ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143426 topics in this forum
-
ராஜிவ்காந்தி கொலை வழக்கு: ஆயுள்தண்டனைக் கைதிகள் இருவர் விடுவிக்கக் கோரி மனு [ சனிக்கிழமை, 24 நவம்பர் 2012, 00:21 GMT ] [ அ.எழிலரசன் ] ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இருவர் தம்மை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.ஜெயகுமார், பி.றொபேட் பயஸ் ஆகியோர் தாக்கல் செய்த இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. “ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 1991-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட எமக்கு, அந்த வழக்கை விசாரித்த தடா சிறப்பு நீதிமன்றம் 1998ம் ஆண்டு மரணதண்டனை விதித்து தீர்ப்…
-
- 0 replies
- 451 views
-
-
அதிவேக நெடுஞ்சாலையால் ரூ.50 கோடி வருமானம் சனிக்கிழமை, 24 நவம்பர் 2012 23:24 0 COMMENTS தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த வீதியை நிர்மாணிப்பதற்காக 45 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் இந்த வீதியின் மூலம் இதுவரையில் 95 கோடி ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றுள்ளது என நெடுஞ்சாலைகள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இந்த ஒரு வருட காலத்துக்குள் 350 விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவ்வதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53388---50--.html
-
- 0 replies
- 392 views
-
-
ஜனாதிபதி மஹிந்த புலம்பெயர் தமிழர்களை ஒருபோதும் வெறுக்கவில்லை - விநாயகமூர்த்தி முரளிதரன் அன்று 13வது திருத்தச் சட்டத்தை தூக்கியெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று 13வது திருத்தம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசுவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். நிதி அமைச்சுக்கு வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து இன்று (24) பாராளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி அவர் மேலும் கூறியதாவது, வடக்கு கிழக்கில் இன்று பாரிய அபிவிருத்தி நடைபெறுகிறது. உங்களை விட வடக்கு கிழக்கு பகுதிக்கு அதிகம் விஜயம் செய்தவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திகழ்கிறார். நீங்கள் கொழு…
-
- 3 replies
- 565 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இராணுவ தளபதியின் சார்பில் சட்டத்தரணி உபேந்திர குணசேகரவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய – தமிழ்மிரருக்கு தெரிவித்தார். கடந்த ஜுலை 11ஆம் திகதி மேற்படி இரு நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மல்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ…
-
- 6 replies
- 583 views
-
-
வெளிநாடுகளிற்குச் செல்லும் கனடியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கான கனடிய அரசின் இணையத்தளம் இன்று முதல் செயற்படத் தொடங்கியுள்ளது.கனடியர்கள் பயணிக்கக் கூடாத பாதுகாப்பற்ற பிரதேசங்கள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, வெளிநாடுகளிற்குச் செல்லும் கனேடியர்கள் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தைப் பதிவு செய்வதற்கான வசதி மற்றும் விமான நிலையம், தரைவழி, கடல்வழி பயணப்பாதைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய விடயங்கள் யாவும் குறிப்பிடப்பட்டுள்ளன. வேறு நாடுகளிற்கு பயணம் செய்யும் கனடியர்கள் ஒரே தடவையில் பல விடயங்களையும் அறிந்து தங்களது தகவல்களையும் பரிமாறிக் கொள்ளுமுகமாக அமைக்கப்பட்ட இந்த இணையத்தளத்தின் செய்திகள் அறிவித்தல் போன்றவற்றை சமூக வலையமைப்பு மூலம் பரிமாறிக் கொள்ளும் வ…
-
- 4 replies
- 651 views
-
-
[size=4]தமிழர்களின் நீதிக்காக அடுத்த ஆண்டு இறுதியில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை மலேசியா புறக்கணிக்க வேண்டும் என சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா.ஆறுமுகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் 2009-ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது நான்கு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை நவம்பர் 14-இல் வெளியான ஐக்கிய நாட்டு மன்றத்தின் இரகசிய அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு சானல் 4 என்ற தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் ஐக்கிய நாட்டு சபையின் நிபுணத்துவ அறிக்கை போன்றவை இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது சுமத்தியிருந்தன; ஆனால் அவற்றை உலக நாடுகள் வெகுவாக பொருட்படுத்தவில்லை. இலங்கையின் இறுதிக் கட்டப் போரின்போது தமிழர்களைப் …
-
- 2 replies
- 344 views
-
-
பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம் செலுத்திவருகின்றனர். இன்று காலை 10.00 மணியளவில் மண்டபத்திற்கு அணியத்தினரின் வாத்திய முழக்கத்துடன் வித்துடல் எடுத்து வரப்பட்டது. பொதுச் சுடரினை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. யோசப் அவர்கள் ஏற்றிவைக்க கைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு இறுதி வணக்கம் செலுத்திய வண்ணம் உள்ளனர். http://thaaitamil.com/?p=39100
-
- 0 replies
- 1k views
-
-
[size=2][size=4](எம்.சுக்ரி) மட்டக்களப்பு நாவற்குடா, கல்லடி பகுதிகளில் பிரதான வீதியில் கட்டப்பட்டிருந்த ஜனாதிபதியின் உருவப் படம் தாங்கிய பதாகைகள் இன்று சனிக்கிழமை அதிகாலை இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். ஜனாதிபதியின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பு கல்லடியில் நாளை நடைபெறவுள்ள நிகழ்வொன்றுக்காக இந்த பதாகைகள் மட்டக்களப்பு கல்முனை பிரதான விதியிலுள்ள நாவற்குடா மற்றும் கல்லடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டிருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். [/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...4-07-30-22.html[/size][/size]
-
- 1 reply
- 344 views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=31538 மஹிந்தவை மலேசியாவிற்குள் அனுமதிக்க வேண்டாமென அரசு சா ர்பற்ற நிறுவனங்கள் போர்க்கொடி! இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைப் போரை நடத்திய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவில் கால் பதிக்க மலேசிய அரசு அனுமதிக்க கூடாது என்று சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைமையில் கிள்ளானில் ஒன்று கூடிய அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தின. ஒருவேளை, போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷ மலேசியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டால், வருகின்ற 4-ஆம் திகதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரை எதிர்த்து பெரும் அளவிலான முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இப்போராட்டத்திற்கு உணர்வாளர்களை அழைத்துச…
-
- 1 reply
- 266 views
-
-
[size=4][/size] [size=4]By Irshad 2012-11-24 13:37:49[/size] [size=4]இலங்கையில் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை மேற்கொள்வது தொடர்பில் ஆர்வமாகவுள்ளதாக ஜப்பான் நாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இங்கு வருகை தந்துள்ள ஜப்பான் முதலீ்ட்டாளர்கள் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீனை சந்தித்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளனர். நெல்லினை அரிசியாக மாற்றும் போது அதிலிருந்து வெளியாகும் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை செய்வது குறித்து தாங்கள் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாகவும்,அதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்றும் ஜப்பானிய தூதுக் குழுவினர் அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டினர்.[/size] [size=4]…
-
- 0 replies
- 699 views
-
-
இலங்கையில் உமி மூலம் சக்தி உற்பத்தி செய்வது தொடர்பில் ஜப்பான் ஆர்வம் By Irshad 2012-11-24 13:37:49 இலங்கையில் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை மேற்கொள்வது தொடர்பில் ஆர்வமாகவுள்ளதாக ஜப்பான் நாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இங்கு வருகை தந்துள்ள ஜப்பான் முதலீ்ட்டாளர்கள் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீனை சந்தித்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளனர். நெல்லினை அரிசியாக மாற்றும் போது அதிலிருந்து வெளியாகும் உமியினை கொண்டு மீள் சக்தி உற்பத்தியினை செய்வது குறித்து தாங்கள் தமது கவனத்தை செலுத்தவுள்ளதாகவும்,அதன் மூலம் சூழலுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களையும் தடுக்க முடியும் என்றும் ஜப்பானிய தூதுக் குழுவினர் அமைச்சரிடத்தில் சுட்டிக்காட்டினர…
-
- 0 replies
- 322 views
-
-
தமிழீழத்தில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோண்டாவில் பகுதியில் மாவீரர் தினத்தை நினைவு கூறும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. யாழ்.கோண்டாவில் ஸ்ரேசன் வீதி, கோண்டாவில் சி.சி.தமிழ் கலவன் பாடசாலை, கோண்டாவில் டிப்போ பகுதகளிலேயே கடந்த புதன்கிழமை இரவு முதல் இவை ஒட்டப்பட்டுள்ளன. மஞ்சள் மற்றும் வெள்ளைநிறக் காதிதங்களில் “மாவீரர்கள் தம்மை உருக்கித் தமிழருக்கு ஒளிதந்த வீரர்கள்” என்ற வாசகத்துடன் மாவீரர் தினத்தை சித்தரிக்கும் வகையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், விடுதலைப் புலிகளின் புலிச் சின்னம் “மாவீரர் நாள் கார்த்திகை 27” என்று கார்த்தகைப் பூவின் படத்துடன…
-
- 0 replies
- 475 views
-
-
[size=5](நன்றி - நெருடல் இணையம்)[/size] [size=5]பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்![/size] இவ் விடயம் 22. 11. 2012, (வெள்ளி), தமிழீழ நேரம் 21:28க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள், புலத்தமிழர் செய்திகள் [size=2][size=4]கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தளபதி திரு.விநாயகம் அவர்கள் பிரான்ஸின் புறநகர்ப்பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகங்கள் சில பரபரப்பு செய்தி வெளியிட்டிருந்தன[/size][/size] [size=4]இவர் படுகொலை செய்யப்பட்ட தேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களின் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தார் என்ற காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகங்கள் பல தெரிவித்திருந்தன. கைது செய்யப்பட்ட இரண…
-
- 49 replies
- 3.6k views
-
-
காங்கிரஸ் கட்சியின் திருச்சி வேலுச்சாமி அவர்கள் எழுதியுள்ள ராஜீவ் படுகொலை -- தூக்குக்கயிற்றில் நிஜம் நூல் வெளியீட்டு விழா நேற்று 23.11.2012 மாலை 6 மணியளவில் சென்னை தியாகராயநகர் சர்.பி.டி தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு பிரபல நடிகர் இராஜ்கிரண் முன்னிலை வகித்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊடகவியலாளர் வெங்கட பிரகாசு தொகுத்து வழங்கினார். இந்நூலின் பதிப்பாளர் பேட்ரிசியா பதிப்பகத்தின் உரிமையாளர் ஆபிரகாம் செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார். புலவர் புலமைப்பித்தன் தலைமையுரையாற்ற பழ.நெடுமாறன் அவர்கள் நூலினை வெளியிட்டு உரையாற்ற தியாகி கோவிந்தராசு, ஈழத்துக்காந்தி டேவிட் அய்யா ஆகியோர் நூலினை பெற்றுக்கொண்டனர். தொடர்ந்து இயக்குநர் புகழேந்தி, ஓவ…
-
- 1 reply
- 594 views
-
-
[size=2] [size=4]தமிழ்மக்கள் தங்கள் வீடுகளிலும் கோயில்களிலும் மாவீரர் தினத்தைக் கொண்டாடி விடுவார்களோ என்ற அச்சத்தில் இராணுவம் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லக் காணிக்கு முன்பாகவுள்ள இராணுவமுகாமின் வேலி திடீரென முன்னகர்த்தப்பட்டுள்ளது. வீதியின் அருகோடு இராணுவத்தினர் வேலி அமைத்துள்ளதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size][/size] [size=2] [size=4]திடீரென நேற்றுமுன்தினம் இராணுவத்தினர் வீதி அருகோடு வேலியை முன்னகர்த்தியுள்ளதால் அந்தப் பகுதியில் அச்சநிலை உருவாகியுள்ளது. குறித்த இராணுவ முகாமுக்கு அருகில் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அமைந்துள்ள நிலையில், இராணுவத்தினர் வீதியின் அருகாக வேலி அமைத்துள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு அச்சத்துட…
-
- 0 replies
- 430 views
-
-
-
[size=3] [size=4]டிவிட்டர் எனப்படும் தகவற்பரிமாறியில் இடம்பெற்ற கருத்துப்பரிமாறல் சம்பந்தமாக (கனடாவில்)பிரம்டனில் உள்ள உயர்நிலைப் பாடசாலையொன்றின் மாணவர்கள் ஒன்பது பேரை பாடசாலைக்கு வர வேண்டாம் என்று அந்த உயர்நிலைக் பாடசாலையின் நிர்வாகம் கேட்டுள்ளது. அவர்களை பாடசாலையிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.[/size][/size][size=3] [size=4]பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் இந்த மாணவர்கள் ஆசிரியர்கள் குறித்து பாலியியல் ரீதியாக கருத்துக்களை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடதுபுறத்தில் இருக்கும் மாணவியும் இந்த நடவடிக்கையால் பாடசாலையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.[/siz…
-
- 8 replies
- 1.7k views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) வல்வெட்டித்துறை, தீருவில் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் நேற்றிரவு புலிக்கொடி ஒன்று பறக்கவிடப்பட்டிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தீருவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு கோபுரத்திலேயே இந்த புலிக்கொடி பறிக்கவிடப்பட்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த புலிக்கொடியை அவ்விடத்திலிருந்து அகற்றியதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். புலிக்கொடி பறக்கவிடப்பட்டிருந்த பகுதியில் விடுதலைப் புலிகளின் நினைவுத்தூபியொன்றே அமைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட நிலையிலேயே தனியார் தொலைக்தொடர்பு கோபுரம்…
-
- 2 replies
- 863 views
-
-
அரசாங்கம் அடுத்த ஆண்டில் 1303 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக்கொள்ளவுள்ளது 24 நவம்பர் 2012 அரசாங்கம் அடுத்த ஆண்டில் 1303 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை நிதி அமைச்சு மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடன் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச கடன் நிறுவனங்களுடன் கடன் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன் மற்றும் வட்டித் தொகைகளை செலுத்தவும், வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடு செய்யவும் அரசாங்கம் இவ…
-
- 0 replies
- 421 views
-
-
[size=5]பிரதம நீதியரசர் பதிலளித்துவிட்டார்?[/size] [size=4]குற்றப் பிரேரணை தொடர்பாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள 14 குற்றச்சாட்டுக்களுக்குமான பதிலை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பதில்களை நேற்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். இதன் பிரதிகள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு பரீசிலனை செய்யும் எனவும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு நாடாளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு விடுத்துள்ள நிலையிலேயே பிரதம நீதியரசர் சிராணி தம்மீத…
-
- 3 replies
- 467 views
-
-
[size=4]தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ இந்த நாட்டில் இரண்டாம்தரப் பிரஜைகள் அல்லர். பெரும்பான்மை இன மக்களைப் போன்று அவர்களும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கின்ற மக்களாக சமமாக நடத்தப்படவேண்டும். இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்' என மன்னார் மக்கள் பேரவையின் தலைவர் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். மக்கள் மத்தியில் புரிந்துணர்வையும் உறவையும் கட்டி எழுப்பும் நோக்கோடு தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த 12 பேர்கொண்ட மக்கள் பேரவை உறுப்பினர்கள் மன்னாருக்கு விஜயம் செய்திருந்தனர். இக்குழுவினர், நேற்று வியாழக்கிழமை மன்னார் ஆர்.பி.ஆர்.நி…
-
- 0 replies
- 397 views
-
-
27 ஆம் திகதி மக்கள் ஆலயங்களில் விசேட வழிபாடுகளை நடாத்தவும் மணி அடிப்பதற்கும் யாழ். மாவட்டத்தில் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்துள்ளார். யாழ். பொலிஸ் தலைமையகத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன் போது எதிர்வரும் 27 ஆம் திகதி இந்துக்களின் விழாவான காத்திகை விளக்கீடு கொண்டாடப்படவுள்ளது. எனினும் அன்றைய தினம் மாவீரர் நாளாக அமைகின்றது. அதனால் விளக்கீட்டினைக் கொண்டாடுதற்கு யாழ். மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதா ? என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளிக்கும் போதே பொலிஸ் மா மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 4 replies
- 472 views
-
-
சென்னை துப்பாக்கிச் சூட்டு வழக்கிலிருந்து பிரபாகரன் பெயர் நீக்கம்? 23 நவம்பர் 2012 சென்னை பாண்டிபஜார் துப்பாக்கி சூட்டு சம்பவ வழக்கில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, பிரபாகரனின் பெயரை நீக்கியுள்ளது. வழக்கில் தொடர்புடைய பிரபாகரன், சிவகுமார், நிரஞ்சன், ஜோதிஸ்வரன் பெயரை நீக்க மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் புலிகளின் தலைவர் பிரபாகரன், நிரஞ்சன் ஆகியோர் இறந்துவிட்டதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜோதிஸ்வரன் ஹொங்கொங்கில் நிரந்தரமாக குடியேறிவிட்டதாகவும், சிவகுமார் இருக்…
-
- 4 replies
- 886 views
-
-
[size=2] [size=4]இஸ்ரேலுக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பினனர்; காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.[/size][/size][size=2] [size=4][/size] [/size][size=2] [size=4]பலஸ்தீன - இஸ்ரேலுக்கு இடையில் இடம்;பெற்ற போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.[/size][/size] [size=2] [size=4][/size][/size][size=2] [size=4][/size][/size][size=2] [size=4][/size][/size][size=2] [size=4][/size][/size] http://www.…
-
- 3 replies
- 516 views
-
-
யாராவது ஏற்கவே இணைத்திருப்பின் நீக்கி விடுக. ------------------------- [டெசோ தீர்மானங்களின் நகலை ஐ.நா. சபையில் கொடுத்து விட்டுத் திரும்பியுள்ள ஸ்டாலினுக்கும் டி.ஆர். பாலுவுக்கும் தி.மு.க. தரப்பில் வழங்கப்படுகிற பிரமாண்டமான வரவேற்புகள், பாராட்டுகளைக் காணும்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையே தீர்ந்து விட்டது போன்ற உணர்வு, பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். சும்மா மனு கொடுத்து விட்டுத் திரும்பியது ஒரு சாதனையா என்று அற்பத்தனமாகக் கேள்வி கேட்காமல், இந்த வெற்றி(!) குறித்து தி.மு.க. தலைவர்கள் எப்படி மகிழ்ந்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்த்து, அந்த ஆனந்த ஜோதியில் நாமும் இணைந்து கொள்வோமாக.] துரைமுருகன்: ஸ்டாலினையும் பாலுவையும் ஐ.நா. சபைக்கு அனுப்ப கலைஞர் முடிவு பண்…
-
- 7 replies
- 890 views
-