Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மயிலிட்டியிலுள்ள ஆயுதக் கிடங்கு வெடித்தால் நிலைமை என்னாகும்?கேட்கிறார் முதல்வர் சி.வி கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய் போய்விடும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ முகாம் தொடர்பாக இராணுவ அதிகாரிகளுடன் பேசியிருக்கின்றேன். …

    • 3 replies
    • 438 views
  2. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த உயரதிகாரிகள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  3. 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் பாதிப்பு இலங்கையை சமீபத்தில் தாக்கிய திட்வா புயல் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் 600க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகளை அழித்து, பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்க வைத்துள்ளதாக மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்ட மக்களுடன் உரையாடலை மேற்கொண்ட போது இவ் விடயம் தெரியவந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இறால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் உதவும் என்று அமைச்சர் உறுதியளித்தார். "சமீபத்திய பேரழிவால் பாதிக்கப்பட்ட எவரையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம்"என்று அவர் கூறினார். மேலும்,கடல் அரிப்பு இறால் வளர்ப்பையும் பாதித்துள்ளதாக தெரிய வந்தது.கடல் அரிப்பை தடு…

  4. இலங்கையில் தமிழர்கள் படுகொலை - நிறுத்தக் கோரி தமிழகத்தில் நாளை மாணவர்களும் ஆர்பரித்து எழுகின்றனர்: BJP ஆளுனரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது: இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை (புதன்கிழமை) வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தமிழ்மாநில செயலாளர் ஆர்.திருமலை நேற்று (ஓக்13) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா இலங்கைக்கு ராணுவ உதவி அளித்திருப்பது தற்போது அம்பலமாகிவிட்டது. இந்திய இராணுவத்தைச் சேர்ந்த 256 என்ஜி…

  5. போர்க்குற்றம்சாட்டப்பட்ட சவீந்திர சில்வாவை பிரதி தூதுவராக ஏற்குமா தென்னாபிரிக்கா? சிறீலங்கா | ADMIN | NOVEMBER 6, 2012 AT 22:33 சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் தென்னாபிரிக்கா, போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவரைத் பிரதித் தூதுவராக ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாபிரிக்காவுக்கான பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்தவர் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இந்தப் போரில் பொதுமக்களின் இலக்குகள் மீது நடத்தப்பட்ட தாக்குத…

    • 2 replies
    • 516 views
  6. ஈழத்தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்ளுக்காகக் காலங்காலமாக "கவலை" தெரிவித்துக்கொண்டிருப்பவர்

  7. பரிதி கொல்லப்பட்டதால் பிரான்சில் உள்ள புலிகளது தளபதிகள் மூவர், பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை! [sunday, 2012-11-11 08:26:11] விடுதலைப்புலிகள் இயக்கத் தளபதி பரிதி பாரிஸில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து, பிரான்சில் உள்ள விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்த தளபதிகள் மூவர் பொலிஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக, பிரான்ஸ் பொலிஸ் தெரிவித்துள்ளது.கொல்லப்பட்ட தளபதி பரிதியும், விடுதலைப் புலிகள் நெடியவன் அணியைச் சேர்ந்தவர். பரிதி கொலை விசாரணை பிரான்ஸ் பொலிஸ் (police nationale) பிரிவிடமிருந்து DCRI பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. DCRI (Direction Centrale du Renseignement Int�rieur) பிரான்சின் உள்ளக புலனாய்வுப் பிரிவு.DCRI பிரிவு தகவல் தொடர்பாளர் A…

  8. மன்னார் மடு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனாந்திரப் பகுதி அழிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த மக்கள் குடியமர்த்தப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் யுத்தம் மற்றும் வெள்ளப் பாதிப்பு காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களே இவ்வாறு குடியமர்த்தப்படுவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு 80 பேர்ச்சஸ் வீதம் 300 குடும்பங்கள் இங்கு குடியமர்த்தப்படவுள்ளன. மீளக்குடியமர்த்துவதற்காக தாம் வேறு காணிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்த போதும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் பலவந்தமாக தம்மை குறித்த பிரதேசத்தில் குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், குறித்த மக்களுக்கு வழங்க வேறிடங்களில் காணி இல்ல…

    • 0 replies
    • 271 views
  9. பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு விடுதலை புலிகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை - ஜி.கே.மணி விடுதலை புலிகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்னையில் மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பாமகவின் மாணவர் அமைப்பான தமிழக மாணவர் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடந்தது. கட்சியின் தலைவர் ஜி.கே.மணி துவக்கி வைத்தார். மன்றோ சிலை முன்பு கிளம்பி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை பேரணி அடைந்தது. பின்னர் மணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் எங்கள் மாணவர் அணி பேரணி நடத்தும். வகுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாலை 4.30 மணிக்கு மேல் இது நடத்தப்படும். இலங்கை பிரச்னை இன்னொரு…

  10. [size=2][size=4]8 ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய 'பான்பரக்' எனும் போதைகலந்த பாக்குகள் அடங்கிய 8 கன்டேனர்களை பேலியகொடை பிரதேசத்தில் வைத்து இலங்கை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 500 மில்லியன் ரூபா பெறுமதியான மேற்படி போதைப் பாக்குகள், பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் போலி நிறுவனமொன்றில் பெயர் குறிப்பிட்டே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[/size][/size] [size=2][size=4]http://tamil.dailymi...5-500-----.html[/size][/size]

  11.  'மக்களது கருத்துக்களைக் கொண்டே புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும்' பெறப்பட்டுள்ள மக்களது கருத்துக்களைக் கவனத்திற் கொண்டு எதிர்காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். காலி வித்தியாலோக மகா பிரிவெனாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே அன்றி அதற்குப் புறம்பான எந்தவொரு நடவடிக்கையினையும் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாரில்லை. புதிய அரசியலமைப்பைத் தயாரிப…

  12. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் கடந்த திங்கட்கிழமை 11 ஆம் திகதியிலிருந்து ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டு யாழ்ப்பாணம் மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்ப ஆரம்பித்துள்ளது. இருந்தும் மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை மதுபானக் கடைகள் திறப்பதற்கான அனுமதி இன்று காலை 11 மணியிலிருந்து வழங்கப்பட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து மதுபானசாலைகளுக்கும் குடி மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். இதன் காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட எந்தவிதமான சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படாது, சமூக இடைவெளியும் சீர்குலைந்து காணப்பட்டது. ஓரிரு மத…

    • 0 replies
    • 597 views
  13. அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து புலிகள் தாக்குதல்: ஒருவர் பலி [திங்கட்கிழமை, 27 ஒக்ரோபர் 2008, 07:38 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் வழிமறித்து நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் ஊடுருவல் நடவடிக்கையினை மேற்கொண்ட சிறப்பு அதிரடிப்படையினரை இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்குதல் நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் …

    • 0 replies
    • 559 views
  14. “ஆ.. மாடியில இருந்து குதிச்சி செத்து நாசாமா போ..” மடிக்கணனிக்கு முன்னால இருந்து ஆழமாகப் பேஸ்புக் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவன் எழும்பி ஓடிப்போய் 2 ஆவது மாடியில இருந்து கீழே குதிக்கிறான். அந்த விடுதியெங்கும் பரபரப்புப் பரவுகிறது. அனைவரும் அவசரமாகின்றனர். அவசர வாகனம் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து அவனுடலை அள்ளிப் போகிறது. அவனின் தற்கொலைக்கான காரணத் தேடலை நண்பர் – போராசிரியர் குழாம் தீவிரப்படுத்துகின்றது. பேஸ்புக், டுவீற்றர், இங்ஸ்ரோக்ராம், ஜீமெயில் என எதிலும் அதற்கான தேடல் முடிவு வெற்றியளிக்கவில்லை. மாடியில் இருந்து குதித்தவனின் அறையில் வசித்த நண்பன் அவனின் கைத்தொலைபேசியைக் கவனித்தான். 97 மிஸ்ட் கோல்!. 43 எஸ்எம்எஸ்!. அவனின் பார்வைபடாமல் இருந்திருக்கின்றது. அல…

    • 0 replies
    • 386 views
  15. மூதூரில் இருந்து இடம்பெயர்ந்தோர் சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் வீரகேசரி இணையம் 11/2/2008 9:57:34 AM - மூதூர் பிரதேச செயலக பிரிவில் இருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பில் தங்கியிருந்த மக்களில் ஒரு தொகுதியினர் கடந்த வியாழக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 61 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேர் வெருகல் ஊடாக அவர்களது சொந்த இடங்களில் இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

  16. தாதியர் விடுதி Jan 27, 2026 - 06:13 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான வைத்தியசாலைகளில் ஒன்றான மாங்குளம் ஆதாரவைத்திய சாலையில் புனரமைக்கப்பட்ட தாதியர் விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டி தரிப்பிடம் மற்றும் சாரதி ஓய்வு அறை என்பன வடமாகாண ஆளுநரால் இன்று (27) காலை திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், மாங்குளம் ஆதார வைத்தியசாலை வைத்தியர் விடுதி, தாதியர் விடுதி, துணை வைத்திய ஆளணியினர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முத…

  17. அட... என பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சமீபத்தில் ரஜினி பற்றி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்து வரும் பேட்டிகள். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும், நடிகர் ரஜினிக்கு இருக்கும் மன உறுதியும் தைரியமும் கூட கருணாநிதிக்குக் கிடையாது எனவும் சமீபத்தில் கூறியிருந்தார் ராமதாஸ். மேலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் குறித்தும் எந்த எதிர்மறைக் கருத்தும் ராமதாஸ் தெரிவிக்கவில்லை. ரஜினியின் நேர் எதிரியாகக் கருதப்பட்டு வந்த ராமதாஸ் மற்றும் அவரது மகனும் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ஆகியோர் திடீரென ரஜினியைப் பாராட்டத் துவங்கியிருப்பது ஏன்... …

  18. இலங்கையில் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற பிள்ளையார் சுழி போட்டது, கடந்த அக்டோபர் 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான். அதனைத் தொடர்ந்துதான் தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மத்திய அரசை மிரட்டும் வகையில் தமிழக எம்.பி.க்களின் ராஜினாமா தீர்மானத்தை நிறைவேற்றியது. பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை திருப்தியளிப்பதாக இருக்கிறது என்று கருணாநிதி அறிவித்துவிட்டார். இந்நிலையில், ஈழத் தமிழர்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அதன் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இத…

  19. கிளிநொச்சியில் இறுதியாக ஐ.நா அதிகாரியாகப் பணியாற்றிய பென்ஜமின் டிக்ஸ், Reflections of the rippling effects of conflict on a Sri Lankan family என்ற பெயரில், சிறிலங்கா போரின் தாக்கங்களை வெளிப்படுத்தும் ஓவிய நாவல் ஒன்றை வெளியிடவுள்ளார். அதுபற்றிய அவரது குறிப்பு. 2008 செப்ரெம்பர் 12ம் நாள், விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைமையகமான கிளிநொச்சியில் இருந்து நாம் வெளியேற வேண்டும் என்று நான் கேட்கப்பட்டிருந்தேன். சிறிலங்கா இராணுவம் தெற்கே சில கி.மீ தொலைவில் இருந்து, ஏற்கனவே நகரின் மீது எறிகணைகளை வீசிய போது, ஐ.நா வளாகமும் தாக்கப்பட்டது. எனது ஐ.நா பணியகத்தில் இருந்து ஒரு கி.மீ தொலைவில் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலின் போது, குண்டுச்சிதறல்கள் எமது முற்றத்தில்…

  20. வீடுபுகுந்து தாக்குதல்; நால்வர் கைது! யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 6ம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் (04) இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று (05) காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார். வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வி…

  21. யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் 21 February 2026 ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரி யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர் இராமச்சந்திரன் எங்கே ? அரசே பதில் சொல் , ஊடகவியலாளர் இராமச்சந்திரன் கடத்தப்பட்டு 19 ஆண்டுகள் , நீதி எங்கே ? என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய வாறும் கோஷங்களை எழுப்பியுமே அவர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் மூத்த ஊடகவியலாளருமான மு.…

  22. இலங்கை அருகே நடுகடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி கைது செய்துள்ள இலங்கை கடற்படை அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாம்பட்டினத்தைச் சேர்ந்த 26 மீனவர்கள் 7 படகுகளில் நேற்று காலை மீன்பிடிக்க சென்றார்கள். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை அங்கு வந்ததாக கூறப்படுகிறது. தமிழக மீனவர்கள் இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் வந்திருப்பதாக கூறி அவர்கள் அனைவரையும் சிறை பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களின் …

  23. சம்பந்தனுக்கு கோடிகள் வழங்கப்பட்டதா? அல்லது, கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதா? - Article [saturday, 2012-12-08 12:08:14] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா, சம்பந்தன் அரசிலில் அந்தர் பல்டி அடிப்பதில் கில்லாடி என்பதும், தனக்கான தேவைக்காக எதையும் கைவிடக் கூடியவர் என்பது அனைவரும் புரிந்தே வைத்துள்ளார்கள். வடக்கு - கிழக்கு என்ற பிரிவு வாதம் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள இன்றைய காலப் பகுதியில் கிழக்குடன் நெருக்கமான உறவுகளைத் தக்க வைத்துக்கொள்வது என்பது வடக்கிற்கு மிகப் பெரும் சவாலான விடயம். கருணாவினால் தூண்டப்பட்ட பிரதேசவாதம் எந்த அளவிற்குத் தமிழின அழிப்பிற்குத் துணையாக இருந்தது என்பதும், அதை நம்பிய கிழக்கு மக்கள் கிழக்கில் தம்மைத் தாமே ஆளும் மாகாண உரிமையை இழந்த வரலாறும் …

  24. உலக சமாதான சுட்டியில் 77ம் இடம் இலங்கைக்கு 2020ம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை 77வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த சுட்டியில் இலங்கை 72வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், இம்முறை இலங்கை 5 இடங்கள் பின்தள்ளப்பட்டுள்ளது. இம்முறையும் உலகின் அமைதியான நாடாக ஐஸ்லாந்து தெரிவாகியுள்ளது. உலக சமாதான சுட்டியில் முதல் 10 இடங்களில் நியூசிலாந்து, போர்த்துக்கல், அவுஸ்திரேலியா, டென்மார்க், கனடா, சிங்கப்பூர், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் தெற்காசிய நாடுகளில் இந்தியாவுக்கு 139வது இடம் கிடைத்துள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா 2 இடங்கள் முன்னேறியுள்ளன. h…

  25. கிளிநொச்சியில் நேற்று இலங்கையின் தேசியக்கொடியை ஏற்றுவது என அரசாங்கம் வகுத்திருந்த திட்டம் பயனற்று போனதாக "ட்ரான்ஸ்கரன்ட்" இணையத்தளம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த 25 ஆம் திகதி முதல் கிளிநொச்சியில் இருந்து தமது படைக்களங்களை பின்னோக்கி நகர்த்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனவே அதற்கு அமைய படையினரும் தமது நகர்வை கிளிநொச்சி நகரை நோக்கி மேற்கொள்வது என திட்டமிடப்பட்டது. எனினும் கடும் மழை வெள்ளம் இந்த திட்டத்தை பாதித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. படையினர் நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் உரையை நிகழ்த்துவதற்கு முன்னர் கிளிநொச்சிக்கு பிரவேசிப்பதும் அங்கு தேசியக்கொடியை ஏற்றியபின்னர் மஹிந்த நாட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.