Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கில் தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம்? 12 செப்டம்பர் 2012 கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆதரவை பெறுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலை காணப்படுகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தால் மட்டுமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கில் மாகாண அரசை அமைக்க முடியும். ஆனால்,அரசுடன் சேர்வதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்குள் ஒரு சாரார் க…

  2. இறுதிக் கட்ட போர்ப் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்; நிலத்தில் புதைத்து வைத்த பொருள்களை எடுப்பதற்காக இறுதிக்கட்டப் போர் நடந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள் தாம் இடம் பெயர்ந்து சென்றபோது நிலத்தின் கீழ் புதைத்து வைத்த பொருள்களைத் தேடியெடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. இறுதிக் கட்டப்போர் நடந்தபோது இங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தமது வீட்டுப் பாவனைப் பொருள்களை நிலத்தின் கீழ் புதைத்து விட்டுச் சென்றனர். தற்போது இந்தப் பகுதிகளில் மீள்குடியமர்வு இடம்பெற்ற நிலையில் மீள்குடியமர்ந்த மக்கள் அவற்றைத் தோண்டி எடுப்பதில் மும்முரமாக ஈடுபடுவதைக் காண முடிகின்றது. அம்பலவன்பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம் ஆகி…

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்களார்கள் மீது பிள்ளையான் குழுவினர் தாக்குதல் நடாத்தியள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஆயுதக்குழுவினர் தமிழ தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களை தாக்கியுள்ளதாக ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை காவல்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். நேற்று இரவு (10-09-2012) ஏறாவூர் காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குடியிருப்பு கிழக்கு பகுதியில் வேன் ஒன்றில் சென்ற பிள்ளையான் குழுவினர் இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்தியதாக ஏறாவூர் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, வாழைச்சேனை பேத்தாழையில், ஓலை வீடு ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்ப…

  4. Douglas ready to face Chennai murder trial through ‘videoconferencing’ Minister Douglas Devananda, wanted in connection with a murder case in Chennai and who was declared as a proclaimed offender in 1994, has approached a sessions court in Chennai saying he was ready to face the murder trial through video-conferencing. He wanted the court to recall the non-bailable arrest warrant pending against him, and to dispense with his personal appearance in court. Douglas Devananda and his men are charged with the murder of one Thirunavukkarasu at Choolaimedu in Chennai, in 1986. According to the city police, the then Eelam People’s Revolutionary Liberation …

  5. தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் - தென் ஆபிரிக்கா. 12 செப்டம்பர் 2012 தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென தென் ஆபிரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு தென் ஆபிரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு சர்வதேச விவகார அமைச்சு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணைகள் உள்நாட்டு ரீதியில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே தென் ஆபிரிக்காவின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் நம்பகத்தன்மையுடையதாக அமைய வேண்டியது மிகவும் அவசியமானது என தென் ஆபிரிக்காவின் சர்வதேச விவகார ப…

  6. [size=4]யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களை சுயமாக முயற்சிக்க தூண்டாது, பணத்தை அனுப்பி சீரழித்தது புலம் பெயர் சமுதாயம் இழைத்த பாரிய தவறு என்பது இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது.[/size] [size=4]புலம் பெயர்ந்த தமிழர்கள் வாசிப்பு, தெடலை கோட்டைவிட்டது போலவே யாழ். சமுதாயமும் கோட்டை விட்டுள்ளதை யாழ். நூலகரின் கருத்து தெளிவாக விளக்குகிறது.[/size] [size=4]யாழில் இருந்தாலும், கனடா – அமெரிக்காவில் இருந்தாலும் தமிழினம் தேடலற்ற, வாசிப்பற்ற இனம் என்பதே யதார்த்தமாக உள்ளதை மறுபடியும் இந்தச் செய்தி உறுதி செய்கிறது.[/size] [size=4]இதோ செய்தி…[/size] [size=4]சமூக மேம்பாடு என்பது தனி மனித அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளது. ஆனால் யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தனி மனித அபிவிருத்தி…

    • 16 replies
    • 2.6k views
  7. உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி! சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (11.09.2012) சென்னையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய…

    • 39 replies
    • 3.2k views
  8. [size=4]இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 20ஆம் திகதி இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அத்துடன் 21ஆம் திகதி ஆந்திர பிரதேசத்திலுள்ள சாஞ்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார் என அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் நாட்டுக்கு இலங்கையர்கள் விஜயம் மேற்கொள்வது தொடர்பில் தற்போது விதிக்கப்பட்டுள்ளது பயண எச்சரிக்கை நிலையானதல்ல. அங்குள்ள நிலைமைகள் ஆராயப்பட்ட பின்னர் இந்த பயண எச்சரிக்கை நீக்கப்படலாம் எனவும் அமைச்…

  9. [size=4]மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட இலங்கை தமிழர் பிரச்சினைகள் தொடர்பான டெசோ மாநாட்டின் தீர்மான அறிக்கையின் பிரதியொன்று இந்திய ஜனாதிபதியிடம் அக்கட்சியினரால் கையளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து மேற்படி தீர்மான அறிக்கையின் பிரதியைக் கையளித்துள்ளார். இது தொடர்பில் டி.ஆர்.பாலு தெரிவித்திருப்பதாவது, திமுக தலைவர் கருணாநிதியின் அறிவுரையின் பேயரில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து பேசினேன். 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, டெசோ …

  10. http://eelampakkam.blogspot.no/2012/09/blog-post_11.html ஐரோப்பா, ஆசியாவை மையப்படுத்தியிருந்த இலங்கையின் இராஜதந்திர முனைப்புகள் இப்போது ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நோக்கித் திரும்பியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆபிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ, கமரூன், கேப் வேடே, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஐவரிகோஸ்ட், டிஜிபோடி, ஈக்வடோரியல் கினியா, காபோன், காம்பியா, மலாவி, மொரிடானியா, நைகர், சியராலியோன், டோகோ ஆகிய 15 நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக மீளாய்வு செய்யப்பட்டதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிக்கேல் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம்…

    • 6 replies
    • 858 views
  11. [size=4]ஆ[/size]க்கம்: மகா.தமிழ்ப் பிரபாகரன் இந்தியாவை நோக்கி இலங்கை அதிபர் ராஜ பக்ஷே ஓடிவருவது, ஐ.நா-வில் மீண்டும் வரப்போகும் விவகாரத்தால்தான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! [size=4]கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா-வின் 20-வது கூட்டத்தொடரில் இலங்கைக்[/size]கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஜெனீவாவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து இந்தத் தீர்மானத்தின்படி, இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது, ஐ.நா-வின் 22-வது ஜெனீவா கூட்டத் தொடரின்போது ஆராயப்படும். அதற்கு முன், 21-வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 28 வரை நடக்கவுள்ளது. இதே நாட்களில், அதாவது செப்​டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை மட்டக்…

  12. [size=4]மாகாணசபை ஆட்சியை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதற்கு பணம் தருவதாக கூறிக்கொண்டு கிழக்கு மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை சிலர் மிரட்டல் பாணியில் அணுகியதாக தேர்தல்கள் ஆணையாளிரிடம் முறையிடப்பட்டுள்ளது. 37 அங்கத்தவர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் எந்தவொரு தனிக்கட்சியும் இறுதி பெரும்பான்மையை பெறாத நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது, 7 அங்கத்தவர்களை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெற முயல்கின்றது. அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை பெற்று மாகாணசபையை கைப்பற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது. இந்நிலையில், 'தனது க…

  13. [size=4]சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் தலைவரான வூ பாங்குவோ, இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன அரசியல் உயர்மட்ட வரிசையில் அவர், மூன்றாவது நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. [size=5]அவருடன் 100 பேர் கொண்ட [/size]தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்க உயர்மட்டத்தினரை சந்திக்கவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில், பொருளாதார மற்றும் கொன்ஸுலர் விடயங்கள் தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை இவ்விஜயம் ஸ்திரப்படுத்தும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோ கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ட…

  14. [size=4]கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்ற அரசாங்கம் தவறியுள்ள தால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதல் அமைச்சர் பதவியை வழங்கி அந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதில் தனக்கு ஆட் சேபம் இல்லையயன முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். [/size] [size=4]எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு தமிழ் மக்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.[/size] [size=4]கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட் டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர்களில் 8 பேரும் தோல்வியடைந் துள்ளனர். பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் மாத்தி ரமே வெற்றிபெற்றுள்ளனர். பிரதி அமைச்சர் கருணாவின் சகோதரி ஞானபிரகாசம் ருத்ரமல…

  15. கூடங்குளத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்திய சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மே பதினேழு இயக்கத்தை சார்ந்த ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். காவல் நிலையம் கொண்டு செல்லும் வழியில் காவல் துறையினர் திருமுருகன் மற்றும் விவேகானந்தன், சுசீந்திரன் ஆகீயோரை தாக்கியதாக மே 17 இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். http://thaaitamil.com/?p=31778

  16. [size=4]இலங்கையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களுக்கான, மீள்குடியேற்றத்தின்போது ஏற்படுகின்ற காணி தொடர்பான பிரச்சினைகளில், காணிகளில் முதலில் குடியிருந்தவர்களுக்கே முதலிடம் கொடுத்து, தீர்வு காணப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்கிழமை வவுனியாவுக்கு விஜயம் செய்த, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், அசோகா பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்..[/size] [size=4]அரச காணிகளில் நீண்டகாலமாக யாரேனும் குடியிருந்திருப்பார்களேயாளால், அவர்கள் தொடர்பான முழு விபரங்களையும் திரட்டியபின்னர், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலாளர், கிராம சேவை அதிகாரி ஆகியோருடன் இணைந்து அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என அவர் குறியுள்ளார்.[…

  17. அநுராதபுரம் கெக்கிராவ தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29840 ஐக்கிய தேசிய கட்சி 15457 ஜே.வி.பி.751 அநுராதபுரம் கிழக்கு தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31099 ஐக்கிய தேசிய கட்சி 18726 மக்கள் விடுதலை முன்னணி 2759 http://www.virakesari.lk/art…

  18. கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு By Leo Niroshan 2012-09-11 17:26:40 கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்கா…

  19. [size=4]'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார். இன்று செவ்வாய்…

    • 0 replies
    • 1.1k views
  20. இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய அமெரிக்க பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த பிரேரணையின்படி இலங்கையின் தற்போதைய நிலை குறித்து அமெரிக்க பாராளுமன்றில் விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக மீள்குடியேற்றம், உள்ளக புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் போன்றவை பற்றி விவாதிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இந்த பிரேரணை மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரை நிறைவேற்றம் குறித்தும் அரசியல் தீர்வு குறித்தும் இலங்கைக்கு வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. http://thaaitamil.com/?p=31869

  21. [size=4][size=5]யு[/size]த்தத்தின் பின்னான கோட்பாடுகள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவாலும், அரசியல் மற்றும் இராணுவத் துறைகளில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சவின் சகோதரர்களாலும் வகுக்கப்படுவதால், இவற்றுள் பெரும்பான்மை மக்களின் நலன்களே அதிகம் முதன்மைப்படுத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு Reuters செய்தி நிறுவனத்திற்கு அதன் சிறப்புச் செய்தியாளர் Nita Bhalla எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் 25 ஆண்டு காலம் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் பின்னர் உயிர்தப்பி வாழும் பல ஆயிரக்கணக்கான மக்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டு…

  22. [size=2][size=4] 'அழிவு யுத்தத்திற்கு வித்திட்டதுடன், எமது மக்களை கையேந்த வைத்தவர்கள் கடந்தகால அரசியல் தலைவர்களே' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுவில் அந்தந்தப் பகுதி கிராம சேவையாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும். மக்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கான உள்ளீடுகளை வழங்குவது மட்…

  23. அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான அஷாத் சாலி தெரிவித்தார். முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அஷாத் சாலி மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ௭திர்ப்பை இத்தேர்தலில் வெளியிட்டுள்ளனர். வாக்குகளில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது. ௭னவே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை…

  24. [size=3] Published: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2012, 16:26 [iST][/size][size=1] [size=3]Posted by: [/size]Mathi[/size][size=3] சென்னை: கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமக்கு எதிராக பிறப்பிக்கட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.[/size][size=3] 1986-ம் ஆண்டு சென்னையில் தங்கியிருந்தடக்ளஸ் தேவானந்தா, நவம்பர் 1-ந் தேதி சூளைமேட்டில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது தொடர்பான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. டக்ளஸ் தற்போது இலங்கையில் அமைச்சராக இருந்தும் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது நீதிமன்றம்.[/size][size=3] இந்…

  25. UPFAயை திருகோணமலையில் தோற்கடித்த விமல் வீரவன்ஸ தேசத்துரோகி - ஜி.எச். புத்ததாச 11 செப்டம்பர் 2012 அமைச்சர் விமல் வீரவங்சவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை திருகோணமலையில் தோற்கடித்ததாகவும் தேசியக் கொடியை நெஞ்சில் வைத்திருந்தாலும் அவர் தேசத்துரோகி என கடுவல மாநகர சபை முதல்வர் ஜி.எச். புத்ததாச தெரிவித்துள்ளார். கடுவல பேருந்து நிலையத்தை நிர்மாணிப்பதற்காக அடிக்கல்லை நாட்டும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடுவலையை எப்போது கையில் எடுத்து கொள்ளாலாம் என்று அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தருணம் பார்த்து கொண்டிருக்கின்றார். தனியாக போட்டியிட்டு ஆசனம் ஒன்றை கைப்பற்றியதாக இந்த தேசப்பற்றாளர் கூறுகிறார். அந்த மனிதரின் வெள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.