற்கு முன்னதாக குறித்த நபர் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்திருக்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவரின்…
-
- 2 replies
- 335 views
-
-
காஸ் நிறுவனங்கள் காஸ் விலையை 650 ரூபாவினால் அதிகரிக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ள நிலையில் காஸ் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கும். என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை கொண்டு நடத்தமுடியாத அளவிற்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எரிபொருட்கள் மீதான வரியை குறைத்தால் அத்தியாவசிய…
-
- 5 replies
- 435 views
-
-
இலங்கையின் வடக்கே யுத்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுகின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் ஒரு லட்சத்து இருபத்தாறாயிரம் மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியிருப்பதாகக் கல்வி அமைச்சு தெரிவித்திருக்கின்றது. இதில் அதிகூடிய எண்ணிக்கையாக 38 ஆயிரத்து 321 மாணவர்கள் வடமாகாணப் பாடசாலைகளில் இருந்து இடையில் விலகியிருப்பதாகவும், கிழக்கு மாகாத்தில், 24 ஆயிரத்து 614 மாணவர்கள் இடையில் விலகியிருப்பதாகவும் கல்வி அமைச்சு கூறியிருக்கின்றது. நாட்டில் இலவச கட்டாயக் கல்வி நடைமுறையில் இருக்கின்ற போதிலும், பாடசாலைகளில் இடை நிலை வகுப்புகளில் இருந்து மாணவர்கள் இடைவி…
-
- 3 replies
- 545 views
-
-
கட்சித் தலைவர்கள் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு! By Kavinthan Shanmugarajah 2013-01-07 13:11:17 பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதையடுத்து இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி உறுப்பினர்களும் இதன் போது வெளிநடப்புச் செய்துள்ளனர். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினையும் மீறி அரசாங்கம் பிரதம நீதியரசர் மீதான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்ததமையே வெளிநடப்பு செய்தமைக்கான காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.vi…
-
- 0 replies
- 468 views
-
-
தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிக்க இராணுவத்தை அனுமதித்து, மறுக்கப்பட்டமையின் பின்னணியில் மர்மங்கள் : சுட்டிக்காட்டிய ஆசிரியர்கள் [Monday, January 7, 2013 11:20 PM] கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ் பாடசாலைகளின் சிங்களம் கற்பிப்பதற்கு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி மறுக்கப்பட்டதற்கு பின்னணியில் மர்மமான பல காரணங்கள் பல இருப்பதாக சில ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். கடந்த 3ம் திகதி முதல் கிளிநொச்சி கல்வி வலயத்தில் சுமார் 103 ஆசிரியர்கள் தமிழ் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையினைத் தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திடீரென அந்த அனுமதி மறுக்கப்பட்டதாக, ஈ.பி.டி.பி யினால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தமிழர் ஆசிரியர்…
-
- 0 replies
- 419 views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவி விலக்குவதற்கான குற்றப் பிரேரணை தொடர்பிலான நடைமுறைகளில் ஒருபோதும் அரசியலமைப்புக்கு புறம்பான வகையில் தாம் செயற்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அரசியலமைப்பின் பிரகாரமே குற்றப் பிரேரணை தொடர்பான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிபிசி செய்திச்சேவைக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களை பதவி நீக்குவதற்கு கடைபிடிக்கப்பட்டுவந்துள்ள நடைமுறைகளையே அரசாங்கம் இதுவரை கடைப்பிடித்துள்ளது. அதற்கு புறம்பாக செயற்படவில்லை. அரசாங்கத்தைப் போ…
-
- 0 replies
- 423 views
-
-
திடுக்கிடும் ஆதாரங்கள் வெளியாக உள்ளது: இன அழிப்பில் சம்பந்தன் ஐயா ?? [Monday, January 7, 2013 4:44 PM] முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் நேரடியாகத் தொடர்புகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனேடிய எதிர்கட்சி தலைவர் திரு.பொப் ரே அவர்கள் 2009ம் ஆண்டு சம்பந்தனிடம் நேரடியாக ஒரு கோரிக்கை விடுத்துள்ளார். புலிகள் யுத்த நிறுத்தத்திற்கு தயார் என்றால் 72 மணி நேரத்தில், தமது நாடும் (கனடா) அமெரிக்காவும் இணைந்து ஒரு யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார். மிகவும் அதி உயர் பீடத்தில் உள்ள அமெரிக்க மற்றும் கனேடிய அரசியல்வாதிகள், இத் திட்டத்தை முன்வைக்க, இரா. சம்பந்தன் என்ன செய்தார் ? இந…
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கையில் உயர் கல்விக்கு ஒரு பதியுதின் போல நீதிக்கு ஒரு கக்கீம் வந்து கிடைத்திருக்கிறார். பதியுதின் காலத்தில் இலங்கையின் உயர்கல்வி சீரளிக்கப்பட்டது. இன்று கக்கிம் காலத்தில் நீதி அமைச்சு அதையே அதயும் விட மோசமான ஒன்றையே சந்திக்கிறது. உண்மையான பிரச்சனையில் தலைகொடுக்க விரும்பாத கக்கீம், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு தனக்குதான் சேவை செய்திருக்கிறார். எரிகிற வீடு; யார் கவலைப்பட போகிறார்கள் என்று சாவகதமாக நெருப்பெடுத்து புகையிலை பத்துகிறார். இருந்தாலும் சில சிங்களவர் இரண்டிலும் தான் கண்ந்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீரகேசரிச் செய்தி: சட்டக் கல்லூரிக்கு முன் ஆர்ப்பாட்டம் சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதில் மோசடிகள் இடம்பெற்றதாக கோரி மாணவர்கள் இன்று காலை எதிர்ப்பு ஆர…
-
- 0 replies
- 470 views
-
-
பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பிலான பிரச்சாரங்களை புலி ஆதரவு அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளன 06 ஜனவரி 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு தொடர்பிலான பிரச்சாரங்களை தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புக்கள் ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு அமைப்புக்கள் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளிடம் கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. சில பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சாரத்தில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான மிட்சாம், மோர்டன், மெக்டொனாவ் உள்ளிட்ட சிலர் இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரங்ளை ஆரம்பித்…
-
- 2 replies
- 415 views
-
-
ஜெனிவாவின் மார்ச்மாத் மாத மனித உரிமை மகாநாடும் இலங்கையை பீடித்துள்ள புலம்பெயர் புலிக் காச்சலும் 06 ஜனவரி 2013 ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை பேரவையின் மாநாட்டில், இலங்கையில் இரண்டு நாடுகள் இருக்க வேண்டும் எனவும் இதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக வடக்கு, கிழக்கு மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற யோசனையை முன்வைக்க புலம்பெயர் புலிகள் ரகசியமான திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர் என ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவை கொண்டு இந்த யோசனையை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை, உலக தமிழர் பேரவை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அண்மையில் தென்னாப்பிரிக்கா சென்று, இது குறித்து ரகசி…
-
- 5 replies
- 564 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மீண்டும் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் தான் பதவி விலகுவதாகவும் புதிதாக பதவிக்கு வருபவர்கள் அப்பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் என்றும் யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை முதல் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாணவர்களின் வரவு இடம்பெறவில்லையாயினும் அல்லது இனியும் பல்கலைக்கழகத்தில் பிரச்சினை தோன்றும் பட்சத்திலும் தான் பதவி விலகுவேன் என்று அவர் கூறியுள்ளார். யாழ். பல்கலைக்கழக உப வேந்தர் வசந்தி அரியரட்ணம் தலைமையில் பல்கலைக்கழக அனைத்து பீட பீடாதிபதிகள் மற்றும் மாணவ தலைவர்கள் உள்ளிட்டோருக்கு இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன்போதே அவர் ம…
-
- 1 reply
- 598 views
-
-
மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுஜித குரே இன்று மாலை வாதுவையிலுள்ள அவருடைய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் பொலிஸார் மரணத்திற்கான சரியான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் ஜே. குரேயின் மகன் என்பது குறிப்படத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=2431
-
- 2 replies
- 955 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக் கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்கள் அத்து மீறி பிரவேசித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.இம்மாதம் 15ம் திகதிக்குள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு அராங்கம் தீர்வுத் திட்டமொன்றை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண மீனவர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாண மீனவர் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசாங்கம் உரிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கத் தவறினால், யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றாக இணைந்து இந்திய மீனவர்களின் அத்து மீறல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனால், தமது ஜீ…
-
- 0 replies
- 487 views
-
-
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை அறிக்கை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களின் தெரிவு இன்னும் நிறைவுபெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் குழுவில் நான்கு பேர் அங்கம் வகிப்பார்கள் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த போதிலும் அந்த எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள மேற்படி சுயாதீன ஆணைக்குழுவுக்கான துறைசார் நிபுணர்கள் தெரிவு துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதில் அங்கம் வகிப்பவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். …
-
- 0 replies
- 680 views
-
-
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினுடைய அனைத்து கல்வி செயற்பாடுகளும் நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று பல்கலைக்கழக அனைத்து பீடங்களின் மாணவர் ஒன்றிய தலைவர்கள், செயலாளர்களுடன், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் உள்ளிட்ட நிர்வாகித்தினர் நடாத்திய நீண்ட கலந்துரையாடலின் பின்னர், நாளைமுதல் அனைத்து பீடங்களினுடைய கல்வி செய்ற்பாடுகளையும் ஆரம்பிப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக தடுப்பிலுள்ள மாணவர்களும் சாதகமான சமிக்ஞை காட்டியதாகவும் அவர்களுடன் ஏனைய மாணவ தலைவர்கள் உரையாட அனுமதிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் சுதந்திரமான கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாதிருந்த போதும் அவர்கள…
-
- 1 reply
- 579 views
-
-
சென்னை எழும்பூரில் உள்ள இலங்கையர்களால் நடத்தப்படும் மகாபோதி சொசைட்டி என்ற பெயரிலான பௌத்த மடத்தில் ஒரு இளம் துறவி தற்கொலை செய்து கொண்டார். தனது இடுப்பு நாடாவால் அவர் தூக்கிட்டு மாண்டுள்ளார். எழும்பூர் ரயில் நிலையம் எதிரே கென்னத் லேன் தெருவில் மகாபோதி சொசைட்டி உள்ளது. சிங்கள பெளத்தர்களால் நடத்தப்படும் மடம் இது. இங்கு இலங்கையிலிருந்து வரும் சிங்கள பெளத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் வருகை தருவர். மேலும் இங்கு ஏராளமான அறைகளைக் கட்டி வைத்துள்ளனர். அங்கு துறவிகளும் தங்கியுள்ளனர். இங்கு பெங்களூரைச் சேர்ந்தவரான ரத்தினபாலா என்ற 27 வயது துறவி தங்கியிருந்தார். பீகார் மாநிலம் புத்தகயாவுக்குச் செல்வதற்காக சென்னை வந்த அவர் இன்று காலை ரயில் மூலம் பீகார் செல்லத் திட்…
-
- 2 replies
- 397 views
-
-
கொலையாளிகளை களனி அரசியலிலிருந்து நீக்குமாறும் இன்றேல் இன்னும் இன்னும் மனித படுகொலைகள் இடம்பெறுவதனை தவிர்க்கமுடியாது என்றும் களனி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக்கொலைச்செய்யப்பட்ட களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித்த மடவலவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை சென்றிருந்த வேளையிலேயே அங்கு குழுமியிருந்த மக்கள் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56383-2013-01-07-09-27-47.html
-
- 1 reply
- 417 views
-
-
சிறிலங்கா பற்றிய கொள்கையை கையில் எடுத்துக் கொள்ள கெரி அனுமதிக்கப்படுவாரேயானால், மனிதஉரிமைகளை விடவும், இராணுவ மற்றும் பாதுகாப்பு உறவுகளிலேயே அவரது முக்கிய கவனம் இருக்கும். இவ்வாறு international policy digest ஊடகத்தில், Gibson Bateman எழுதியுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் தொகுப்பு இது. அமெரிக்க அதிபர் ஒபாமா தனது வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்பு அணியை மீளமைப்பதில் இன்னமும் ஈடுபட்டு வருகிறார், ஆனால், அடுத்த இராஜாங்கச் செயலராக ஜோன் கெரியே நியமிக்கப்படவுள்ளார். பத்தாண்டுகளாக வெளிநாட்டுக் கொள்கையில் கெரி, முக்கியமானதொரு குரலாக ஒலித்து வருகிறார். 27 ஆண்டுகளாக செனட்டின் வெளிவிவகாரக் குழு உறுப்பினராக உள்ள இவர், வெளிநாடுகளில் பரந்தளவிலான வலையமைப்பு ஒன…
-
- 1 reply
- 477 views
-