ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143404 topics in this forum
-
வடமாகாணத் தேர்தலை வைக்கும்படி சர்வதேசமும் இந்தியாவும் தொடர்ந்து மகிந்த ராசபக்ச அரசை வற்புறுத்தி வருகிறது. ஆனால் மகிந்த ராசபக்சவின் அரசோ 2013ல் நடக்க வேண்டிய கிழக்குமாகாண சபையை அவசரம் அவசரமாகக் கலைத்து புதிய தேர்தல் வைக்கிறார்கள். மகிந்த ராஜப்கசவின் நோக்கம் என்ன? வடமாகணசபைத் தேர்தலை நடத்தினால் தமிழ் தேசிய கூட்டமைபு நிச்சயம் வெற்றிபெறும். ஆனால்.கூட்டணியின் வெற்றிச் செய்தியை அல்ல தோல்விச் சேதியை மட்டுமே சர்வதேச சமூகத்துக்கு அனுப்ப மகிந்த அரசு விரும்புகிறது. திருநிறை நவிப்பிள்ளை அவர்களின் வருகையின்போது அத்தகைய ஒரு சூழல் பயனுள்ளது என மகிந்த நினைக்கக்கூடும். மகிந்த ராஜபக்ச அரசின் சூட்ச்சிக்கு கூட்டமைப்பு துணைபோகக்கூடாது. இந்தச் சமயத்தில் கிழக்கு மாகாணத்தில் தோல்வியைத் தழுவ…
-
- 22 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிப்பு ஏன்..? எதற்கு..? ஈழதேசம் பார்வையில்..! [size=3] மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதன் இணை செயலர் தர்மேந்திரா சர்மா வெளியுட்டுள்ள அறிக்கை அல்ல இவ்வாறு மிரட்டி உள்ளார் தமிழ் தேசியம் பேசும் அனைவரையும். " தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடு இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் இந்த இயக்கத்தை தொடர்ந்து தடை செய்வது மிகவும் அவசியமாகிறது என்றார். எங்கே இருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்..?புலிகள் தான் அழிக்கப்பட்டுவிட்டதாக தம்பட்டம் அடித்தீர்களே?அதென்ன இந்திய இறையாண்மை..? விடுதலைப் புலிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் பொழுது இல்லாத இறையாண்மை.. தற்பொழுது எப…
-
- 2 replies
- 972 views
-
-
பௌசர் - பௌசர் - மகிந்தஅரசாங்கம் முஸ்லிம்களின் தேசிய இன உரிமைகளையோ பாதுகாப்பு உத்தரவாதங்களையோ வழங்கக்கூடியது அல்ல - கிழக்கில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில், சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆளும் அரசாங்க கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது என அக்கட்சித் தலைமை எடுத்துள்ள அரசியல் தீர்மானம் முஸ்லீம்,தமிழ் அரசியல் வெளியில் வாதப்பிரதிவாதங்களை ஏற்படு த்தியுள்ளதனை காணக் கூடியதாக உள்ளது. முஸ்லீம் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்,சமூக பாதுகாப்பினை வலுப்படுத்தி உறுதிப்படுத்து வதற்காகவும் ஸ்தாபன மயமான இவ்வியக்கம், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இக்கட்சியை வழிப்படுத்தும் வரை,முஸ்லிம்களின் தேசிய அரசியல் இயக்கத்தின் இடத்தினை இலங்கை முஸ்லிம்களுக்குள் ஓரளவு …
-
- 0 replies
- 680 views
-
-
[size=6]வடக்கின் பொருளாதார வளர்ச்சி? - ஓர் பொய்...[/size] [size=2] [size=4]இலங்கைப் பொருளாதாரம் எட்டு சதவீதத்தினால் அதிகரித்த போதும் இதில், வட மாகாணம் 22% என்ற அதி உயர் பொருளாதார வளர்ச்சியினை சாதிக்க முடிந்துள்ளதாகஅமெரிக்க இராஜாங்க செயலாருக்கு இலங்கையின் வெளி விவகார அமைச்சர்ஜி.எல்.பீரிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார்.[/size][/size] [size=2] [size=4]எனினும், இது பகுதியளவில் மட்டுமே உண்மையானது! என்பதுடன் அரசியல் தந்திரங்களிற்காக திரிவுபடுத்தி கூறப்பட்டுள்ளதாக இலங்கையின் பொருளாதாரப் பகுப்பாய்வாளரான கலாநிதி முத்துகிருஷ்னன் சர்வாநந்தா ஒன்லைன் உதயனுக்கு இன்று தெரிவித்துள்ளார்.[/size][/size] [size=2] [size=4]இறுதியாக வெளியிடப்பட்ட மாகாண மட்டத்திலான உள்நாட்டு உற்பத்…
-
- 1 reply
- 603 views
-
-
[size=5]போராடாது விட்டால் எமக்கான எந்த உரிமையும் கிடைக்காது; அருட்தந்தை ஜெயக்குமார்[/size] [size=4]போராடாது விட்டால் எமக்கான எந்த உரிமையும் கிடைக்காது. எனவே சாத்வீகப் போராட்டங்களில் இறங்க வேண்டும் என அருட்தந்தை ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய மற்றும் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அரசு பாராமுகமாகமாகவே உள்ளது எனவும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார். வட பகுதி கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களனால் வடபகுதி மீனவர் சமுதாயம் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை யாழ்பாடி விடுதியில் இடம்பெற்றது. இதில் கல…
-
- 1 reply
- 485 views
-
-
யாழ்.நகரில் ஆட்டோ சேவையில் ஈடுபடும் சாரதிகளின் மூலம் அரங்கேற்றப்படும் விபச்சாரம்,காவல்துறையினர் கண்டும் காணதது போல் விட்டுவிடுகின்றார்கள். குறிப்பாக யாழ்.பஸ்நிலையத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் விபச்சாரம் மாலை வேளைகளில் களைகட்டிக்காணப்படுகின்றது. பஸ்நிலையத்திற்குள் நிற்கும் விலை மாதுக்களிடம் நேரடியாகவே அல்லது பஸ்நிலையத்தினைசுற்றி நிற்கும் ஆட்டோ சாரதிகளின் மூலமாகவே விலை மாதுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்விடையத்தினை தெட்டத் தெளிவாக அவதானித்துக் கொண்டுள்ள யாழ்.காவல்துறையினர் அவர்களைக் கண்டும் காணாதது போல்விட்டுவிடுகின்றார்கள். குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்.வருகைதரும் குறித்த விலைமாதுக்கள் இலகுவில் இவர்களுடைய உதவியுடன் தொழில் செய்துவிட்டுச் செல்கின…
-
- 1 reply
- 956 views
-
-
[size=2][size=4]வெளிநாடுகளில் கோடைகால விடுமுறை நிலவுவதால் பெருந்தொகையான புலம் பெயர் தமிழர் இப்போது இலங்கை போயுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]யாழ். நகர் வெளிநாட்டு தமிழரால் நிறைந்து வழிவதாகவும், அங்கு வந்துள்ள தமிழர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு பாஷைகளையும் பேசுவதால் சந்தைச்சத்தம் வித்தியாசமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது.[/size][/size] [size=2][size=4]தமிழ் மொழி கடையிரைச்சலாக கிளம்புவதில் இருந்து வேறுபட்ட ஓலமாக இது இருப்பதாகவும், சிங்கப்பூர் சிரங்கூன் மாக்கற்றில் பல்வேறு இனங்களின் கலப்பினப் பிறப்பாக்கமாக கேட்கும் இரைச்சலே கேட்பதாக அங்கிருக்கும் டென்மார்க் நிருபர் கூறுகிறார்.[/size][/size] [size=2][size=5]நொந்து விழுந்து கிடக்கும் ச…
-
- 68 replies
- 4.5k views
-
-
நாங்கள் தற்போது இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுக்கிறோம். மக்களுக்கு ஏற்கனவே கிடைத்திருக்கக்கூடிய நல்வாய்ப்புக்களை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உதவி வழங்குநர்களாகிய நாம் தொடர்ந்தும் செயற்பட வேண்டியது இன்றியமையாதது. உணவு, வீடு, பாதுகாப்பு மற்றும் போசாக்குப் போன்றவை முக்கியமாகத் தேவைப்படுகின்ற இலங்கையின் வடக்கைச் சேர்ந்த மக்களுக்குச் சென்றடைகின்ற உதவித் தொகையானது மிக அரிதாகவே காணப்படுகின்றது. உள்நாட்டுப் போரின் நீண்ட காலப் பாதிப்பைச் சந்தித்த இந்த மக்கள், போர் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட தற்போதும் அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உதவி நிறுவனங்களை எதிர்பார்த்து நிற்கின்றனர். "நாங்கள் தற்போது இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுக்கிறோ…
-
- 0 replies
- 503 views
-
-
[size=5]டெசோ மாநாடு; யாருக்கு யார் வைக்கும் 'செக்'?[/size] [size=4]தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை வைத்து நடத்தப்படும் அரசியல் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.[/size] [size=4]அடுத்தமாதம் 12ஆம் திகதி சென்னையில் திமுக சார்பில் நடத்தப்படவுள்ள ஈழத்தமிழர் ஆதரவு அமைப்பு மாநாட்டுடன் (டெசோ) இது இன்னும் உச்சத்தை தொடப்போகிறது. [/size][size=4]ஒரு பக்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி டெசோ மாநாட்டை நடத்துவதற்கான முனைப்பில் இறங்கியிருக்க, இன்னொரு பக்கத்தில் மத்திய உள்துறை அமைச்சு புதிய 'குண்டு' ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளது. [/size][size=4]இதன்காரணமாக டெசோ மாநாடு நடக்குமா? - அதை நடத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.[/size] …
-
- 2 replies
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிப்பு ஏன்..? எதற்கு..? ஈழதேசம் பார்வையில்..! [size=3] மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதன் இணை செயலர் தர்மேந்திரா சர்மா வெளியுட்டுள்ள அறிக்கை அல்ல இவ்வாறு மிரட்டி உள்ளார் தமிழ் தேசியம் பேசும் அனைவரையும். " தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடு இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் இந்த இயக்கத்தை தொடர்ந்து தடை செய்வது மிகவும் அவசியமாகிறது என்றார். எங்கே இருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்..?புலிகள் தான் அழிக்கப்பட்டுவிட்டதாக தம்பட்டம் அடித்தீர்களே?அதென்ன இந்திய இறையாண்மை..? விடுதலைப் புலிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் பொழுது இல்லாத இறையாண்மை.. தற்பொழுது எப…
-
- 0 replies
- 655 views
-
-
[size=4]இலங்கையில் நடை பெற விருக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் இனைந்து போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் அக்கட்சிக்குள் மாற்றுக் கருத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.[/size] [size=3][size=4]கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இனைந்து போட்டியிட்டது.[/size][/size] [size=3][size=4]நடைபெறவிருக்கும் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டு அடிப்படையில் போட்டியிட வேண்டும் என்ற பரவலான எதிர் பார்ப்புகளுக்கு மத்தியிலேயே முஸ்லிம் காங்கிரஸ் இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறபபடுகின்றது.[/size][/size] …
-
- 2 replies
- 923 views
-
-
தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்றிருந்த இலங்கை இராணுவத்தினர் இன்று காலை மாநாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சியளிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் குன்னூர் கருத்தரங்கில் இலங்கை படையினர் பங்கேற்க கூடாது என தமிழக கட்சிகள் அங்கு கூடி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி வழங்கக்கூடாது என்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் மத்திய அரசைக் கடிதம் மூலம் கேட்டிருந்தார். இந்த கருத்தரங்கு நாளை வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் மாநாட்டில் இருந்து விலகிய இராணுவத்தினரை இந்தியாவில் பயிற்சி பெறாமல் நாட்டி…
-
- 4 replies
- 906 views
-
-
சிறீலங்காப்படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் காரணமாக இதுவரை மீள்குடியேற்றப்படாத .மக்கள்வாழ்கின்ற முகாம்களை விட்டு வெளியேறுமாறு காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாமல் வலிகாமம் வடக்குப் பகுதியல் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையமாக உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ள முகாங்களை விட்டு வெளியேறுமாறு குறித்த காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமது சொந்தப் பகுதிக்குச் செல்ல முடியாத குறித்த பகுதி மக்கள் வீதியில் நிற்குமநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பலாலி, மயிலிட்டி, ஊறணி, காங்கேசன் துறை ஆகிய பகுதிகளைச் சேர்த பெரும்பாலான மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச் சேர்ந்த ம…
-
- 2 replies
- 884 views
-
-
[size=5]தமிழக அகதி முகாமில் சிறுமிக்கு நடந்த கொடுமை[/size] [size=4]தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்த சிறுமி வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]மேட்டுப்பட்டி இலங்கைத் தமிழர் முகாமைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரின் ஆறு வயது மகள் முகாமில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள திருச்சி சாலை பாலத்தின் கீழ் கழுத்தறுபட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் அதனை உறுதி செய்வதற்காக சிறுமியின் பிரேதம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறும…
-
- 3 replies
- 902 views
-
-
[size=4]யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் அம்மன் கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும், காண்டீபன் ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன.[/size] [size=4]வவுனியா சிறையில் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாளைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரான நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஆதரவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size] [size=4]இந்த நிலையில், இலங்கை இராணுவத்தினர் புலனாய்வுத் தரப்பி…
-
- 1 reply
- 482 views
-
-
[size=4]லண்டனில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டியில், ஒலிம்பிக் கூட்டமைப்பினருடன் ஈழத்தமிழர் ஒருவரும் தீபம் ஏந்திச் சென்றுள்ளார்.[/size] [size=4]திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் வாழ் தொழிலதிபரான செல்வராஜா சுரேஸ்குமார் என்பவரே கடந்த மே மாதம் 10 ஆம் திகதி அனைவருடனும் இணைந்து ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்றுள்ளார்.[/size] http://youtu.be/nFquV_rI-XI [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4]http://www.seithy.co...&language=tamil[/size]
-
- 4 replies
- 838 views
-
-
[size=4]சிறிலங்கா அதிபருக்கு அடிமையாகச் செயற்படும் முதல்வர் கிழக்கு மாகாணத்துக்குத் தேவையில்லை, அதிகாரங்களை பயன்படுத்தக் கூடிய முதல்வரே தேவை என்பதை தமிழ் பேசும் மக்கள் வெளிப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நேற்று மாலை இரா. சம்பந்தனின் இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. [/size] [size=4] [/size] [size=4] [/size] [size=4]முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்,க.துரைரட்ணசிங்கம் தலைமையில் இ…
-
- 2 replies
- 514 views
-
-
[size=4]சிறிலங்காவின் உயர்மட்டக்குழு இந்த வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்காஅதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தெரிவித்துள்ளது. வரும் நொவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டம் தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கவே இந்தக் குழு இந்தியா செல்லவுள்ளது. இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் பதில் அறிக்கை வரும் 23ம் நாளுக்குள் சமர்ப்…
-
- 2 replies
- 608 views
-
-
தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது - டெசோ மாநாடு அறிவிப்புக்குப் பின் மத்திய அரசு அறிவிப்பு டெல்லி: இந்தியாவுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தொடருவது என்பது இந்திய குடிமக்களின் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் அந்த இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் இந்திய குடிமக்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழ் பிரிவினைவாத குழுக்…
-
- 15 replies
- 2k views
-
-
[size=4]சிங்களப் பயங்கரவாத அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் சிறிலங்காவில் வாழ வழியற்று ஒஸ்ரேலியா நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி இருந்த தமிழ் இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றார். சமூக தடுப்புக்காவலில் விடப்பட்டிருந்து மேற்படி இளைஞனை இன்று மாலை சந்தித்த ஒஸ்ரேலியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் நாடுகடத்துவதற்கான அறிவித்தல் கடிதத்தைக் கையளித்ததுடன், அவரை மெல்பேர்ண் தடுப்புமுகாமுக்கு அழைத்துச் சென்றனர். இவ் இளைஞர் எந்நேரமும் நாடுகடத்தப்படாலாமென அஞ்சப்படுகின்றது.[/size] [size=4]ஒஸ்ரேலியா அரசாங்கத்தின் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்துள்ள Australian Tamil Refugee Council. அண்மையில் வேறு நாடுகளிலி…
-
- 0 replies
- 723 views
-
-
இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5ஆம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும் மக்கள் உரிமை கூட்டமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் “தமிழர் எழுச்சி வடிவம்” என்ற நூலின் அறிமுக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் நூல் எழுதப்பட்டது. உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டு…
-
- 7 replies
- 2.1k views
-
-
[size=5]முன்னாள் போராளிகளுக்கு கட்டாயமாக்கப்படும் சிங்களமொழி[/size] [size=2] [size=4]தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழி கற்பித்து கொடுக்கப்படவுள்ளதாக [/size][size=4]தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size] [/size] [size=2] [size=4]இதன்படி, 698 முன்னாள் போராளிகளுக்கு தற்போது முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகவும், [/size][size=4]இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழிப் பயிற்சி வழங்கப்பட [/size][size=4] உள்ளது.[/size] [/size] [size=2] [size=4]சமூக ஒருமைப்பாட்டு மற்றும் தேசிய மொழிகள் அமைச்சினால் முன்னாள் போராளிகளுக்கு சிங்கள மொழியை [/size][size=4]புகட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட உ…
-
- 0 replies
- 654 views
-
-
[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[/size] [size=4]மஹிந்த ராஜபக்ஸ, வவுனியா அரச செயலகத்தில் நடைபெறவுள்ள வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொள்ளவுள்ளார். இவருடன் சில அமைச்சர்களும் வருகை தரவுள்ளனர்.[/size] [size=4]இவரின் வருகையையொட்டி பாதுகாப்புப் படையினர் வவுனியாவில் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். இரவு வேளைகளில் ரோந்து செல்லும் படையினர், சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வீதிகளில் ஆங்காங்கே வீதித் தடைகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டு சோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.[/size] [si…
-
- 1 reply
- 569 views
-
-
[size=4]அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைப் பையன்கள் தமது ஆபத்து நிறைந்த படகுப் பயணம் குறித்து விபரித்துள்ளனர். 20 நாட்கள் கடலில் பயணம் செய்வதற்காக இந்தப் பையன்களின் குடும்பங்கள் இவர்களை அனுப்பியிருக்கிறது.[/size] [size=4]கடந்த வாரம் கடலிலிருந்த போது தாங்கள் இரத்த வாந்தி எடுத்ததாகவும் குடிக்கத் தண்ணீரோ சாப்பிட உணவோ கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பையன்களில் இருவர் இலங்கைக் கடற்படையோ அல்லது பொலிஸாரோ தடுத்து நிறுத்திவிடுவார்களென தாங்கள் அச்சமடைந்திருந்தது பற்றிக் கூறியுள்ளனர்.[/size] [size=4]ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் 120 க்கும் மேற்பட்ட இலங்கையர்களை ஏற்…
-
- 0 replies
- 620 views
-
-
[size=5]கலைஞர் நடத்தும் டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் ஆதரவு இல்லை![/size] [size=5]சென்னை சத்தியமூர்த்திபவனில், காமராஜர் பிறந்த தினவிழா, நேற்று நடந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் செய்தியாளர்கள், "ஆகஸ்ட் மாதம் சென்னையில் தி.மு.க., நடத்தும், தமிழ் ஈழம் ஆதரவு, "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா?' என்ற கேள்வியை எழுப்பினர்.[/size] [size=5]அதற்கு ஞானதேசிகன், "கருணாநிதி நடத்தும், "டெசோ' மாநாட்டிற்கு, காங்கிரஸ் ஆதரவு இல்லை. தனித் தமிழ் ஈழத்தை, காங்கிரஸ் எக்காரணத்தை கொண்டும் ஆதரிக்க முடியாது. ஒன்றுபட்ட இலங்கைக்கு தான், காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இலங்கையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், அங்குள்ள தமிழர்களுக்கு, உண்ண உணவு, இருக…
-
- 9 replies
- 1.6k views
-