ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143407 topics in this forum
-
[size=4]தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாகட்டும் அல்லது இலங்கையின் ௭ந்தவொரு பிரஜையும் ஆகட்டும் "டெசோ" மாநாட்டில் கலந்து கொண்டால் அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் ௭ன ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியது.[/size] [size=4]ஜம்மு, காஷ்மீர் முஸ்லிம் அடிப்படைவாத பிரிவினைவாதிகளுக்கு இலங்கையில் மாநாடு நடத்த அனுமதி வழங்குவதை இந்தியா ஏற்றுக் கொள்ளுமா? ௭ன்றும் ஹெல உறுமய கேள்வி ௭ழுப்பியது. கொழும்பில் தேசிய நூலக ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.[/size] [size=4]இங்கு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயவின் தவிசாளரும் பராளுமன்ற உறுப்பினருமான …
-
- 0 replies
- 416 views
-
-
ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர் அர்ஜுன் சம்பத் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு. ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு கொடும் சித்திரவதை…
-
- 2 replies
- 640 views
-
-
[size=5]யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்கள் [/size][size=5]இதனால் இவர்களை படையில் இணைத்துக் கொள்ளுங்கள்; அசோக் மேத்தா கோரிக்கை[/size] [size=4]யுத்த அணுகுமுறைகளில் முன்னாள் விடுதலைப் புலிப்போராளிகள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதனால் அவர்களை படையில் இணைத்துக் கொள்வதால இலங்கை படையினருக்கு நன்மை ஏற்படும் என இந்திய அமைதிப் படையில் அங்கம் வகிந்த அதிகாரியான மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தெரிவித்துள்ளார். படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்க முனைப்புக்களில் இலங்கை அரசாங்கம் கூடுதல் அக்கறை காட்டவில்லை என்றே …
-
- 2 replies
- 508 views
-
-
[size=4]வவுனியா சிறைச்சாலை தாக்குதல் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி டெல்றொக்சனின் சடலம் இன்று காலை யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான பாசையூருக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. நேற்று பிரேத பரிசோதனையின் பின்னர் மாலை 5.30 மணியளவில் சடலம் ராகம வைத்தியசாலையில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சடலம் இன்று காலை 6 மணிக்கு அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை இன்று காலை மரணச் சடங்கு நடைபெறும் வீட்டிற்குச் சென்ற பொலிஸார், வாத்தியங்கள் இசைக்க கூடாதெனவும், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது என…
-
- 12 replies
- 885 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் வரதராஜ பெருமாளின்பாதுகாப்பு உத்தியோகத்தர்களினால் பிரதேச மக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் குடும்பத்துடன் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வரதராஜ பெருமாளின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிரதேச மக்களுக்கு பல்வேறு வழிகளில் இடையூறை ஏற்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையில் இலங்கையின் வடக்கு கிழக்குமாகாண முதலமைச்சராக வரதராஜ பெருமாள் கடமையாற்றினார். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகஇந்தியாவில் வாழ்ந்து வ…
-
- 1 reply
- 549 views
-
-
[size=2] [size=4]அரசியலமைப்பின் 13 பிளஸ் திருத்தத்தில், முதலமைச்சர்களுக்கு பொது ஒழுங்கைப் பேணுவதில் அதிகாரம் வழங்கும் சரத்துக்களைச் சேர்க்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார். அத்துடன், இந்தியா, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் எவையும் இலங்கை மீது தீர்வினைத் திணிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் இடம்பெற்றுவந்த இரண்டாவது இராணுவ செயலமர்வின் இறுதி நாள் இன்றாகும். இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சுப்ரமணியம் சுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சிங்கள பெரும்பான்மையினருக்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இரு தரப்பினரும் ஏற்கக்கூடிய ஆலோசனைகள் எ…
-
- 6 replies
- 705 views
-
-
வவுனியாவினில் தாக்கப்பட்டு கோமா நிலையினிலிருந்து உயிரிழந்த டெல்றுக்ஸனது இறதிக்கிரியைகளை கூட நிம்மதியாக நடத்த அரசு அனுமதி மறுப்பதாக குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளனர். இன்று காலையே டில்றுக்ஸனது சடலம் அவரது சொந்த ஊரான பாசையூரை சென்டைந்திருந்தது. அவ்வேளை அங்கு சென்ற யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்சிகாரே நேற்று மாலையினுள் சடலத்தை அடக்கம் செய்யும்படியான யாழ்.நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜாவின் உத்தரவொன்றை சமர்ப்பித்தார். எனினும் நேற்று மாலையினுள் அடக்கம் செய்வதற்கான உத்தரவை இன்று காலை சமர்ப்பித்தனை ஏற்றுக்கொள்ள மறுத்த குடும்;பத்தவர்கள் நாளைய தினமே அடக்கம் செய்ய விண்ணப்பித்தனர். எனினும் மீண்டும் திரும்பி வந்த சமன்சிகாரே இன்று மாலையினுள் சடலத்தை உடனடியாக அடக…
-
- 0 replies
- 508 views
-
-
[size=5]இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் - எதிர்கொள்ளும் தயாரிப்பில் சிறிலங்கா[/size] [size=4]இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநிறுத்துவதை நோக்காகக் கொண்டு இந்தியாவிற்கு அமெரிக்காவால் வழங்கப்படும் ஒத்துழைப்பானது சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கை வட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். [/size] [size=4]இவ்வாறு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் சிறிலங்கா அரசுக்கு ஆலோசனை வழங்குகிறார் Dr Kamal Wickremasinghe. சிறிலங்காவை தளமாகக்கொண்ட Lakbimanews ஊடகத்தில் வெளிவந்த அந்த ஆய்வை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மார்ச் 2012ல் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் நிறைவேற்…
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கை காற்றில் உயிர்வாழ்ந்துகொண்டு தனித் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து கருணாநிதியினால் நடத்தப்படும் டெசோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கையர்களை நாடு கடத்தப்பட்டவர்களாகவே கருத வேண்டும் என்று ஆளும் கட்சி எம்.பியான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். " விகாரைகளிலும் நோன்பு திறக்கப்படுகின்றது. வெசக் கூடுகளை பௌத்தர்கள் மட்டுமன்றி இந்துக்களும் கட்டுகின்றனர். நோன்புப் பெருநாளுக்கு ஏனைய இனங்களுக்கு முஸ்லிம்கள் புரியாணி மற்றும் வட்டிலப்பம் கொடுக்கின்றனர்.இவற்றை மாற்ற முடியாது" என அவர் மேலும் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/local.php?vid=115
-
- 4 replies
- 725 views
-
-
[size=4]லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் சிவந்தன் தனது போராட்டத்தைக் கைவிடக் கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-[/size] [size=4]அடிப்படை வாழ்வுரிமைகளோ, அரசியல் உரிமைகளோ இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை, உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக, லண்டன் மாநகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்து, ஈழத் தமிழ் இளைஞர் சிவந்தன் கோபி காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் செய்தி, அனைவரது நெஞ்சங்களிலும் கலக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=4]ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும், உலகத் தமிழர்கள் அனைவரும் ஒருங்…
-
- 6 replies
- 911 views
-
-
டெசோ மாநாட்டுக்கு செல்வது இல்லை. 2009ல் முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்ட சூழலில் தி.மு.க அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் போன்றவற்றையும் கவனத்திற் கொண்டு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. : த.தே.கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பு முக நூலில் இருந்து.
-
- 5 replies
- 876 views
-
-
மூதூர் ஜபல் மலையடிவாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த மலையில்தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரில் பாரிய பௌத்த நிலையம் ஒன்று அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலேயே இச் சிலையும் வைக்கப்பட்டுள்ளமை அப்பிரதேச தமிழ்-முஸ்லிம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமே வாழும் இப்பகுதியில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளமையானது அப்பகுதியை ஆக்கிரமிப்பதற்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்குமான திட்டமிட்ட முயற்சியே என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=92
-
- 8 replies
- 715 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி பல தரப்பு மக்களாலும், பலதரப்பு அரசியல் வாதிகளாலும், பல எழுத்தாளர்களாலும் எழுதப்பட்டாலும் அவர்களைப் பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல் தமிழ் பேசும் மக்கள் இன்றும் இருப்பது மிகவும் வேதனையான விடயமாகவே இருக்கின்றது .தமிழ் பேசும் தமிழர்கள் நாங்கள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டு இருப்பது உலக அரசியலுக்கும் மிதவாத கொள்கை உள்ள ஆளும் தரப்பிற்கும் சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது. நாங்கள் எல்லோரும் விட்ட வரலாற்று தவறாக பலம் பொருந்திய ஆட்சி இருக்கும் போதே எமது உரிமையை வென்று எடுக்காதது தான். தலைவர் ஒரு தனிப்பட்ட மனிதனாக யாராலும் அவரின் மேல் குற்றஞ்சாட்ட முடியாது. ஒரு குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொரு குழந்தைகள் ஒரு மாதிரி இருக்கும் போத…
-
- 2 replies
- 1.3k views
-
-
[size=6]ஏமாற்றும் சிங்களர், ஏமாறும் தமிழர்[/size] [size=4]இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு ""ஒன்றுபட்ட இலங்கைக்குள்'' தீர்வுகாண வேண்டுமென இந்திய நாட்டின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ""ஒன்றுபட்ட இலங்கை'' என்று ஒன்று எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையான வரலாறு.[/size] [size=4]ஆங்கிலேயர் (ஐரோப்பியர்) ஆட்சிக் காலத்துக்கு முன்பு இலங்கையில் மூன்று அரசுகள் இருந்தன. யாழ்குடா நாட்டை இறுதியாக ஆட்சி செய்த சங்கிலி மன்னன், கயவன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு போர்த்துகீசியரால் சிறைபிடிக்கப்பட்டு கடல் வழியாக இந்தியாவின் கோவா பகுதிக்குக் கொண்டுவந்து சிறை வைக்கப்பட்டு …
-
- 0 replies
- 731 views
-
-
[size=4]திருப்பூர்: இலங்கை தமிழர்கள் பிரச்னை தீர்க்கப்படாததற்கு மத்திய அரசே காரணம் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.)தலைவர் அசோக் சிங்கால் குற்றம் சாட்டியுள்ளார். கோகுலாஷ்டமியையொட்டி, திருப்பூரில் இன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த அசோக் சி்ங்கால் செய்தியாளர்களிடம் பேசினா. அப்போது, இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் விவகாரம் உள்ளிட்டவைகள் தீர்க்கப்படாததற்கு மத்திய அரசின் அக்கறையின்மையே காரணம் என கூறினார்.[/size] [size=4]http://news.vikatan.com/?nid=9829#cmt241[/size]
-
- 0 replies
- 639 views
-
-
[size=4]தமிழ் மக்களின் உரிமைப் பயணத்தினை தற்போது தோளில் சுமந்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தனது நோக்கத்தினைக் கைவிட்டு கதிரைக் கனவுக்காக போராடுகிறதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் செய்படத் தலைப்பட்டிருக்கின்றது.[/size] [size=4]தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குப் பின்னான தமிழ் மக்களுக்கிடையிலான பிளவுகளைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்திப் பயணிக்கவேண்டும் என்பதே உண்மையாக தேசியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் அவாவாகும். ஆனாலும் தாயகத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற ஒரு சிலர் தமது நோக்கத்தினை கைவிட்டு கட்சி அரசியல் செய்யவும் அடுத்த முறையும் கதிரைகளைக் கைப்பற்றவும் என்ன எல்லாம் செய…
-
- 2 replies
- 964 views
-
-
[size=3] [size=4]இலங்கையின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி இந்தியாவின்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு அளித்துள்ளதாக இந்திய ஜனதாகட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=3][size=4]தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இந்த 21ம் நூற்றாண்டு மிகப் பெரிய வெற்றியாக தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிரான வெற்றியை கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]பயங்கரவாதத்தை இல்லாதொழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு,இந்திய அரசாங்கம் அதி உயர் விருதுகளை வழங்கி …
-
- 7 replies
- 582 views
-
-
[size=4]சிறிலங்காவில் நடைபெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விசேட விவாதம் ஒன்று அடுத்த வாரமளவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்ககப்பட்டுள்ளது. ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில் குறித்த விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [/size] [size=4] ஐ.நா. மனிதவுரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், யுத்த பாதிப்புக்குள்ளான தமிழர்களின் வாழ்க்கை சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இவ் விவாதத்தில் விரிவாக வாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [/size] [size=4]அத்துடன் சிறிலங்கா மற…
-
- 0 replies
- 483 views
-
-
நாட்டின் பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தை ஏற்படுத்தாது! பிரான்ஸ் தூதுவர் ரொபிசன் தெரிவிப்பு பொருளாதார அபிவிருத்தியின் மூலம் மட்டும் நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டின் ரொபின்சன் தெரிவித்துள்ளார். அரசாங்கம், அரசியல் கட்சிகள், சிவில் சமூகம், புத்திஜீவிகள் ஆகியோர் கூட்டாக இணைந்து அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி யுள்ளார். பிரான்ஸில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் வெளிவிவகார கொள்கைகளில் பாரியமாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், இலங்கையுடனான உறவுகளில் மாற்றம் இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எவ்வாறு எனினும்…
-
- 1 reply
- 497 views
-
-
[size=2] [size=4]இரண்டாவது இராணுவ கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார். இருவருக்குமிடையிலான சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். [/size][/size] [size=2][size=4]http://www.tamilmirr...9-13-02-59.html[/size][/size]
-
- 44 replies
- 2.4k views
-
-
இலங்கையில் வாடும் தமிழ் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் வகையில் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள டெசோ மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், கட்சிக் கொடிகளோ, கட்சித் தலைவர்களின் புகைப்படமோ(?), கட்சி முழக்கமோ எதையும் எந்த கட்சித் தொண்டர்களும் கொண்டு வரக் கூடாது என்று கருணாநிதி நேற்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு டெசோ மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=642239&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
-
- 14 replies
- 855 views
-
-
மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவது உண்மையாகும். இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறாவிடின் மின் உற்பத்தி முற்றாக ஸ்தம்பிதமடையும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின்போது அமைச்சு அறிவித்தலை விடுத்து தெளிவுபடுத்தும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "மின்சாரப் பாவனையைப் பொறுத்தவரையில் நாளொன்றின் தேவையாக இரவில் 2 ஆயிரம் மெகா வோற் மின்சாரமும் பகலில் ஆயிரத்து 600 மெகாவோற் மின்சாரமும் தேவைப்படுகிறது. எனினும் எமது நாட்டின் மின் உற்பத்தியின் பிரகாரம் நீர் மின்சாரம் ஆயிரத்து 300 மெகா வோற்றும் அனல் மின்சாரமாக ஆய…
-
- 2 replies
- 507 views
-
-
[size=2][/size] [size=2][size=4]ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாட்களுக்கு முன் தனது மாகாணசபை பிரசாரத்தின்போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்து தொடர்பாக மகாசங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். பூரண அறிக்கை: "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வெளியிட்ட அறிக்கை. கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்தத் தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது. இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்பு கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா ம…
-
- 5 replies
- 766 views
-
-
நவநீதம் பிள்ளை வரலாம் போகலாம் - அட்வைஸ் எல்லாம் கூடாது..! கூறினாலும் கேட்க மாட்டோம் ..! மகிந்தா ராஜபக்சே அரசு சரியாகத்தானே இருக்கிறது..?! ஈழதேசம் செய்தி..! ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை உட்பட ஐ.நா.அதிகாரிகள் இலங்கைக்கு வருமாறு நாங்களே அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் இங்கு வரலாம்,அபிவிருத்திகளை பார்வையிடலாம், தங்கலாம், விருந்து உண்டு இளைப்பாறலாம்.தேவையெனில் இன்ப சுற்றுலா செல்லலாம்.ஆனால் ஆலோசனை வழங்க முடியாது. அவ்வாறு வழங்கினால் ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்..! அதெல்லாம் எங்களுக்கு பிடிக்காது.என்று ஊடகத் துறை அமைச்சர் கேஹலிய ரம்புக்கவெல நெத்தியடியாக தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களை கூப்பிட்டு இதை தெரிவித்ததோடு மட்டும் அல்லாமல் கீழ்க்கண்டவாற…
-
- 0 replies
- 458 views
-
-
[size=4]போருக்குப் பிந்திய நிலைமைகளை மதிப்பீடு செய்ய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைய அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கம், அவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. நேற்று கொழும்பில் அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும்அவரது குழுவினர் அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளனர். சிறிலங்கா அரசின் அழைப்பின் பேரில் வரும் ஐ.நா குழுவினர் வெறும் அவதானிப்பாளர்களாகவே இங்கு வரமுடியும். அவர்கள் ஆலோசகர்களாக செயற்பட முடியாது. அவர்கள் க…
-
- 1 reply
- 303 views
-