ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143428 topics in this forum
-
[size=4]By General 2012-11-20 12:44:17[/size] [size=4]அம்பாறை காமினி கல்லூரியின் மாணவர்கள் 30 பேர் ஒவ்வாமை காரணமாக இன்று காலை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு இடங்களில் கடந்த நாட்களாக பல பாடசாலைகளின் மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]http://www.virakesar...al.php?vid=1723[/size] [size=5]ஒவ்வாமையால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்[/size] [size=4]By V.Priyatharshan 2012-11-20 12:11:18[/size] [size=4]ஒவ்வாமை காரணமாக 20 மாணவர்கள் பலாங்கொடை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கபட்டுள்ளனர். பலாங்கொடை உடகம …
-
- 1 reply
- 434 views
-
-
UN 'failed Sri Lanka civilians', says internal probe By Lyse Doucet Chief International Correspondent, BBC News Hundreds of thousands of Tamils ended up trapped in a tiny strip of land Continue reading the main story Related Stories Q&A: Post-war Sri Lanka Satellite imagery of 'safe zone' In pictures: War-ravaged Sri Lanka The United Nations failed in its mandate to protect civilians in the last months of Sri Lanka's bloody civil war, a leaked draft of a highly critical internal UN report says. "Events in Sri Lanka mark a grave failure of the UN," it concludes. The government and Tamil rebels are accused of war crimes in the br…
-
- 83 replies
- 5.9k views
- 1 follower
-
-
[size=2] [size=4] "அரசியல்வாதிகளின் செயற்பாட்டால் நாடு அழிவின் விளிம்பை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை நீடித்தால், சிங்கள பௌத்தர்களும் காடுகளில் வாழவேண்டிய, வீதிகளில் சாகவேண்டிய அபாயநிலை தோன்றக்கூடும்'' என்று எச்சரிக்கிறார் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரர்.[/size][/size] [size=2] [size=4]இந்த அபாய நிலையிலிருந்து நாட்டையும், சிங்கள, பௌத்த மக்களையும் பாதுகாக்கப் பௌத்த குருமார்கள் ஒழுக்கமாக நடந்து, பௌத்த மதத்தின் புகழைப் பரப்பவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.[/size][/size] [size=2] [size=4]மாத்தளையில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size][/size] [size=2] [size=…
-
- 3 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் மழைக்கு பின்னர் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் மக்களிடையே பரவியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாக தலையிடி, வாந்தி, உடல் நோவு காணப்படுகின்றன. இந்தக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் இங்குள்ள மருத்துவ மனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துக் காணப்படுவதாக கிளிநொச்சி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த இடங்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அதிகளவில் சென்று வருவதன் காரணமாக டெங்கு பரவக் கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். கடந்த ஒரு மா…
-
- 0 replies
- 297 views
-
-
இலங்கை - சுரிநாம் நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவு ஆரம்பம் இலங்கை மற்றும் சுரிநாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்தது. இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்த வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான சுரிநாமின் நிரந்த வதிவிட பிரதிநிதி ஹென்றி ஆகியோர் கைச்சாத்திட்டனர். இதன் ஊடாக அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளப்படவு…
-
- 0 replies
- 404 views
-
-
வடமாகாண தேர்தலுக்கு முன் 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தப்படுவதற்கு முன்னதாக 13ம் திருத்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படலாம் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதமளவில் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள நாட்டம் காட்டப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்து, 19ம் திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வினை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 346 views
-
-
குடாநாட்டில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் எல்லை கடந்து செல்கின்றது - மருத்துவ வட்டாரம் எச்சரிக்கை 20 நவம்பர் 2012 குளோபல்தமிழ்ச்செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் தொடரும் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகம் கட்டுப்பாடு அற்று எல்லை கடந்து சென்று கொண்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.கடந்த தீபாவளியன்று மட்டும் ஒரே பாணியினில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.காதல் வசப்படுத்தப்படுத்தப்பட்டு இச்சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.பாதிக்கப்பட்ட பெரும்பாலான சிறுமிகள் 15 முதல் 17 வயதிற்கிடைப்பட்டதாகவேயுள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 392 views
-
-
[size=4]பிரபாகரனின் மகனை படுகொலை செய்வதற்கான தேவை எமக்கு இருக்கவில்லை. அவரை நாம் கொல்லவும் இல்லை. ஆனால் அவர் மோதல்களின் போது கொல்லப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர் டிலான் பெரேரா இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிள்ளையான் எந்த அடிப்படையில் ஜனாதிபதியின் ஆலோசகரானார் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அவர் அவ்வாறான பதவியை வகிப்பதற்கு சகல தகுதிகளையும் பெற்றிருக்கிறார் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். 'கே.பி. குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் கருத்துக்கள் அனைத்தும் அவரை ஏன் கொலை செய்யவில்லை என்றே அமைந்திருக்கின்றன. …
-
- 2 replies
- 921 views
-
-
[size=4]ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளமை முற்றிலும் தவறாகும் என இலங்கை ஐ.நா.விடம் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டுள்ளது.[/size] [size=4]இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார்.[/size] [size=4]இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைக ளின் போது ஐக்கிய நாடுகள் சபையின் உள்விவகாரச் செயற்பாடுகளில் நிலவியதாக அவ்வறிக்கையில் கருதப்படும் குறைபாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங…
-
- 2 replies
- 1.2k views
-
-
[size=4]By General 2012-11-19 22:24:12[/size] [size=4]ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 நாடுகளின் தூதர்களை சந்தித்து டெசோ மாநாட்டு தீர்மானம் குறித்து வலியுறுத்த திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இடம்பெற்ற டெசோ கலந்துரையாடலில் தீர்மானிக்கபட்டுள்ளது. டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று (19.11.2012) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதில் ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆ…
-
- 8 replies
- 770 views
-
-
[size=4]இலங்கைப் பிரச்னை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறினார். டெசோ உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.[/size] [size=4]திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: [/size] [size=4]"இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தவும், எதிர்காலத்தை ஒளியமயமாக்கவும் டெசோ மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தீர்மானங்கள் ஐ.நா. மன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. தீர்மானங்கள் தொடர்பாக ஐ.நா. உரிய நடவடிக்கை எடுக்கும் எனும் நம்பி…
-
- 1 reply
- 592 views
-
-
[size=2] [size=4]இனப்படுகொலையின் இன்னொரு அத்தியாயம்: ஐ.நா.வின் துரோகம்! :- மனுஷ்யபுத்திரன்[/size][/size][size=2] [size=4][ திங்கட்கிழமை, 19 நவம்பர் 2012, 10:46.00 PM GMT ][/size][/size][size=2] [size=4][/size][size=4]உலகில் இதுவரை நடந்த பெரும்பாலான இனப்படுகொலைகள் ரகசியமாக நிகழ்த்தப்பட்டு பின்னர் உலகத்தின் பார்வைக்கு தெரிய வந்து பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படப்போகிறார்கள் என்று வெளிப்படையாகத் தெரிந்தும் எல்லோரும் தங்கள் கண்களை இறுக மூடிக்கொண்டார்கள்.[/size][/size][size=2] [size=4]சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கை அரசின் இந்த இனப் படுகொலையை மிக வெளிப்படையாக ஆதரித்து நின்றன என்றால் இந்திய அரசாங்…
-
- 0 replies
- 1k views
-
-
நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை; விவாதிக்க தடை விதிக்குமாறு நீதிமன்றில் வழக்கு தாக்கல் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் விவாதிக்க தடைவிதித்து கட்டளை பிறப்பிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்றைய தினம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்திரா ஜயரத்ன என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவின் பிரதிவாதியாக குற்றப் பிரேரணையை விசாரிக்க குறிப்பிடப்பட்ட தெரிவுக் குழு பெயரிடப்பட்டுள்ளது. குறித்த குற்றப் பிரேரணையை விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. குறித்த மனு மேல்ம…
-
- 1 reply
- 650 views
-
-
கேணல் பரிதி படுகொலை விவகாரம்: இரண்டு சந்தேக நபர்கள் கைது! விசாரணை திருப்பம்! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 13, 2012 AT 08:27 பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பரிதி என்னும் நடராஜா மதீந்திரன் அவர்களின் படுகொலையை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையின் குற்றவியற் பிரிவினர் இப்படுகொலை தொடர்பாக 33 வயதுடைய சிறீலங்காப் பிரஜை ஒருவரைக் கைது செய்துள்ளதாகக் காவற்துறையினரின் தகவலை மேற்கோள் காட்டி Le Parisien செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இவர் மீதான விசராணை மூலம் மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் தமது பிரத்தியேகத் தொடர்பின் தகவல் மூலம் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியான பிரான்ஸ்-தமிழர் ஓருங…
-
- 27 replies
- 4.1k views
-
-
[size=4][/size] [size=4]By J.Stephan 2012-11-19 17:59:13[/size] [size=4]நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற தனி நபருடைய செலவுக்காக ரூபா 740 கோடி ரூபா வரவு - செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளமையானது எவ்வாறு நியாயமாகும் என ஜனநாயக தேசிய முன்னணியின் எம்.பி. விஜித ஹேரத் இன்று திங்கட்கிழமை கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத் எம்.பி. இதனைத் தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரத்தை உருவாக்கிய ஐக்கிய தேசிய கட்சி இன்று அதனை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இம்ம…
-
- 3 replies
- 561 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸில் கைது : 17 நவம்பர் 2012 விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான விநாயகம் பிரான்ஸ் காவற்துறையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பிரான்ஸ் வலையமைப்பின் தலைவரான ரீகன் என அழைக்கப்படும் பரிதியின் கொலை தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் பாரீஸ் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள புலிகளின் வலையமைப்பில் விநாயகம் அணியினர் பலம் பொருந்திய அணியாக கருதப்படுகிறது. விநாயகம் 2009 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்கு சென்றதுடன் அங்கு புலிகளின் வலையமைப்புக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். அதேவேளை கொலை செய்யப்பட்ட பரிதி நெடியவன் அணியின் முக்கிஸ்தர் …
-
- 100 replies
- 6.9k views
-
-
சிறைச்சாலைகளில் உள்ள ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் சிறைச்சாலைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள ஆயுதங்களை பாதுகாப்பு அமைச்சிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு சொந்தமாகக் காணப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும், பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி ரி 56 ரக துப்பாக்கிகள் அனைத்தும் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கடந்த 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. க…
-
- 1 reply
- 460 views
-
-
இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர் 15 நவம்பர் 2012 இராணுவத்தில் தமிழ் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை இராணுவத்தில் சுமார் 100 தமிழ் பெண்கள் உள்ளீர்க்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி பாரதிபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இவ்வாறு பெண்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர். இலங்கை மகளிர் இராணுவத்தின் தன்னார்வ படைப்பிரிவில் இந்தப் பெண்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பகட்ட பயிற்சிகளின் பின்னர் குறித்த தமிழ் பெண்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடமையில் அமர்த்தப்பட உள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழ் யுவதிகளே இவ்வாறு இராணுவத்தில் உள்ளீ…
-
- 26 replies
- 3.6k views
-
-
ஐ.நா மனித உரிமை பேரவையில் இருந்து இலங்கையின் நட்பு நாடுகள் நீக்கம்! [sunday, 2012-11-18 20:36:34] ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் நட்பு நாடுகள் சுழற்சி முறையில் நீக்கப்பட்டுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு புதிதாக 18 உறுப்பு நாடுகளைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில், அதிகப்படியான வாக்குகளுடன் அமெரிக்கா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, ஜேர்மனி, அயர்லாந்து, ஆஜென்ரீனா, பிறேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜப்பான், கசாகிஸ்தான், கென்யா, மொன்ரனிக்ரோ, பாகிஸ்தான், தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய நாடுகளும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்குத் தெரிவாகியுள்ளன. இலங்க…
-
- 3 replies
- 2.4k views
-
-
குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு புதிய முகாம்களை அமைப்பது அம்பலம் 19 நவம்பர் 2012 குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்.குடாநாட்டில் படைக்குறைப்பினை மேற்கொள்வதாக கூறும் பாதுகாப்பு தரப்பு மறுபுறத்தே சத்தமின்றி தீவகப்பகுதிகளினில் படைகளை குவித்து வருகின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.யாழ்.குடாநாட்டில் சுமார் 40 ஆயிரம் வரையிலான படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்ற போதும் அரச தரப்போ வெறுமனே 15 ஆயிரம் படையினரே நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது.யாழ்ப்பாணத்தல் படைக்குறைப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் பொய்பிரச்சாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மகி…
-
- 1 reply
- 431 views
-
-
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ? டெசோ மீண்டும் நாளை கூடுகிறது திராவிட முன்னேற்ற கழகத்தின் டெசோ அமைப்பின் பிறிதொரு கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம், 12 ம் திகதியளவில் ‘டெசோ’ மாநாடு நடந்தது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மனுவுடன் அண்மையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையிலான் குழு ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளிடம் கையளித்தது. நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை துணை பொதுச்செயலர், ஜெனீவாவில் உள்ள மனித உரிமை ஆணையக தலைவர் ஆகியோரிடம், டெசோ தீர்மானங்கள் கையளிக்கப்பட்டிருந்தன. அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், போராட்டங்கள் குறித்து விவாதிக்கவும், டெசோ கலந்துரையாடல் க…
-
- 1 reply
- 720 views
-
-
எங்கள் ஜனாதிபதிக்கு மாகாத்மா காந்தியின் குணவியல்புகள் உள்ளன - டக்ளஸ் 17 நவம்பர் 2012 எங்கள் ஜனாதிபதி மாகாத்மா காந்தி போன்று இல்லாவிடினும் அவருக்கு மகாத்மா காந்தியின் குணவியல்புகள் இருப்பதாக கூறியுள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டப்பட்டு 22 வருட பூர்த்தியை முன்னிட்டு சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் எற்பாடு செய்திருந்த நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.அங்கு பேசிய ராவய வார இதழ் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் மகாத்மா காந்தியைப்போல் ஒரு தலைமைத்துவம் இங்கு இல்லாமை காரணமாக இலங்கையில் இனங்களுக்கிடையிலான ஐக்கியம் பேணப்படாது போயி;விட்டது என குறிப்பிட்டிருந்தார். அ…
-
- 11 replies
- 774 views
-
-
‘நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!’ ஒரு முன்னாள் பெண்புலியின் வாக்குமூலம் என்று ஒரு நேர்காணலை வெளியிட்டிருந்தது தமிழகத்தின் பிரபல வெகுசன வார இதழான ஆனந்தவிகடன். அந்த நேர்காணலை ஒரு புனைவு என்றும் அது ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பெண் போராளிகளை கொச்சைப்படுத்துகிறது என்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்தன. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தின் இரண்டு முன்னாள் பெண்போராளிகள் தமது எதிர்ப்பை குளோபல் தமிழ் செய்திகள் ஊடாக தெரிவிக்கின்றனர். வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்! ஆண்டுகள் இத்தனை கடந்தும் ஆறாத நினைவுகளால் வெந்துகொண்டிருக்கும் உள்ளங்களில் வேல்பாய்ச்சும் விகடனின் வேலையை நினைத்தால் மிகுந்த வேதனையாய் இருக்கிறது. பெண…
-
- 3 replies
- 1.1k views
-
-
[size=5]“நேசம் ஒன்லைன் கல்விச்சேவை” அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறலாம்.[/size] நேசக்கரம் முன்னெடுக்கும் திட்டங்களில் எமது மாணவர்களின் கல்வியை முன்னேற்றும் வகையிலான திட்டங்களை செயற்படுத்தி வருகிறோம். தற்போது கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் கிழக்குமாகாணத்தில் 8ஆயிரம் மாணவர்களுக்கானதும் வடமராட்சி கிழக்கில் 150 வரையான மாணவர்களுக்குமான முன்னோடி பயிற்சிகளை நடாத்திக் கொண்டிக்கிறோம். ஓவ்வொரு பாடங்களுக்குமான வினாவிடை மற்றும் இலகுவான குறிப்புகள் அடங்கிய பிரதிகளைத் தயாரித்துள்ளோம். அதிகமான இடங்களில் தனியார் கல்விநிலையங்கள் சென்று படிக்க முடியாத அல்லது மின்சார வசதிகள் அற்ற இடங்களைச் சேர்ந்த மாணவர்களை மாலை நேரங்களில் பாடசாலைகளிலும் குறித்த சில இடங்களிலும் அழைத்…
-
- 1 reply
- 519 views
-
-
யாழ்ப்பாணத்தில் உச்சிதனை முகர்ந்தால் படத்திற்கு தடை - எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்: [Monday, 2012-11-19 10:37:23] தமிழகத்தின் தொலைக்காட்சி ஒன்று நேற்று உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை ஒளிபரப்பியது இதனை யாழ்ப்பாணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையினர் தடைசெய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள். நேற்று உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் ஒளிபரப்பட்ட நேரத்தில் யாழ்ப்பாணத்தில் கேபிள் தொலைக்காட்சி சேவையை வழங்கும் 'ஆஸ்க் நெற்வேக்' நிறுவனம் தடை செய்து 'நாடோடி' படத்தை ஒளிபரப்புச் செய்தது. ஈழத்தமிழர்களை மையப்படுத்தி 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படம் தயாரிக்கப்பட்டு அண்மையில் வெளிவந்தது. இந்தப் படத்தைதமிழகத்தில் இருந்து ஒளிபரப்பும் முதன்தை தொலைக்காட்சி நிறு…
-
- 0 replies
- 521 views
-